Jump to content

TRANSCENDENCE: செயற்கை நுண்ணறிவின் பயங்கரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

transcendence_ver11_xlg.jpg?w=201&h=300

வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது.

திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் தளங்களை Wally Pfister, மேரி ஷெல்லியின் ப்ராகின்ஸ்டைன், ஐஸக் அசிமோவ் படைப்புகளின் உந்துதலில் பெற்று இருக்கின்றார்.

அமெரிக்க Blockbuster திரைப்படமொன்றிற்கான அத்தனை கூறுகளையும் கொண்ட கதைத்தளம் இந்த Transcendence. ஆனால், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு எடுத்துக்கொண்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கன்சப்டை தெளிவுபடுத்த முனைந்திருப்பது படத்தைப் பார்க்கும் போது விளங்குகிறது.

ஜானி டெப், தனது பாத்திரங்களை தெரிவு செய்வதில் வல்லவர். இத்திரைப்படத்தில் ஒரு IT ஜீனியஸாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவ்வளவிற்கும், படத்தில் இவரின் பாத்திரம் கொஞ்சமாகவே வருகின்றது.

கதை இதுதான், டாக்டர் வில் (ஜானி டெப்) மற்றும் அவரது மனைவி ஈவ்லீன் (ரெபெக்கா ஹால்) அதி உயர் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்க எத்தனிக்கின்றனர். அதில் ஒரு பிரச்சினை, Self Conscious அல்லது Self Awareness ஐ கொண்டதாக இருந்தால்தான் அது மனித நுண்ணறிவு செயல்படும் விதத்தில் இருக்கும். அந்த சூட்சுமத்தை கண்டடைவதில்தான் இருவரின் பணியும் இருக்கின்றது. இந்நிலையில், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பின் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் அதனை வளர விடமால் தடுக்க வேண்டும் என ஒரு எதிர்ப்பு – அரசியல் குழு செயற்படுகிறது. அக்குழு டாக்டர் வில்லை சுடுவதுடன் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. மனைவி ஈவ்லின் இறக்கும் தருவாயில் இருக்கும் வில்லின் மூளையை, சிந்தனையை, ஞாபகங்களை சுருக்கமாக கூறினால் வில்லை கம்ப்யூட்டருக்கு அப்லோட் செய்கிறாள்.

ஒரு அதி உயர் நுண்ணறிவு படைத்த ஒரு மனித மூளை கம்ப்யூட்டர் இணையவெளியில் திறந்துவிடப்பட்டால் என்ன நடக்கும்? இந்த கேள்விக்கான விடைகளே படத்தின் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் முடிவும்.

நவீன தொழில்நுட்ப யுகம் பெற்றிருக்கும் நானோ தொழில்நுட்பம் பற்றி இந்தத் திரைப்படம் அதிகமாக பேசுகிறது. நானோ தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு சாத்தியங்கள் இருக்கின்றன, மருத்துவத்துறை, விவசாயம், இராணுவம் என்று பல தளங்களில் இதன் கைகள் வியாப்பித்துக் கொண்டு வருகின்றது. கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களையும் கூட நானோ தொழில்நுட்பத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம் என்கிறது அறிவியல்.

hawking.jpg?w=300&h=225

இந்த திரைப்படத்தை முன்வைத்து ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய கருத்துக்களையும் சற்று நோக்குவோம். தொழில்நுட்பத்தில் Singularity (Technological Singularity) எனும் ஒரு கோட்பாடு உண்டு. அதாவது மனித நுண்ணறிவை விட அதி சக்தி படைத்த மூளையைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஒன்றினால் என்னென்ன சாத்தியங்களை செய்ய முடியும் என்பது பற்றிய கோட்பாடே அது. இது மனித நாகரீகத்தில் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தக் கூடிய ஒன்றாக மாறிவிடும். மருத்துவம், விவசாயம் ஏன் மனித இயல்புகளையே மாற்றிவிடும் ஆற்றல் மிக்கதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும்.

ஏற்கனவே Artificial Intelligence களின் தன்மைகளைக் கொண்ட தொழில்நுட்ப அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. சில ஸ்மார்ட் போன்களும் கூட இத்தன்மைகளுடன் வடிவமைக்கப்படுகிறது. மனிதன் இதனை சீரியஸாக எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இதன் பாதிப்புகள் படுபயங்கரமானதாகவும், மனித நாகரீகத்தின் அழிவிற்கே இட்டுச் செல்லக் கூடியதாகவும் அமைந்துவிடும் என ஸ்டீபன் ஹாக்கிங் எதிர்வு கூறுகின்றார்.

இந்த Singularity கோட்பாட்டில் உருவாகும் இயந்திரங்களால் மனித நுண்ணறிவை காட்டிலும் அதிகமாகவும், தம்மைத் தாமே மீளுருவாக்கம் (Replicate) செய்துகொள்ளவும் முடியும். பொருளாதாரம், அரசியல் நிலமைகளில் தாம் விரும்பியவாறு மாற்றங்களை நிகழ்த்தும். இவற்றை விட ஆபத்தான ஒன்று, மனிதன் விளங்கிக் கொள்ள முடியாத ஆயுதங்களை உருவாக்கவும் செய்யும். சுருங்கக் கூறின் மனிதனின் கடைசி யுத்தம் இந்த Artificial Intelligence தான் இருக்கும்.

இப்பிரச்சினைகள் எந்தளவு தூரத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியாவிட்டாலும், ஏற்கனவே யுத்தங்களின் தன்மைகள் மாறிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக இன்ன மனிதனை கொல்ல வேண்டும் என்றால் அவனது டீ.என்.ஏ மாதிரியை ஒரு ஏவுகனையின் இயங்கு தளத்தில் இணைத்து விட்டால் போதும். அது தன் வேலையை கச்சிதமாக செய்யும். மறுபக்கத்தில் அரசாங்கங்களுக்கு எதிராக இணைய யுத்தங்கங்களும் (Cyber War) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தின் மூலம் இவ்விடயங்களை சற்று புரிந்துகொள்ள முடிகின்றது.

http://peayezhuttu.wordpress.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாசிக்க முடியவில்லை, இருட்டாக இருப்பதனால் திரும்ப இணைத்துள்ளேன். 
 
வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது.
திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் தளங்களை Wally Pfister, மேரி ஷெல்லியின் ப்ராகின்ஸ்டைன், ஐஸக் அசிமோவ் படைப்புகளின் உந்துதலில் பெற்று இருக்கின்றார்.
அமெரிக்க Blockbuster திரைப்படமொன்றிற்கான அத்தனை கூறுகளையும் கொண்ட கதைத்தளம் இந்த Transcendence. ஆனால், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு எடுத்துக்கொண்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கன்சப்டை தெளிவுபடுத்த முனைந்திருப்பது படத்தைப் பார்க்கும் போது விளங்குகிறது.
ஜானி டெப், தனது பாத்திரங்களை தெரிவு செய்வதில் வல்லவர். இத்திரைப்படத்தில் ஒரு IT ஜீனியஸாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவ்வளவிற்கும், படத்தில் இவரின் பாத்திரம் கொஞ்சமாகவே வருகின்றது.
கதை இதுதான், டாக்டர் வில் (ஜானி டெப்) மற்றும் அவரது மனைவி ஈவ்லீன் (ரெபெக்கா ஹால்) அதி உயர் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்க எத்தனிக்கின்றனர். அதில் ஒரு பிரச்சினை, Self Conscious அல்லது Self Awareness ஐ கொண்டதாக இருந்தால்தான் அது மனித நுண்ணறிவு செயல்படும் விதத்தில் இருக்கும். அந்த சூட்சுமத்தை கண்டடைவதில்தான் இருவரின் பணியும் இருக்கின்றது. இந்நிலையில், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பின் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் அதனை வளர விடமால் தடுக்க வேண்டும் என ஒரு எதிர்ப்பு – அரசியல் குழு செயற்படுகிறது. அக்குழு டாக்டர் வில்லை சுடுவதுடன் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. மனைவி ஈவ்லின் இறக்கும் தருவாயில் இருக்கும் வில்லின் மூளையை, சிந்தனையை, ஞாபகங்களை சுருக்கமாக கூறினால் வில்லை கம்ப்யூட்டருக்கு அப்லோட் செய்கிறாள்.
ஒரு அதி உயர் நுண்ணறிவு படைத்த ஒரு மனித மூளை கம்ப்யூட்டர் இணையவெளியில் திறந்துவிடப்பட்டால் என்ன நடக்கும்? இந்த கேள்விக்கான விடைகளே படத்தின் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் முடிவும்.
நவீன தொழில்நுட்ப யுகம் பெற்றிருக்கும் நானோ தொழில்நுட்பம் பற்றி இந்தத் திரைப்படம் அதிகமாக பேசுகிறது. நானோ தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு சாத்தியங்கள் இருக்கின்றன, மருத்துவத்துறை, விவசாயம், இராணுவம் என்று பல தளங்களில் இதன் கைகள் வியாப்பித்துக் கொண்டு வருகின்றது. கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களையும் கூட நானோ தொழில்நுட்பத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம் என்கிறது அறிவியல்.
 
hawking.jpg?w=300&h=225
இந்த திரைப்படத்தை முன்வைத்து ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய கருத்துக்களையும் சற்று நோக்குவோம். தொழில்நுட்பத்தில் Singularity (Technological Singularity) எனும் ஒரு கோட்பாடு உண்டு. அதாவது மனித நுண்ணறிவை விட அதி சக்தி படைத்த மூளையைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஒன்றினால் என்னென்ன சாத்தியங்களை செய்ய முடியும் என்பது பற்றிய கோட்பாடே அது. இது மனித நாகரீகத்தில் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தக் கூடிய ஒன்றாக மாறிவிடும். மருத்துவம், விவசாயம் ஏன் மனித இயல்புகளையே மாற்றிவிடும் ஆற்றல் மிக்கதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும்.
ஏற்கனவே Artificial Intelligence களின் தன்மைகளைக் கொண்ட தொழில்நுட்ப அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. சில ஸ்மார்ட் போன்களும் கூட இத்தன்மைகளுடன் வடிவமைக்கப்படுகிறது. மனிதன் இதனை சீரியஸாக எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இதன் பாதிப்புகள் படுபயங்கரமானதாகவும், மனித நாகரீகத்தின் அழிவிற்கே இட்டுச் செல்லக் கூடியதாகவும் அமைந்துவிடும் என ஸ்டீபன் ஹாக்கிங் எதிர்வு கூறுகின்றார்.
இந்த Singularity கோட்பாட்டில் உருவாகும் இயந்திரங்களால் மனித நுண்ணறிவை காட்டிலும் அதிகமாகவும், தம்மைத் தாமே மீளுருவாக்கம் (Replicate) செய்துகொள்ளவும் முடியும். பொருளாதாரம், அரசியல் நிலமைகளில் தாம் விரும்பியவாறு மாற்றங்களை நிகழ்த்தும். இவற்றை விட ஆபத்தான ஒன்று, மனிதன் விளங்கிக் கொள்ள முடியாத ஆயுதங்களை உருவாக்கவும் செய்யும். சுருங்கக் கூறின் மனிதனின் கடைசி யுத்தம் இந்த Artificial Intelligence தான் இருக்கும்.
இப்பிரச்சினைகள் எந்தளவு தூரத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியாவிட்டாலும், ஏற்கனவே யுத்தங்களின் தன்மைகள் மாறிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக இன்ன மனிதனை கொல்ல வேண்டும் என்றால் அவனது டீ.என்.ஏ மாதிரியை ஒரு ஏவுகனையின் இயங்கு தளத்தில் இணைத்து விட்டால் போதும். அது தன் வேலையை கச்சிதமாக செய்யும். மறுபக்கத்தில் அரசாங்கங்களுக்கு எதிராக இணைய யுத்தங்கங்களும் (Cyber War) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த திரைப்படத்தின் மூலம் இவ்விடயங்களை சற்று புரிந்துகொள்ள முடிகின்றது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்ததை யாழில் இணைக்கும் அவசரத்தில் கவனிக்கவில்லை மிக நன்றி தமிழரசு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
    • இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம்.  நன்றி  
    • கமாசையே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈரானுடனான தாக்குதலில் அநேகமாக  அணு ஆயுதம் பயன்படுத்தப்பட சாத்தியமுண்டு. ஆயுதங்களை விற்று தள்ளுவதே எமது குறிக்கோள். நண்பனெல்லாம் பிறகு தான். --யாராக இருக்கும்?   According to a survey performed by The Hebrew University of Jerusalem, 74% of the Israeli public opposes an Israeli counter-attack in Iran if it would undermine the security alliance between the United States, the United Kingdom, France, and several moderate Arab countries, including Jordan and Saudi Arabia.   7 பத்தும் ஒரு 4ம் சேர்ந்தால் 74. முதல் பந்தியில்  74 என குறிப்பிடபட்டுள்ளது. அவசரகுடுக்கைகளாக .......
    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.