Jump to content

உதவும் கரங்களை முறிக்கும் வல்லாதிக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி அலசல்

உதவும் கரங்களை முறிக்கும் வல்லாதிக்கம்

தமிழீழ விடுதலை ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்து அதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளும் வேளையி்ல் ஆயுதரீதியான போராட்டத்தில் மட்டும் நின்றுவிடாது போரும் பொருளாதாரமும், போரும் புனர்வாழ்வுப் பணிகளும், போரும் சமூக அபிவிருத்தியும் என்று அனைத்தையும் சேர்த்துத் திட்டமிட்டுச் செயற்படுத்திய கட்டுமான பணிக்குள் 1985 ம் ஆண்டு தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஒவ்வொரு அகவையிலும் நிவாரண, புனர்வாழ்வு அபிவிருத்தி, இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொண்டு துன்பதுயரங்களிலிருந்து வெளியே வந்து புதிய வாழ்வினைத் தொடங்கும் அளவிற்கு பலவிதமான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தனது வெளிநாட்டுத் செயற்பாட்டுத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. தாயகத்தில் சிங்கள அரசின் பேரினவாத அரசாங்கத்தின் கண்மூடித்தனமான பயங்கரவாதச்செயல்களால பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண, புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகளிடமிருந்தோ உதவிகளைப் பெறுவதோ இயலாத ஒன்றாக இருந்ததை நடைமுறையில் கண்ட உண்மைகள். இப்படிப்பட்ட நிலையில் புனர்வாழ்வுக் கழக ஆளுமைக்குழு தனது செயற்பாட்டினை கடல் கடந்து புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் கிளைகளை நிறுவி செயற்படுத்தி வருகின்றது. தாயகத்தில் இன்னற்படும் மக்களின் துயர் துடைப்புச் செயற்பாடுகளிற்காக புலம்பெயர்ந்து வாழும் மக்களிடமும், சில மனிதாபிமான அமைப்புகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்று வந்திருக்கின்றன.

நீதியானதும், வீரம் செறிந்ததுமான விடுதலைப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்திய அமெரிக்கா தற்போது தமிழர் புனர்வாழ்வுக்கழத்தின் சொத்துக்களை முடக்கியுள்ளமை ஈழத்தமிழர்கள் உணர்வுகளை காயப்படுத்தும் செயல்களாக அமைந்திருக்கின்றது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும் நிதிகளையும் வழங்குகின்றது என்ற இலங்கை அரசின் பொய்ப்பிரசாரத்தை நம்பியே அமெரிக்க அரசும் தனக்கு சாதகமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இலங்கைக்குள் எப்படியாவது நுழைந்து இந்தியாவின் உளவுநிலை அறிவதற்கான சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடப்போகின்றது. இலங்கை மீதான அமெரிக்காவின் மூக்குநுழைப்பு தந்திரோபாயங்கள் நிறைந்ததாகும். சிங்கள பெளத்த பேரினவாத அரசும், எகாதிபத்திய சக்திகளும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளின் பலத்தை பலமிழக்கச்செய்து சிங்கள தேசத்தை தமது பிராந்திய தேவைகளுக்காக பயன்படுத்தலாம் என்ற உள்நோக்கத்துடன் செயற்படுகின்றது.

ஐ.நா. பொதுச் செயலாளர் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தபோதும் , அமெரிக்கா சிறிலங்காவுக்கு இராணுவத்தளபாடங்களையும், ராடர் கருவிகளையும் விநியோகித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஓர் அறக்கட்டளை அமைப்பாக வேலை செய்கின்றது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அமெரிக்க அறக்கட்டளையினால் நான்கு நட்சத்திர தகுதி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்காவின் மிகப் பிரபல்யமான இரண்டு அறக்கட்டளை அமைப்புக்களும் இணைந்தே செயற்படுகின்றன.

2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை தாக்கத்தின் பின்னர் அந்த அழிவிலிருந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் பெரும் பங்கு வகித்தது. அதன் செயற்பாடுகள் மிகச்சிறப்பாக அமைந்தன என அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஒரு கேடயம் ஒன்றையும் இந்த அமைப்புக்கு வழங்கி இருந்தார். அதைவிட அந்த சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த கோபி அனான், பில் கிளின்டன் ஏனேயோரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினருடன் உரையாடி, அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றியும் கலந்து உரையாடியுள்ளார்கள்.

புனர் வாழ்வுக் கழகம் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என இனம்,மதம் கடந்து பணியாற்றி வருகின்ற உன்னதமான தொண்டு நிறுவனம்.தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் தன்னலமற்ற பணியாளர்களின் சேவையாலும் மனித நேயம் மிக்க புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் பங்களிப்பாலும் இன்று புனர் வாழ்வுக்கழகம் ஓர் ஆலமரமாக வளர்ந்து, அவலங்களைச் சுமந்து வாழும் உள்ளங்களுக்கு நிழல் தருபவையாக இருக்கின்றது.

tro1.jpg

tro2.jpg

tro3.jpg

பல பாரிய புனருத்தாரணத் திட்டங்களை மேற்கொண்டு எமது மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குப் பெரிதும் முன்னின்று உழைத்ததும் இதே தமிழர் புனர் வாழ்வுக்கழகம்தான்.

அமெரிக்க அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் யுத்தம் மற்றும் கடல்கோள் போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கான நிவாரணப் பணிகள் பாரிய அளவில் தடைப்படுவதோடு, தாயகத்தின் தமிழ் மக்களை பட்டினி போட்டு, அழிப்பதற்கான வழியாக மாறப்போகின்றது.

இந்த நிலையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் அத்தோடு இனப்பிரச்சினைக்கான தீர்வை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலமே காண முடியுமெனவும், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கருத்துத் தெரிவிக்கின்றபோதும், விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டபோது எந்தவித கண்டனத்தையோ அறிக்கையையோ வெளியிடாததும் ஏனோ?

பல்லாயிரக்கணக்கான மக்கள் படும் அவலங்களை சென்று பார்க்க முடியாத நிலையில், ஏனைய ஐ.நா அமைப்புக்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் உள்ள நிலையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அம் மக்கள் மத்தியில் நின்று சேவையாற்றி வருவது அமெரிக்கா அறிந்திருக்கவில்லையா, அல்லது கண்மூடிக் கொண்டு இருக்கின்றதா?

அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாக்கிவரும் ஸ்ரீலங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் அமெரிக்கா மேற்படி ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கைகளால் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியளித்து அரவணைத்து வரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துக்களை முடக்குவது வேதனைக்குரியது.

தமிழர்களுடைய தலைமை குறித்து சரியான பார்வையை இதுவரை சர்வதேசம் கொண்டிருக்கவில்லை. சமாதானத்துக்கு வலு சேர்க்கின்றோம் என்று கூறிக்கொண்டு அவலமும் அழிவும் நிறைந்த பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக முன்னேடுத்து வரும் இன அழிப்பை அமெரிக்காவின் உதவி கொண்டு மேலும் தீவிரப்படுத்தி, மேலும் மேலும் தமிழ் மக்களுக்கு அழிவுகளையும் அவலங்களையும் கொடுப்பதற்காகவே அமையப்போகின்றது.

வெளிநாட்டு, உள்நாட்டு மனிதநேய அமைப்புகள் பணியாற்ற முடியாத பல இடங்களில் தமிழ் மக்களிற்கான பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றி வருகின்றது. இந்த நிறுவனம் ஊடாகவே புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது உறவுகளுக்கு உதவி செய்து வருகின்றனர். ஆகவே இதனையும் முடக்கி தாயகத்தில் உள்ள மக்களை பட்டினி போட்டு அழிப்பதற்கான நடவடிக்கையே சிறிலங்கா அரசு செய்து வருகின்றது.

புனர்வாழ்வுக்கழகத்தின் வேலைத்திட்டங்களை முடக்கி இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை முடக்குவதே தென்னிலங்கை அரசியல்வாதிகளின் திட்டம். அதன்படி அவர்கள் செய்கின்றார்கள். எனவே புலம்பெயர் நாடுகளில் வதியும் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி செயற்படுகின்றது. புலம்பெயர் மனிதர்கள், அமைப்புக்களின் கரங்கள் இணைந்த ஒத்துழைப்பு கொடுக்கும் அழுத்தங்கள், இந்த நடவடிக்கையில் இருந்து விடுபட்டு நல் வழியை காட்டும்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துகளை முடக்குவதாக அமெரிக்கா முழங்கிவிட்ட முனைப்பில், முடக்கும் முட்டுக்கட்டைகளை முறித்து புதியவழிமுறையில் முனைப்புடன் ஆக்கபூர்வமாக செயற்படுவோம்.

படங்களை பெற்றுக்கொள்ள உதவிய தளம்

http://www.itrolondon.org/tropassion.htm

Link to comment
Share on other sites

ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள் கறுப்பி.

வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தாயகத்திலிருந்து பின்வாங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், பல இன்னல்களை அனுபவிக்கும் எம் உறவுகளுக்கு ஒரே ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அமெரிக்காவால் வழங்கப்பட்ட தடை மிகவும் வேதனையளிக்கிறது.

அதுமட்டுமின்றி அண்மைக் காலத்தில் பல உலக நாடுகளில் நடைபெறும் மனித நேயப் பணியாளர்களின் கைதுகள் பேரினவாதிகளின் சூழ்ச்சியை புரிய வைக்கிறது. உலகத் தமிழர்கள் உறுதி குலையாது ஒன்றிணைந்து தமது ஆதரவைத் தொடர்ந்தும் புனர்வாழ்வுக் கழகத்திற்கு வழங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும் நிதிகளையும் வழங்குகின்றது என்ற இலங்கை அரசின் பொய்ப்பிரசாரத்தை நம்பியே அமெரிக்க அரசும் தனக்கு சாதகமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இலங்கைக்குள் எப்படியாவது நுழைந்து இந்தியாவின் உளவுநிலை அறிவதற்கான சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடப்போகின்றது. இலங்கை மீதான அமெரிக்காவின் மூக்குநுழைப்பு தந்திரோபாயங்கள் நிறைந்ததாகும். சிங்கள பெளத்த பேரினவாத அரசும், எகாதிபத்திய சக்திகளும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளின் பலத்தை பலமிழக்கச்செய்து சிங்கள தேசத்தை தமது பிராந்திய தேவைகளுக்காக பயன்படுத்தலாம் என்ற உள்நோக்கத்துடன் செயற்படுகின்றது

இது ஒரு தப்பான கண்ணோட்டமாகும். தமிழர் புனர்வாழ்வு கழகத்தை உலகம் முழுவதும் தடை செய்ய முழுமூச்சுடன் ஈடுபடுவது இந்தியா. இந்தியா புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் சில ஈழ தமிழருடன் மிக நெருக்கமா உறவாடுகின்றது.

புலத்தில் வாழும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் இதை இனங்காணல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு அவசியமான ஒரு செய்தி அலசல். நன்றி கறுப்பி.

தமிழர்களின் விடுதலையை மட்டுமல்ல.. தமிழர்களின் அன்றாட தேவைகளைக் கூட தமிழர்கள் பூர்த்தி செய்யக் கூடாது. தமிழர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட சிங்களத்தையும் சர்வதேசத்தின் பிச்சைப்பாத்திரத்தையும் எதிர்பார்த்து அவர்களிடம் மண்டியிட்டு தங்கள் சுதந்திர வேட்கையை அதற்காக தியாகம் பண்ண வேண்டும் என்பது தான் ஏகாதபக்தியவாதிகளினதும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளினதும் பேரினவாதிகளின் நெடுங்கால சித்தாத்தின் வெளிப்பாடு அது இப்போ தெளிவாக அம்பலமாகிறது. இது உலகுக்கு புதிதல்ல தமிழர்களுக்கும் புதிதல்ல..!

Link to comment
Share on other sites

தமிழீழத்தின் பிறப்பை கருவறுக்க முயல்பவர் யார்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் பிறப்பை கருவறுக்க முயல்பவர் யார்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவருக்கு என்ன இலாபம் என்றால் தான் உடைந்து போகாமல் பாதுகாப்பாக இருக்கலாம். தமிழீழம் மலர்தால் அவர் உடைய சந்தர்ப்பம் அதிகம். அதற்கு பக்கபலமாக ஒரு வல்லரசு துணைபோகும் நிட்சயமாக.

இதில் மகிந்தவும் இந்தியாவும் மிக சாதுரியமாக காய்களை நகர்த்துகின்றன தமிழ்செல்வன் மறைவுக்கு பின்னர்.

தமிழ் செல்வன் மறைவுக்கு பின்னர் புலிகளுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் ஒரு இடைவெளி உள்ளது போல ஒரு தோற்றப்பாடு உருவாக்கபடுகின்றது.

அதாவது புலிகளுக்கும் இந்தியாவுக்கும் நெருக்கம் ஏற்படுவது போல. அதன் ஒரு கட்டம் கருணாநிதியின் இரங்கல் கவிதையா என்ற சந்தேகமும் எழுகின்றது??

ஒருபுரம் கவிதை மறுபுரம் கைதுகள்????

அதற்கு உரம் சேர்பது போல நடேசன் அவர்களின் அறிக்கை.

இது மிக சாதுரியமாக ரோவினால் அரங்கேற்றப்பட்டது போல உள்ளது.

இதன் பிரதிபலிப்பு அமெரிக்காவின் தமிழர் புனர் வாழ்வு கழகத்தின் மீதான தடை.

சிலவற்றை பகிரங்கமாக விலாவாரியாக எழுத முடியவில்லை

இதில் நன்மை அடைந்தது மகிந்தவும் இந்தியாவும் தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.