Jump to content

வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் மூத்த மொழி தமிழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் மூத்த மொழி தமிழ்

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/404161_525419214140811_1428154598_n.jpg

thanks-face book

Link to comment
Share on other sites

549737_476537742364481_482973147_n.jpg

Link to comment
Share on other sites

[size=4]இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். [/size]

[size=4]இரண்டாயிரத்து ஐநூறு [/size]ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

[size=3]

[size=4]எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, [size=5]அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.[/size]

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? [size=5]தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். [/size]‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். [size=5]தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். [/size]அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.[/size]

562729_476537142364541_882066258_n.jpg

[size=4]அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.[/size]

[size=4] [/size]

[/size][size=3]

[size=5]( முகநூல் )[/size][/size]

Link to comment
Share on other sites

தமிழில் பேச தயக்கப்படும் உறவுகளே , உலகில் பேசப்படும் மொழிகளில் மிகப் பழைய சிறப்பு மிக்க மொழி தமிழ்மொழி என இங்கிலாந்தில இருந்து வெளியாகிற ஒரு பத்திரிகையில போட்டிருக்காங்க. "மாடு சொன்னா கேட்க மாட்டீங்க. மணி கட்டின மாடு சொன்னா கேட்பீங்கதானே " இனியாவது தமிழனோட தமிழ்ல கதையுங்க.

Link to comment
Share on other sites

இந்த Flora Paulman யை தேட ஒன்றும் காட்டவில்லை. யார் இவர்?

http://tamil.berkele...ssical-language இவருடன் சம்பந்த பட்டவவா?

இதில் என்ன முக்கியத்துவம்?

நான்கு வருடங்களுக்கு முன்னர் சில வெளிநிலைமைகளை காட்டி நான் வைத்திருந்த வாதம்.http://www.answerbag.../a_view/3501212

நாம் எழுத்தை, புத்தகத்தை வைத்து ஆண்டை நிர்ணயிக்க கூடாது. பிராமியானது கீபுறு எழுத்துக்கள் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்

http://ta.wikipedia.org/s/145

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கட்டுரை தமிழ் மொழி பற்றியது. ஏனைய பயன்பாடுகளுக்கு தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள்.

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[3], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[4]

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.[5] திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [6] மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்பது, ஒவ்வொரு தமிழனது உயிரோடு சம்பந்தப்பட்டது.

அந்தத் தமிழை இதுவரை... 35 லட்சம் என்று, ஈழதேசத்தில் வாழ்ந்த மக்களே... அழியாமல், பாதுகாத்தவர்கள்.

அவர்களுக்கும், முள்ளிவாய்க்காலில்... வாய்க்கரிசி போட்ட பின், தமிழகமே... தமிழைக் காக்க வேண்டும்.

.

.

.

.

.

.

அந்த, நம்பிக்கை, எனக்கு,இத்தூண்டு(எரப்பன்).... தான் இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பேச தயக்கப்படும் உறவுகளே , உலகில் பேசப்படும் மொழிகளில் மிகப் பழைய சிறப்பு மிக்க மொழி தமிழ்மொழி என இங்கிலாந்தில இருந்து வெளியாகிற ஒரு பத்திரிகையில போட்டிருக்காங்க. "மாடு சொன்னா கேட்க மாட்டீங்க. மணி கட்டின மாடு சொன்னா கேட்பீங்கதானே " இனியாவது தமிழனோட தமிழ்ல கதையுங்க.

நான் கொஞ்ச நாளைக்குமுதல் லண்டனுக்கு ஒரு விசயமாய் போனனான்.......அப்ப சொந்தம் எண்ட பேரிலை ஒரு படிச்சவர்(77லை வந்துட்டாராம்) எனக்குக்கிட்டவந்து இங்கிலிசிலை வெளுத்துவாங்கினார்....அப்ப நான் சொன்னன்.......ஏன் நீங்கள் தமிழிலை கதைக்கலாம்தானே எண்டன்....அதுக்கு அவர் பக்கெண்டு ஓ....உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எனக்கு தெரியாது சொறி எண்டு நக்கலாய் சொல்லிப்போட்டு.......பிறகு சன்ரிவி தமிழிலை சரளமாய் என்னோடை கதைச்சார்......தாங்கள் வீட்டிலை தமிழே கதைக்கிறேல்லையாம்.....தன்ரை பிள்ளையளுக்கு தமிழ் எழுதவாசிக்க மாட்டினமாம்...அதைவேறை பெருமையாத்தான் சொன்னவர்.ஜேர்மனியிலை நாங்கள் தமிழாக்களை கண்டால் வணக்கம் சொல்லுவம்.லண்டனிலை வணக்கம் சொன்னால் மரியாதை கெட்டவேலை :lol:

Link to comment
Share on other sites

[size=4]இலண்டனில் தற்பொழுது நடைமுறையில் உள்ள தமிழ் பரீட்சை முறையை (ஆக ஐந்து மொழிகள் மட்டுமே இருக்கும்) நீக்க உள்ளார்கள். [/size]முடிந்தவர்கள் கையொப்பம் இடலாம்:

[size=5]OCR in UK currently conduct Asset Language examinations in Tamil and other languages. They are going to stop the exams. [/size][size=5]Can you please sign this petition to support us on our fight to stop the decision[/size]

[size=5]Petition: http://www.change.org/en-GB/petitions/keep-our-languages-exams-every-language-is-an-asset[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்ச நாளைக்குமுதல் லண்டனுக்கு ஒரு விசயமாய் போனனான்.......அப்ப சொந்தம் எண்ட பேரிலை ஒரு படிச்சவர்(77லை வந்துட்டாராம்) எனக்குக்கிட்டவந்து இங்கிலிசிலை வெளுத்துவாங்கினார்....அப்ப நான் சொன்னன்.......ஏன் நீங்கள் தமிழிலை கதைக்கலாம்தானே எண்டன்....அதுக்கு அவர் பக்கெண்டு ஓ....உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எனக்கு தெரியாது சொறி எண்டு நக்கலாய் சொல்லிப்போட்டு.......பிறகு சன்ரிவி தமிழிலை சரளமாய் என்னோடை கதைச்சார்......தாங்கள் வீட்டிலை தமிழே கதைக்கிறேல்லையாம்.....தன்ரை பிள்ளையளுக்கு தமிழ் எழுதவாசிக்க மாட்டினமாம்...அதைவேறை பெருமையாத்தான் சொன்னவர்.ஜேர்மனியிலை நாங்கள் தமிழாக்களை கண்டால் வணக்கம் சொல்லுவம்.லண்டனிலை வணக்கம் சொன்னால் மரியாதை கெட்டவேலை :lol:

உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.

உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.

லண்டன் சனத்துக்கு, கொழுபுக் கூட...

இன்கிலாந்தை... ஒட்டு மொத்தமாக... எடுத்துப் பார்த்தால்... வாழ்வது பிச்சைக்கார வாழ்க்கை.

நான்... வேலை விடயமாக... கார்டிஃ f போகும் போது, தெரியும்... அவர்களது வக்காலத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழியை இழந்தால் அடையாளத்தினை இழப்பீர்கள். வீட்டில் தமிழ் மொழி பேசுவதுடன் உங்கள் குழந்தைகளுக்கு தூயதமிழில் பெயர் வைக்க வேண்டும். இந்து சைவ மதங்களைப் பின்பற்றுபவர்கள் தமிழ் அல்லாத பெயர்களை எண் சோதிட மாயையினால் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகிறார்கள். உ+ம் - சில பெண் பிள்ளைகளுக்கு பெயர் லக்சிதா - சிறிலங்கா துடுப்பாட்ட அணியில் இருக்கும் சிங்கள துடுப்பாட்ட வீரரின் பெயர். கிறிஸ்தவ மதத்தினைப் பின்பற்றுபவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுகிறார்கள். இஸ்லாம் மதத்தினைப் பின்பற்றுபவர்கள் அரேபியார்களின் பெயர்களை சூட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்... சாமி கும்பிடற சாட்டில்,

சுடு சோறோ, பழஞ்சோறோ என்று... வெட்கப் படாமல், ஆவெண்டு நிக்கும்... தமிழ்ச்சனத்தை... அடையாளம் கண்டு பிடிக்க வேணும்.

செம்மனச் செல்வி, கூட... புட்டுக்கு , மண் சுமக்க முடியாமல் இருக்க, சிவ பெருமான் மண் சுமந்த பூமி, இது.

Link to comment
Share on other sites

நான் கொஞ்ச நாளைக்குமுதல் லண்டனுக்கு ஒரு விசயமாய் போனனான்.......அப்ப சொந்தம் எண்ட பேரிலை ஒரு படிச்சவர்(77லை வந்துட்டாராம்) எனக்குக்கிட்டவந்து இங்கிலிசிலை வெளுத்துவாங்கினார்....அப்ப நான் சொன்னன்.......ஏன் நீங்கள் தமிழிலை கதைக்கலாம்தானே எண்டன்....அதுக்கு அவர் பக்கெண்டு ஓ....உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எனக்கு தெரியாது சொறி எண்டு நக்கலாய் சொல்லிப்போட்டு.......பிறகு சன்ரிவி தமிழிலை சரளமாய் என்னோடை கதைச்சார்......தாங்கள் வீட்டிலை தமிழே கதைக்கிறேல்லையாம்.....தன்ரை பிள்ளையளுக்கு தமிழ் எழுதவாசிக்க மாட்டினமாம்...அதைவேறை பெருமையாத்தான் சொன்னவர்.ஜேர்மனியிலை நாங்கள் தமிழாக்களை கண்டால் வணக்கம் சொல்லுவம்.லண்டனிலை வணக்கம் சொன்னால் மரியாதை கெட்டவேலை :lol:

லண்டனில பல தரப்பட்ட தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆரம்ப காலங்களில் வந்த மக்களின் பிள்ளைகள் தமிழ் அறிய மாட்டார்கள். ஆரம்ப காலத்தில் லண்டனில் 10 பேருடன் ஒரு சிறிய அறையினுள் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது போல. பெருமளவில் தமிழ் மக்கள் லண்டனுக்கு புலம் பெயர்ந்த பின்னர் தான் தமிழ் பாடசாலைகளை நிறுவி தமிழ் மொழி உட்பட பல கலைகளையும் பிள்ளைகள் கற்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கணிசமான அளவில் பிள்ளைகள் தமிழ் படிக்கின்றார்கள்.

தமிழ் மொழி மீது பற்றுள்ள பெற்றோர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் தத் தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை புகட்டுவதற்க்கு தயங்கமாட்டார்கள்.ஒரு சில நண்பர்களை வைத்துக்கொண்டு லண்டனில் வாழும் எல்லா மக்களும் அப்படித்தான் என்று எண்ண வேண்டாம்.

யாழ்ப்பாணத்திலேயே 'ஆங்கிலத்தில்' பேசுவதை பெருமையாய் பலர் நினைக்கும் போது. லண்டனில் இருக்கிறவன் ஆங்கிலத்தில் பேசுகிறான் என்று குறை கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சின்ன வகுப்பிலேயே ஆங்கில மொழி மூலம் பாடங்களை போதிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தெரியுமா உங்களுக்கு? இதை நான் பெருமையாக நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.

உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.

லண்டன் சனத்துக்கு, கொழுபுக் கூட...

இன்கிலாந்தை... ஒட்டு மொத்தமாக... எடுத்துப் பார்த்தால்... வாழ்வது பிச்சைக்கார வாழ்க்கை.

நான்... வேலை விடயமாக... கார்டிஃ f போகும் போது, தெரியும்... அவர்களது வக்காலத்து.

நீங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்களோ யான் அறியேன். ஆனால் இந்த மாதிரியான லண்டன் வாழ் தமிழ் மக்களை பற்றிய விமர்சனங்களை ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் போகும் போது நான் எனது சொந்த காதுகளினால் கேட்டிருக்கின்றேன். ஏன் இப்படிப்பட்ட விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

குமாரசாமியின் நண்பருக்கு கொழுப்பு கூட என்று எழுதினால் பரவாயில்லை. லண்டன் சனத்திற்க்கு கொழுப்பு கூட .........என்று எழுதுவது ஏன் என்று புரியவில்லை.

குமாரசாமியின் நண்பர் ஆங்கிலத்தில் பேசியதற்காக 'இங்கிலாந்து வாழ்க்கை பிச்சைக்கார வாழ்க்கை' என்று எழுதுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

வேலை விடயமாக cardiff க்கு வருவதாக எழுதியுள்ளீர்கள். பிச்சை எடுக்கவா வருகிறீர்கள்( பிச்சைக்கார நாட்டில் வேறு என்ன வேலை கிடைக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Which is the oldest language that is still spoken?

In: Ancient History, Languages and Cultures [Edit categories]

ACCA Accounting Courseswww.LSBF.org.uk/ACCA

Professional tutors team, full ACCA Syllabus available online. Enrol!

Need Help with Assignmentwww.universityessays.org/

Top Quality Help, Support & Advice by UK based Oxbridge Experts

Ads

Answer:

The oldest language is Tamil contrary to the popular belief that it is Sanskrit.

Sanskrit is the mother of the Indo Aryan languages like Hindi and Punjabi but not to the indigenous Languages like Tamil, the mother of all other languages like Malayalm ,Telugu Kannada etc.

Many people will say that Sanskrit was used for writing religious stuff etc. but we all have to understand that the creators of Sanskrit were the Aryans who were intruders on Indian soil and they mingled with the native Dravidians ,who spoke the native language Tamil.

Then, after the Aryans fabricated Hinduism, Sanskrit became the basic language in which all religious Hindu texts were written; the birth of Sanskrit is only during 1500 BCE after the arrival of the Aryans.

The birth of Tamil Language is unknown but one of the earliest texts is even dating back to 5000 BCE, which clearly speaks for itself. Tamil is the OLDEST LANGUAGE

Read more: http://wiki.answers.com/Q/Which_is_the_oldest_language_that_is_still_spoken#ixzz24APP0kin

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் ஒரு பாகிஸ்தானியும் ஆங்கிலேயனும் வேலை செய்கிறார்கள். பலதும் பத்தும் கதைப்போம். அரசியல், விளையாட்டு, வரலாறு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் இப்படி பல. பல வேளைகளில் இஸ்லாம் மதத்தை பற்றி அவர்கள் இருவரும் வாக்கு வாதப்படுவார்கள். இதில் உண்மை என்னவென்றால் என் மதத்தை பற்றியும் மொழியை பற்றியும் எனது ஆங்கிலேய நண்பன் தெளிவாக இருக்கின்றான். அவன் பாகிஸ்தான் நண்பருக்கு சொல்லுவான் " அகஸ்தியனின் மொழியும் மதமும் தொன்மை வாய்ந்தவை, அவை இயற்கையோடு தோன்றி பின்னர் அறிஞர்களால் நெறி படுத்தப்பட்டது". தமிழ் மொழி எப்போது தோன்றினது என்று சொல்வது கடினம், இது நாகரீகம் தோன்றிய காலத்துக்கு முற்பட்டது.

குறிப்பு

இந்த ஆங்கிலேய நண்பன், எமக்காக முள்ளிவாய்க்கால் போரின் போது பிரதருக்கு, உள்ளூர் MP என பலருக்கு கடிதம் எழுதினவர். அவன் சொல்லுவான், " ஒரு இன விடுதலை போராட்டத்தை அழிப்பது கடினம், இன்று இவன் சாகலாம் ஆனால் இவன் இழப்பு பலரை உருவாக்கும். வடக்கு அயர்லாந்தில் கண்ட உண்மையும் இதுதான்."

Link to comment
Share on other sites

தமிழ் என்பது, ஒவ்வொரு தமிழனது உயிரோடு சம்பந்தப்பட்டது

சில தமிழருக்கு அதன் பெருமை தெரியாது வேற வேற மொழிகளில் பேசுவதை பெருமையாக நினைக்கின்றான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில பல தரப்பட்ட தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆரம்ப காலங்களில் வந்த மக்களின் பிள்ளைகள் தமிழ் அறிய மாட்டார்கள். ஆரம்ப காலத்தில் லண்டனில் 10 பேருடன் ஒரு சிறிய அறையினுள் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது போல. பெருமளவில் தமிழ் மக்கள் லண்டனுக்கு புலம் பெயர்ந்த பின்னர் தான் தமிழ் பாடசாலைகளை நிறுவி தமிழ் மொழி உட்பட பல கலைகளையும் பிள்ளைகள் கற்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கணிசமான அளவில் பிள்ளைகள் தமிழ் படிக்கின்றார்கள்.

தமிழ் மொழி மீது பற்றுள்ள பெற்றோர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் தத் தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை புகட்டுவதற்க்கு தயங்கமாட்டார்கள்.ஒரு சில நண்பர்களை வைத்துக்கொண்டு லண்டனில் வாழும் எல்லா மக்களும் அப்படித்தான் என்று எண்ண வேண்டாம்.

யாழ்ப்பாணத்திலேயே 'ஆங்கிலத்தில்' பேசுவதை பெருமையாய் பலர் நினைக்கும் போது. லண்டனில் இருக்கிறவன் ஆங்கிலத்தில் பேசுகிறான் என்று குறை கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சின்ன வகுப்பிலேயே ஆங்கில மொழி மூலம் பாடங்களை போதிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தெரியுமா உங்களுக்கு? இதை நான் பெருமையாக நினைக்கவில்லை.

முதலில் நான் என்ன எழுதியிருக்கின்றேன் என்பதை எழுதுக்கூட்டி வாசியுங்கள் முருகா!

சிறிய கோட்டுக்குமுன் இன்னொரு பெரிய கோட்டை கீறி உண்மையான விடையங்களை மறைக்காதீர்கள்.........

Link to comment
Share on other sites

முதலில் நான் என்ன எழுதியிருக்கின்றேன் என்பதை எழுதுக்கூட்டி வாசியுங்கள் முருகா!

சிறிய கோட்டுக்குமுன் இன்னொரு பெரிய கோட்டை கீறி உண்மையான விடையங்களை மறைக்காதீர்கள்.........

எது உண்மையான விடயம் என்பதை தெளிவு படுத்தினால் நல்லது.

நீங்கள் தமிழில் எழுதியுள்ளதால் எழுத்துக்கூட்டி வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்குது குமாரசாமி .

ஏனென்றால் நாங்கள் 77 இலேயே லண்டனுக்கு வந்திட்டம் பாருங்கோ.

Link to comment
Share on other sites

உண்மையில் தமிழனின் வரலாற்றை தோண்டிப்பார்த்தால் அவனுடைய ஆரம்ப அடையாளம் பாகிஸ்தானுக்குள்ளதான் இருக்கும் அங்கிருந்து அடிவாங்கி அடிவாங்கி இன்று தென் இந்தியாவின் ஒரு மூலையிலும் ஈழத்தீவின் கரைகளிலும் நிற்கின்றோம். இந்நிலை காலம் காலமாக எம் இனத்துக்குள் தோன்றி வந்த சுயநல இனத்துரோகிகளினால் உருவானது. இன்றுவரையும் தமிழ் வாழ்கின்றது தமிழர்கள் வாழ்கின்றனர் என்றால் அது காலம் காலமாக எம் இனத்துக்குள் தோன்றிய மான மாவீரர்களினாலேயே.

Link to comment
Share on other sites

நீங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்களோ யான் அறியேன். ஆனால் இந்த மாதிரியான லண்டன் வாழ் தமிழ் மக்களை பற்றிய விமர்சனங்களை ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் போகும் போது நான் எனது சொந்த காதுகளினால் கேட்டிருக்கின்றேன். ஏன் இப்படிப்பட்ட விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

குமாரசாமியின் நண்பருக்கு கொழுப்பு கூட என்று எழுதினால் பரவாயில்லை. லண்டன் சனத்திற்க்கு கொழுப்பு கூட .........என்று எழுதுவது ஏன் என்று புரியவில்லை.

குமாரசாமியின் நண்பர் ஆங்கிலத்தில் பேசியதற்காக 'இங்கிலாந்து வாழ்க்கை பிச்சைக்கார வாழ்க்கை' என்று எழுதுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

வேலை விடயமாக cardiff க்கு வருவதாக எழுதியுள்ளீர்கள். பிச்சை எடுக்கவா வருகிறீர்கள்( பிச்சைக்கார நாட்டில் வேறு என்ன வேலை கிடைக்கும்)

இதே பற்று தாயகத்திலும் இருக்கும் தானே!

பற்று பிரேதசவாதமாக மாறாவிட்டால் நன்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வாழ உலகில் வீர வரலாறு எழுதிய எங்கள் தேசியத்தலைவன் பிரபாகரனின் பங்கு கணக்கிட முடியாதது இன்றும் உலகம்பூராவும் தமிழ் பரவிக்கிடக்கின்றது என்றால் அந்தப் புகழ் தலைவரையே சாரும் அந்த தலைவனின் காலத்தில் வாழ்ந்தேன் என்பதில் எனக்கும் மிகவும் பெருமை.

Link to comment
Share on other sites

இதே பற்று தாயகத்திலும் இருக்கும் தானே!

பற்று பிரேதசவாதமாக மாறாவிட்டால் நன்மை!

தாயகத்தில பற்று இருந்திருந்தால் தாயகத்தை விட்டு ஓடி வந்திருப்போமா??

ஓடி வந்திருந்தாலும் புலி அடிச்சது என்று சொல்லி அகதி அந்தஸ்த்து கேட்டிருப்போமா ???

Link to comment
Share on other sites

430361_10151118523803750_1564700166_n.jpg

[size=5]

:( கொலை செய்யப்படும் மூத்த மொழி :([/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது உண்மையான விடயம் என்பதை தெளிவு படுத்தினால் நல்லது.

நீங்கள் தமிழில் எழுதியுள்ளதால் எழுத்துக்கூட்டி வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்குது குமாரசாமி .

ஏனென்றால் நாங்கள் 77 இலேயே லண்டனுக்கு வந்திட்டம் பாருங்கோ.

முதலில் ஒன்றைக்கவனியுங்கள் நான் ஒட்டுமொத்த பிரிட்டிஷ்தமிழர்களையும் சொல்லவில்லை.அத்துடன் என் சொந்தமென்றுதான் அங்கே குறிப்பிட்டேன்.இது ஏன் உங்களுக்கு முள்ளாய்குத்தியது என்று எனக்குத்தெரியவில்லை.

பிள்ளைகளை விடுங்கள்.அவர்களில் பெரும்பாலானோர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்.பெற்றோர்களோ அல்லது வயதுவந்தவர்களோ யாராக இருந்தாலும் கொண்டாட்டங்களிலும்,சந்திக்கும் இடங்களிலும் ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர்.ஜேர்மனியில் அப்படியல்ல.தமிழரைக்கண்டால் தமிழிலேயே கதைப்பார்கள்.பிள்ளைகளைத்தவிர்த்து......

யாழ்ப்பாணத்திலேயே 'ஆங்கிலத்தில்' பேசுவதை பெருமையாய் பலர் நினைக்கும் போது. லண்டனில் இருக்கிறவன் ஆங்கிலத்தில் பேசுகிறான் என்று குறை கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை.

அதுதான்......அந்த தாக்கம்தான் இனியும் வேண்டாம் என்கிறோம்.இனியாவது எந்தநாட்டில் இருக்கும் தமிழனும்......தமிழனைக்கண்டால் தமிழில் கதையுங்கள் என்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சின்ன வகுப்பிலேயே ஆங்கில மொழி மூலம் பாடங்களை போதிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தெரியுமா உங்களுக்கு? இதை நான் பெருமையாக நினைக்கவில்லை.

தெரியும்....இதை ஏன் இங்கு எனக்கு தெரியப்படுத்துகின்றீர்கள் என விளங்கவில்லை?சிலவேளைகளில்...யாழ்ப்பாணத்திலேயே ஆங்கிலமொழி மூலம் பாடம் கற்பிக்கும் போது ....இலண்டனில் இருக்கும் நாம் ஆங்கலத்தில் உரையாடுவது தப்பில்லை என சமநிலைப்படுத்துகின்றீர்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.