Jump to content

முகவரி தொலைத்த கடிதங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
காதலென்னும் கற்பிதம்....
 
அன்புள்ள ...... ( உன்னை மறந்து போனதற்கான கடைசி சாட்சியாய்  இந்தக் கடிதம்.)
தெரிந்தோ தெரியாமலோ காதல் ஒரு முடிவற்ற வேரைப் போல் உடல் முழுக்க சுற்றிப் படர்ந்திருக்கும் மரம் நான். என்னால் யாரையும் வெறுக்க முடியாது, காயப்படுத்துகிறவர்களையும் சேர்த்து காதலிக்கும் சாபம் பெற்றவன் நான். காதலின் மகத்துவம் காயப்படுதலில்தான் இருக்கிறதென நம்புகிறவன். அதனாலேயே நீ தந்த எந்தவொரு காயமும் எனக்கு பிரதானமாய் தெரிந்திருக்கவில்லை. நமக்கிடையிலான காதல் விளையாட்டுத் தனமாய் துவங்கி முடிந்ததில் நம்மைத் தவிர அதிகமும் வியப்பு கொண்டது வேறு யாராகவும் இருக்க முடியாது. அந்த நாட்களை திரும்பிப் பார்க்கையில் எப்படி வாழக் கூடாதென்பதற்கு உதாரணமாய் சில விசயங்களை நீ கற்றுக் கொள்வாய் என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் உன்னிடமிருந்து நான் கற்றுக் கொண்டதில் கொஞ்சத்தையேனும் நீயும் கற்றுக் கொண்டிருக்க கூடும். உண்மையில் நான் சொல்ல வந்தது அதில்லை, எனக்கு இப்போதெல்லாம் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உன் நினைவு வருவதில்லை. சமீபமாய் ஒரு பெண்ணின் படம் பார்த்து கொஞ்சம் உன் முகச்சாயல் வந்தது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் அதுவும் கூட பெரிதாக தொந்தரவு செய்யவில்லை. சாயல்களைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறதென்பதை புரிந்து வைத்திருப்பதால் அந்தப் பெண்களையே நேசிக்கத் துவங்கிவிட்டேன். உனக்குத் தெரியுமா இதே மாதிரியான ஒரு டிசம்பர் 31 ம் தேதி அதிகாலையில் தான் ஆறு வருடங்களுக்கு முன்பு இம் மாநகருக்கு நான் வந்து சேர்ந்தேன்… ஐந்து வருடங்களுக்கு பின்னால் அதே டிசம்பர் 31 ல் தான் நமக்கிடையிலான உறவு இறுதியாய் முடிவுக்கு வந்தது. மனநல மருத்துவர்கள் காமத்தையும் யோகாவையும் மாற்றாக சொன்னார்கள். நான் என்னையும் நான் கவனிக்க மறந்து போன என்னையுமே அக்கறை கொண்டேன். யாரோ ஒருத்தரிடம் காட்டும் அன்பிற்கு சற்றும் குறைந்தது அல்ல தானே நம் மீது நாமே அன்பு கொள்வது.?
ஆணோ பெண்ணோ என்னைக் காதலிப்பதாய் சொல்லும் போது சின்னதொரு புன்னகையும் எளியதொரு முத்தமும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டால் போதுமானது எனத் தோன்றுகிறது. ஏனெனில் காதல் அனேகமாய் நிரப்பிச் செல்வது வெற்றிடத்தை தான். உடலும் மனதும் வெற்றிடங்களை ஏற்கும் நிலையில் இல்லை. கொஞ்சம் காமமும், மதுவும் நிரப்பியிருக்கும் சந்தோசங்களை காதல் களவாடிக் கொள்கிறதோ என்கிற அச்சமிருப்பதால் என்னை நாடி வரும் காதலை அச்சத்துடனேயே எதிர் கொள்கிறேன்………………. நீ விட்டுச் சென்ற காதல் எத்தனை வன்முறையானது என்பது இன்னும் உரைக்கிறது. நம்மிருவருக்குள் காமம் அத்தனை சுவாரஸ்யமானதாய் இருந்திருக்கவில்லை. உன்னைக் கடந்து போன எனக்காக நீ எப்படி வருத்தம் கொள்ளவில்லையோ அப்படியே நானும். நல்லதொரு மதிய உணவு சாப்பிட்டதை பகிர்ந்து கொள்ளும் அதே உற்சாகம்  கடந்து போன ஒரு காதலைக் குறித்துப் பேசுவதற்கு இன்னும் சில நாட்களில் வந்துவிடுமென நம்புகிறேன்…
 
காதலுடன் கற்பிதங்களைக் கடந்து நான்…
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மிகத் தாமதமானதொரு கடிதம் அல்லது எப்பொழுதோ எழுத சேகரித்திருந்த ஓர் கடிதம்....
 
 
 
ப்ரியமுள்ள ரம்யாவிற்கு....
இந்த ப்ரியமென்கிற வார்த்தை என்னை இப்பொழுது சில வருடங்களுக்குப் பிந்தையதொரு நிமிடத்திற்கு கொண்டுபோகிறது. எந்தவிதமான நேசத்திற்கான வார்த்தைகளையும் நீயோ அல்லது நானோ நேரிடையாக ஒருபொழுதும் பகிர்ந்து கொண்டதில்லை. என்றாலும் ப்ரியமுள்ள என்கிற வார்த்தை இந்நொடி என்னை உனக்கு மிக நெருக்கமானவனாக உணரச்செய்வதில் சந்தோசப்படுகிறேன். 
ஒவ்வொருமுறையும் உன்னிடம் பகிர்ந்திருக்க வேண்டிய வார்த்தைகளென்று கொஞ்சம் எப்பொழுதும் எஞ்சி நிற்கும். சம்பந்தமேயில்லாமல் ரயில் பயண இரவுகளிலும், திரையரங்குகளில் டிக்கெட் எடுப்பதற்கான வரிசையில் காத்திருக்கையிலும் வந்து தொலைக்கும் அந்த சொற்கள் உனக்கென்று எழுத நினைக்கிற சமயங்களில் ஒருபொழுதும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லை. சில நாட்களுக்கு முன் தஞ்சை வந்திருந்தேன் ரம்யா. முன்பு நீ பார்த்த அந்த அழுக்கு சட்டை சரவணனாக அல்ல...கொஞ்சம் புதிதாக, அல்லது சிரமப்பட்டு கொஞ்சம் ஒப்பனைகளுடன். ஒவ்வொரு முறையும் தஞ்சை வருகிற பொழுது ஏதோ உலகின் இன்னொரு துருவத்திற்கு போவதுபோல் அப்படியொரு சந்தோசமும் உற்சாகமும் இருக்கும். எல்லாவற்றிற்கும்ன் இரண்டே காரணங்கள்தான். ஒன்று நீ...இன்னொன்று மிஷன் தெரு.
மிஷன் தெருக் கதைகளை உன்னிடம் கூறி, பின்பொருநாள் தஞ்சை ப்ரகாஷின் ‘கடைசிக் கட்டி மாம்பலம்’ கதையை வாசித்து விட்டு நீ திட்டியது நினைவிருக்கிறதா?...எனக்கு அப்பொழுது உன்னைச் சமாதானப்படுத்துகிற வழி தெரியாமல்தான் ப்ரகாஷின் ‘மீனின் சிறகுகள்’ நாவலை வாசிக்கச் சொன்னேன். இந்தமுறை நீ இரண்டு நாட்கள் என்ன்னோடு பேசியிருக்கவில்லை. என்னை ரங்கமணி என பட்டபெயர் சொல்லி அழைக்கச் சொன்னபொழுது உன் கோபம் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீண்டிருந்தது.
நமது முதல் சந்திப்பும் கடைசி சந்திப்பும் ஜன சந்தடியானதொரு இடத்தில்தான் என்பது கொஞ்சம் சந்தோசப்பட்டுக் கொள்ளும்படியானதொன்றாக இருக்கிற்அது எனக்கு. முதல் சந்திப்பு கொஞ்சம் உற்சாகமானதும்தானே. நாம் ஒரு முந்நூறு பேர் இருப்போமா?.,...வரிசையில் ஒரு பன்பலையில் வேலைக்குச் சேர்வதற்கான நேர்முகத்தேர்வில் காத்திருந்த வரிசை அது. உன் தோழிக்குப் பின்பாக நீயும் உனக்குப் பின்பாக நானுமாய் நாம் நின்றிருந்ததும் கடைசிக்கட்டத் தேர்வுவரை நகர்ந்த நமக்குத் துணையாயிருந்த உன் தோழியிடம் அவள் அழகாயிருப்பதாய்ச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த என் சான்றிதழ்கலைப் பார்த்து எந்த சங்கடமும் கொள்ளாத நீ, என்னைவிட 13 நாட்கள் மூத்தவள் என்கிற குறிப்பைக் கண்டதும் உன்னை அக்கா என்று கூப்பிடச் சொன்னாய். அவ்வளவு நேரமும் வரிசையில் நமக்குப் பின்னால் நின்று கவனித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் எனக்கு ஆறுதல் கூறினார்கள்.
உண்மையில் நம் முதல் சந்திப்பு எந்தவிதத்திலும் உன்னை கவனிக்கச் செய்யவில்லை. அப்பொழுது வெளியாகிய்டிருந்த என் கதைகள் சிலவற்றை உனக்கு அனுப்பியிருந்தேன். என் பேச்சில் இருந்த விருப்பம் உனக்கு என் கதைகளில் இல்லை. ஆனாலும் என்னோடு உரையாடுவதை நீ விரும்பியதை உன் குரல் சொன்னது. நான் கதை எழுதுகிறேன் என்பதிலேயே ஒருவேளை நீ சந்தோசங் கொண்டிருக்க கூடும்.
எம்.எஸ்.ஸி ப்யோ டெக்னாலஜி படித்தும் நீ சம்பந்தமில்லாமல் வேலைகளைத் தேடிக்கொண்டிருந்தது எனக்கு அப்பொழுது ஆச்சர்யமாகத்தான் இருக்கும். நீ அதிகம் பதட்டப்படுகிறவள் என்பதை முதல் சந்திப்பின் நேர்காணலில் நீ அழைக்கப்படுவதற்கு முன்பாக யுன் விரல் நடுங்கியதையும் சிரமத்துடன் அதை மறைக்க முயன்றதையும் பார்ட்ர்ஹ்துப் புரிந்து கொண்டிருந்தேன். பின்பு நம் தொலைபேசி உரையாடல் அனேகமானவற்றில் அதனை உணர்த்தினாய்.
நாம் இருவரும் சந்தித்துக்கொண்டது ஏழுமுறைகள் மட்டும்தான். ஆனால் அந்தச் சந்திப்புகள் குறித்து நாம் திட்டமிட்டுக் கொண்டதும் சந்திப்பின் பொழு8து பேசிக்கொள்ள வேண்டியது குறித்தும் நாம் பேசிக்கொண்டதற்கு கணக்கில்லை. ஏதோ மிக முக்கியமானதொரு உடன்பாட்டிற்குத் தயாராகிறவர்களைப்போல் மீண்டும் மீண்டும் ஒரே விசயத்தைப் பேசியும் நாம் சலிப்பதில்லை. பின்பு நாம் சந்திக்கிற பொழுது நினைத்துக் கொண்ட விசயங்களை மீறி வீட்டிற்குத் ஹிரும்பிச் செல்கிற நேரம் பற்றியே அதிகம் யோசித்துக் கொண்டிருப்பாய். நாம் சந்தித்ததில் உனக்கு மலைக்கோட்டை பிடித்திருந்தாய் எப்பொழுதும் நினைத்துக் கொள்கிறேன். அன்றுதான் கொஞ்சம் இயல்பாக பேசினாய். ஏனோ ஒவ்வொரு முறையும் உனக்கு உரையாடலைத் துவக்க உன் தோழியின் விசயம்தான் தேவையாயிருந்தது. ‘ஜெனி உன்னக் கேட்டாடா...என்றோ...இந்த ஜெனி பிள்ள ரெண்டு நாளா ஆளையே காணோமென சம்பண்ட்க்ஹமே இல்லாமல் ஜெனி எப்பொழுதும் நம்முரையாடலில் இருப்பாள். எதன் பொருட்டு அது ரம்யா?
நாம் எப்படி நேசிக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்ளவில்லையோ அப்படித்தான் இனி பேசிக்கொள்ள வேண்டாமென்பதையும் சொல்லிக் கொள்ள்சவில்லை. உண்மையில் நாம் கடைசியாக என்ன பேசினோமென்பது எனக்கு சத்தியமாக நினைவில்லை. இதற்காக நான் உன்மீது கொண்டிருந்த நேசம் குறித்து உனக்கு சந்தேகமெதுமிருந்தால் நிச்சயமாக அதற்கு நான் பொறுப்[பில்லை. 
உன் அலைபேசி வழி கடைசியாய் என்னிடம் பேசியது உன் அம்மாதான். நீ அந்த எண்ணை அவளுக்குத் தந்துவிட்டதாய்ச் சொன்னதும் நீ எனக்குத் தராத அந்த இன்னொரு எண்ணை அவளிடம் கேட்க வேண்டுமென எனக்குத் தோன்றவில்லை. பின்பு எப்படியும் உன்னிடமிருந்து குறுஞ்செய்திகளோ அழைப்போ வருமென்று திடமாக நம்பினேன். இப்பொழுதும் கூட சில நேரங்களில். ஆனால் அது வெறும் நம்பிக்கையாய் மட்டுமே இன்னுமிருக்கிறது.
பின்பு நான் தஞ்சை வருவது அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. உன் வீதிக்கும் மிஷன் தெருவுக்குமாய் பலமுறை அலைந்து திரிந்திருக்கிறேன். ஏனோ உன்வீடு விசாரித்து உன்னை நேரில் காணும் துணிவு எனக்கில்லை. உண்மையில் ஒவ்வொரு முறையும் அந்த வீதியில் நுழைந்து வெளியேறும் பொழுது எங்கே உன்னை முகந்தெரியாத யாரோவொரு நல்லவனின் மனைவியாக பார்த்துவிடுவேனோ என அச்சமாக இருக்கும். அப்படியான துரதிர்ஸ்டங்கள் நல்ல வேளையாக நடக்கவில்லை. 
தஞ்சைக்கோ அல்லது கும்பகோணத்திற்கோ வாக்கப்பட்டுப் போயிருக்கலாம் நீ என நினைத்துக் கொள்ளலாம்தான் ஆனால் அது சிரமாமக இருக்கிறது. எந்த ஊரில் புழுதியப்பிய வீதியுல் நீ ஒளிந்திருந்தாலும் என்னோடு பேசிய சில வார்த்தைகள் உனக்குள் எப்பொழுதும் இருக்குமென நம்புகிறேன் ரம்யா.
உன்னிடம் சொல்வதற்கு இன்னுமொரு தகவலிருக்கிறது, என் கதைகள் இரண்டு தொகுப்பாக வந்துவிட்டன. இப்பொழுது நான் சினிமாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு பெண்ணை நேசிக்கிறேன். இந்த கடைசி வாக்கியம் நிச்சயம் உன்னை சிரிக்கை வைக்கும். ஏனெனில் என்னால் யாரையும் உண்மையாக நேசிக்க இயலாது என நீ எதன் பொருட்டு கூறினாயென்பது தெரியாது. ஒருவேளை அது உண்மையாயிருக்குமோ என்கிற வருத்தம் மட்டும் எப்பொழுதும்  எனக்குண்டு. எனினும் நேசிப்பது சந்தோசமாயிருக்கிறது ரம்யா.
காற்றின் தடமறியா பெருநகரம் ஏதோவொன்றில் நீ வசிக்கலாம், அல்லது இன்னும் தஞ்சையின் அதே வீதியில் உலவிக்கொண்டிருக்கலாம் என்னவானாலும் ஒரேயொருமுறை இன்னொரு முறை நான் சந்திக்க வேண்டியிருக்கிறது. நேரில் உன்னிடம் பேச வேண்டிய விசயங்கள் குறித்து வழக்கம் போலவே நிறைய யோசித்திருக்கிறேன். விருப்பமிருந்தால் கொஞ்சம் அவகாசம் ஒதுக்கித் தா...
ப்ரியமுடன்
உனக்கு உரிமையில்லாத நான்....
Link to comment
Share on other sites

  • 2 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.