Jump to content

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் இணையங்கள்! - பத்து இலட்சம் பேர் பார்க்கும் செய்திகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேனா வைத்திருந்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் ஆனதுபோல், கணினி வைத்திருப்பவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்களாக மாறிவிடும் காலம் இது. எது உண்மை, எது பொய் என்ற எந்தவித அக்கறையும் ஆய்வும், பொறுப்புணர்வுமின்றி ஒரு செய்தியை தாங்கள் விரும்பியது போல் வெளியிடும் தன்னிகரற்ற உரிமையை இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் கொண்டிருக்கின்றார்கள்.

319292-mails-620x0-1.jpg.gif

செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு பூதாகரமாகி ‘காகம் காகமாக வாந்தியெடுக்கும்’ நிலைமை இன்று தமிழர்களிடையே தலைவிரித்தாடுகின்றது. இதற்குள் இருந்து மீண்டெழ முடியாதபடி இன்றைய நவீன உலகத்தில் தகவற் பரிமாற்றம் என்பது வியாபித்திருக்கும்போதும், எது சரி - எது தவறு என்பதை மக்கள்தான் தண்ணீரில் இருந்து பாலைப் பிரித்தருந்தும் அன்னம் போல் சரியானவற்றை கண்டறிந்து உள்வாங்கவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று இன்றைக்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே சொல்லி வைத்துவிட்டார்கள். இன்று இணையங்களில் வெளியாகும் படங்கள் பல உருமாற்றம் செய்யப்பட்டவை. அல்லது அந்தச் செய்திக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லாதவை என்பதைக்கூடக் குறிப்பிடாமல் வெளியிடுகின்றார்கள். கணினி வரைகலை மூலம் ஒரு படத்தை தேவைக்கு ஏற்றதுபோல் மாற்றியமைக்க முடியும். தவறான செய்திகளைக் கொடுக்கும் ஊடகங்கள், அந்தச் செய்தியை நம்பவைப்பதற்காகத் தவறான படங்களையும் இவ்வாறு உருமாற்றம் செய்து இணைக்கின்றார்கள்.

கண்ணால் காணும் அந்தப் படங்கள் அந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவைதான் என்பதை நம்பவைப்பதுபோல் அவை உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், அதனை ஆராய்ந்து பார்க்கும்போதே அதன் உண்மைத் தன்மை புலப்படும்.

காதால் கேட்கும் ஒலிப்பதிவுகளும் அவர்கள் உரையாடியதுபோன்றே இருக்கும். ஆனால், இன்றைய தொழில்நுட்பத்தில் குரலைத் தேவைக்கு ஏற்றபடி மாற்றியமைக்க முடியும். அவ்வாறு முடியாவிட்டாலும், மனிதர்களே இன்னொருவர் போன்று தமது குரலை மாற்றிப்பேசும் வல்லமையைக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் செய்திகளின் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கின்றது.

அத்துடன், புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் பல இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். தாயகத்தில் வாழும் தமிழர்களை விட புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகளவாக கணினிகளையும், செல்பேசிகளையும் இணைய ஊடகங்களைப் பார்வையிடுவதற்காகப் பயன்படுத்துகின்றார்கள். எனவே, ஒரு செய்தியை இலட்சக் கணக்கானவர்கள் பார்க்கின்றார்கள் என்று நம்பவைப்பது இலகுதான். தங்கள் இணையங்களை இத்தனை பேர் பார்த்தார்கள் என்பதை நம்பவைப்பதற்காக தமிழ் இணைய ஊடகங்கள் இன்று பல்வேறு ஏமாற்று வேலைகளைச் செய்கின்றார்கள்.

இதன் ஊடாகத் தங்கள் இணையத்தளத்தை பிரபல்யப்படுத்துவதுடன், விளம்பரங்களை அதிகளவில் பெற்றுக்கொள்ளவும் முயல்கின்றார்கள். இவ்வாறு தமிழர்களை ஏமாற்றும் தமிழ் ஊடகங்கள் இன்று அதிகளவில் இருக்கின்றன. ஒவ்வொரு செய்தியிலும் அல்லது அறிவித்தல்களிலும் இதனை இத்தனை பேர் பார்த்தார்கள் என்ற எண்ணிக்கையை காண்பிக்கும் இலக்க ஓட்டத்தை அவர்கள் வைத்திருக்கின்றார்கள். இதில் எத்தனை பெரிய ஏமாற்று வேலைகள் இருக்கின்றன என்பதை கணினித் தொழில் நுட்பங்களைப் புரிந்துகொண்டவர்களே அறிந்துகொள்ளமுடியும்.

kuthirvu%20web%201.jpg

சாதாரணமாக ‘யூரியூப் Youtube’ போன்ற சர்வதேச இணையங்களில் ஒரு கணினியில் இருந்து ஒருவர் எத்தனை தடவைகள் உள்நுழைந்து ஒரே காணொளியைப் பார்வையிட்டாலும் அது ஒரு தடவைதான் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆனால், தமிழ் ஊடகங்களில் இந்த எண்ணிக்கை அவ்வாறில்லை. ஒருவர் செய்தியைப் பார்த்தேல பத்துப் பேர், நூறு பேர் பார்த்ததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தமுடியும். ஆரம்பத்திலேயே அந்தச் செய்தியோ அறிவித்தலோ பதிவேற்றப்படும்போது இத்தனை ஆயிரம் பேர் பார்த்தார்கள் என்ற எண்ணிக்கையில்தான் தொடங்கப்படும். பின்னர் தேவைக்கேற்றதுபோல் யார் வேண்டுமானாலும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

f5%20key.gifஉதாரணத்திற்கு இவ்வாறு எண்ணிக்கையை வைக்கும் செய்திக்குள்ளோ அல்லது ஒரு அறிவித்தலுக்குள்ளோ நுழைந்து உங்கள் விசைப் பலகையில் (Keyboard) உள்ள F5 என்ற இலக்கத்தை அழுத்துங்கள். அந்த எண்ணிக்கை எவ்வளவு வேகமாக ஒடுகின்றது என்பது உங்களுக்கே புரியும். இந்த F5 கட்டையை தொடர்ந்து சில விநாடிகள் அழுத்திக்கொண்டே இருந்து பாருங்கள். ஒரு நிமிடத்தில் இலட்சம் பேர் பார்த்ததாக அது காண்பிக்கும். இப்படித்தான் சில தமிழ் ஊடகங்கள் தங்கள் செய்தியை பத்து இலட்சம் பேர் பார்த்ததாக, தாங்கள் பிரசுரித்த அறிவித்தலை 50 ஆயிரம் பேர் பார்த்ததாக ஏமாற்றுகின்றார்கள்.

ஆனால், அந்த இணையம் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை, அதன் தரம் மற்ற ஊடகங்களுடன் ஒப்பிடும்போது எவ்வாறு இருக்கின்றது என்ற உண்மையான தகவலை அறிய நீங்கள் Alexa.com என்ற இணையத்தளத்திற்குச் சென்று, நீங்கள் அறிய விரும்பும் இணையத்தின் பெயரைக் கொடுத்தால்போதும் அது உண்மையைச் சொல்லிவிடும்.

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் இணையங்கள் குறித்து இன்னும் பார்ப்போம்...

- நிலவன்

நன்றி: ஈழமுரசு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.