Jump to content

35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை.


Recommended Posts

35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை.

 

செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகிறது.

கட்டாய நிலப்பறிப்பை தடுக்கும் நோக்கில் இந்தப் பகுதியில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணிகள் அற்ற 35 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

மேற்படி கிராமத்தில் குடியேறியுள்ள குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. குடிநீர் வசதிகள் கூட இல்லாத நிலமையில் வாழும் இக்குடும்பங்களுக்கு குளாய்கிணறுகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம் குடிதண்ணீரை அவர்கள் பெற்றுக்கொள்ள முதலில் உதவுவோம். 3குடும்பங்களுக்கு ஒரு குளாய்கிணறு எனும் கணக்கில் 12 குளாய்கிணறுகளை அமைக்க வேண்டியுள்ளது.

அடுத்தடுத்த கட்டங்களில் இக்கிராமத்தின் கல்வி , தொழில் வாய்ப்பு , பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றுக்கான கருத்தரங்கம் , கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பித்து நிரந்தர முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம்.

ஒரு குளாய்கிணறு அமைக்க – 20000ரூபாய் தேவை. 

12 கிணறுகளுக்கும் – 240000.00ரூபாய் (அண்ணளவாக 1400€)

உதவ விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

உதவுவதற்கு

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

குடிதண்ணீருக்கும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அவலப்படும் ஆனந்தபுரம் கிராம மக்களுக்கான குடிதண்ணீர் கிணறுகள் அமைக்க உதவுங்கள். மழைகாலம் தொடங்குவதற்கு முன்னர் கிணறுகள் அமைக்க வேண்டும். உதவக்கூடியவர்கள் உதவி ஆனந்தபுரம் கிராமத்தின் மக்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்து தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிதண்ணீருக்கும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அவலப்படும் ஆனந்தபுரம் கிராம மக்களுக்கான குடிதண்ணீர் கிணறுகள் அமைக்க உதவுங்கள். மழைகாலம் தொடங்குவதற்கு முன்னர் கிணறுகள் அமைக்க வேண்டும். உதவக்கூடியவர்கள் உதவி ஆனந்தபுரம் கிராமத்தின் மக்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்து தாருங்கள்.

 

 

France -  புங்குடுதீவு  மக்கள் ஒன்றிய  செயலாளருக்கு  இந்த உதவி  கோரலை  அனுப்பியுள்ளேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திட்டம்

யூலை  17 ல் பதியப்பட்டுள்ளது

 

தேவை  இன்றும் உள்ளதா  என்பதை உறுதிப்படுத்தினால்

France -  புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின்  செயலாளர் சாந்தியக்காவுடன் நேரடியாக பேசுவார்.

தேவையிருந்தால்

தொடர்புகளைத்தாருங்கள்


(இன்று 08-08-2014)

Link to comment
Share on other sites

இந்த  திட்டம்

யூலை  17 ல் பதியப்பட்டுள்ளது

 

தேவை  இன்றும் உள்ளதா  என்பதை உறுதிப்படுத்தினால்

France -  புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின்  செயலாளர் சாந்தியக்காவுடன் நேரடியாக பேசுவார்.

தேவையிருந்தால்

தொடர்புகளைத்தாருங்கள்

(இன்று 08-08-2014)

 

இதுவரையில் இத்திட்டத்தை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை. உங்கள் ஊர் ஒன்றியம் இத்திட்டத்தை ஏற்றுக்  கொள்வதில் மகிழ்ச்சி. நீங்கள் எதிர்பார்க்கும் வகையிலான அனைத்து விடயங்களும் தங்களுக்கு அறியத்தரப்படும். 
 
குடிதண்ணீர் இக்கிராமத்தின் பிரதான பிரச்சனையாக உள்ளது. உங்கள் உதவி கிடைப்பதனால் தண்ணீர் தேவையை நினைவேற்றுவார்கள்.
 
உதவிக்கு நன்றிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதுவரையில் இத்திட்டத்தை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை. உங்கள் ஊர் ஒன்றியம் இத்திட்டத்தை ஏற்றுக்  கொள்வதில் மகிழ்ச்சி. நீங்கள் எதிர்பார்க்கும் வகையிலான அனைத்து விடயங்களும் தங்களுக்கு அறியத்தரப்படும். 
 
குடிதண்ணீர் இக்கிராமத்தின் பிரதான பிரச்சனையாக உள்ளது. உங்கள் உதவி கிடைப்பதனால் தண்ணீர் தேவையை நினைவேற்றுவார்கள்.
 
உதவிக்கு நன்றிகள்.

 

 

90 வீதம் சரி  என  நினைக்கின்றேன்

 

சாந்தியக்காவுடன் நான் பேசியபடி

செயலாளரிடம் சாந்தியக்காவின் தொலைபேசி  இலக்கம்  கொடுத்துள்ளேன்

தொடர்பு கொள்வார்

அவர் பேசியவுடன்

இத்திட்டம் உறுதிப்படுத்தப்படும்

 

நான் வருகின்ற  திங்கள் தான் யாழுக்கு வருவேன்

அதுவரை தொடருங்கள் சாந்தியக்கா

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

France -  புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின்  செயலாளர் நேற்று சாந்தியக்காவுடன் நேரடியாக தொடர்பு  கொண்டு பேசியிருக்கிறார்.

மீதி  விபரங்களையும்

அது தொடர்பான  தகவல்களையும் சாந்தியக்கா   பதிந்தால்

திட்டத்தின் நகர்வகளை  அறிய முடியும்.

நன்றி

 

Link to comment
Share on other sites

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின்  செயலாளர் நேற்று தொடர்பு கொண்டு பேசியிருந்தார். அவரது மின்மடலுக்கு விபரங்களை அனுப்பமாறு கோரியிருந்தார். ஆனந்தபுரம் கிராமத்திற்கு வியாழன் ஒரு பணியாளர் சென்று முழுமையான தரவுகள் எமது விண்ணப்பபடிவத்தில் பதிவு செய்து கொண்டு வந்து தருவார். கிடைத்ததும் அனுப்புவேன். 

 
தண்ணீர் தேவையாகையால் கொஞ்சம் விரைவுபடுத்தி உதவி கிடைத்தால் உதவியாக இருக்கும். மழைகாலம் தொடங்கப்போகிறது அதற்கு முன்னர் செய்து முடிக்க வேண்டும்.
 
மழைகாலம் வந்தால் இக்குடும்பங்கள் தங்குவதற்கு பொருத்தமான இடமில்லை. காரணம் வீடுகள் வெறும் குடிசைகள் என்பதால் மழைகாலம் சிரமங்களை எதிர்நோக்குவார்கள். அனைவரும் தங்குவதற்கான அவசரமான கட்டடம் ஒன்றும் அமைக்க வேண்டியுள்ளது. 
Link to comment
Share on other sites

இத்திட்டத்திற்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக விபரங்கள் கடந்தவாரம் அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் உதவிகளை விரைந்து எதிர்பார்க்கிறோம். மழை ஆரம்பித்துள்ளது. மழை பெலக்க முதல் உதவி கிடைத்தால் ஆதரவாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்திட்டத்திற்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக விபரங்கள் கடந்தவாரம் அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் உதவிகளை விரைந்து எதிர்பார்க்கிறோம். மழை ஆரம்பித்துள்ளது. மழை பெலக்க முதல் உதவி கிடைத்தால் ஆதரவாக அமையும்.

 

வணக்கம் சாந்தியக்கா

 
எமது  செயலாளர் அல்யீரியாவில்  அவரது அலுவல வேலையாக உள்ளார்.  அதனால் படங்கள் வீடியோக்களை  அவருக்கு அனுப்புவது தடங்கலாக உள்ளது.
சனியன்று வந்துவிடுவார்.  தொடர்பு கொள்வார்.
நன்றி

இத்திட்டத்திற்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக விபரங்கள் கடந்தவாரம் அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் உதவிகளை விரைந்து எதிர்பார்க்கிறோம். மழை ஆரம்பித்துள்ளது. மழை பெலக்க முதல் உதவி கிடைத்தால் ஆதரவாக அமையும்.

 

கடந்தவாரம்  சில விபரங்களே  கிடைத்தன

இன்று

41 பேரின் விபரங்கள் கிடைத்துள்ளன

35 குடும்பங்களின் விபரங்கள்அல்ல.....

பேச்சுவார்த்தைகளின் போது கவனமாக இருப்போமாக...

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தியக்கா

 
எமது  செயலாளர் அல்யீரியாவில்  அவரது அலுவல வேலையாக உள்ளார்.  அதனால் படங்கள் வீடியோக்களை  அவருக்கு அனுப்புவது தடங்கலாக உள்ளது.
சனியன்று வந்துவிடுவார்.  தொடர்பு கொள்வார்.
நன்றி

 

ஏற்கனவே தங்களது செயலாளர் விபரங்களை தருமாறு கேட்டிருந்தார். உடனடியாக முழுமையான விபரங்களை திரட்டுவதில் உள்ள சிக்கலை தங்களுக்கு திண்ணையில் உரையாடிய போது அறியத்தந்திருந்தேன். முதல் கட்டம் திரட்டப்பட்ட 16விபரங்களை முதலில் தந்துவிட்டு வேலையை ஆரம்பித்துக் கொண்டு அடுத்ததை தருமாறு நீங்களே திண்ணையில் எழுதியிருந்தீர்கள் அதற்கு அமைய முதல் தொகுதி விபரத்தை அனுப்பியிருந்தேன். உங்கள் தரப்பிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. 

 

சில தினங்கள் முன்னர் தங்கள் செயலாளரின் தொலைபேசிக்கு அழைத்திருந்தேன். அவர் தனது கூகிள் மின்னஞ்சலை வழங்கியிருந்தார் அதற்கு திரும்ப விபரங்களை தருமாறு. அப்போது உங்களுக்கு மெயில் அனுப்பினேன் எனினும் பதில் ஏதும் கிடைக்கவில்லையென கேட்ட போது தாங்கள் கொலிடேயில் நிற்பதாக கூறினார். தாங்கள் ஊரில் இல்லாமையால் கடந்தவாரம் சந்திப்பு நடத்த முடியாது போனதாகவும் இவ்வாரம் சனிக்கிழமை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாகவும் கூறியிருந்தார்.
 
அவர் தந்த மின்னஞ்சலுக்கு தகவல்களை மீளவும் அனுப்பினேன். எனினும் திங்கட்கிழமை தங்கள் செயலாளர் மடலிட்டிருந்தார். நான் அனுப்பிய விபரங்கள் அடங்கிய மின்னஞ்சல் அழிந்துவிட்டதாகவும் மீளவும் அனுப்புமாறு. திரும்பவும் அவரது கூகிள் மெயிலுக்கு அனுப்பியிருந்தேன். எனினும் பதில் வரவில்லை.
 
இங்கு விபரத்தை அறிவித்தால் நிச்சயம் நீங்கள் ஊரில் நின்றால் பார்ப்பீர்கள் என்பதால் விபரங்கள் அனுப்பிய தகவலை இங்கு பதிவிட்டேன். மடல் கிடைத்தால் இன்று கிடைத்துள்ளது என ஒரு பதில் போட்டீர்களாயின் எனக்கு உதவியாக இருக்கும். தொலைபேசியில் தொடர்பு கொள்ள நேரம் கிடைக்காது போனாலும் மின்னஞ்சலை பார்த்து விபரம் கிடைத்தது என்பதனை அறிந்து கொள்வேன். 
 
மறக்காமல் ஒருவரி எழுதுங்கள் நான் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு. உங்கள் சிரமம் வேலைப்பழு புரியும் ஆனால் எனக்கு உறுதிப்படுத்திக் கொள்ள நீங்கள் ஒரு சில நிமிடங்களை தாருங்கள்.
Link to comment
Share on other sites

 

41 பேரின் விபரங்கள் கிடைத்துள்ளன

35 குடும்பங்களின் விபரங்கள்அல்ல.....

பேச்சுவார்த்தைகளின் போது கவனமாக இருப்போமாக...

 
ஆனந்தபுரம் தற்போதுதான் எழ ஆரம்பித்துள்ள கிராமம். இங்கு தொடர்ந்து மக்கள் வந்து குடியேறவுள்ளார்கள். ஆரம்பம் 35குடும்பங்கள்.
அடுத்த ஒருவருடத்தில் 350குடும்பங்களாகக்கூட மாறும்.  முதலில் எமது உதவி திட்டத்தின் கீழ் 35 குடும்பங்களே குடியேறியிருந்தார்கள். இங்கு உதவி கோரப்பட்டு ஒருமாதம் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் மேலும் 6குடும்பங்கள் குடியேறியுள்ளனர்.  குடியேறியவர்களின் முழு விபரத்தையும் தானே உங்களுக்கும் தர வேண்டும். மீதி 6குடும்பங்களையும் விலக்க முடியாதல்லவா ?
 
எனினும் அவர்களும் எமது 12 கிணறு திட்டத்தில் தான் பயனடையப்போகிறார்கள். அடுத்த வருடம் அவர்களுக்கான மேலதிக தேவைகள் பற்றிய திட்டத்தை முன்மொழிவோம். 
 
அக்குடும்பங்களின் பாதிப்பு விபரங்கள் தங்களுடன் திண்ணை உரையாடலிலும் தொலைபேசி உரையாடலிலும் பகிர்ந்திருந்தேன். இதுவொரு சவாலான முன்னெடுப்பு. இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் இன்னபிற இடைஞ்சல்களை அறிவீர்கள். அனைத்தையும் பொதுவெளியில் குறிப்பிட முடியாமையும் புரிந்து கொள்ளுங்கள். 
 
தங்கள் செயலாளர் நாடு திரும்பியதும் திட்ட முன்னேற்றம் பற்றி அறியத்தாருங்கள்.
 
நன்றி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
ஆனந்தபுரம் தற்போதுதான் எழ ஆரம்பித்துள்ள கிராமம். இங்கு தொடர்ந்து மக்கள் வந்து குடியேறவுள்ளார்கள். ஆரம்பம் 35குடும்பங்கள்.
அடுத்த ஒருவருடத்தில் 350குடும்பங்களாகக்கூட மாறும்.  முதலில் எமது உதவி திட்டத்தின் கீழ் 35 குடும்பங்களே குடியேறியிருந்தார்கள். இங்கு உதவி கோரப்பட்டு ஒருமாதம் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் மேலும் 6குடும்பங்கள் குடியேறியுள்ளனர்.  குடியேறியவர்களின் முழு விபரத்தையும் தானே உங்களுக்கும் தர வேண்டும். மீதி 6குடும்பங்களையும் விலக்க முடியாதல்லவா ?
 
எனினும் அவர்களும் எமது 12 கிணறு திட்டத்தில் தான் பயனடையப்போகிறார்கள். அடுத்த வருடம் அவர்களுக்கான மேலதிக தேவைகள் பற்றிய திட்டத்தை முன்மொழிவோம். 
 
அக்குடும்பங்களின் பாதிப்பு விபரங்கள் தங்களுடன் திண்ணை உரையாடலிலும் தொலைபேசி உரையாடலிலும் பகிர்ந்திருந்தேன். இதுவொரு சவாலான முன்னெடுப்பு. இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் இன்னபிற இடைஞ்சல்களை அறிவீர்கள். அனைத்தையும் பொதுவெளியில் குறிப்பிட முடியாமையும் புரிந்து கொள்ளுங்கள். 
 
தங்கள் செயலாளர் நாடு திரும்பியதும் திட்ட முன்னேற்றம் பற்றி அறியத்தாருங்கள்.
 
நன்றி.

 

 

 

நன்றி  சகோதரி

விளக்கத்துக்கும்  தரவுகளுக்கும்

 

நீங்கள் 35 குடும்பங்கள் என ஆரம்பத்தில் சொன்னதால்

அதை அவர்கள் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள்

கேட்பார்கள்

அவற்றைத்தான் அவர்களும் நிர்வாகக்கூட்டத்தில் அங்கத்தவரிடம் சமர்ப்பித்து

அனுமதி  பெறமுடியும்

 

நான் திண்ணையில் எனது கருத்து என்று எழுதியிருந்தேன்

ஆனால் நீங்கள் அவருடன் கதைத்து  பின்னர் தருவதாக உறுதியளித்து

திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த முயலுங்கள் என்று தான் சொன்னேன்..

 

ஆனால்  மேலே எழுதிய  தங்களது கருத்துப்படி 

எல்லா விபரங்களும் கொடுத்தாச்சு

உதவி  வரவில்லை என்பது போலிருந்தது

அதனால் தான் பதிலிட்டேன்

யாழ்கள  உறவுகளுக்கு உண்மைநிலையை  இருவரும் அறிவிப்போம்

 

அவர் அல்யீரியாவில் உள்ளதால்

ஈ மெயில் படம் மற்றும் வீடியோக்களை  அனுப்பமுடியுதில்லை என உங்களுக்கு உடனேயே  ஈ  மெயில் போட்டிருந்தேன்.  பார்க்கவில்லையா?

 

சனியன்று வந்துவிடுவார்

ஞாயிறு நிர்வாகக்கூட்டம்  போடப்பட்டுள்ளது

அநேகமாக திங்கள் உங்களுடன் தொடர்பு கொள்வார்

 

நன்றி

தவறுதலாக  ஏதாவது  குறையாக எழுதியிருப்பின் பெரிது படுத்தாதீர்கள்

Link to comment
Share on other sites

 

நீங்கள் 35 குடும்பங்கள் என ஆரம்பத்தில் சொன்னதால்

அதை அவர்கள் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள்

கேட்பார்கள்

அவற்றைத்தான் அவர்களும் நிர்வாகக்கூட்டத்தில் அங்கத்தவரிடம் சமர்ப்பித்து

அனுமதி  பெறமுடியும்

 

 

இக்கிராமம் தற்போதுதான் தனது இயல்பை தேடுகிறது என்பதனையும் அதன் உருவாக்கத்தின் தேவையையும் உங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். விபரங்களை முழுமையாக தர வேண்டும் என்பதற்காகவே அவகாசம் கேட்டிருந்தேன்.

 

காலப்போக்கில் ஆயிரங்களைக்கூடத் தொடும் குடியேறும் குடும்பங்களின் எண்ணிக்கை. தற்போதைய அவசர நீர்த்தேவையை பூர்த்தி செய்வது என்பது அவசியமும் அவசரமுமானதாக இருக்கிறது. தண்ணீர் சிரமம் என்பது உலகில் மிகவும துன்பமானது அந்த துன்பத்தை அந்த மக்களுடன் பேசிய போது உணர்ந்தேன். அதன் பின்னரேயே முதலில் குடிநீர் வசதியை ஏற்படுத்தும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

 

ஆனால்  மேலே எழுதிய  தங்களது கருத்துப்படி 

எல்லா விபரங்களும் கொடுத்தாச்சு

உதவி  வரவில்லை என்பது போலிருந்தது

அதனால் தான் பதிலிட்டேன்

யாழ்கள  உறவுகளுக்கு உண்மைநிலையை  இருவரும் அறிவிப்போம்

 

மேலே நான் எழுதிய கருத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் எவ்வித பதிலும் இல்லாது இருந்தமையால் எனது மின்னஞ்சல் கவனிக்கப்படாதிருப்பின் களத்தில் நிச்சயம் இச்செய்தியை பார்ப்பீர்கள் என்பதனால் பதிவிட்டேன். 

 

மழைகாலம் நெருங்குவதால் இத்திட்டத்தினை விரைவாக செய்ய வேண்டிய கட்டாயம். அதனையே நினைத்து எழுதப்பட்ட கருத்து உதவி கிடைக்காது உள்ளது என்று அர்த்தப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதனை இக்கருத்து மூலமே அறிகிறேன். 
 
சில திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க முதல் பொதுவெளியல் எழுதிக் கொண்டிருப்பது பார்வையாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு வகையான இடைஞ்சல்களை எனக்குத் தருவதால் அதிகம் எழுதுவதை தவிர்த்திருந்தேன். ஒரு தகவலாக அறியத்தருதலாக பதியப்பட்ட கருத்து உங்களுக்கு தவறான புரிதலை தந்தமைக்கு வருந்துகிறேன்.
Link to comment
Share on other sites

 

ஈ மெயில் படம் மற்றும் வீடியோக்களை  அனுப்பமுடியுதில்லை என உங்களுக்கு உடனேயே  ஈ  மெயில் போட்டிருந்தேன்.  பார்க்கவில்லையா?

 

மெயில் வந்தால் கைபேசி மூலமே பார்க்க முடியும். எனது அனைத்து வேலைகளும் மின்னஞ்சல்கள் மூலமே செய்கிறேன். தினமும் பல மெயில்கள் வருகிறது.நீங்கள் அனுப்பிய எந்த மெயிலும் இதுவரை வரவில்லை.

 

நன்றி

தவறுதலாக  ஏதாவது  குறையாக எழுதியிருப்பின் பெரிது படுத்தாதீர்கள்

குறைப்பட எதுவும் இல்லை சகோதரனே.  தண்ணீர்தேவை அவசரமானதாக இருப்பதால் பணியை விரைவுபடுத்த உங்களுக்கு தகவலை தெரிவிக்கவே எழுதினேன். இதில் எந்த கோபமும் இல்லை. தவறான புரிதலை எனது கருத்துக்கள் தந்திருப்பின் மன்னித்துக் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெயில் வந்தால் கைபேசி மூலமே பார்க்க முடியும். எனது அனைத்து வேலைகளும் மின்னஞ்சல்கள் மூலமே செய்கிறேன். தினமும் பல மெயில்கள் வருகிறது.நீங்கள் அனுப்பிய எந்த மெயிலும் இதுவரை வரவில்லை.

kugan subra <vskugan5@gmail.com>
19 août (Il y a 1 jour)
cleardot.gif
 
cleardot.gif
cleardot.gif
À S
cleardot.gif
 
 
 
 
வணக்கம் சாந்தியக்கா
 
எமது  செயலாளர் அல்யீரியாவில்  அவரது அலுவல வேலையாக உள்ளார்.  அதனால் படங்கள் வீடியோக்களை  அவருக்கு அனுப்பவது தடங்கலாக உள்ளது.
சனியன்று வந்துவிடுவார்.  தொடர்பு கொள்வார்.
நன்றி

2014-08-19 12:51 GMT+02:00 kugan subra <vskugan5@gmail.com>:
cleardot.gif
Link to comment
Share on other sites

 

kugan subra <vskugan5@gmail.com>
19 août (Il y a 1 jour)
cleardot.gif
 
cleardot.gif
cleardot.gif
À S
cleardot.gif
 
 
 
 
வணக்கம் சாந்தியக்கா
 
எமது  செயலாளர் அல்யீரியாவில்  அவரது அலுவல வேலையாக உள்ளார்.  அதனால் படங்கள் வீடியோக்களை  அவருக்கு அனுப்பவது தடங்கலாக உள்ளது.
சனியன்று வந்துவிடுவார்.  தொடர்பு கொள்வார்.
நன்றி

2014-08-19 12:51 GMT+02:00 kugan subra <vskugan5@gmail.com>:
cleardot.gif

 

மன்னிக்கவும் இந்த மெயில் நேற்று போட்டதாக பதியப்பட்டுள்ளது. எனினும் எனக்கு வரவில்லை. 

rameshsanthi@gmail.com

nesakkaram@gmail.com

இவ்விரண்டுக்கும் வரவில்லை. சிலவேளை ஏதாவது எழுத்துப்பிழைகள் விடப்பட்டதோ தெரியவில்லை. ஒருமுறை சரிபாருங்கள். 

 

உங்கள் செயலாளர் அவர்கள் எனது மெயில் தவறிவிட்டது மீள அனுப்புமாறு கேட்ட மடல் மட்டுமே வந்தது.

 

நேசக்கரத்துக்கு வரும் மெயில்கள் யாவும்rameshsanthi@gmail.com இற்கு ஒரு பிரதி வருமாறு செய்து வைத்திருக்கிறேன். தற்போதும் தேடினேன் உங்கள் மடலை காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமைக்குள்  நல்ல செய்தி  வரும்

நன்றி  பதில்களுக்கும் 

நேரத்துக்கும்...

Link to comment
Share on other sites

திங்கட்கிழமைக்குள்  நல்ல செய்தி  வரும்

நன்றி  பதில்களுக்கும் 

நேரத்துக்கும்...

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.