Jump to content

2011 – 2014 வரையான கடன் உதவித்திட்டத்தின் தொகுப்பறிக்கை.


Recommended Posts

2011 – 2014 வரையான கடன் உதவித்திட்டத்தின் தொகுப்பறிக்கை.

சிறு சிறு துளியாக பாதிக்கப்பட்டவர்களின் துணையாக எழுந்த நேசக்கரமானது 2011 யூலைமாதம்; கடன் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தது. இதுவொரு பரீட்சார்த்த முயற்சியாக செயற்படுத்த திட்டமிட்டோம்.


புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்படும் நிதியை மீள செலுத்தக் கூடியவர்களிடமிருந்து மீளப்பெறுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் வழங்கும் உதவிகளை கடன் அடிப்படையில் வழங்கி மீளப்பெறும் நிதியை சுழற்சி முறையில் அடுத்தடுத்தவர்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டது.

கட்டம் 1.

திருமுறிகண்டியில் மீள்குடியேறிய குடும்பங்களில் 4குடும்பங்களை தெரிவு செய்து தலா ஒரு குடும்பத்திற்கு 30ஆயிரம் ரூபா அடிப்படையில் 120000ரூபா(ஒருலட்சத்து இருபதாயிரம் ரூபா) பகிர்ந்தளிக்கப்பட்டது.


3மாதங்கள் முடிய கடனை திரும்ப செலுத்துவோம் என கையொப்பமிட்டு உறுதிப்படுத்திய கடிதங்கள் தந்திருந்தார்கள். எனினும் கடனைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மால் வழங்கப்பட்ட உதவியை தம்மால் மீளச்செலுத்த முடியாதென மறுத்திருந்தார்கள். முதல் முயற்சி தோல்வி.

கட்டம் 2.

1) நிமலலீலனி (மட்டக்களப்பு) 40ஆயிரம் ரூபா. (மீள செலுத்தவில்லை)
2) குகதாசன் (மட்டக்களப்பு -இவர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்) 40ஆயிரம் ரூபா. (மீள செலுத்தவில்லை)
3) சந்திரன் (கிளிநொச்சி) – 60ஆயிரம் ரூபா. (மீள செலுத்தவில்லை)
4) கவிதா ரலீசன் (மட்டக்களப்பு) – 80ஆயிரம் (மீள செலுத்தவில்லை)
5) கந்தசாமி பகீரதன்(வவுனிக்குளம்) – 1லட்சம் (60ஆயிரம் மீளச்செலுத்தியுள்ளார். மீதி நோயுற்றிருந்ததால் செலுத்தப்படவில்லை)
6) உசேந்தினி (மட்டக்களப்பு) – 40ஆயிரம் (மீள செலுத்தவில்லை)
7) அருள்ராஜா (மட்டக்களப்பு) – 50ஆயிரம் (மீள செலுத்தவில்லை)
8) ஆனந்தன் (வவுனியா) – 50ஆயிரம் (மீள செலுத்தவில்லை)
9) சாந்தன் (முல்லைத்தீவு) 50ஆயிரம் (25ஆயிரம் மீளச்செலுத்தினார்)

2011 யூலை தொடக்கம் 2012 டிசம்பர் வரையில் மேற்படி விபரங்களுக்கு உரியவர்களுக்கு கடனுதவி வழங்கியிருந்தோம்.இக்காலப்பகுதியில் மொத்தம் 630.000இ00ரூபா வழங்கப்பட்டது. இதிலிருந்து 85000,00ரூபாய் மட்டுமே மீளச்செலுத்தியிருந்தார்கள். 545000ரூபா மீள இதவரையில் கிடைக்கவில்லை. இதுவும் திட்டம் தோல்வி.

கட்டம் 3.

மன்னார் மாவட்டம் தேனுடையான் ,பாப்பாமோட்டை பகுதியில் 2013ம் ஆண்டு எமது பணிகள் ஆரம்பித்திருந்தது. அங்குகு வாழும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கடன் உதவி வழங்குமாறு வேண்டியிருந்த குடும்பங்களிலிருந்து 13 குடும்பங்களைத் தெரிவு செய்து 275000ரூபா(இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா) வழங்கியிருந்தோம்.

இத்திட்டத்தை பொறுப்பேற்றிருந்தவர்கள் தங்களை நம்பி இக்கடனைத் தருமாறு கேட்டிருந்தார்கள். தங்களது கிராமத்திற்கு தொடர்ந்து சுழற்சி முறையில் தம்மால் பயன்படுத்த முடியுமெனவும் கேட்டுக் கொண்டதற்கு அமைய மேற்படி தொகையினை வழங்கியிருந்தோம்.

ஒரு வருடத்தில் 90200ரூபாய் மீளச்செலுத்தியிருக்கிறார்கள். கிடைக்கப்பெற்ற இத்தொகையிலிருந்து தேன்சிட்டு ஆயுர்வேத நிலத்திற்கு 30ஆயிரம் ரூபாவினை பயன்படுத்தியுள்ளோம். மீதி60200ரூபாவினையும் மேலும் சில குடும்பங்களுக்கு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டது. எனினும் பணத்தை பெற்றுக்கொண்டவர்களில் ஒருவர் மட்டும் 2500ரூபாயினை மீளச்செலுத்தியுள்ளார். மற்றையவர்கள் தம்மால் மீளச்செலுத்த முடியாதென மறுத்துள்ளனர்.

கடனதவித்திட்டமானது எம்மவர்களுக்கு வழங்குவதில் எம்மால் தொடர்ந்து சிக்கல்களையே எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. எனவே 2014ம் ஆண்டு தைமாத்திலிருந்து கடன் உதவி வழங்கும் திட்டத்தினை முற்றாக கைவிட்டுள்ளோம்.

கடந்த 3வருடங்களில் 905000,00ரூபாவினை(ஒன்பது லட்சத்து ஐயாயிரம் ரூபா) கடன் உதவியாக வழங்கியிருந்தோம். மீளக் கிடைத்தது 85ஆயிரம் ரூபாய் மட்டுமே.

 

Link to comment
Share on other sites

2011 – 2014 வரையான கடன் உதவித்திட்டத்தின் தொகுப்பறிக்கை.

2011 யூலை தொடக்கம் 2012 டிசம்பர் வரையில் மேற்படி விபரங்களுக்கு உரியவர்களுக்கு கடனுதவி வழங்கியிருந்தோம்.இக்காலப்பகுதியில் மொத்தம் 630.000இ00ரூபா வழங்கப்பட்டது. இதிலிருந்து 850000,00ரூபாய் மட்டுமே மீளச்செலுத்தியிருந்தார்கள். 545000ரூபா மீள இதவரையில் கிடைக்கவில்லை. இதுவும் திட்டம் தோல்வி.

கட்டம் 3.

இலக்கங்களை சரி பார்க்கவும்.

Link to comment
Share on other sites

இலக்கங்களை சரி பார்க்கவும்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் பகலவன் மாற்றியுள்ளேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.