Jump to content

கிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம்

 

நமக்கு நன்கு பரிச்சயமான நான்கு கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க இது ஏற்ற சமயமாகும். இவற்றில் வெள்ளி, புதன் ஆகிய இரண்டு கிரகங்களை சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில் காணலாம்.

செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் காணலாம்.

வானில் நம்மால் மொத்தம் ஐந்து கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்களை மட்டுமே இப்போது நம்மால் காண இயலும். ஐந்தாவதான வியாழன் கிரகம் இப்போது பகலில் சூரியனுக்கு அருகே அமைந்திருப்பதால் அதைக் காண இயலாது.

அதிகாலையில் கிழக்கு வானை நோக்கினால் வெள்ளி கிரகம் கண்ணில் படாமல் போகாது. அது வைர மூக்குப் பொட்டு போல ஜொலிக்கும்.தமிழில் இதற்கு விடிவெள்ளி என்ற பெயரும் உண்டு

எது நட்சத்திரம் எது கிரகம் என்று தெரியாத காலத்தில் மேலை நாட்டவர் வெள்ளி கிரகத்துக்கு Morning Star என்று பெயர் வைத்தனர் ( கிரகங்களுக்கு சுய ஒளி கிடையாது. அவை சூரிய ஒளியைப் பிரதிபலிப்பவை. நட்சத்திரங்கள் சுய ஒளி கொண்டவை. சூரியனைப் போல பல மடங்கு பெரியவை)


Eastern+sky+24+July+2014+early+morning.p
கிழக்கு வானைக் காட்டும் இப்படத்தில் புதன் ( Mercury) வெள்ளி (Venus) ஆகிய இரு கிரகங்களைக் காணலாம் .வலது புறத்தில் சிவந்த நிறத்தில் திருவாதிரை (Betelguese) நட்சத்திரமும் தென்படும்.Stellarium

 

 

கிழக்கு வானில் நீங்கள் வெள்ளியைக் காணும் போது அதற்குக் கீழே கிட்டதட்ட அடிவானத்துக்கு அருகில் புதன் கிரகம் மிக மங்கலாகத் தெரியும். உங்கள் கண்ணில் புதன் தென்பட்டால் அது அதிருஷ்டமே. புதன் எளிதில் தென்படாத கிரகம். அதை வைத்துத்தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி தோன்றியது.( மேலே படம் காண்க)

வெள்ளி கிரகம் சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதன் 16 கோடி கிலோ மீட்டர். திருவாதிரை நட்சத்திரம் 497 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.(ஒளியாண்டு பற்றிய விள்க்கம் கீழே காண்க)

நீங்கள் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கே நோக்கினால் சிவந்த நிறத்தில் செவ்வாய் (Mars) தென்படும். இக்கிரகம் தற்போது பூமியிலிருந்து சுமார் 21 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அதன் அருகிலேயே அதாவது செவ்வாய்க்கு சற்று கீழே சித்திரை (Spica) நட்சத்திரமும் தெரியும். இந்த நட்சத்திரம் சுமார் 24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது

 

western+sky+july+23+2014.png
மேற்கு வானம்.செவ்வாய்க்கு கீழே சித்திரை நட்சத்திரம் உள்ளது. இடது மூலையில் சனி கிரகம் காண்க Stellarium

 

வானில் செவ்வாய்க்கு மேலே சனி (Saturn) கிரகம் தெரியும். சூரிய அஸ்தமனத்துக்குப் பல மணி நேரம் கழித்தும் சனி மேற்கு வானில் காட்சி அளிக்கும். சனி கிரகம் வளையங்களைக் கொண்டது. ஆனால் டெலஸ்கோப் மூலம் பார்த்தால் தான் சனி கிரகத்தின் வளையங்களையும் காண இயலும். சனி கிரகம் இப்போது சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சனி கிரகத்திலிருந்து வலது புறம் தள்ளி பிரகாசமான நட்சத்திரம் தெரியும். அது தான் சுவாதி (Arcturus) நட்சத்திரமாகும். அது 36 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

குறிப்பு: ஒளியானது ஒரு வினாடியில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு செல்லக்கூடியது. ஓராண்டில் ஒளி செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு ஆகும். இதன்படி ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும். ஓர் ஒளியாண்டு என்பது 9,46,073 கோடி கிலோ மீட்டர் தூரமாகும்.
 
 

http://www.ariviyal.in/2014/07/blog-post.html

Link to comment
Share on other sites

hi, 

if u don't mind, let me inform a small correction in the topic. one light year is equal to 9,46,073 lac kilometer. the lac is missing.

Otherwise i liked the essay. keep posting.

Rgds

venkat La. 

Link to comment
Share on other sites

அந்தத் தரவு சரியாகவே படுகிறது எனக்கு. ஒரு கோடியில் ஏழு சுழியங்கள் இருக்குமல்லவா..

9,460,528,400,000 கிமீ என்று சொன்னால் பிரச்சினை வராது. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.