Jump to content

'எச்ஐவி' இல்லா சான்றிதழ் தந்தால்தான் திருமணம்: தமிழகத்துக்கு வழிகாட்டும் தேனி மாவட்ட கிராமம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'எச்ஐவி' இல்லா சான்றிதழ் தந்தால்தான் திருமணம்: தமிழகத்துக்கு வழிகாட்டும் தேனி மாவட்ட கிராமம்

hiv_2108394h.jpg

 

 

எச்ஐவி நெகட்டிவ் எனச் சான்றிதழ் தந்தால் மட்டும் திருமணம் செய்யும் வழக்கத்தை கட்டாயமாக்கி, தமிழகத்துக்கே வழிகாட்டுகிறது தேனி மாவட்டத்தில் உள்ள கருங்கட்டான்குளம் கிராமம். இக் கிராமத்தின் சேவையை உயர் நீதிமன்றம் பாராட்டியது.

ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மையால் திருமணங்கள் தோல் வியில் முடிவதைத் தடுக்க, திருமணத்துக்கு முன் ஆணுக் கும் பெண்ணுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும் திட்டத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்வைத்தது. இப்பிரச்சினைக் குத் தீர்வுகாணும் நோக்கத்தில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான சிறப்பு விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விடுமுறை நாளான சனிக்கிழமை நடைபெற்றது.

 

 

நீதிபதி பாராட்டு

இதில் தேனி மாவட்டம், சின்ன மனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.அருண், உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் கருங்கட்டான் குளத்தில் மறவர் சமுதாயத்தில் திருமணம் செய்யப் போகும் ஆணிடமும் பெண்ணி டமும் தங்களுக்கு எச்ஐவி இல்லை என சான்றிதழ் கேட்கும் வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாகக் கூறினார். இதற்காக கருங்கட்டான்குளம் கிராமத்தில் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருபவர்களுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

 

சான்றிதழ் வழங்க வேண்டும்

உயர் நீதிமன்றத்தின் பாராட்டு களைப் பெற்ற கருங்கட்டான் குளத்தில் திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை செய்யும் வழக்கம் 2007-ம் ஆண்டி லிருந்து நடைமுறையில் உள்ளது. கருங்கட்டான்குளத்தில் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் கொண்ட 1542 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் மறவர் சமூக நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்குள்ள மறவர் மக்கள் மன்றத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் தங்களுக்கு எச்ஐவி இல்லை என திருமணத்துக்கு முன் சங்க நிர்வாகிகளிடம் சான்றிதழ் வழங்க வேண்டும். திருமணத்துக்கு பதிவு செய்யும்போது எச்ஐவி பரிசோத னைக்காக சங்கம் சார்பில் மணமகன், மணமகள் பெயர்கள் எழுதப்பட்ட விண்ணப்பம் தரப் படும். அந்த விண்ணப்பத்தை அரசு மருத்துவமனையில் வழங்கினால், இருவருக்கும் எச்ஐவி பரி சோதனை செய்யப்பட்டு சான் றிதழ் வழங்கப்படும். அதை சங்க நிர்வாகிகளிடம் அளிக்க வேண்டும். சான்றிதழில் எச்ஐவி இல்லை என குறிப்பிட்டிருந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும்.

 

சான்றிதழ் தந்தால்தான் திருமணம்

இது குறித்து மறவர் சமூக நலச் சங்கத் தலைவர் ஆர்.தவமணி ராமச்சந்திரன் ‘தி இந்து’ செய்தியாளரிடம் தொலைபேசி யில் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மறவர் சமுதாயத்தில் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் அதிகம் பேர் உள்ளனர். 2007-ல் இளைஞர்கள் சிலர் எச்ஐவி நோயால் இளவயதிலேயே இறந்தனர்.அந்த இளைஞர்களை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்கள், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டனர்.

எச்ஐவியால் இளம் வயதில் இளைஞர்கள் இறந்ததும், பெண்கள் கண்ணீர் சிந்தியதையும் நினைத்து வருந்திய சமுதாய பெரியவர்கள் இந்தக் கொடுமையைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தனர்.

இதையடுத்தே, நம் சமுதாயத்தில் திருமணம் செய்யும் ஆண், பெண்ணிடம், தங்களுக்கு எச்ஐவி இல்லை என திருமணத்துக்கு முன் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு சான்றிதழ் தந்தால் மட்டுமே திருமணம் செய்து வைப் பதும் திருமணத்தில் சமுதாய பெரியவர்கள் கலந்துகொள்வதும் என முடிவெடுத்தோம்.

ஆண்களிடம் மட்டும் சான்றிதழ் பெற்றால் போதும் என முதலில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் வாழ்க்கைப் பிரச்சினையில் பாகு பாடு பார்க்கக்கூடாது என்பதால் ஆண், பெண் இருவரிடமும் சான்றிதழ் பெற முடிவு செய்யப் பட்டது.

மணமக்கள் எச்ஐவி பரிசோதனைக்காக மருத்துவத் துறை அதிகாரியிடம் பேசி, இந்த சோதனைக்காக மணமக்கள் பெயர்களைக் குறிப்பிட்டு சங்கத் தலைவர் கையெழுத்திட்டு விண் ணப்பம் அளித்தால், தாமதம் செய்யாமல் இலவசமாக சோத னையை முடித்து தர சம்மதம் பெறப்பட்டுள்ளது என்றார்.

 

மாநிலம் முழுவதும் வேண்டும்

ஆண்மைக்குறைவு விவகாரம் விஸ்வரூபம் பெற காரணமான வழக்கின் வழக்கறிஞர் பி.முத்துவிஜயபாண்டியன் கூறும்போது, ‘எச்ஐவி’யை தடுப்பதில் தமிழகத்துக்கு முன்மாதிரியாக கருங்கட்டான்குளம் உள்ளது. இந்த வழக்கத்தால் எச்ஐவியால் இளம்தலைமுறையினர் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதனை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும். இப்பிரச்சினையில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.

 

 

thehindu.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு விடயத்தைத் தொட்டிருக்கின்றீர்கள், வாத்தியார்!

 

ஆனால் ஒரு விடயம்...?

 

படிக்காமலே 'பட்டம்' கொடுக்கின்றன சில இந்தியக்கல்லூரிகள் என்று சொல்லுகின்றார்கள்!

 

அதே போல 'சோதனை' செய்யாமலே ' இந்திய மருத்துவர்கள் சான்றிதழ்' கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு விடயத்தைத் தொட்டிருக்கின்றீர்கள், வாத்தியார்!

 

ஆனால் ஒரு விடயம்...?

 

படிக்காமலே 'பட்டம்' கொடுக்கின்றன சில இந்தியக்கல்லூரிகள் என்று சொல்லுகின்றார்கள்!

 

அதே போல 'சோதனை' செய்யாமலே ' இந்திய மருத்துவர்கள் சான்றிதழ்' கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? :o

 

போலி சான்றிதழ் கேட்டால் அவருக்கு நோயிருக்க வாய்ப்பு இருக்கு என்பதை படித்த வைத்தியர் அறிவார்.

 

அப்படி தெரிந்தும் கொடுத்தால், விளைவு விரைவில் உலகத்திற்கு தெரிய வரும், அத்துடன் அப்போலி வைத்தியரின் வாழ்கையும் முடியும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.