Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடல்கள் கலக்கும் கலவி மூன்றெழுத்து

அதனை தூண்டும் காமம் மூன்றெழுத்து

இவற்றை உருவாக்கும் காதல் மூன்றெழுத்து

உயிரைக் காவும் விந்து மூன்றெழுத்து

அதை தாங்கும் பெண்மை மூன்றெழுத்து

இன்னும் எழுதலாம் ஆனால் ரதியிடம் அடிவாங்கத் தயார் இல்லை.... :icon_mrgreen:

இதுவும் நல்லாத் தான் இருக்குது :) ...இன்னும் தெரிந்தால் எழுதுங்கோ.

........................................................................................

தினமும் அதிகாலையில் செடிகள் மீது பட‌ர்ந்திருக்கும் பனித்துளிகளைப் பஞ்சினால் ஒற்றியெடுத்து முகத்தில் தட‌வி வந்தால் முகம் பளபளப்பாய் விளங்கும்.

முகத்தில் வெள்ளைத் தேமல் இருந்தால் துளசியையும்,கொஞ்ச‌ உப்பையும் சேர்த்து அரைத்த சாற்றை தட‌வினால் தேமல் மறைந்து விடும்.

கீரை விதையை நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் வளரும், கருமை நிறம் அதிகரிக்கும்,முடி உதிராது.

நந்தியாவட்டை மலர்களைப் இர‌வில் கண்களில் வைத்துக் கட்டிக் கொண்டு தூங்கவும்.காலையில் பாருங்கள் கண்களில் குளிர்ச்சியே குளிர்ச்சி.

கர‌ட் உட‌ல் இளைக்கவும்,கண்ணொளியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

மல்லிகை பார்வையை சீராக்கும்.

நந்தியாவட்டை சகல கண் நோய்களை தீர்க்கும் சக்தி உள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் பாதாம் பருப்புக்களை சாப்பிட்டு வந்தால் கண்ணில் நீர் வடிவதை தடுக்கலாம்.

காதுக்குள் கொப்பளம்,கட்டி இருந்தால் உள்ளி சாற்றின் சில துளிகளை விட்டால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்.[தொட‌ரும்]

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் அதிகாலையில் செடிகள் மீது பட‌ர்ந்திருக்கும் பனித்துளிகளைப் பஞ்சினால் ஒற்றியெடுத்து முகத்தில் தட‌வி வந்தால் முகம் பளபளப்பாய் விளங்கும்.

முகத்தில் வெள்ளைத் தேமல் இருந்தால் துளசியையும்,கொஞ்ச‌ உப்பையும் சேர்த்து அரைத்த சாற்றை தட‌வினால் தேமல் மறைந்து விடும்.

கீரை விதையை நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் வளரும், கருமை நிறம் அதிகரிக்கும்,முடி உதிராது.

நந்தியாவட்டை மலர்களைப் இர‌வில் கண்களில் வைத்துக் கட்டிக் கொண்டு தூங்கவும்.காலையில் பாருங்கள் கண்களில் குளிர்ச்சியே குளிர்ச்சி.

கர‌ட் உட‌ல் இளைக்கவும்,கண்ணொளியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

மல்லிகை பார்வையை சீராக்கும்.

நந்தியாவட்டை சகல கண் நோய்களை தீர்க்கும் சக்தி உள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் பாதாம் பருப்புக்களை சாப்பிட்டு வந்தால் கண்ணில் நீர் வடிவதை தடுக்கலாம்.

காதுக்குள் கொப்பளம்,கட்டி இருந்தால் உள்ளி சாற்றின் சில துளிகளை விட்டால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்.[தொட‌ரும்]

நிறையப் பெண்கள் மலர் படிக்கின்றீர்கள் போலிருக்கின்றது. இப்படியான விடயங்கள் பலவற்றிற்கு எதுவித மருத்துவ ஆதாரமும் இல்லை, ஆனால் நம்புவதற்கு நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிர‌தோச‌ தினத்தன்று பிற்பகல் 4 1/2 6.00 மணிக்குள் சிவ தரிசனம் செய்வது நல்லது. 144 பிர‌தோச‌ங்கள் இடை விடாது சிவ தரிச‌னம் செய்து வருபவருக்கு மறு பிறவி கிடையாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளி பொளிந்து

சிதைப்பதால் தான்

சிற்பம் சிறக்கிறது.

இலையுதிர் பூத்த

மரங்களில் தான்

வசந்தம் பிறக்கின்றது.

இழந்து பெறும்

வாழ்க்கையிலும் ஏதோ

சுகமொன்று இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

நீ உன் நண்பர்களைப் பற்றிச் சொல்

நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

என்னைப் பலவாறாகப் புகழ்ந்து,

என்னிடம் இருந்து ஆதாயம் பெற முயலும்

ஆயிரம் உறவினர்கள் எனக்கு

வேண்டவே,வேண்டாம். தேவை ஒரு நண்பன்.

ஒரே ஒரு நண்பன்.

ஒரு நல்ல நண்பனுக்காக உயிரைக்கூட‌

தியாகம் பண்ணலாம்.

ஆனால் தேவை ஒரு நல்ல நண்பன்,

எங்கே இருக்கிறான் அவன்?

வாழ்க்கையில் நான் யாவற்றையும் இழக்க சம்மதிப்பேன்.

ஆனால் ஒரு நல்ல நண்பனை மட்டும் எந்நிலையிலும் நான்

இழக்க சம்மதிக்கவே மாட்டேன்.

நல்லதொரு நண்பனை,பிரிய நேரிடும் போது

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை பிரிவது போல

பழகிப் பழகி மணந்த மனைவியைப் பிரிவது போல

விரும்பி விரும்பிச் செய்த வேலையை பிரிவது போல

ஒர் உணர்வு உங்களுக்குள் முகிழ்க்காவிட்டால்

உங்களுக்கு நட்பு பற்றி ஒன்றுமே தெரியாது என்று பொருள்.

"கொஞ்ச‌ம் பொறுங்கள்,என் நண்பர் வருவார்.வந்து விட‌ட்டும்."

உறவினர்களை ஆண்ட‌வனாகப் பார்த்து அனுப்பி வைக்கிறான்.

ஆனால் நண்பர்களை நாமே தான் தேடி அடைகிறோம்.

கடவுள்,கருணையுட‌ன் கூடிய காதல்,பிர‌திபலன் எதிர்பாராத அன்பு,நட்பு

இவை யாவும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க வேண்டியவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முற்களுக்கு நடுவே தான் வாழ்க்கை

இருந்தாலும் ரோஜா சிரிக்கிறது."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் என்ட தூரத்துச் சொந்தமான ஒரு மாமா இறந்து விட்டாராம்...அவர் ஊரில் இருக்கும் போது எப்ப பார்த்தாலும் புறுபுறுத்துக் கொண்டும்,தொணதொணத்துக் கொண்டும் இருப்பார் :D ...ஒரு நாள் வீட்டுக்கு வந்திருக்கும் போது அவரது தொல்லை பொறுக்க முடியாமல் அவருக்கு தேநீர் போடும் போது சீனிக்கு பதிலாக உப்பை போட்டுக் கொடுத்தது :lol: இப்பவும் நன்றாக ஞாபகம் இருக்குது...அவர் இங்கே வந்தும் சகோதரங்கள் எல்லோருடனும் சண்டை.ஒருத்தருடனும் பேச்சு வார்த்தை இல்லை ஆனால் குடி,சிகரெட் போன்ற எந்த வித கெட்ட பழக்கமில்லை...சாப்பாட்டில் வலு கவனம் அத்தோடு நடந்து தான் வேலைக்குப் போவார் அப்படி இருந்தும் 55 வயசுக்கு முதல் மேலே போய் விட்டார் :(

Link to comment
Share on other sites

அண்மையில் என்ட தூரத்துச் சொந்தமான ஒரு மாமா இறந்து விட்டாராம்...அவர் ஊரில் இருக்கும் போது எப்ப பார்த்தாலும் புறுபுறுத்துக் கொண்டும்,தொணதொணத்துக் கொண்டும் இருப்பார் :D ...ஒரு நாள் வீட்டுக்கு வந்திருக்கும் போது அவரது தொல்லை பொறுக்க முடியாமல் அவருக்கு தேநீர் போடும் போது சீனிக்கு பதிலாக உப்பை போட்டுக் கொடுத்தது :lol: இப்பவும் நன்றாக ஞாபகம் இருக்குது...அவர் இங்கே வந்தும் சகோதரங்கள் எல்லோருடனும் சண்டை.ஒருத்தருடனும் பேச்சு வார்த்தை இல்லை ஆனால் குடி,சிகரெட் போன்ற எந்த வித கெட்ட பழக்கமில்லை...சாப்பாட்டில் வலு கவனம் அத்தோடு நடந்து தான் வேலைக்குப் போவார் அப்படி இருந்தும் 55 வயசுக்கு முதல் மேலே போய் விட்டார் :(

இப்ப விளங்குதா நான் ஏன் தண்ணி அடிப்பது என்று... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப விளங்குதா நான் ஏன் தண்ணி அடிப்பது என்று... :lol:

இப்ப என்ன நிழலி அண்ணா சொல்லவாறிங்கள் எப்பவும் சாகிறது தானே எல்லாரும் தண்ணி அடியுங்கோ என்றோ??? :rolleyes:

[size=3](அப்பாடா இண்டைக்கு ஒராளை மாட்டி விட்டாச்சு நிம்மதியா தூங்கலாம். ) :icon_mrgreen:[/size][size=3] [/size]

Link to comment
Share on other sites

இப்ப என்ன நிழலி அண்ணா சொல்லவாறிங்கள் எப்பவும் சாகிறது தானே எல்லாரும் தண்ணி அடியுங்கோ என்றோ??? :rolleyes:

(அப்பாடா இண்டைக்கு ஒராளை மாட்டி விட்டாச்சு நிம்மதியா தூங்கலாம். ) :icon_mrgreen:

ஹி ஹி....

(அப்பாடி ஒரு மாதிரி பதில் சொல்லிட்டன் :) )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹி ஹி....

(அப்பாடி ஒரு மாதிரி பதில் சொல்லிட்டன் :) )

இப்படி பல்லுக்காட்டுவதையும் தடை செய்தால் என்ன நிழலி அண்ணா???? :unsure:

Link to comment
Share on other sites

[size=5]மூன்றெழுத்தில் வாழ்க்கை[/size]

உலகில் உள்ள உயிர் மூன்றெழுத்து

உயிரை இயக்கும் சக்தி மூன்றெழுத்து

சக்தியின் வடிவம் அன்னை மூன்றெழுத்து

அன்னை காட்டும் அன்பு மூன்றெழுத்து

அறிவை வளர்க்கும் பள்ளி மூன்றெழுத்து

பள்ளியிற் கற்கும் கல்வி மூன்றெழுத்து

கல்வியால் கிடைக்கும் பதவி மூன்றெழுத்து

பதவியை சிறப்பிக்கும் இளமை மூன்றெழுத்து

இளமை தரும் மணம் மூன்றெழுத்து

மணத்தால் இணையும் மனைவி மூன்றெழுத்து

மனைவியால் உறவாகும் மழலை மூன்றெழுத்து

மழலைக்கு செலவாகும் பணம் மூன்றெழுத்து

பணத்தினை தேடும் உட‌ல் மூன்றெழுத்து

உட‌ல் சோரும் முதுமை மூன்றெழுத்து

முதுமையின் பின் முடிவு மூன்றெழுத்து

முடிவின் பின் தேவைப்படும் பெட்டி மூன்றெழுத்து

பெட்டியில் அட‌ங்கும் பிணம் மூன்றெழுத்து

பிணம் எடுத்துச் செல்லும் ஊர்தி மூன்றெழுத்து

ஊர்தி செல்லும் இட‌ம் சுட‌லை மூன்றெழுத்து

சுட‌லையில் வைக்கும் கொள்ளி மூன்றெழுத்து

கொள்ளியில் எரித்த அஸ்தி மூன்றெழுத்து

அஸ்தி கரையும் கட‌ல் மூன்றெழுத்து

அருமை, நல்ல பதிவு தொடருங்கள்...நாங்கள் வாசகனாக தொடர்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழித்து எழுந்து இவ்வெளி உலகிலிருந்து திரும்பிச் செல்.

உனக்குள்ளேயே இன்னும் ஆழ்ந்து முழுகு.

அங்கு உடனடியாக சாந்தியையும் அமைதியையும்

பெறுவாய். உனக்குள்ளேயன்றி

வேறு எங்கும் சாந்தி ஏற்படாது என்பதை அறி.

ஆகவே அந்தச் சாந்தியை உன்னுள்ளே பெறுவதற்கு

முயற்சி செய்.நாமே சாந்தியைப் பெற்றாலன்றி

வேறு எவ்விடத்திலும் நமக்கு சாந்தி ஏற்படாது.

உனக்குள்ளே சாந்தியைப் பெறும் முயற்சியில்

வெற்றி கண்டு விட்டால் நீ முக்தனாகி விடுவாய்.

உன் அமைதியை வெளிக் கஸ்டம் ஏதும் அழிக்க முடியாது.

பயப்படாதே உன்னுள்ளே நம்பிக்கை கொள்.

எப்போதும் மேல் நோக்கிச் செல்.

உண்மைக்காகவே போராடி தீர புருசனாக மரணமடை

இது உன் ஆத்மாவுக்கு சாந்தியளிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனவுறுதியை அதிகரிக்கும் புத்தகங்கள் பலவற்றை ரதி படிப்பது போலத் தெரிகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறையப் பெண்கள் மலர் படிக்கின்றீர்கள் போலிருக்கின்றது. இப்படியான விடயங்கள் பலவற்றிற்கு எதுவித மருத்துவ ஆதாரமும் இல்லை, ஆனால் நம்புவதற்கு நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

 

 

நான் மங்கையர் மலர் படிப்பதில்லை <_<
 

மனவுறுதியை அதிகரிக்கும் புத்தகங்கள் பலவற்றை ரதி படிப்பது போலத் தெரிகின்றது!

 

 

இப்படியான புத்தகங்கள் தான் எனக்கு இப்ப தேவையாயிருக்கு...அதை விட‌ எனக்கு மனம் விர‌க்கியடைந்திருக்கிற நேர‌ம் ஆர்கே,பிகேபி,சுஜாதா போன்றவர்களது மர்ம நாவல்களை படித்தால் மனசை இலேசாக்கி என்னை மறந்து சந்தோச‌மாக வைத்திருக்க உதவுகிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சயந்தனது "ஆறாவடு" நூல் வந்திருந்த நேர‌ம் என்னிடம் ஒருவர் சொன்னார் சயந்தன் இயக்கத்தில் இருந்திருக்கிறார் போல தெரியுது என்று[இத்தனைக்கு அவர் ஆறாவடுவை வாசிக்கவில்லை]... எனக்கு நிச்சயமாய் தெரியும் சயந்தன் இயக்கத்தில் இருக்கவே இல்லை என்று சொன்னேன்... இயக்கத்தில் இருந்திருக்காத சயந்தனால் எப்படி இயக்கத்தை பற்றி எழுத முடியும் என்று அவர் கேட்டார்... நான் சொன்னேன் இயக்கத்தில் இருக்கின்ற ஆட்கள் மட்டும் தான் இயக்கத்தை பற்றி எழுத வேண்டுமா இயக்கத்தை பற்றி தெரிந்தவர்களும்,புலி ஆதர‌வாளர்களும் கூட‌ எழுதலாம் என சொன்னேன்...அதற்கு அவர் ஒரு உதார‌ணத்தை ஆதார‌ம் காட்டி சொன்னார் முள்ளி வாய்க்கால் அவலத்தை அங்கு இருந்து கஸ்ட‌ப்பட்ட,அனுபவித்த மக்களை விட‌ வேறோருவரால் சொல்லவோ,எழுத்தில் வடிக்கவோ முடியாது அப்படித் இங்கிருந்து கொண்டு நாங்கள் எழுதினாலும் அந்த மக்கள்  பட்ட கஸ்ட‌த்தினை அப்படியே 100% எழுத முடியாது என சொன்னார்.
 
அவர் சொல்வது ஒரு விதத்தில் உண்மை என்டாலும் இன்னொரு விதத்தில் பார்க்கும் போது உண்மையை,தெரிந்ததை யார் வேண்டுமானாலும் எழுதலாம் தானே என்பது தான் எனது கருத்தாக இருக்குது...ஒன்றைப் பற்றி தெரிந்தவன் தான் அதை எழுதலாம் என்டால் காதலித்தவன் தான் காதலைப் பற்றி எழுதலாம்,செத்தவன் தான் சாவைப் பற்றி எழுதலாம் என்பது போல இருக்குதல்லவா.
 
அவருடைய கருத்தையும்,யாழில் எழுதுபவர்களையும் எடுத்துப் பார்த்தால்[எல்லோரையும் அல்ல] அவர் சொல்வது உண்மை போல தான் இருக்குது...ஊரில் இருக்கும் வரைக்கும் போராட்ட‌த்திற்கு என ஒரு சிறு பங்களிப்பு செய்திருக்க மாட்டார்கள் இங்கு வந்த உட‌ன் எல்லோரையும் பார்த்து உட‌னே புலிகளை ஆதரிக்கத் தொட‌ங்கி இருப்பார்கள்.அவர்கள் செய்த அதிக பட்ச‌ உதவி என்டால் காசு அனுப்பி இருப்பார்கள்.5ம் கட்ட ஈழப் போர் வர‌ப் போகுது ஊருக்கு வாங்கோ சண்டை பிடிக்க என்று சொன்னால் தாங்களோ,தங்கட‌ சகோதர‌ங்களையோ,பிள்ளைகளையோ அனுப்ப மாட்டார்கள் அப்படி அனுப்புவதாக இருந்தால் 2009ம் ஆண்டே அனுப்பி இருப்பார்கள்...இப்படியானவர்களை பொதுவாக பார்க்கும் போது அவர் சொன்ன ஒருவன் தான் என்ன செய்கிறான் என்பதையும்,தன்ட‌ அனுபவத்தை மட்டும் தான் எழுத முடியும் என்ட‌ கருத்து தான் அதிகமாய் மனதில் நிற்குது.
 
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு சண்டை பிடிக்காமல் எழுதுங்கள்...நன்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது இடத்தில் இருந்து கொண்டு கொஞ்ச பொம்பிளையள் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்கள் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.தாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் விசேடமாக என்ன எல்லாம் சாப்பிட்டோம்,எப்படி எல்லாம் சாப்பிட்டோம் என்டெல்லாம் பழைய நினைவுகளில் மூழ்கி கதைத்தார்கள் :(.அதை அங்கிருந்த மற்ற பெண்கள் ஆமோதித்தார்கள்.அங்க இறைச்சி எல்லாம் கடி படாமல் காட‌க[hard] இருக்குமாம்.இங்கத்தைய சாப்பாடு பழகின பிறகு அங்கத்தைய சாப்பாடு எதுவுமே சுவையில்லாமல் இருக்குதாம் என தங்களுக்குள் கதைத்தார்கள்...நான் இர‌ண்டு வருட‌த்திற்கு முந்தி அம்மாவின் செத்த வீட்டுக்கு போய் வந்தனான் எனக்கு அங்க தனிய பருப்பும் சோறும் தந்தாலே சாப்பிடுவேன் அவ்வளவு சுவையாக இருக்கும் :D

அது சரி இவளவு பெண்களும் சேர்ந்து கதைக்கும் போது நகை நட்டு மற்றும் உடுப்பு பற்றி கதை வர வில்லையா.நீங்கள் எங்கட பெண்களைத்தான் சொன்னீர்களா  :rolleyes:

Link to comment
Share on other sites

விழித்து எழுந்து இவ்வெளி உலகிலிருந்து திரும்பிச் செல்.

உனக்குள்ளேயே இன்னும் ஆழ்ந்து முழுகு.

அங்கு உடனடியாக சாந்தியையும் அமைதியையும்

பெறுவாய். உனக்குள்ளேயன்றி

வேறு எங்கும் சாந்தி ஏற்படாது என்பதை அறி.

ஆகவே அந்தச் சாந்தியை உன்னுள்ளே பெறுவதற்கு

முயற்சி செய்.நாமே சாந்தியைப் பெற்றாலன்றி

வேறு எவ்விடத்திலும் நமக்கு சாந்தி ஏற்படாது.

உனக்குள்ளே சாந்தியைப் பெறும் முயற்சியில்

வெற்றி கண்டு விட்டால் நீ முக்தனாகி விடுவாய்.

உன் அமைதியை வெளிக் கஸ்டம் ஏதும் அழிக்க முடியாது.

பயப்படாதே உன்னுள்ளே நம்பிக்கை கொள்.

எப்போதும் மேல் நோக்கிச் செல்.

உண்மைக்காகவே போராடி தீர புருசனாக மரணமடை

இது உன் ஆத்மாவுக்கு சாந்தியளிக்கும்.

 

 

இராகம்: இந்துஸ்தான் காப்பி தாளம்: ஆதி

 
    கண் விழித்து எழுந்து வா மானிடனே
    கருணை நாதன் இயேசுவிடம்
 
    சரணங்கள்
 
1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்து
    நீச உலகத்தின் நேயம் மறந்து
    துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து
    தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து - கண் விழித்து
 
2. மனது போல் நடக்கத் துணியாதே
    மாய உலகின் வாழ்வை விரும்பாதே
    உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே
    உல்லாச நடக்கை பொல்லாததே - கண் விழித்து
 
3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்
    இளைய மகனைப் போல் வரவேண்டும்
    பரம தகப்பன் பாதம் விழவேண்டும்
    பாவமன்னிப்பை நீ பெற வேண்டும் - கண் விழித்து
 
4. பேரன்புறும் பரம தந்தையவர்
    பிள்ளை உன்னைச் சதாவும் மறவாதவர்
    தூரம் பிரிந்திருக்க மனமற்றவர்
    சொந்த வீட்டில் வைத்து சூட்சிப்பவர்! - கண் விழித்து
 
5. அசுத்தமறக் கழுவி அலங்கரிப்பார்
    ஆடையாக நீதியுடை தரிப்பார்;
    பசிக்குப் பருக ஞானப்பால் தருவார்

    பரலோக இன்பப் பதவி சேர்ப்பார் - கண் விழித்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான புத்தகங்கள் தான் எனக்கு இப்ப தேவையாயிருக்கு...அதை விட‌ எனக்கு மனம் விர‌க்கியடைந்திருக்கிற நேர‌ம் ஆர்கே,பிகேபி,சுஜாதா போன்றவர்களது மர்ம நாவல்களை படித்தால் மனசை இலேசாக்கி என்னை மறந்து சந்தோச‌மாக வைத்திருக்க உதவுகிறது.

எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய சூழலைத் தோற்றுவித்தால் யோசனைகளுக்கு நேரம் இருக்காது. அத்தோடு சவாலான விடயங்களில் கவனம் எடுக்கலாம்!

 

எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு "Angry Birds" game விளையாடுவது. இன்னும் அலுக்கவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழித்து எழுந்து இவ்வெளி உலகிலிருந்து திரும்பிச் செல்.

உனக்குள்ளேயே இன்னும் ஆழ்ந்து முழுகு.

அங்கு உடனடியாக சாந்தியையும் அமைதியையும்

பெறுவாய். உனக்குள்ளேயன்றி

வேறு எங்கும் சாந்தி ஏற்படாது என்பதை அறி.

ஆகவே அந்தச் சாந்தியை உன்னுள்ளே பெறுவதற்கு

முயற்சி செய்.நாமே சாந்தியைப் பெற்றாலன்றி

வேறு எவ்விடத்திலும் நமக்கு சாந்தி ஏற்படாது.

உனக்குள்ளே சாந்தியைப் பெறும் முயற்சியில்

வெற்றி கண்டு விட்டால் நீ முக்தனாகி விடுவாய்.

உன் அமைதியை வெளிக் கஸ்டம் ஏதும் அழிக்க முடியாது.

பயப்படாதே உன்னுள்ளே நம்பிக்கை கொள்.

எப்போதும் மேல் நோக்கிச் செல்.

உண்மைக்காகவே போராடி தீர புருசனாக மரணமடை

இது உன் ஆத்மாவுக்கு சாந்தியளிக்கும்.

 

நல்ல பதிவு ரதி, நன்றி பகிர்வுக்கு

எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய சூழலைத் தோற்றுவித்தால் யோசனைகளுக்கு நேரம் இருக்காது. அத்தோடு சவாலான விடயங்களில் கவனம் எடுக்கலாம்!

 

எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு "Angry Birds" game விளையாடுவது. இன்னும் அலுக்கவில்லை!

 

எனக்கு Tom & Jerry கார்டூன்  :lol:  :D

Link to comment
Share on other sites

 

 

இப்படியான புத்தகங்கள் தான் எனக்கு இப்ப தேவையாயிருக்கு...அதை விட‌ எனக்கு மனம் விர‌க்கியடைந்திருக்கிற நேர‌ம் ஆர்கே,பிகேபி,சுஜாதா போன்றவர்களது மர்ம நாவல்களை படித்தால் மனசை இலேசாக்கி என்னை மறந்து சந்தோச‌மாக வைத்திருக்க உதவுகிறது. 

நல்ல நகைச்சுவைப் படங்களைப் பாருங்கள். சீரியஸாக இல்லாத பொழுது போக்குப் புத்தகங்களை வாசியுங்கள். மனம் சோர்வாக இருந்தால் yotube இல் இசை நிகழ்ச்சிகள், 'கொமடி சீன்' பார்ப்பேன். சில சீரியசான புத்தகங்களை வாசித்தால், மன நல்லாயிருந்தாலும் நிறைய யோசிக்க வைக்கும். சுஜாதாவின் கதைகள் வாசிக்க சந்தோசமாக இருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அனைவர‌து வருகைக்கும்,உற்சாக மூட்டும் ஆக்க பூர்வமான கருத்திற்கும் முதற்கள் எனது நன்றிகள்.
 
காலணிக்குள் முகங்கள்
நசுக்கும் சிதைகள்
அதனால் என்ன
ஜரோப்பிய காலன்றோ
மோதிர‌க் கையன்றோ
தோத்திர‌ங்கள் சொல்வோம்.
தாங்க்ஸ் மேசி டங்கி[thanks merci danke]
கனவுகள் காயமாக
மனிதரைப் போல
இலைகளை உதிர்த்து
உள்ளுக்குள் உயிர்த்து
மர‌ங்கள் வெறிக்கும்
இருப்பிட‌ம் தொலைந்த
எனக்காக இர‌ங்கும் 
மலர்கள் தூவிய
பீட‌ங்கள் ஒவ்வொன்றிலும்.
கூர்வாள் உயர்த்திய
வீர‌ரைத் தாங்கும்
பாயும் புர‌விகள்
தேச‌ங்கள் வென்றவர்
சிலையிலும் முறைப்புட‌ன்
தீப்பற்றும் குர‌ல்களால்
செவிகளில் அறைவர்
"வெளியேறு..."
சிலைகள் உயிர்க்கும்
வாள்முனை மினுங்கும்.
தாயகம் துறந்தவனே
உனக்கேது இருப்பிட‌ம்."
[கி.பி அர‌விந்தன்]
 
 
 
 
 
"எத்தனைபேர் இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்".
 
தமிழுக்கு இலக்கணம் உண்டு.
தமிழனுக்கு?
 
ஈழத்தில்
யுத்த பிட்சுக்கள்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய சூழலைத் தோற்றுவித்தால் யோசனைகளுக்கு நேரம் இருக்காது. அத்தோடு சவாலான விடயங்களில் கவனம் எடுக்கலாம்!

 

எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு "Angry Birds" game விளையாடுவது. இன்னும் அலுக்கவில்லை!

எனக்கும் பிடித்த விளையாட்டு.

Link to comment
Share on other sites

Angry Bird எல்லோரையும் கவரக்கூடியது என அறிந்ததால் அதை விளையாடாமல் தவிர்க்கிறேன்.  :unsure:  பிறகு முகநூலில் விவசாயம் செய்த நிலைமைக்குப் போய்விட்டால்?? :rolleyes: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.