Jump to content

தாய்ப்பேயின் சவாலுக்கு மத்தியில் இலங்கை வெற்றி: 54 கோல்களை புகுத்தினார் தர்ஜினி சிவலிங்கம்


Recommended Posts

சிங்கப்பூர் ஓ சி பி சி தொகுதி உள்ளக அரங்கில் ஞாயிறன்ற ஆரம்பமான ஒன்பதாவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் குழு பியில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்ப்பேயின் சவாலை முறியடித்து 57 - 36 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

 

6766netball1.jpg

(Photo: Netball Singapore)

சைனீஸ் தாய்ப்பே அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளில் பெரும்பாலானவர்கள் கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள் என்பதால் அவர்கள் அதி வேகமாக விளையாடி இலங்கை அணிக்கு சவால் விடுத்த வண்ணம் இருந்தனர்.

எனினும் இவ் வருடப் போட்டிகளில் சம்பியனாகி அடுத்த வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறவேண்டும் என்ற கங்கணத்துடன் விளையாடிய இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

இப் போட்டியில் 54 கோல்களை தர்ஜினி சிவலிங்கம் போட்டிருந்தமை விசேட அம்சமாகும். மற்றைய மூன்று கோல்களை திசலா அல்கம போட்டார்.

இலங்கைக்கும் சைனீஸ் தாய்ப்பேக்கும் இடையிலான போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் இலங்கை அணி 15 - 9 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் சைனீஸ் தாய்ப்பே வீராங்கனைகள் மிகவும் திறமையாக விளையாடி இலங்கை வீராங்கனைகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியனர். எனினும் தங்களது அனுபவத்தைக் கொண்டு விளையாடிய இலங்கை  ஒருவாறு 15 - 13 என வெற்றிபெற்றது. இதனை அடுத்து இடைவேளையின் 30 - 22 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் 3ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் இரண்டு அணியினரும் திறமையை வெளிப்படுத்தத் தவறியதுடன் ஆட்டத்தின் வேகமும் குறைந்து காணப்பட்டது. இப் பகுதியில் 13 - 6 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்த இலங்கை கடைசி கால் மணி நேர ஆட்டத்தை 13 - 8 என்ற கோல்கள் அடிப்படையில் தனதாக்கி 57 - 36 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மியன்மாரை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

6766_netball2.jpg

- http://www.metronews.lk/article.php?category=sports&news=6766#sthash.8d1Y8iMz.dpuf

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகள்: மியன்மாரையும் வென்றது இலங்கை அணி
2014-09-10 20:38:45

 

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் மியன்மாரை எதிர்த்தாடிய இலங்கை அணி 109 - 11 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.


நான்கு கால் மணி ஆட்ட நேரப் பகுதிகளிலும் திறமையாக விளையாடிய இலங்கை அணி முறையே 18 - 2, 27 - 4, 34 - 3, 30 - 2 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்து இலகுவாக வெற்றிபெற்றது.

இப் போட்டியின் முதல் இரண்டு கால் மணி நேரப் பகுதிகளில் மாத்திரம் விளையாடிய தர்ஜினி சிவலிங்கம் 43 முயற்சிகளில் 41 கோல்களைப் போட்டார்.

 


கடைசி இரண்டு கால் மணி நேரப் பகுதிகளில் தர்ஜினிக்குப் பதிலாக விளையாடிய திசலா அல்கம 58 முயற்சிகளில் 55 கோல்களைப் போட்டார். அணித் தலைவி சஷிக்கா சமரசிங்க 11 முயற்சிகளில் 8 கோல்களைப் போட்டார்.

 

நேற்றைய தினம் நடைபெற்ற ஏ குழுவுக்கான போட்டி ஒன்றில் வியட்நாமை சந்தித்த ஹொங் கொங் 80 - 17 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் புருணையை 56 - 33 என்ற கோல்கள் அடிப்படையில் சைனீஸ் தாய்ப்பே வெற்றிகொண்டது. (என்.வீ.ஏ.)
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6797#sthash.UTEpAJlC.dpuf

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி: புரூணையையும் இலகுவாக இலங்கை வென்றது
2014-09-11 20:38:04

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஆசிய வலைப்பந்தாட்டப் வல்லவர் போட்டியின் நான்காம் நாளான நேற்று நடைபெற்ற குழு பி இற்கான போட்டி ஒன்றில் புரூணையை 78 - 25 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை இலகுவாக வென்றது.

இப் போட்டியின் நான்கு கால் மணி ஆட்டப் பகுதிகளிலும் இலங்கை அணி முழுத் திறமையுடன் விளையாடியது.


போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் 20 - 6 என்ற கோல்கள் கணக்கிலும் இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் 20 - 3 என்ற கோல்கள் கணக்கிலும் முன்னிலையில் இருந்த இலங்கை அணி இடைவேளையை 40 -9 என்ற கோல்கள் அடிப்படையில் எதிர்கொண்டது.

இடைவேளையின் பின்னரும் திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி கடைசி இரண்டு கால் மணி நேர ஆட்டங்களில் 20 - 7 எனவும் 18 - 9 எனவும் முன்னிலை வகித்து வெற்றியீட்டியது.

இப்போட்டியில் இலங்கை வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் 51 கோல்களை புகுத்தியமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6810#sthash.MvLYHZPA.dpuf

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் அரை இறுதிக்கு இலங்கை தகுதி
2014-09-12 11:33:00

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் குழு பியில் இடம்பெற்ற இலங்கை தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.


மலேஷியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 4 கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. இலங்கை அணி 66 கோல்களையும் மலேஷிய அணி 62 கோல்களையும் போட்டன.
இப் போட்டியின் முதலாவது கால்மணி நேர ஆட்ட நிறைவில் மலேஷியா 17 க்கு 14 என முன்னிலை வகித்தது.

எனினும் இரண்டாவது கால்மணி நேர ஆட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை அணி 19 க்கு 14 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது. இதனை அடுத்து இடைவேளையின்போது 33 - 31 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை முன்னிலையில் இருந்தது.
இடைவேளை முடிந்து மூன்றாவது கால்மணி நேர ஆட்டம் நடைபெற்றபோது இரண்டு அணிகளும் மாறி மாறி கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தன.

இந்நிலையில் மூன்றாவது கால்மணி நேர ஆட்டத்தை 17 - 16 என்ற கோல்கள் கணக்கில் மலேஷியா தனதாக்கிக்கொண்டது. எனினும் இலங்கை தொடர்ந்தும் 49 - 48 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.


தீர்மானமிக்க கடைசி கால்மணி நேர ஆட்டப் பகுதியில் மிகத் திறமையான வியூகங்களுடனும் அதீத ஆற்றல்களுடனும் விளையாடிய இலங்கை அணி அப் பகுதியை 17- 14 என தனதாக்கி ஒட்டுமொத்த நிலையில் 66 க்கு 62 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இன்றைய ஓய்வு தினத்தைத் தொடர்ந்து நாளைய தினம் நடைபெறவுள்ள அரை இறுதி ஆட்டத்தில் ஹொங் கொங் அணியை இலங்கை எதிர்த்தாடவுள்ளது. மற்றைய அரை இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரும் மலேஷியாவும் விளையாடவுள்ளன.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=6823#sthash.ez8RI4sH.dpuf

Link to comment
Share on other sites

மலேசியாவை 66 க்கு 62 என வென்றது இலங்கை தரிஜினி சிவலிங்கம் 65 கோல்கள் புகுத்தினார்

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விறுவிறுப்பான ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் 66 க்கு 62 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் குழு பி யிலிருந்து தோல்வியுறாத அணியாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ள இலங்கை, அடுத்த வருடம் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியை பெறும் முயற்சியில் இறங்கவுள்ளது.

மலேசியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணியினர் வெளிப்படுத்திய ஆற்றல்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் மலெசியா 17 க்கு 14 என்ற கோலகள் கணக்கில் முன்னிலை வகித்தபோது இலங்கை அணி தோல்வி அடைந்து விடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் மிகவும் புத்தி சாதுரியத்துடனும் சிறந்த வியூகங்களுடனும் விளையாடிய இலங்கை 19 க்கு 14 என முன்னிலை வகித்தது.

இதன் பலனாக இடைவேளையின் போது 33 க்கு 31 கோல்கள் அடிப்படையில் 2 கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலையில் இருந்தது.
எவ்வாறாயினும் மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்தில் இலங்கை அணி எதிர்கொண்ட சிறு தடுமாற்றத்தை சாதகமாக்கிக் கொண்;ட மலேசியா 17 க்கு 16 என வெற்றிபெற்று கோல்கள் நிலையை 49 க்கு 48 என ஆக்கியது.

ஆனால் கடைசி கால் மணி நேர ஆட்டப் பகுதியின் ஆரம்பம் முதல் இறுதிவரை சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய இலங்கை 17 க்கு 14 என வெற்றிபெற்று ஒட்டு மொத்த கோல்கள் நிலையை 66 க்கு 62 என தங்களுக்கு சாதமாக்கிக்கொண்டது.

இலங்கையின் வெற்றியில் பிரதான பங்கு வகித்த தர்ஜினி சிவலிங்கம் 72 முயற்சிகளில் 65 கோல்களைப் போட்டார்.
அணித் தலைவி ஷஷிக்கா சிறிவர்தன, மரீஷா பெர்னாண்டோ, குமரின் டி சில்வா ஆகியோர் தங்களது அனுபவத்தின் மூலம் திறமையை வெளிப்படுத்தினர்.

மற்றைய போட்டி முடிவுகள்
சைனீஸ் தாய்ப்பே 60 - மியன்மார் 21
ஜப்பான் 54 - வியட்நாம் 23
சிங்கப்ப+ர் 73 - இந்தியா 20
இன்றைய தினம் ஓய்வு தினமாகும். நாளைய தினம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதி ஆட்டமும் இலங்கைக்கும் ஹொங் கொங்குக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன

 

 

http://www.virakesari.lk/articles/2014/09/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-66-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-62-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-65-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் இலங்கை அணி; உலக கிண்ண போட்டிகளுக்கும் தகுதி பெற்றது
2014-09-14 10:20:19

ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு  இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. சிங்கப்பூரில் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியின் அரை இறுதிப்போட்டியில் ஹொங்கொங் அணியை 57:42 கோல் விகிதத்தில் இலங்கை அணி வென்றது.

இன்று நடைபெறவுள்ள இறுதி;போட்டியில் சிங்கப்பூருடன் இலங்கை அணி மோதவுள்ளது.

இலங்கை, சிங்கப்பூர் ஆகிய இரு அணிகளும் அடுத்த வருட உலக கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுபோட்டிக்கும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6837#sthash.BFaAc1Ru.dpuf

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகியது சிங்கப்பூர்; இலங்கை அணிக்கு இரண்டாமிடம்
2014-09-15 10:43:15

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆசிய வலைப்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரை எதிர்த்தாடிய இலங்கை தோல்வி அடைந்து இரண்டாம் மீண்டும் இரண்டாம் இடத்தைப் பெற்றது.


கொழும்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கோல் வித்தியாசத்தில் சிங்கப்பூரிடம் ஆசிய சம்பியன் பட்டத்தை தாரை வார்த்திருந்த இலங்கை இம்முறை 18 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிங்கப்பூரின் கல்லாங் உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் 59 க்கு 41 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது.


தோல்வி அடையாத இரண்டு அணிகள் மோதிய இந்த இறுதி ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் அபார திறமையுடன் விளையாடிய இலங்கை அணி 12 - 8 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.

ஆனால் அதன் பின்னர் வியூகங்களை மாற்றி அமைத்து விளையாடிய சிங்கப்பூர் 17 - 9 என்ற கோல்கள் அடிப்படையில் இரண்டாவது கால் மணி நேர ஆட்ட முடிவை தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. இப் பகுதியில் இலங்கையின் மத்திய களம் சரியாக இயங்கத் தவறியமையால் சிங்கப்பூர் இலகுவாக கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தது.

இதன் பலனாக இடைவேளையின்போது சிங்கப்பூர் 25 - 21 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்திலும் இலங்கை வீராங்கனைகள் பந்தை தக்கவைத்துக்கொள்ளத் தவறினர். இதன் காரணமாக மூன்றாவது ஆட்ட நேரப் பகுதியையும் 18 - 10 என சிங்கப்பூர் தனதாக்கிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கடைசி கால் மணி நேர ஆட்டத்திலும் 16 - 10 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்ற சிங்கப்பூர் 59 - 41 என வெற்றிபெற்று மூன்றாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனானது. (என்.வி.ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6854#sthash.5Gks1Ftk.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.