Jump to content

அல் கொய்தா பீதியும் பின்னணி அரசியலும் - ஷாகுல் ஹமீது:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்-கொய்தாவின் தற்போதைய தலைவராக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளால் கூறப்படும் அய்மான் அல் ஜவாகிரி இணையதளத்தில் அவிழ்த்து விட்ட  வீடியோ காட்சி இந்திய தீபகற்பத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா ஆகிய இந்திய தீபகற்ப நாடுகளில் அல்-கொய்தா இயக்கத்தை வளப்படுத்துவதற்காக இந்தியாவை மையமாக கொண்டு காயிதத்-அல்-ஜிஹாத் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் இந்த அமைப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஆசிம் உமர் தலைமை வகிப்பார் என்றும் அந்த வீடியோ காட்சியில் அய்மான் அல் ஜவாகிரி பேசுவதாக தயார் செய்யப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவால் கிளப்பி விடப்பட்ட இந்த அல்-கொய்தா சினிமாவிற்கு திரைக்கதை எழுதியது யார், இயக்கியது யார் என்பது குறித்து வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய அரசு உடனடியாக இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நாடு முழுவதும் முஸ்லீம் இன மக்கள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்த அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவது பெருத்த காமெடியாக உள்ளது. உலகத்தையே கோமாளி ஆக்க சிலர் செய்யும் பொம்மலாட்ட விளையாட்டில் ஆட்டு மந்தைகளை போன்று நாக்கை நீட்டி செல்லும் இந்தியாவை போன்ற அரசுகள் மீள முடியாத புதை குழியில் சிக்கி கொள்ளும் என்பது தெளிவான உண்மை.
 
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற வெளிப்படையான பயங்கரவாத அரசுகள் உலகத்தையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உருவாக்கி விட்ட இயக்கங்கள் தான் சர்வதேச அளவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களும் போராளி இயக்கங்களும். பல்வேறு பயங்கரவாத, போராளி இயக்கங்களுக்கு தேவையான ஆயுதங்களை சப்ளை செய்வதும் இந்த நாடுகள்தான். இவர்களை எதிர்க்க அந்த அந்த நாட்டு அரசுகளுக்கு  ஆயுத சப்ளை செய்வதும் இந்த நாடுகள்தான். எவ்வளவு கொடூரமான வணிகத்தை இந்த நாடுகள் மேற்கொண்டு வருகிறது. உலக நாட்டு பிரதமர்களை எல்லாம் கோமாளிகளாக்கி கொண்டு அமெரிக்கா செய்யும் சித்து வேலைக்கு தற்போது இந்தியாவில் கிடைத்த மிகப்பெரிய அடிமைதான் இந்துத்துவா வாதிகளின் இரும்பு பிரதமர் மோடி.
 
இலங்கையில் உள்ள தமிழ் ஈழ மீட்பு போராளி அமைப்பான விடுதலை புலிகளுக்கு ஆயுத சப்ளையில் இஸ்ரேலின் பங்கு அபரிமிதமாக இருந்தது. பின்பு அந்த போராளிகளை கொடூரமாக கொலை செய்ய இலங்கை ராஜபட்சே அரசுக்கு ஆயுதங்களை வழங்கியதும் அமெரிக்காவும் இஸ்ரேலும்தான்.இதே போன்று  இவர்களது சித்து வேலையில் உருவானதுதான் அல்-கொய்தாவும், ஐஎஸ்-ம். ஆரம்பத்தில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக அல்-கொய்தா உட்பட இயக்கங்களை உருவாக்கி அப்பகுதிகளில் இவர்களை வைத்து கபளீகரங்களை ஏற்படுத்தி பின்பு இவர்களே உருவாக்கிய பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்கிறோம் என்று கூறிகொண்டு எத்தனை நாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் கபளீகரம் செய்திருக்கிறது. இப்படிப்பட்ட தெளிவான உண்மைகள் நம் கண்முன்னே தெரிந்த பின்பும் அமெரிக்கா தனது கோமாளிகளை நடிக்க வைப்பதற்காக அவிழ்த்து விட்ட வீடியோ காட்சிக்கு இந்தியா உடனடியாக முசுலீம் இன மக்களை பெருவாரியான இந்து மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக நடவடிக்கையில் குதித்துள்ளது இந்த பயங்கரவாத நாடுகளுக்கு அதீத மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கும்.
 
இந்த வீடியோ காட்சி அல்கொய்தா இயக்கத்தின் இணையதளத்தில் இருந்து எடுத்து சமூக தளங்களில் பரப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் உலகத்தில் உள்ள அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வரும் அமெரிக்கா ஏன் இன்னும் அல் கொய்தாவின் இணையதளத்தை முடக்க முடியவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. மேலும் இந்திய தீபகற்ப நாடுகளில் தங்களது ஆதிக்கத்தை வலுவாக வேரூன்ற இதுதான் சரியான தருணம் என்பதை அமெரிக்காவும் இஸ்ரேலும் சரியாக புரிந்து கொண்டதன் விளைவுதான் தற்போது மோடியை கோமாளியாக்க பல்வேறு செயல்திட்டங்களில் இறங்கி உள்ளனர். காரணம் முசுலீம்களையும் பாகிஸ்தானையும் எதிரியாக சித்தரித்த கருத்தியலில் உருவான மோடியை விட இவர்களது செயல் திட்டத்தை எத்தருணத்தில் தான்  செயல்படுத்த முடியும்? இந்த கண்ணோட்டத்தில் தான் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையையும் பார்க்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் இடையே சுமூக உறவுகள் ஏற்படும் போதெல்லாம் எல்லையில் பிரச்சினையை கிளப்பி விடுவது யார் என்பதில் தெளிவான புலனாய்வு இருந்த பின்பும் வேண்டும் என்றே அதை பாகிஸ்தானுடனும் அல்லது ஏதாவது போராளி அமைப்புகளுடனும் முடித்து கொள்வது எவ்வளவு கொடூரமான அரசியல்.
 
அல் கொய்தா பூதத்தை கிளப்பி விட்டு இந்திய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் ஆதிக்கத்தை செலுத்த அமெரிக்கா எத்தனிக்கும்  இந்த தருணத்தில் இந்த வீடியோ காட்சி குறித்த உண்மைத்தன்மையை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய முசுலீம் இயக்கங்கள் சங்க பரிவார கும்பல்களின் மிரட்டலுக்கு பணிந்து போகும் விதமாக வீடியோ காட்சி வெளியான உடனேயே அல்கொய்தா இயக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் நகைப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. 
 
இந்த வீடியோ காட்சியை தங்களது திட்டத்தை செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் மோடி அரசும் சாதகமாக பயன்படுத்தும் போது அதற்கு உறுதுணை கொடுப்பது போன்றே இசுலாமிய இயக்கங்களின் அறிக்கைகள் உள்ளன. யாரும் இனி கேள்வி கேட்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. எந்த முசுலீமையும் அல் கொய்தா தொடர்பு என்று மத்திய அரசு கைது செய்யலாம். எந்த இசுலாமிய இயக்கமும் அதற்காக குரல் கொடுக்காது. அல்லது இதையே காரணமாக வைத்து பொடா போன்ற கருப்பு சட்டங்களை கொண்டு வரலாம்.   
 
மோடி ஆட்சி ஏற்பட்ட பின்பு இந்திய முசுலீம்களின் பொது புத்தியிலும் உண்மைதன்மை குறித்த தெளிவு சிறிது சிறிதாக மறைந்து ஒரு பதட்ட மன நிலை ஏற்படுவதாகவே தெரிகிறது. அல் கொய்தாவை முதலில் பயங்கரவாதிகள் என்று கூறுவதற்கு ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற மாற்று கேள்வியை கிளப்ப யாருமே தயாராக இல்லை. உலகில் அனைத்து பகுதிகளிலும் அல் கொய்தா தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் இந்தியாவில் மத கலவரங்களை உருவாக்கி ஆர்.எஸ்.எஸ். ஆல் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் கூட்டி பார்த்தால் முதலில் ஒடுக்கப்பட வேண்டியவர்கள் யார் என்பது தெரியும். அதே போன்று ஐ.எஸ் இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அமெரிக்க இசுரேலால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிகையையும் கூட்டி பார்த்தால் யார் பயங்கரவாதிகள் என்பது தெரியும். ஆனால் ஒன்றாம் வகுப்பில் படித்த இந்த சிறிய கூட்டல் கணக்குக்கு கூட நாம் தயாராக இல்லை. நாம் ஆட்டுமந்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற பயங்கரவாத சக்திகளின் முயற்சிக்கு நாம் பலியாகி கொண்டு இருக்கிறோம்.
 
ஊடகவியலாளர் - ஷாகுல் ஹமீது (ibnsheik@gmail.com)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் உள்ள தமிழ் ஈழ மீட்பு போராளி அமைப்பான விடுதலை புலிகளுக்கு ஆயுத சப்ளையில் இஸ்ரேலின் பங்கு அபரிமிதமாக இருந்தது. பின்பு அந்த போராளிகளை கொடூரமாக கொலை செய்ய இலங்கை ராஜபட்சே அரசுக்கு ஆயுதங்களை வழங்கியதும் அமெரிக்காவும் இஸ்ரேலும்தான்
ஹமீது....இதில இந்தியாவின் பங்கு மிகபெரியது அதைப்பற்றி நீங்கள் எழுதவேயில்லை....
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.