Jump to content

சி.வரதராஜன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக வழங்கிய செவ்வி


Recommended Posts

யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவருமான சி.வரதராஜன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஊடகம் இணையத்துக்கு வழங்கிய செவ்வி

 

 

Link to comment
Share on other sites

Varathan_CI.jpg

 

2010ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் நான் நேரடி அரசியலில் முதன் முதலே பங்குபற்றினேன். பின்னர் தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக செயற்பட்டேன. எனினும் அப் பதவிக்குரிய கடமைகளை சுயமாக என்னால் மேற்கொள்ளமுடியாமல் இருந்ததை காலப்போக்கில் உணர்ந்து கொண்டேன். எனக்குப் பல வரையறைகள் காணப்பட்டன. இந்நிலையில் தலைவர் பதவியில் தொடர்ந்து இருப்பது அர்த்தமற்றது என்பதை உணர்ந்து கொண்டேன்.

இங்கு துவிச்சக்கரவண்டியை நிறுத்தவேண்டாம் என்று ஒரு அறிவித்தல் பலகை நாட்டப் பட்டிருக்கும். ஆனால் அதற்கு அருகிலேயே சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும். சில சந்தாப்பங்களில் இவ் அறிவித்தல் பலகைமீதே துவிச்சக்கரவண்டி சாத்தப்பட்டிருக்கும். இது ஒரு முரண்பாடான நிலை. இந்நிலையில் ஒன்றில் அறிவித்தல் பலகையை எடுக்கவேண்டும். அல்லது துவிச்சக்கரவண்டியை அவ்விடத்திலிருந்து எடுக்கவேண்டும்.

இத்தகைய ஒரு முடிவைத்தான் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுத்தேன். அதாவது தலைவர் பதவியிலிருந்து விலகியதுடன் கட்சி நடவடிக்கைகளிலிருந்து முற்றாக ஒதுங்கி இருந்தேன். எனினும் இவ்விடயம் பெரிதும் பகிரங்கப்படுத்தப்படமல் இருந்தது. இதனால் பலரின் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் நான் அடிக்கடி உட்படவேண்டியிருந்தது. அவர்களின் செயற்பாடுகளுக்கும் அவர்களால் விடப்படும் அறிக்கைகளுக்கும் பலருக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய இக்கட்டானநிலை எனக்கு ஏற்பட்டது.

இம்மாகாண சபைத் தேர்தலின்போது இம்முரண்பாடுகள் மேலும் முற்றியது. எனக்கு என்று ஒரு தனிப்பட்ட அரசியற் கருத்து உண்டு. மாகாணசபை முறை வலுவற்றது - அதிகாரமற்றது தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யமாட்டாது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனால்தான் இம் மாகாணசபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் பினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றாமல் இம்முறைமையை முற்றாக நிராகரித்திருந்தன. அன்று தமிழ் மக்களிடம் வேறு ஒரு தீர்வும் இருந்தது. அதற்காக போராடுகின்ற அமைப்பும் இருந்தது. எனவே அன்றைய சூழ்நிலையில் இம் மாகாணசபை முறையை நிராகரித்ததில் ஒரு நியாயம் இருந்தது. 

ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. அரசியல்ரீதியில் ஜனநாயகரீதியில் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகப் போராட வேண்டியநிலையில் உள்ளனர். இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் ஒருநிலைப்பாடு எடுக்கவேண்டியநிலை எனக்கு ஏற்பட்டது. கட்சி தலைமையிடம் எனது நிலைப்பாட்டை கூறினேன். மாகாணசபை முறையின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதோடு, இன்றைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரிக்கவேண்டும் என்றவகையில் ஓர் அறிக்கையை விடுமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் எனது நிலைப்பாட்டை தனியாக அறிவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனது இச் செயற்பாடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சங்கடங்களை உருவாக்கியிருக்கலாம். நான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து முற்றாக விலகிவிட்டேன் என்பதைப் பகிரங்கப்படுத்தாதவரை இந்நிலைமை காணப்படும். எனவே நான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து முற்றாக விலகிவிட்டேன் என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.

http://globaltamilnews.net

Link to comment
Share on other sites

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாகாண சபைத்தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்கள் .பின்பு சர்வதேசம் TNA பின்னால் நிற்பதைக் கண்டு பேசாமல் இருந்தார்கள் .ஆனந்தி போட்டியிடுவதை வைத்து அவருக்கு இரகசியமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள் .இவர்கள் சந்தர்ப்பவாதிகளா ?அல்லது தங்களால் முடியாததை அனந்தி மூலமாக செய்வதற்கு முயற்சிக்கின்றா ர்களா ?.காலம் பதில் சொல்லும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.