Jump to content

இலங்கையில் நல்லிணக்கத்துக்கு பொதுநலவாயம் உதவி வழங்கும்; கமலேஷ் சர்மா தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நல்லிணக்கத்துக்கு பொதுநலவாயம் உதவி வழங்கும்; கமலேஷ் சர்மா தெரிவிப்பு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி புரிந்து வரும் என்று அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

"லண்டன் பினான்சியல் ரைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விடயத்தில் இலங்கை அரசு இன்னமும் நிறையவே செய்ய வேண்டியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய விழுமியங்களை இலங்கையில் முன்னெடுப்பதில் நாங்கள் இன்னமும் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறோம். இதில் மனித உரிமைகள், ஊடகத்துறை, நீதித்துறை மற்றும் சமூகங்களுக்கிடையில் பரஸ்பர மதிப்பு, புரிந்துணர்வு என்பனவும் அடங்கும் என்றார் கமலேஷ் சர்மா.

அவர் மேலும் கூறுகையில், பொதுநலவாய அமைப்பின் மென் பல பிரயோகமும், திரை மறைவு பங்களிப்புகளும் குறுகிய காலப் பார்வையில் எதிர்மறையான முடிவுகளைத் தோற்றுவிக்கும் அபாயம் இருந்த போதிலும் உண்மையான முன்னேற்றமானது நீண்டகால அடிப்படையிலேயே வெற்றியளிப்பதாக இருக்கும் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=199962133329103634

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை விட்டு எப்ப போகும் இந்தியப் புத்தி...பெண்ணுக்கும் ..பணத்துக்கும் ஆசைப்பட்டு சொந்த தாயையே விற்பவர்கள் நீங்கள்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.