Jump to content

புலம்பெயர் தமிழர்களுக்கான இந்தியாவின் செய்தி!


Recommended Posts

புலம்பெயர் தமிழர்களுக்கான இந்தியாவின் செய்தி!

 

Editorial%2Bviwe.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பலதரப்பினருக்குமான செய்திகளை கொண்டு வந்திருக்கிறது.

ஈழத்திலுள்ள தமிழ் மக்கள், தமிழ் அரசியற்கட்சிகள், இலங்கை அரசாங்கம், புலம்பெயர் தமிழர்கள் என்று எல்லோருக்குமான விசேட செய்திகளை நரேந்திர மோடி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது வெளியிட்டிருக்கிறது. அந்தச் செய்திகளில் அநேகமானவை இந்தியாவினால் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான்.

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வாக, ‘இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிரல்’ என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள்களை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதனை, கொஞ்சம் வலுவான குரலில் வெளியிட்டும் இருக்கிறது. இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டிராதவர்களையும் அந்தக் குரல் ஈர்க்க வைத்திருக்கிறது.

இந்த இடத்தில் ஈழத்திலுள்ள தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் தனது அக்கறையை வெளியிட்டுள்ள இந்தியா, புலம்பெயர் தமிழர்களுக்கு கண்டிப்பான செய்தியொன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதாவது, புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வன்முறையை ஆதரிக்கும் கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்ளுமாறு  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தம்மிடம் வலியுறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ‘பிரிவினை’ என்ற விடயத்தை இந்தியா என்றைக்குமே ஆதரிக்கவில்லை. அதற்கான முன்னெடுப்புக்கள் அல்லது முட்டுக்கொடுப்புக்கள் எங்கிருந்து ஆரம்பித்தாலும் அதனை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது அல்லது அதனை நிர்மூலமாக்க ஒத்துழைக்கிறது. இதன் பிரதிபலிப்பே இரா.சம்பந்தனிடம் மோடியால் சொல்லப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் குறித்த கருத்தும்.

நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் புதிய மத்திய அரசாங்கம் பதவி ஏற்று சில மாதங்களுக்குள்ளேயே ஈழத்தமிழர்கள் தொடர்பிலான அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது என்று சில தரப்பினர் நம்புகிறார்கள். அதில், தப்பில்லைத்தான். ஆனால், அந்த அக்கறையில் தனது பிராந்திய ஆதிக்கம் மற்றும் ஆணை மனநிலை தங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் வெளிப்பாடும், இலங்கையை தன்னுடைய கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் உத்தியுமே அதிகமாக வெளிப்படுகிறது. அந்த உத்தியின் பிரகாரம் ஈழத்தமிழர்கள் ஓரளவுக்கு சுதாகரித்துக் கொண்டு செயலாற்றினால் சில பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

புலம்பெயர் தமிழர்கள் மீது இந்தியா மிகுந்த எரிச்சலான மனநிலையை வெளியிட்டு வந்திருக்கிறது. அதற்கு காரணமும் இருக்கிறது. ஈழத்துக்கான ஆயுத போராட்டங்கள் ஒரு எல்லைக்கு அப்பால் புலம்பெயர் தமிழ் மக்களினால் குறிப்பிட்டளவில் வளர்க்கப்பட்டது. (அதிலுள்ள நன்மை தீமைகள் விவாதக்குரியவை) தமிழீழ விடுதலைப் புலிகளின் கோலொச்சும் வளர்ச்சி என்பது புலம்பெயர் தமிழர்களின் குறிப்பிட்டளவு பங்களிப்போடே சாத்தியமானது. அப்படியான சூழலில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் இந்தியா எரிச்சல் மனநிலையைக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆனால், இதுவரை இந்தியாவின் பிரதமரொருவர் இவ்வளவு வெளிப்படையாக அல்லது கண்டிக்கும் மனநிலையோடு புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கவில்லை. அதனை, மோடி செய்திருக்கிறார். இந்தியா எப்போதுமே தன்னுடைய ஆணையை ஏற்று ஒத்திசையும் சக்திகளையே அரவணைத்து சென்றிருக்கிறது. அப்படியான சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இப்போது கொள்கிறது. அந்தச் சக்தியினூடு தன்னுடைய விமர்சனத்தை புலம்பெயர் தமிழர்கள் மீதும் விடுக்கலாம் என்ற யுக்தியை சரியாக கையாண்டிருக்கிறது.

இந்த இடத்தில் புலம்பெயர் தமிழர்கள் என்று இலங்கைக்கு வெளியிலுள்ள ஈழத்தமிழ்ப் பெரும் சமூகம் குறித்தும் பேச வேண்டி ஏற்படுகிறது. தமிழர்களுக்கு என்று தனிநாடு என்பது எல்லோருடைய கனவாகவும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால், அந்தக் கனவை அடைவதற்கான சாத்தியம் என்பது சூன்யமாக இருக்கிற போது, ஏன் நாங்கள் சூன்யங்களின் மீது நம்பிக்கை கொண்டு, எமது உயிர்களையும், சொத்துக்களையும், உழைப்பையும் வீணடிக்க வேண்டும்?

உலகின் போக்கையும், அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இது, புலம்பெயர் தமிழர்களுக்கு மாத்திரமல்ல, இந்தியாவிலுள்ள உணர்ச்சியூட்டும் போராட்ட இயக்கங்களுக்குமான செய்தி தான். இந்தச் செய்தி ஏற்கனவே பல தடவைகள், பல தரப்பினரால் சொல்லப்பட்டு விட்டது. ஆனால், அதிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்வதில் தான் சிக்கலான மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள்.

இலங்கையில் பிரிவினை கோரி தனிநாடு அமைப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை என்பது யதார்த்தம். அந்த யதார்த்தத்தின் போக்கினை சகித்துக் கொள்ள முடியாவிட்டாலும், ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். தனிநாடு இல்லாவிட்டாலும், எமது உரிமைகளைப் பெறுமளவிற்கான அதிகாரங்களை இறுதிவரை கோரி வென்றெடுக்க வேண்டியதே எம்முன் உள்ள பெரும் பொறுப்பு. அதனை, புலம்பெயர் தமிழர்களும் புரிந்து கொண்டு, அதன் போக்கில் தமது அரசியல், இராஜதந்திர போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதனைவிடுத்து, தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கிற போது, அவை இலகுவாக மற்ற நாடுகளினால் புறந்தள்ளப்பட்டு விடும். ஆக, யதார்த்தம் என்பது பெருமெடுப்பில் உணரப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்கள் என்கிற சக்தி இரண்டு வடிவங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, இலங்கையிலுள்ள தமிழ் மக்கள். இரண்டாவது, புலம்பெயர் தமிழர்கள். இந்த இரண்டு வடிவங்களும் தமக்குள் இணக்கமான உறவைக் கொண்டிருக்க வேண்டிய தேவை எப்போதைக்கும் உண்டு. ஏனெனில், இரண்டு தரப்பினரும் இணையும் புள்ளியே எமது பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வைக்கும். ஆக, ஒரு தரப்பினர், இன்னொரு தரப்பினரை எந்தவொரு தருணத்திலும் புறந்தள்ளிவிட முடியாது. ஆக, எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டியதே இப்போதுள்ள தேவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களுக்கான இந்தியாவின் செய்தி!

...

... அந்த அக்கறையில் தனது பிராந்திய ஆதிக்கம் மற்றும் ஆணை மனநிலை தங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் வெளிப்பாடும், இலங்கையை தன்னுடைய கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் உத்தியுமே அதிகமாக வெளிப்படுகிறது.

...

 

 

 

:o:(  இந்த அதரப் பழசான தில்லி அதிகாரிகளின் கொள்கை தெரிந்ததுதானே!

இதற்கு ஏன் மோடியும், அதற்கு மேல் ஒரு மூடியிம்..? :)

 

Link to comment
Share on other sites

தமிழ் மக்களிற்கான விடுதலையை புலம் பெயர் தமிழ் மக்கள் என்றும் ஆதரித்தார்கள். விடுதலை புலிகளால் நடத்தப்பட்ட ஆயுத போராட்டத்திற்கு உதவி செய்திருந்தாலும்  விடுதலை புலிகளின் இடத்தில் யார் இருந்திருந்தாலும் புலம் பெயர் தமிழர்கள் அவர்களை ஆதரித்திருப்பார்கள் என்பதே யதார்த்தம். விடுதலை புலிகள் இல்லாத  வேறு ஒரு  அமைப்பால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய ஜனநாயக போராட்டம் நடத்தப்பட்டிருந்தாலும்  அவர்களை ஆதரிதிருப்பார்கள் என்பது தமிழ் மக்களின் மனங்களை சரிவர  புரிந்து கொண்டவர்களுக்கு நன்கு தெரியும்.

 

அவர்கள் தனியே ஆயுத போராட்டதை மட்டும் ஆதரிக்க வில்லை. சமாதான காலத்தில் 2002  -2003 காலப்பகுதியில்  பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்பு செய்வத்கான தமது விருப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.  சுவிற்சர்லாந்தில் இருக்கும் பல விளையாட்டு கழகங்கள் இணைந்து தாயகத்தில் ஒரு விளையாட்டரங்கை நிர்மாணிக்க கூட தயாராக இருந்ததார்கள். இன்றும் கூட  ஜனநாயக முறைப்படி தன்னாட்சி உரிமையுள்ள நீதியான சமஸ்டி  அரசியல் தீர்வு வருமாக இருந்தால் அங்கு ஏற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பாரிய நிதி உதவியை புலம் பெயர் தமிழ் மக்களால் செய்ய முடியும். அதற்கான பலம் அவர்களுக்கு உண்டு. 

 

ஆகவே வன்முறை  ஆதரவு அது இது என்று பூச்சாண்டி காட்டி புலம் பெயர் தமிழர்களை குறிவைக்க வேண்டியதில்லை. நீதியான சமாதானம் ஏற்படுத்தபட்டால்  புலம் பெயர் தமிழ் மக்கள் நேரடியாக தாயக பொருளாதாரத்திற்கு உதவி செய்வதை தடுக்கமுடியாது அந்நிலையானது   தமிழ் மக்களிடையே தம் சொந்த காலில் நிற்கும்  சுய பொருளாதார உறுதிப்பாட்டை ஓரளவிற்காகவது  கொண்டு வந்து விடுமோ என்பதே மோடியின் கவலை என்று நினைக்கிறேன். அதற்காகவே வன்முறை ஆதரவு  என்று பூச்சாண்டி காட்டி புலம் பெயர் தமிழ் மக்கள் மீது பழிபோட  இந்த  பண்டாரங்கள் முயல்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிற்கான விடுதலையை புலம் பெயர் தமிழ் மக்கள் என்றும் ஆதரித்தார்கள். விடுதலை புலிகளால் நடத்தப்பட்ட ஆயுத போராட்டத்திற்கு உதவி செய்திருந்தாலும்  விடுதலை புலிகளின் இடத்தில் யார் இருந்திருந்தாலும் புலம் பெயர் தமிழர்கள் அவர்களை ஆதரித்திருப்பார்கள் என்பதே யதார்த்தம். விடுதலை புலிகள் இல்லாத  வேறு ஒரு  அமைப்பால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய ஜனநாயக போராட்டம் நடத்தப்பட்டிருந்தாலும்  அவர்களை ஆதரிதிருப்பார்கள் என்பது தமிழ் மக்களின் மனங்களை சரிவர  புரிந்து கொண்டவர்களுக்கு நன்கு தெரியும்.

 

அவர்கள் தனியே ஆயுத போராட்டதை மட்டும் ஆதரிக்க வில்லை. சமாதான காலத்தில் 2002  -2003 காலப்பகுதியில்  பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்பு செய்வத்கான தமது விருப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.  சுவிற்சர்லாந்தில் இருக்கும் பல விளையாட்டு கழகங்கள் இணைந்து தாயகத்தில் ஒரு விளையாட்டரங்கை நிர்மாணிக்க கூட தயாராக இருந்ததார்கள். இன்றும் கூட  ஜனநாயக முறைப்படி தன்னாட்சி உரிமையுள்ள நீதியான சமஸ்டி  அரசியல் தீர்வு வருமாக இருந்தால் அங்கு ஏற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பாரிய நிதி உதவியை புலம் பெயர் தமிழ் மக்களால் செய்ய முடியும். அதற்கான பலம் அவர்களுக்கு உண்டு. 

 

ஆகவே வன்முறை  ஆதரவு அது இது என்று பூச்சாண்டி காட்டி புலம் பெயர் தமிழர்களை குறிவைக்க வேண்டியதில்லை. நீதியான சமாதானம் ஏற்படுத்தபட்டால்  புலம் பெயர் தமிழ் மக்கள் நேரடியாக தாயக பொருளாதாரத்திற்கு உதவி செய்வதை தடுக்கமுடியாது அந்நிலையானது   தமிழ் மக்களிடையே தம் சொந்த காலில் நிற்கும்  சுய பொருளாதார உறுதிப்பாட்டை ஓரளவிற்காகவது  கொண்டு வந்து விடுமோ என்பதே மோடியின் கவலை என்று நினைக்கிறேன். அதற்காகவே வன்முறை ஆதரவு  என்று பூச்சாண்டி காட்டி புலம் பெயர் தமிழ் மக்கள் மீது பழிபோட  இந்த  பண்டாரங்கள் முயல்கின்றன.

 

நன்றி

சரியான வார்த்தைகள்

இதைத்தான்  தொடர்ந்து நானிங்கே எழுதிவருகின்றேன்

விடுதலைப்புலிகள் ஒரு கருவி  மட்டுமே

போராட்டத்தை  நடாத்தபவர்கள்  மக்களே..

 

அடுத்தது யார்?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.