Jump to content

உலகமயமாதலின் ராசதந்திரமும் தமிழர்களின் ராசதந்திரத்தின் உலகமயமாதலும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவு டன்பேசிய விடயங்களை வெளியிட முடியாது என்கிறார் மாவை

இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது. இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய கால கட்டம் இது. அதனைப் பின்பற்றி நாமும் செயற்பட வேண்டியமை மிகவும் அவசியமாகும். - இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.
- செய்தி

கொழும்பில் பேசிய சுப்பிரமணியசுவாமி வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமே தமிழர் கூட்டமைப்பை சந்திப்பார். பிரதமர் சந்திக்க மாட்டார் எனக் கொக்கரித்திருந்தார். இதுவே ராஜபக்சவினதும் சில அயல்நாட்டு அதிகாரிகளினதும் எதிர்பார்ப்பு. இப்போது மேல்மட்டச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்தியா அமரிக்கா அல்லது வேறு எந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நிகழ்ந்தாலும் பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் வெளியிட ஒப்பிய விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது இராசதந்திர மரபும் நெறியுமல்ல.இது தொடர்ந்து பணியாற்றுவதைச் சிக்கலாக்கும்.

மாவை அண்ணா அவர்கள் பேசும்போது இராசதந்திர மரபுகளை மீறி  "என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது" என்று கூறியுள்ளார்..இப்படி மறைப்பதற்க்கு ஏதோ இருக்கு என்ற தொனியில் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல பேசுவதும் இராசதந்திர நெறிமுறைகளுக்கு மாறானது. இது நம்பகத் தன்மையை பாதிக்கும்.

இந்தியாவோ அமரிக்காவோ யாருடன் பேசினாலும் இருதரப்பும் வெளியிட ஒப்புக்கொண்ட விடயங்களை மட்டும் சொல்லி மெளவுனம் சாதிப்பதே மரபு. செல்வநாயகம் காலத்தில் இருந்தே எங்கள் வரலாற்றில் இராசதந்திரம் வலுவற்றதாகவே இருந்து வருகிறது.

இந்த உலகமயமாதல் காலக் கட்டத்தில் இராசதந்திர மரபுகளை மீறினால் நாம் தனிமைப் பட்டு விடுவோம். உலகமயமாதலின் இராசதந்திரம் என்ன விலைகொடுத்தும் நம் போராட்டத்தை உலகமயமாவதுதான். கொசோவா தெற்க்கு சூடான் தெற்க்கு தீமோர் போன்ற நாடுகள் கொடுத்த விலையும் விட்டுக்கொடுப்புகளும்தான் அவர்கலது விடுதலைகான முதலீடு ஆனது. அதற்க்கு அவர்களது தனிமைப்படாமையை  முன்னிலைப்படுத்திய அரசியலும் இராசதந்திர நகர்வுகளும்தான் காரணம். அவர்களது இராசதந்திரத்தின் அடிப்படையாக விடுதலை தொடர்பான அரசியல் உறுதிப்பாடு இருந்தது. பரந்துபட்ட ஐக்கியம் இருந்தது. இந்த இரண்டும் அமைந்ததால்தான் அவர்களால்  விடுதலைக்குக் குறைந்த தீர்வுகளை விடுதலையை வெல்லுவதற்கான படிக்கட்டுகளாக்க முடிந்தது.  நமது புலம் பெயர்ந்த விடுதலைக் குழுக்களும் கூட்டமைப்பு அரசியல் வாதிகளும் கற்றுக்கொள்ள வேன்டிய பாடம் இதுதான்.

விடுதலையில் உறுதியோடு  விடுதலைக்கு முதலீடாகக்கூடிய விடயங்களில் மட்டும் தற்காலிக விட்டுக்கொடுப்புகளோடு நமக்குள்ளும் உலக அரங்கிலும்  தனிமைப் படுதலை தவிர்த்தும் எதிரியைத் தனிமைப் படுத்தியும் முன்னேறுவதுதான் நமக்குள்ள ஒரே வழி. இந்த உலகமயமாதல் காலக்கட்டத்தில் தனிமைப்படுதல் தோல்விக்கே வழிவகுக்கும்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110976/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.