Jump to content

கர்ணன் படத்தில் இந்திய ராணுவ வீரர்கள்!


Recommended Posts

p28.jpg

1964ஆம் ஆண்டு வெளியாகி, மெகா வெற்றி பெற்ற ‘கர்ணன்’ தமிழ்ப் படம் கடந்த வெள்ளியன்று மீண்டும் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அன்று ஈஸ்ட்மென் கலரில் வெளியான படத்தை இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் புது மெருகேற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டுப் பாராட்டினார் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். பத்மா சுப்ரமணியம், “இதே போல சிவாஜியுடைய ‘திருவிளையாடல்’ படத்தையும் டிஜிட்டலில் கொண்டுவர வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டாராம். ஒய்.ஜி.மகேந்திரன், “‘சரஸ்வதி சபதம்’ படத்தையும் இதே மாதிரி பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு,” என்றாராம்.

“தமிழ்நாடெங்கும், மொத்தம் 70 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, சிவாஜி ரசிகர்களை மட்டுமின்றி, இன்றைய இளைய தலை முறையினரையும் கவர்ந்துள்ளது கர்ணன்,” என்கிறார் படத்தை வெளியிட்டிருக்கும் வினியோகஸ்தரான சாந்தி சொக்கலிங்கம்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவரை வைத்துப் பல படங்களை எடுத்தவர் பி.ஆர்.பந்துலு. இவர், ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்’, ‘கர்ணன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ரகசிய போலீஸ்’ என்று பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இவர் இயக்கிய படம் ‘கர்ணன்’. பிரம்மாண்டமான முறையில் ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு செய்யப்பட்டது. மகாபாரத போர்க் காட்சிகள் குருட்ஷேத்திரத்தில் எடுக்கப்பட்டன. இப்படி வட இந்திய லொகேஷன்களில் படம் பிடிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ‘கர்ணன்’தான். போர்க்களக் காட்சிக்குத் தேவைப்பட்ட அனைத்து ரதங்களையும் சென்னையில் வடிவமைத்து, குருட்ஷேத்திரத்தில் லொக்கேஷனுக்கு எடுத்துக்கொண்டு போய் படப்பிடிப்பு நடத்தினார்கள். இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்று, இந்திய ராணுவத்தின் படை வீரர்கள் முக்கிய போர்க்களக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டார்கள்.

படத்தில் மொத்தம் 16 பாடல்கள். அத்தனையும் சூப்பர் ஹிட்ஸ். ஆயிரம் கரங்கள் நீட்டி என்ற பாடலை டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன் என்று அந்தக் காலத்தில் நான்கு பிரபல பாடகர்களையும் ஒரே நேரத்தில் ஸ்டூடியோவுக்கு வர வழைத்துப் பாடச்செய்து, ரெகார்டிங் பண்ணினார் எம்.எஸ்.வி. அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார்.

p28a.jpg

64ஆம் வருடம் பொங்கலுக்கு ரிலீஸான கர்ணன் படத்தை இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடும் எண்ணம் எப்படி வந்தது?

“பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களை ரிலீசுக்கு வாங்கி, தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்வது வழக்கம். அதுபோல ‘கர்ணன்’ படத்தை, இப்போதுள்ள லேட்டஸ்ட் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மெருகூட்டி ரிலீஸ் பண்ணினால் என்ன? என்ற எண்ணம் எழுந்தது. விசாரித்துப் பார்த்தபோது, படத்தின் நெகடிவ் உரிமை ராஜ் டி.வி. நிர்வாகத்தினரிடம் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் எனது ஆசையைச் சொன்னபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்து, எல்லாவிதமான ஒத்துழைப்பும் தர முன் வந்தார்கள். ஜெமினி லேபுக்குச் சென்று படத்தின் நெகட்டிவைப் பார்த்தபோது, சவுண்டு டிராக் முற்றிலுமாக அழிந்து போயிருப்பதும், படத்தின் தரமும் மோசமாக இருப்பதாகவும் தெரிய வந்தது.

அதன் பிறகு மும்பை, ஹைதராபாத் என்று அலைந்து தக்க தொழில்நுட்ப வல்லுனர்களைக் கலந்தாலோசனை செய்தோம். பிரிண்டை ஓட்டிப் பார்த்து, பின்னணி இசைக்கான குறிப்புகளை எழுதிக்கொண்டு, மறுபடியும் ஏராளமான இசைக் கலைஞர்களைத் திரட்டி, அந்த நோட்ஸ்களின்படியே பின்னணி இசை வாசிக்கச் செய்து, பின்னணி இசையைச் சேர்த்தோம். அதே போல உயர் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஃபிலிமையும் டிஜிட்டல் பிரிண்ட் ஆக்கினோம். எல்லாமாகச் சேர்ந்து ஐம்பது லட்சம் ரூபாய் வரை செலவானது. எல்லாம் முடிந்து பிரிண்டைப் பார்த்தபோது, நாலு வருஷ காலம் முயற்சி செய்து, நாம் உழைத்ததும், செலவழித்த பணமும் துளியும் வீண்போகவில்லை என்றே தோன்றியது,” என்கிறார் சாந்தி சொக்கலிங்கம்.

நன்றி கல்கி

Link to comment
Share on other sites

நான் 10 தடவைகளுக்கு மேலே கர்ணன் பார்த்து விட்டேன் . ஆனாலும் ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் சிவாஜியின் நடிப்பும் , கடைசி பாடலும் மெய்சிலிர்க்க வைக்கும் . தற்போது வந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய வந்த படத்தையும் பார்க்க ஆவலாக உள்ளேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.