Jump to content

வான்வழி விழுந்த அடி, சமாதானத்தின் மீது வீழ்ந்த அடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி அலசல்

வான்வழி விழுந்த அடி

சமாதானத்தின் மீது வீழ்ந்த அடி

02.11.2007அன்று வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி 6.00 மணியளவில் வான்வழி விழுந்த அடி, எங்கள் நெஞ்சிலே விழுந்த அடியாக அனைவரையுமே ஒரு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் சிங்கள வான்படையின் கோரத்தாக்குதல் மேற்கொண்ட குண்டு வீச்சில், வீரச்சாவினை அணைத்துக் கொண்டுள்ள என்ற செய்தி தமிழர்களை மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் செய்தியாகும். அமைதியையும் மனித உரிமையையும் மதிக்கும் உலக மனித சமுதாயத்திற்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . மரணத்தை தழுவிக்கொண்ட போராளிகளுக்கு கண்ணீர் அஞ்சலியையும், வீர வணக்கங்களையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தலைவரினதும், தமிழ்மக்களினதும் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்த அரசியல் துறைப் பொறுப்பாளரை கொன்றதன் மூலம், இலங்கை அரசானது தனது கொடுரமான இனவாத முகத்திரையைக் கிழித்து உலக அரங்கிற்கு தனது சுயருபத்தைக் காட்டிவிட்டது. இந்த அடி சமாதானத்துக்கு விழுந்த அடி.

சமாதான வழியிலோ, பேச்சுவார்த்தை முறையிலோ இலங்கை அரசுக்கு அக்கரை இல்லை என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதோடு, சமாதான முயற்சிகளுக்கு சாவுமணி அடித்துள்ளது பெளத்த இனவாத சிங்கள அரசு.

இந்த அடி நிச்சயமாகச் சமாதான முயற்சிகளுக்கு நேரடியாக விழுந்த பேரடி.

பேசித் தீர்க்கச் சொல்லும் சர்வதேசம், இப்படுகொலைக்கு சொல்லும் பதில்தான் என்ன?

சமாதான முயற்சிகளுக்கு தமிழ்ச்செல்வன் அவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தைகளுக்கு கைகுலுக்கி நின்ற சர்வதேச சமூகம், அவரின் மரணம் தொடர்பாக எந்த அறிக்கையை முன்வைக்கப்போகின்றது?

உத்தியோக பூர்வமாக எதை முன்வைக்கப்போகின்றது?

சமாதானப் பேச்சுக்கு நாம் எப்போதும் தயார். சமாதானக் கதவுகள் எந்நேரமும் திறந்தே இருக்கின்றன வென சர்வதேசத்தை ஏமாற்றி வரும் இலங்கையரசை சர்வதேசம் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றது

வெளிநாட்டு ராஜதந்திரிகள், அமைச்சர்கள், அரசியல் வாதிகளிடம் மட்டுமன்றி, உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர் தமிழ்ச்செல்வன் அவர்கள். இலங்கை அரசியலில் அதிகம் பேட்டி காணப்பட்டவர் என்று சொல்லுமளவுக்கு அரசியல் ரீதியில் பிரபலமான தமிழ்ச் செல்வன் அவர்களைக் கொன்று, சமாதானத்திற்கு குழிதோண்டிய அரசு, தமிழ்ச்செல்வன் அவர்களின் கொலையை அனைத்து மக்களுக்கும் எதிரானவர் என்றும் பயங்கரவாதி என்று பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளங்களில் செய்திகள் வெளியிட்டிருக்கின்றது.

சர்வதேசத்தின் விஜயங்கள் இவற்றுக்கு என்ன கூறப்போகின்றது? காத்திருப்போம்.

தமிழ்ச்செல்வன் அவர்கள் போர்க்களமாயினும் சரி, அரசியல் களமாகிலும் சிறப்புற இயங்கி, தலைவனின் தளபதியாக, வலது கையாக பலம் சேர்த்தவர். முகத்திலே புன்னகையுடன் பேச்சிலே ஒரு வீச்சுடனே தமிழினத்தை நிமிரச்செய்த திறமை அவருக்குண்டு. போராட்ட விரிதளத்தின் சகல திசையெங்கும் கால்பதித்து மூழ்கி எழுந்த செல்வன் அவர்கள்.

மிகுந்த மதிநுட்பத்துடனும், ஆளுமையுடனும், அரசியல் இராசதந்திரமுடனும் சிரிப்பு என்னும் அழகிய புன்னகை ததும்பும் முகத்துடன், சர்வதேசமெங்கும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை உலகறிய செய்த ஒரு உன்னதமான போராளி.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும்

முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல

காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்

ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண்பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான "தவளை நடவடிக்கை"யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண்பட்டார்.

"ஒயாத அலைகள் - 03" நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

அத்தோடு மறைந்த அரசியல் மேதை ஆன்டன் பாலசிங்கம் அவர்கள் மறைந்த இடத்தை தனது ஆளுமையால் நிரப்பி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக்குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்து பேச்சுவார்த்தை களைத் திறம்பட நடத்திய நாயகன் தமிழ்ச்செல்வன் அவர்கள்.

இந்த மாபெரும் பெரும் இழப்பால் எல்லோருடைய இதயங்களும் எமது தேசம் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணம் நெஞ்சினில் எழுவதைத் தடுக்கமுடியாது. இதுபோன்ற அதிர்ச்சிகள் விடுதலையின் அவசியத்தை அடிக்கடி எமக்கு நினைவுபடுத்தி கொண்டிருக்கின்றன .

தேசிய விடுதலைப்போராட்டத்தில் இழப்புகள், இன்னல்கள் ஏற்படுவது சகஜம். இழப்புகள் எங்கே அதிகமாக இருக்கின்றதோ. அங்கே அதைத் தொடர்ந்து தாக்கதல்கள் அகோரமாய் இருந்ததை வரலாறு காட்டிவிட்டுப்போய் இருக்கின்றது.

இழப்புகளைக்கண்டு துவண்டுவிடக்கூடாது. அதைப்பற்றிக் கலங்கிக் துவண்டு கொண்டிருப்பதில் பயன் ஏதும் ஏற்படப்போவது இல்லை. இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? சிங்கள பேரினவாத அரசு மேலும், மேலும் தொடர்ந்து தாக்குதலகளை நடத்தத்தான் போகின்றது. குண்டுகளை போடத்தான் போகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவர்களது அத்தியாயம் முடிந்து விட்டாலும் வரலாறு தொடரவே போகிறது. தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப்புலிகள் தேசியக் கனல் ஒளிர அதனை விடியல் முடிவை நோக்கி முன்னெடுப்பார்கள் என்பது உறுதி .அவர்களின் உயிர்த்தெழுகையில் இன்னும் ஆயிரம் பல ஆயிரம் தமிழ்ச்செல்வங்கள் உருவாகுவார்கள் என்பது உறுதி.

மாவீரர்கள் எதற்காக தங்களை விதைத்துக் கொண்டார்களோ அந்தப்போர் முனையில் இதுபோன்ற அதிர்ச்சிகள் வந்தாலும், லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் பயணம் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள், திட்டங்கள் மேலும் உற்சாகத்துடன் தொடர்ந்திட, இணைந்த கரங்கள் மேலும் பலம் பெற்றிட போராட்டம் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும்.

தலைவரின் வழிநடத்திலில் எமது விடுதலைப்புலிகளின் போரியல் சமநிலையில் புலிகளின் கைகள் ஒங்கியே இருக்கின்றன.

இழப்புகளைச் சாதனையாகக்கும் வித்தை தெரிந்த தலைவரின் கரங்களைப் பலப்படுத்த, புலம்பெயர்ந்தவர்கள் நாம் எம்மாலான வழிமுறைகளை பின்பற்றி அவற்றுக்கு உறுதுணையாய் இருப்போமாக.

தமிழீழ உறவுகளைக் காக்கவும், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், தமிழர் தாயக விடுதலையே தீர்வு என்பதை முழுமையாக ஏற்று, அதற்காக ஒற்றுமையாகவும், மனஉறுதியுடனும் விரைந்து செயற்பட புலம்பெயர்ந்த தமிழர்களின் இணைந்த கரங்கள் வலுப் பெற இந்த சமயத்தில் உறுதி கொள்வோம்.

தமிழீழத் தேசபக்தர்களும், விடுதலை விரும்பிகளும் அமைதியாகத் தங்கள் வீரவணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்தி இறந்த மாவீரர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்போம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள் பற்றி அறிய உதவிய தளம்.

http://www.eelatamil.com/index.php

Link to comment
Share on other sites

நன்றி கறுப்பி. காலத்தின் தேவையுணர்ந்து பொருத்தமான செய்தி அலசல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமான நேரத்தில் எழுதப்பட்ட சரியான ஆக்கம். நன்றிகள் கறுப்பி.

Link to comment
Share on other sites

நல்லதொரு செய்தி அலசல் பல கோணங்களிளும் செய்தியை அலசி இருக்கும் விதம் அருமை கறுப்பி அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆக்கத்திற்கு நன்றி, கறுப்பி.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றி அறிந்திராதவர்களுக்கும் இக் கட்டுரை பயனுடையதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் ஆக்கம் சூரியன் இணையத்தளத்தில் வந்திருக்கிறது.

http://www.sooriyan.com/index.php?option=c...9&Itemid=30

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி ஆக்கத்திற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

கறுப்பி ஆக்கத்திற்கு நன்றிகள், எம் விதி எங்கள் கைகளில் தான் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.