Jump to content

மனைவி மட்டும்…..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மனைவி மட்டும்…..

 

periyar_002-300x154.jpg

 

தந்தை பெரியார் காங்கிரஸ் மகா இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிவந்த காலம் அது.

தீவிர காந்தியவாதியாகத் திகழ்ந்த பெரியார், தானும் கதராடை உடுத்தி தன்னைச் சார்ந்தவர்களும் கதராடையை உடுத்த வேண்டும் என விரும்பினார்.

அது மட்டுமல்லாது கதர் துணிகளைத் தோளில் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று கூவி விற்று அனைவரும் கதராடை உடுத்தவேண்டிய அவசியத்தையும் உணர்த்தி வந்தார், ஆண்கள் மட்டும் அல்லாது பெண்களும் கதராடை உடுத்த வேண்டும் என்று கூறிவந்தார்.

இந்த சமயத்தில் பெரியாருக்கு ஒரு பிரச்சினை எழ ஆரம்பித்தது, ஊர் மக்கள் எல்லாரும் பெரியாரின் சொல் கேட்டு கதராடைகளை உடுத்த தொடங்கியபோது அவரது மனைவி திருமதி, நாகம்மை மட்டும் கதர் புடைவையை உடுத்த மறுத்துவிட்டார்.’

தன் மனைவியே கதர் புடவையை உடுத்த மறுத்ததால் பெரியார் தர்ம சங்கடத்துக்கு ஆளானார், ஊருக்குத்தான் உபதேசம், பெண்டாட்டிக்கு இல்லை என்று எல்லாரும் தன்னை கேலி செய்வார்கள் எண்ணினார்.

அத்துடன் தன் மனைவியின் மனதையே மாற்ற முடியவில்லை என்றால் மற்றவர்களுக்கு தான் பிரச்சாரம் செய்வதால் என்ன பயன்? என நினைத்தார்.

எப்படியாவது நாகம்மையை கதர் புடவையை உடுத்த வைத்திட வேண்டும் என எண்ணியர் அம்மையாரிடம், ஏன் கதர் புடவையை உடுத்தலை? என்று கேட்டார்.

பிடிக்கலை என்றார்.. ஏன் பிடிக்கலை? என்று அடுத்த கேள்வியை தொடுத்தார், உடனே நாகம்மை “கதர் புடவை உடுத்த ரொம்ப கனமா இருக்கு என்று கூறியுள்ளார்.

அப்படியா அம்மணி, சரி….நீ போயி ஒரு தராசைக் கொண்டு வா என்று தன் மனைவியிடம் கூறி அனுப்பியுள்ளார்.

சற்று நேரத்தில் நாகம்மை தராசு ஒன்றைக் கொண்டு வந்து பெரியாரிடம் கொடுத்தார். தராசைப் பிடித்த பெரியார் ஒரு தட்டில் கதர் புடவையை வைத்தார்.

மறு தட்டில் நாகம்மையின் திருமண முகூர்த்தப்பட்டுப்புடவையை எடுத்துவந்து வைக்க சொன்னார். பட்டுப்புடவையின் தட்டு சட்டெனத் தாழ்ந்தது. காரணம் கதர் புடவையைக் காட்டியிலும் பட்டுப்புடவை சற்று கூடுதலான எடையுடன் இருந்தது.

அம்மணி…இப்படி பாரமா இருக்கிற முகூர்த்தப்பட்டுப் புடவையை மட்டும் கல்யாணத்தின் போதும் மற்ற விசேஷங்களின் போதும் எப்படிக் கட்டினாய்? என்று தன் மனைவிடம் மடக்கினார்.

பெரியார் இவ்வாறு தன்னைக் கேட்கவும், நாகம்மை யார் சிரித்துக்கொண்டே அன்றைய தினத்தில் இருந்து கதர் புடவையை உடுத்த தொடங்கினார்.

பெரியாரை பொறுத்தமட்டில் ஊருக்குத்தான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை என்றில்லாது தனது கொள்கைக்குத தானும் தன் குடும்பத்தாரும் முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என விரும்பினார்.

நன்றி

நியூ  இந்தியா நியூஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மனைவியரும் நாகம்மையார் போல் இருந்தால் சுலபமாய் ஏமத்தலாம்போல...! :rolleyes:    ம்...ம்...ம்...! :(  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரை பொறுத்தமட்டில் ஊருக்குத்தான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை என்றில்லாது தனது கொள்கைக்குத தானும் தன் குடும்பத்தாரும் முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என விரும்பினார்.

இப்போது உபதேசத்தை மட்டும் ஊருக்குச் சொல்லிவிட்டு சொல்வதற்கு எதிராகவே நடப்பதுதான் நடைமுறை என்றாகிவிட்டது.

பெரியார் நாகம்மையின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டது ஒரு வகையில் அடக்குமுறைதான் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் ஒரு 'அறிவு ஜீவி'!

 

பார்ப்பானையும், பாம்பையும் கண்டால், முதலில் 'பார்ப்பனை அடி..... என்ற இவரது கூற்று எனக்கு மிகவும் பிடிக்கும்!

 

மகாத்மா காந்திக்கு, முழுமையான 'ஆதரவளித்தது' தமிழகம் மட்டுமே என்பது பலருக்குத் தெரியாது!

 

இணைப்புக்கு நன்றிகள், கு. சா. அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உபதேசத்தை மட்டும் ஊருக்குச் சொல்லிவிட்டு சொல்வதற்கு எதிராகவே நடப்பதுதான் நடைமுறை என்றாகிவிட்டது.

பெரியார் நாகம்மையின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டது ஒரு வகையில் அடக்குமுறைதான் <_<

 

 

அம்மணி…இப்படி பாரமா இருக்கிற முகூர்த்தப்பட்டுப் புடவையை மட்டும் கல்யாணத்தின் போதும் மற்ற விசேஷங்களின் போதும் எப்படிக் கட்டினாய்? என்று தன் மனைவிடம் மடக்கினார்.

பெரியார் இவ்வாறு தன்னைக் கேட்கவும், நாகம்மை யார் சிரித்துக்கொண்டே அன்றைய தினத்தில் இருந்து கதர் புடவையை உடுத்த தொடங்கினார்.

 

 

ஒரு மனிதனுக்கு நல்ல விடயங்களை சொல்லி புரிய வைப்பதை எப்படி தனிமனித சுதந்திரத்திற்குள் அடக்க உங்களால் முடிகின்றது?  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டுச் சேலை எப்பவுமா கட்டுவார்கள்? எங்கனும் விழாக்களுக்கு போனால் தான் கட்டுவார்கள்.அதைக் கூட,அவரது மனைவிக்கு அதில் விருப்பம் என தெரிந்தும் கூட அதைக் கட்டுப்படுத்திய பெரியார் ஒரு ஆணாதிக்கவாதி தான்...மனைவியின் விருப்பத்தை புரிந்து கொள்ள முடியாதவர் ஊர் மக்களுக்கு உபதேசம் செய்தது தான் வேடிக்கை...புத்தரும்,இவரும் ஓரே மட்டையில் இறங்கின குட்டைகள் சொந்த மனைவியை,குடும்பத்தை பார்த்துக்க தெரியாதவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய வெளிக்கிட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டுச் சேலை எப்பவுமா கட்டுவார்கள்? எங்கனும் விழாக்களுக்கு போனால் தான் கட்டுவார்கள்.அதைக் கூட,அவரது மனைவிக்கு அதில் விருப்பம் என தெரிந்தும் கூட அதைக் கட்டுப்படுத்திய பெரியார் ஒரு ஆணாதிக்கவாதி தான்...மனைவியின் விருப்பத்தை புரிந்து கொள்ள முடியாதவர் ஊர் மக்களுக்கு உபதேசம் செய்தது தான் வேடிக்கை...புத்தரும்,இவரும் ஓரே மட்டையில் இறங்கின குட்டைகள் சொந்த மனைவியை,குடும்பத்தை பார்த்துக்க தெரியாதவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய வெளிக்கிட்டார்கள்

 

அங்க  தான் நிற்கிறார் அவரது மனைவி

அவருக்கு தனது கணவரின் இரண்டும்  கெட்டான் நிலை  புரிந்திருக்கும்

இவரது பட்டுப்புடவை தந்திரமும் புரிந்திருக்கும்

நாம  தோற்போம் என அந்த மனுசி  விட்டுக்கொடுத்து உயர்ந்து விட்டது

பெரியாருக்கும் இது தெரிந்திருக்கும்

ஆனால் ஆணெல்லே.... :(

Link to comment
Share on other sites

பட்டுச் சேலை எப்பவுமா கட்டுவார்கள்? எங்கனும் விழாக்களுக்கு போனால் தான் கட்டுவார்கள்.அதைக் கூட,அவரது மனைவிக்கு அதில் விருப்பம் என தெரிந்தும் கூட அதைக் கட்டுப்படுத்திய பெரியார் ஒரு ஆணாதிக்கவாதி தான்...மனைவியின் விருப்பத்தை புரிந்து கொள்ள முடியாதவர் ஊர் மக்களுக்கு உபதேசம் செய்தது தான் வேடிக்கை...புத்தரும்,இவரும் ஓரே மட்டையில் இறங்கின குட்டைகள் சொந்த மனைவியை,குடும்பத்தை பார்த்துக்க தெரியாதவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய வெளிக்கிட்டார்கள்

 

பெண் சுதந்திரம் என்பது பேச்சுரிமை, பொருளாதாரம், கல்வி, சட்டம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் சமவுரிமை என்பதில் இல்லை வெறும் ஆடை தெரிவில் மட்டும்தான் தொக்கி நிற்கின்றது என்று நினைக்கும் மாதர் சங்கங்களின் குறுகிய பெண்ணிலைவாதப் பார்வைக்குள் ரதியும் மாட்டுபட்டு விட்டதுதான் துயரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொன்னதற்கு மேல் என்ன விளக்கத்தை நான் கொடுக்கமுடியும் கு.சா. ஐயா!

பெண்களுக்கு இயல்பாகவே எடுப்பான புடவைகளை அணிவது பிடிக்கும். அவர்களைக் கதர்ச்சேலை அணியச் சொன்னால் ஏற்றுக்கொள்ளவா போகின்றார்கள்? நாகம்மை கதர் பாரம் என்பதை ஒரு சாட்டாகச் சொல்லித் தப்பப் பார்த்திருப்பார். அதற்காக சேலையை தராசில் அளந்து அவரைக் கதராடை அணியச் செய்தது கெட்டித்தனமல்ல. பொறுமையாக விளக்கி நாகம்மையே கதராடையை முழுமனதுடன் விரும்பி அணிய வைத்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித சுதந்திரம் எனும் போர்வையில் பல துர்ப்பாக்கிய விடயங்கள் அரங்கேறுகின்றன.இவ்வுலகில் அதற்கும் ஆயிரம் கருத்து வைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் சுதந்திரம் என்பது பேச்சுரிமை, பொருளாதாரம், கல்வி, சட்டம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் சமவுரிமை என்பதில் இல்லை வெறும் ஆடை தெரிவில் மட்டும்தான் தொக்கி நிற்கின்றது என்று நினைக்கும் மாதர் சங்கங்களின் குறுகிய பெண்ணிலைவாதப் பார்வைக்குள் ரதியும் மாட்டுபட்டு விட்டதுதான் துயரம்.

பெண் சுதந்திரம் என்பது கல்வி,வேலைவாய்ப்பு,பேச்சுரிமை,கருத்துரிமை,பொருளாதாரம் போன்று உணவு,உடை ஆகியவற்றிலும் இருக்குது.சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும்,சுதந்திரங்களும் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

தனிமனித சுதந்திரம் எனும் போர்வையில் பல துர்ப்பாக்கிய விடயங்கள் அரங்கேறுகின்றன.இவ்வுலகில் அதற்கும் ஆயிரம் கருத்து வைத்திருப்பார்கள்.

அண்ணா தனி மனித சுதந்திரம் இரு பாலருக்கும் இருக்க வேண்டும்.அதை சரியாக/தவறாக பயன்படுத்துவது இரு பாலரது கைகளில் தான் உள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.