Jump to content

ஜாம்பவான் நாடுகளிலெல்லாம் அதிர வைக்கும் இலங்கைக் குட்டித்தீவு!


Recommended Posts

srilanka-granade-cartoon.jpghttp://tamilworldtoday.com/archives/4701

 

இலங்கைத் தீவின் பரப்பளவு வேண்டுமானால் ஒப்பீட்டு ரீதியில் ஒரு குட்டித் தீவாக இருக்கக்கூடும். ஆனால் அது உலக அரங்கில் எழுப்பும் அதிர்வலைகள் மட்டும் ஒப்பீட்டு ரீதியில் பெரிதானவை. கடுகு சிறிது காரம் பெரிது என்பார்களே.. அதுபோல வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கிய பெரிய ஜாம்பவான் நாடுகளிலெல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்த இலங்கைத்தீவின் நிலவரங்களால் முடிகின்றது.

உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் ஐயம் இருந்தால், இலங்கையர்களின் சட்டவிரோத படகுப் பயணங்களை முன்னிறுத்தி இன்றும் கங்காரு தேசத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மேற்கொண்ட 'இரும்புப்பிடி' கருத்தியல் தாக்குதல்களை சற்றுக் கவனியுங்கள்.

கிறிஸ்மஸ் தீவு என்ற தமது இலங்கையும் தாண்டி முன்னேறி, அவுஸ்திரேலியாவின் மேற்குக்கரை 'பேர்த்' பிராந்திய பெருநிலப்பரப்புக்குள் 66 இலங்கையர் நுழைந்ததன் எதிர்வினை மீண்டும் ஒருமுறை அவுஸ்திலேியாவில் கொதிநிலையைக் கிறப்புகின்றது.

அதுவும் 5 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைத் தீவின் படகுப் பயணிகள் இவ்வாறு அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்பை அடைந்தது ஒருபுறமிருக்க, துறைமுகப்பகுதி கண்காணிப்பையும் மீறி அவர்களின் படகு நுழைந்தமை, எதிர்க்கட்சித் தலைவர் ரொனி அபோட் (Tony Abbott) உள்ளிட்டவர்களுக்கு 'சூடாக' மெல்லக்கிடைத்த அவலாகியும் விட்டது.

படகுப் பயணங்களைத் தடுக்கும் விடயத்தில் யூலியா கில்லார்ட் அரசாங்கம் சரணடைந்து விட்டதாக அபோட் சீறும் நிலையில், அரச தரப்பும் அதே சூட்டுடன் அபோட் மீது பாய்ந்திருந்தது. 66 இலங்கையர்கள் வேண்டாத விருந்தாளிகளாக தமது நாட்டுக்குள் நுழைந்துவிட்டதான 'சூட்டுடன்' அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளின் படகுப் பயண அரசியல் தொடர்கிறது. ஆனால் கங்காரு தேசத்தின் இவ்வாறான படகுப் பயண அரசியலின் மூலோபாய விசை, கன்பராவில் இல்லை. அதற்கு மாறாக சில ஆயிரம் கிலோமீற்றர்களைத் தாண்டியுள்ள கொழும்பில் உள்ளதுதான் யதார்த்தம்!

பூகோளக் கடற்பரப்புகளில் இருந்து அடிக்கடி இவ்வாறான அவலமான செய்திகளை வழங்க வேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் முற்பிறப்புப் பாக்கியமும் அல்ல. மாறாக போர் முடிவுக்கு வந்துவிட்டதாக பகிரங்க அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இவ்வாறாக வெளிவரும் செய்திகள் இலங்கைத்தீவின் கந்தறுந்த நல்லிணக்கக் கதையையும் கூடவே கூறுகின்றன.

இலங்கைத்தீவை விட்டு மிகத் துரிதமாக புலம்பெயர முயற்சிப்பவர்களுக்கு, பொருளாதாரக் காரண ஆதாயப் பட்டங்கள் சூட்டப்பட்டாலும், அதற்கான நியாயங்கள் ஓரளவுக்கே ஏற்கக்கூடியதென்பதும், முக்கியமான வகிபாகத்தை இலங்கைத்தீவின் அச்சுறுத்தல் நிலையே ஏற்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இலங்கைத்தீவில் தற்போதுள்ள மகிந்த அதிகார மையத்தின் அச்சுறுத்தல் நிலையைக் களைவதற்கு மந்தமாக செயற்படும் அல்லது இதுவரை செயற்படாது விட்ட அனைத்துலக அரங்கமும் இதற்குப் பொறுப்பு என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது.

நேற்று முன்தினம்கூட தமது நாடாளுமன்றத்தில் வெளிவிவகாரப் பீரிஸார் விட்ட பேட்டிகள், கொழும்பு அதிகார மையத்தின் எதிர்மறைப்போக்கான குழப்பங்களை அம்பலப்படுத்துகிறது. அமெரிக்காவினால் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே தாம் ஏற்றுக்கொள்ளதாதபோது, அவ்வாறான இலங்கை குறித்த தேவையற்ற அக்கறை எவ்வாறு ஏற்புடையதாக மாறும் என மிஷேல் ஜே.சிசனின் பாட்டுக்கு, இரட்டைத் தாழ்ப்பாள் எனவும் நிறுவ பீரிஸ் முனைகிறார்.

இதனைவிட, நவநீதம்பிள்ளையின் அனைத்துலக விசாரணை என்ற பொறிமுறையே, இலங்கைத்தீவை மையப்படுத்திய கருத்து மோதலுக்கும் களம் அமைத்துவிட்டதாக 'பீரிஸின்' மொட்டைத்தலை முடிச்சு கருத்தியல் முன்வைக்கப்படுகிறது. அதாவது ஶ்ரீலங்கா துடுப்பாட்டக்காரர்களைப் புறக்கணிக்கும் சென்னையும், தமிழக திரைப்படங்களைப் புறக்கணிக்க முனையும் கொழும்பும் நவிபிள்ளையின் தூண்டுதல் எதிர்விளைவுகள் என்பதும் மெத்தப்படித்த பேராசிரியர் மஹத்தயாவின் அபிப்பிராயம்!

198.jpg1978 இல் தமிழகத்தின் கலைக்குரிசில் சிவாஜி கணேசன், பைலட் பிரேமநாத்தாக மாறி, இலங்கையின் இளங்குயிலாக வர்ணித்து ஆடிப்பாடிய அன்றைய மாலினி பொன்சேக்கா, இன்று ஒரு நாடாளுமன்ற + நடிகை பாட்டியாக மாறிவிட்டாலும், தமிழகத்துக்கு எதிரான அவரது எதிர்ப்புணர்வில் மட்டும் சிங்கள வீரம் கோலோச்சுகிறது.

நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட என வாயசைத்த அழகி மாலினி பொன்சேகாவும், தமிழக கலைஞர்களுக்கு எதிரான போராட்டத்துக்காக சிங்களக் கலைஞர்களை சுதந்திர சதுக்கத்தில் அணிதிரட்டியதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத் திரைப்படங்குப் பதிலாக மலையாளத் திரைப்படங்களை கேரளாவில் இருந்து பெறுமாறு சிங்கள பௌத்த கடும்போக்கு ராவணாக்கள் கெக்கரிக்கும் நிலையில், மறுமுனையில் பாட்டி மாலினியும் தனது தரப்பில் சிங்களக் கலைத்தொட்டிலை ஆட்டுகிறார்.

பாக்குநீரிணையின் இக்கரையும் தமது ஏட்டிக்குப் போட்டியான நகர்வுகளை உசுப்பேற்றிவிடும் பின்னணியில் 'இந்தியா கூரை போட்டுக் கொடுத்த வீடுகளின்' தராதரம் குறித்து நோட்டமிடும் இந்தியத் தூதுக்குழுவின் யாழ் பயணமும் தொடர்ந்திருந்தது. 'பெரியண்ணன்' வீட்டுத் தூதுக்குழு என்ற தோரணையோடு தமிழர்கள் அல்லாத முகங்கள் இவ்வாறு உலாவரும் நிலையில், தமது பங்காளியான பாகிஸ்தானிலிருந்தும் 19 உறுப்பினர்களைக் கொண்ட அதன் தேசிய பாதுகாப்பு உயர்மட்டக் குழு ஒன்றும் கொழும்பில் முகாமிட்டிருப்பது குறித்து அவர்கள் அறிந்தார்களோ, இல்லையோ என்பதும் தெரியவில்லை.

இலங்கையின் பாதுகாப்பு, அபிவிருத்தி, வெளிநாட்டுக் கொள்கை உட்பட்ட விடயங்களில் இஸ்லாமாபாத் உயர்மட்டக் குழு ஆய்வு செய்யும் நிலையில், சிங்களத்தின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு அனைத்துலக நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால சபையை வடகிழக்குத் தமிழ் மக்களுக்காக இந்தியா உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தியக் குழுவிடம் தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்படுகிறது.

ஜே.ஆர் - ராஜீவ் ஊடாக பெரியண்ணன் உருவாக்கிய 13 ஆவது திருத்தம் கிழடு தட்டிவிட்டதால், அது இன்று சவாரிக்கு உதாவது என்ற கரிசனையுடன் யாழில், தமிழ்த் தரப்பு இந்தப் புதியநுட்பமான கோரிக்கையை முன்வைப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்களத்தின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை நுழைந்துகொள்ளுமாறும், அதற்கு அழுத்தம் வழங்குமாறு மகிந்த அதிகார மையத்தின் யாழ் முகவர் குரல்கள் இந்தியக் குழுவிடம் ஓதிய போதும் சிங்களத்தின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட அனைத்துலக கண்காணிப்பு 'இடைக்கால சபை' என்ற புதிய நுட்பம் இங்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் பிரயோகிக்கப்படும் போதிலும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்ன என்பதும் ஆவலுக்குரியது!

தமிழர் தரப்பு முன்வைக்கும் கோரிக்கைகளுக்குரிய சடுதி எதிர்வினைகள் கொழும்பிடமிருந்து வருகின்றன. உதாரணமாக இரா.சம்பந்தனும், கொழும்பிற்கான அமெரிக்கத் தூதரும், இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் மீதான அண்மைக்கால அச்சுறுத்தல்கள் குறித்த கரிசனையை வெளிப்படுத்திய சமகாலத்தில், யாழ் பல்லைக்கழகத்திலுள்ள முஸ்லிம் மக்களின் தொழுகையறைக்கும் 'கழிவு எண்ணெய்க் கலாச்சாரம்' பிரயோகிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 180 முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமை குறித்த பிரக்ஞையின் தேவையை சீர்குலைக்க 'கழிவு' எண்ணெய் ஆயுதம் தூக்கப்படுகிறது.

இலங்கைத் தீவின் 'பொதுபல சேனா சண்டியர்கள்' தமது அனைத்துலக வலையமைப்பை நிறுவ அமெரிக்காவுக்குப் பரிந்துரைத்துள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவச் சமூகத்தின் மத்தியிலும் தமிழ் - முஸ்லிம் வேறுபாடுகளை உருவாக்கும் சூட்சுமங்கள் உருவாகின்றன.

இரு கோடுகள் தத்துவத்தைப் போல தமிழ் மக்களின் அரசியலுரிமைத் தேவை குறித்த உற்று நோக்கலைத் திசைத் திருப்ப இவ்வாறான தூண்டுதல்களை வீசக் காத்திருக்கும் தூண்டிற்காரனே, தனது தூண்டிலின் மிதவை மீது நோட்டமிட்டபடியே சாதாரணமாக அரசியல் செய்கின்றான். இவ்வாறான தூண்டிற்காரர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்ளும் துல்லியமான நோக்கத்தை இலங்கையர்களில் பெரும்பான்மையனோர் அறியாவிட்டாலும், தமிழர்களில் கணிசமானோர் அதனை அறிந்துதான் வைத்துள்ளனர்.

 

எழுத்து : பிரேம்

முன்னைய பதிவு
பல சேனாக்களின் நகர்வுகளும்! பிளான் Bயும்!

http://tamilworldtoday.com/home

Link to comment
Share on other sites

சிங்கள இனவாதத்தை தெரிந்தும் மேற்குலகம் பல உதவிகளை செய்து வந்தது. ஆனால், மகிந்த கூட்டம் ஆட்சியில் மேலும் நீடிக்க அதற்கு சிங்கள மக்களும் ஆதரவு தந்து வந்தால் அவர்களின் நிலை பரிதாப நிலைக்குள் தள்ளப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.