Jump to content

முல்லைத்தளம் மீதான சமரில் 2ம் நாளில் வீரகாவியமான 112 மாவீரர்களின் நினைவு


Recommended Posts

முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 1 படைநடவடிக்கையில் 19.07.1996 அன்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் (19.07.1996) படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் பெரும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இதன்போது “ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் பார்த்தீபன், மேஜர் கண்ணபிரான், மேஜர் பதுமன், மேஜர் சுரரொளி ஆகியோரால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

முல்லைத்தளம் மீதான தாக்குதல், மற்றும் கடல் வான் மூலமான மீட்பு அணிகள் மீதான முறியடிப்புத் தாக்குதல்களில் தீரமுடன் களமாடி 112 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

அவர்களின் விபரம் வருமாறு

கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை (இராமலிங்கம் செல்வராசா - மன்னார்)

கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன் (வேதமணி) (உலகநாதன் ரமேஸ் - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான் (அப்துல்லா) (சாமித்தம்பி புலேந்திரன் - அம்பாறை)

கடற்கரும்புலி மேஜர் பதுமன் (ஆனந்தமயில் பாலமுரளி - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் சுடரொளி (செபமாலை இரத்தினமலர் - யாழ்ப்பாணம்)

லெப்.கேணல் சேரன் (கதிரவேல் ஜெயராஜ் - திருகோணமலை)

மேஜர் மகேந்திரன் (நாகராசா பொன்ராஜா - மட்டக்களப்பு)

மேஜர் வதனன் (பாலசிங்கம் விஸ்ணுவர்தன் - யாழ்ப்பாணம்)

மேஜர் மதுவன் (தீபன்) (திருச்செல்வம் விஜயவீரன் - யாழ்ப்பாணம்)

மேஜர் மாறன் (கணபதிப்பிள்ளை யோகராசா - திருகோணமலை)

மேஜர் செந்தூரன் (நேரியன்) (ஜோன்பிள்ளை கருணைநாதன் - யாழ்ப்பாணம்)

மேஜர் வளவன் (சாரட்னம் சிறீஸ்காந்தராஜா - கிளிநொச்சி)

மேஜர் புலிக்குட்டி (கரி) (ஆனந்தராஜா ஜெயமோகன் - வவுனியா)

கப்டன் மூர்த்தி (குமாரசாமி இராசரத்தினம் - மட்டக்களப்பு)

கப்டன் அருள்ராஜ் (திருமேனி பவளசிங்கம் - மட்டக்களப்பு)

கப்டன் காளி (இரத்தினம் ஜெகதீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கலைவாணண் (குழந்தைவேல் ரவேந்திரன் - மட்டக்களப்பு)

கப்டன் பெருமாள் (கௌதமன்) (அருளம்பலம் டிங்கராசா - யாழ்ப்பாணம்)

கப்டன் ஊரன் (கௌதமன்) (அடைக்கலம் இன்பசோதி - யாழ்ப்பாணம்)

கப்டன் ஆனந்தகுமார் (சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் - லுணுகல)

கப்டன் ஈழவன் (காராளசிங்கம் சசிகரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கணேசன் (கந்தசாமி சந்திரமோகன் - திருகோணமலை)

கப்டன் மணியம் (செல்லத்துரை விக்கினேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் செந்தூரா (முருகன் ஜோதிமலர் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் யசோதனன் (ரஞ்சித்) (சண்முகம் வசந்தராஜா - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் சிவபாதன் (சத்தியராஜ்) (சுப்பிரமணியம் ஆனந்தன் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் கலைஞானம் (சுப்பிரமணியம் கதிர்காமத்தம்பி - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் வேலவன் (கந்தையா ரதீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கலைப்புயல் (நாகமணி குணசீலன் - வவுனியா)

லெப்டினன்ட் எழில்வாணன் (குழந்தைவேல் சிறீமுருகன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சந்திரிக்கா (கணபதிப்பிள்ளை மகேஸ்வரி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மங்களா (அழகேந்திரன் காந்தரூபி - வவுனியா)

லெப்டினன்ட் தண்மதி (செல்வத்துரை கோணேஸ்வரி - திருகோணமலை)

லெப்டினன்ட் கலீபன் (இராசநாகம் கிருஸ்ரியன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மெய்நம்பி (திருச்செல்வம் அமலதாஸ் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் ஆனந்தராஜ் (தம்பிப்பிள்ளை விஜயரத்தினம் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் தமிழன்பன் (தம்பு சிறீஸ்கந்தராசா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நாதன் (ஐயம்பிள்ளை நந்தகுமார் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தாமரைச்செல்வி (வேலு பரிமளம் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் பொன்முடி (யோசப்மரியநாதன் சந்திரஉதயன் - மன்னார்)

லெப்டினன்ட் தில்லைநம்பி (இரத்தினம் பாஸ்கரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வாணண் (மாணிக்கம் தயாளன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நிமலன் (யோகேஸ்வரன் நிருந்தன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஏகலைவன் (குமாரசாமி நிரஞ்சன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வேந்தன் (பரமசிவம் கிருஸானந்தசிவம் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பெருந்தேவன் (நவரத்தினம் சிவகுமார் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பூவாணி (முத்துக்கறுப்பன் விஜயகுமாரி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சுபா (ஜெகநாதன் ஜெயந்தி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் காதாம்பரி (விநாயகமூர்த்தி கவிதா - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் இளம்பிறை (தங்கராசா பாஸ்கரமோகன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மதுமிதா (கணபதிப்பிள்ளை கலைவேனி - வவுனியா)

லெப்டினன்ட் வெற்றிமணி (சின்னத்தம்பி சசிகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் திலகன் (சுப்பையா வசந்தகுமார் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் சுதன் (இராமப்பிள்ளை உதயன் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் எழில்நிலவன் (சின்னத்துரை ஜோசேப் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் காந்தரூபன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் சாமந்தி (சீவரட்ணம் ஜெயந்தினி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சுரேந்தினி (பராமனந்தன் ஜனார்த்தனி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இசைத்தமிழ் (ஜெகநாதன் பிறேம்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் நாதன் (அங்கமுத்து சந்திரகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் செழியன் (கணபதி ரதீஸ்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மெய்யப்பன் (மாணிக்கம் ரவிக்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கபிலன் (பாலச்சந்திரன் பிரசாத் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இளந்திரையன் (வீரகத்தி ஜேசுலின் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் செழியன் (பிரகலாதன் ரகுநாதன் - வவுனியா)

2ம் லெப்டினன்ட் காவியநாயகி (தர்மலிங்கம் சர்மினி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் காஞ்சனாதேவி (சண்டிகா) (சின்னையா அனுசா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சௌந்தன் (சின்னத்தம்பி சிவகுமார் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் புண்ணியராசா (கேதீஸ்) (நவமணியம் நேசன் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் வரதராயன் (இளையவன் நிமலேந்திரன் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் விவேகானந்தி (கந்தராணியம் மதிவதனி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் பொற்செல்வி (இராசதுரை கோமதி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் விசித்திரன் (செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருளியன் (அருட்செல்வன்) (அரசரட்னம் வர்ணராசா - திருகோணமலை)

வீரவேங்கை ஈழராணி (ஈழவதனி) (சின்னத்தம்பி கனகாம்பிகை - வவுனியா)

வீரவேங்கை நாகப்பன் (கந்தையா புண்ணியமூர்த்தி - மட்டக்களப்பு)

வீரவேங்கை நித்தியசீலன் (நடராசா அருமைநாயகம் - மட்டக்களப்பு)

வீரவேங்கை சிலம்பரசன் (நடராசா தவராசா - அம்பாறை)

வீரவேங்கை அருள்மாறன் (இராமரத்தினம் வனேஸ்வரன் - கிளிநொச்சி)

வீரவேங்கை நாகமைந்தன் (பத்தநாதன் ஜெயசீலன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை துளசிதரன் (தெய்வேந்திரம் சசிகரன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்வேங்கை (யோகரத்திணம் நகுலேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை செல்வந்தன் (நாகேந்திரன் காண்டீபன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மலையரசி (வேலாயுதம் தமிழ்ச்செல்வி - திருகோணமலை)

வீரவேங்கை மாலதி (இரத்தினசிங்கம் சுகந்தி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சஞ்சிகா (குமாரசாமி பிறேமலா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இந்திரமலர் (கணேஸ் வசந்தகுமாரி - மாத்தளை)

வீரவேங்கை கஜேந்திரன் (சுந்தரலிங்கம் விக்னேஸ் - திருகோணமலை)

வீரவேங்கை அங்கதன் (தேவராசா விஜயகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஆதிரையன் (தியாகராசா யோகேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இசைவாணன் (சின்னவேல் பத்மநாதன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுகுணன் (அண்ணாமலை சூரியகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சேரன் (தர்மலிங்கம் தயாளன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மித்திரன் (முத்துப்பிள்ளை உதயன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இராவணன் (கிருஸ்ணபிள்ளை சுரேஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்வாணி (தம்பிராசா ஜெயரூபன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வாணன் (ரவி) (கந்தசாமி குகதாஸ் - கிளிநொச்சி)

வீரவேங்கை மித்திரன் (முத்துத்தம்பி உதயன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிரசாந்தன் (பசுபதி மனோகரன் - கிளிநொச்சி)

வீரவேங்கை கோகுலதாசன் (பொன்னுச்சாமி பாஸ்கரன் - வவுனியா)

வீரவேங்கை பவானி (வீரசிங்கம் பிறேமிளா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கூர்வேலன் (சுப்பிரமணியம் லக்ஸ்மணன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்மாறன் (தர்மலிங்கம் சந்திரரட்ணம் - முல்லைத்தீவு)

வீரவேங்கை கமலன் (சதாசிவம் திருச்செல்வம் - கிளிநொச்சி)

வீரவேங்கை முத்துச்செல்வன் (செல்வராசா சிவகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பாரிவேல் (இளங்குமரன்) (தம்பு சதீஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலாமோகன் (முருகன் ரமேஸ்குமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இனியவன் (கைலாசப்பிள்ளை கோகுலன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிறைசூடி (இராசரத்தினம் இராகவன் - வவுனியா)

வீரவேங்கை சபேசன் (செல்வராசா சதீசன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நிமாலினி (தர்மலிங்கம் சிவகௌரி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பரமேஸ்வரி (சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி - கிளிநொச்சி)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

mullai2ndday.jpg

55_lt_col_seran.jpg

--

வீரவேங்கைகள் இணையம்

Veeravengaikal.Com

http://www.veeravengaikal.com

info@veeravengaikal.com

மாவீரர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் - தேசியத் தலைவர்

Link to comment
Share on other sites

[size=4]மரபுவழித்தாக்குதல் மூலம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் ஆயுதப்போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு நினைவு நாள் வீரவணக்கங்கள். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது இளமைக்காலத்தில், நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைத்து, மாவீரர்களாகி விட்டவர்களுக்கு, வீர வணக்கங்கள்!

எதையும் கொச்சைப் படுத்த முனைபவர்கள் கூட, உங்கள் உயரிய லட்சியத்தை மட்டும் கொச்சைப் படுத்த முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • 8 years later...


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.