Jump to content

தாய்ப்பேயின் சவாலுக்கு மத்தியில் இலங்கை வெற்றி: 54 கோல்களை புகுத்தினார் தர்ஜினி சிவலிங்கம்


Recommended Posts

சிங்கப்பூர் ஓ சி பி சி தொகுதி உள்ளக அரங்கில் ஞாயிறன்ற ஆரம்பமான ஒன்பதாவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் குழு பியில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்ப்பேயின் சவாலை முறியடித்து 57 - 36 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

 

6766netball1.jpg

(Photo: Netball Singapore)

சைனீஸ் தாய்ப்பே அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளில் பெரும்பாலானவர்கள் கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள் என்பதால் அவர்கள் அதி வேகமாக விளையாடி இலங்கை அணிக்கு சவால் விடுத்த வண்ணம் இருந்தனர்.

எனினும் இவ் வருடப் போட்டிகளில் சம்பியனாகி அடுத்த வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறவேண்டும் என்ற கங்கணத்துடன் விளையாடிய இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

இப் போட்டியில் 54 கோல்களை தர்ஜினி சிவலிங்கம் போட்டிருந்தமை விசேட அம்சமாகும். மற்றைய மூன்று கோல்களை திசலா அல்கம போட்டார்.

இலங்கைக்கும் சைனீஸ் தாய்ப்பேக்கும் இடையிலான போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் இலங்கை அணி 15 - 9 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் சைனீஸ் தாய்ப்பே வீராங்கனைகள் மிகவும் திறமையாக விளையாடி இலங்கை வீராங்கனைகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியனர். எனினும் தங்களது அனுபவத்தைக் கொண்டு விளையாடிய இலங்கை  ஒருவாறு 15 - 13 என வெற்றிபெற்றது. இதனை அடுத்து இடைவேளையின் 30 - 22 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் 3ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் இரண்டு அணியினரும் திறமையை வெளிப்படுத்தத் தவறியதுடன் ஆட்டத்தின் வேகமும் குறைந்து காணப்பட்டது. இப் பகுதியில் 13 - 6 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்த இலங்கை கடைசி கால் மணி நேர ஆட்டத்தை 13 - 8 என்ற கோல்கள் அடிப்படையில் தனதாக்கி 57 - 36 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மியன்மாரை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

6766_netball2.jpg

- http://www.metronews.lk/article.php?category=sports&news=6766#sthash.8d1Y8iMz.dpuf

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகள்: மியன்மாரையும் வென்றது இலங்கை அணி
2014-09-10 20:38:45

 

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் மியன்மாரை எதிர்த்தாடிய இலங்கை அணி 109 - 11 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.


நான்கு கால் மணி ஆட்ட நேரப் பகுதிகளிலும் திறமையாக விளையாடிய இலங்கை அணி முறையே 18 - 2, 27 - 4, 34 - 3, 30 - 2 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்து இலகுவாக வெற்றிபெற்றது.

இப் போட்டியின் முதல் இரண்டு கால் மணி நேரப் பகுதிகளில் மாத்திரம் விளையாடிய தர்ஜினி சிவலிங்கம் 43 முயற்சிகளில் 41 கோல்களைப் போட்டார்.

 


கடைசி இரண்டு கால் மணி நேரப் பகுதிகளில் தர்ஜினிக்குப் பதிலாக விளையாடிய திசலா அல்கம 58 முயற்சிகளில் 55 கோல்களைப் போட்டார். அணித் தலைவி சஷிக்கா சமரசிங்க 11 முயற்சிகளில் 8 கோல்களைப் போட்டார்.

 

நேற்றைய தினம் நடைபெற்ற ஏ குழுவுக்கான போட்டி ஒன்றில் வியட்நாமை சந்தித்த ஹொங் கொங் 80 - 17 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் புருணையை 56 - 33 என்ற கோல்கள் அடிப்படையில் சைனீஸ் தாய்ப்பே வெற்றிகொண்டது. (என்.வீ.ஏ.)
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6797#sthash.UTEpAJlC.dpuf

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி: புரூணையையும் இலகுவாக இலங்கை வென்றது
2014-09-11 20:38:04

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஆசிய வலைப்பந்தாட்டப் வல்லவர் போட்டியின் நான்காம் நாளான நேற்று நடைபெற்ற குழு பி இற்கான போட்டி ஒன்றில் புரூணையை 78 - 25 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை இலகுவாக வென்றது.

இப் போட்டியின் நான்கு கால் மணி ஆட்டப் பகுதிகளிலும் இலங்கை அணி முழுத் திறமையுடன் விளையாடியது.


போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் 20 - 6 என்ற கோல்கள் கணக்கிலும் இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் 20 - 3 என்ற கோல்கள் கணக்கிலும் முன்னிலையில் இருந்த இலங்கை அணி இடைவேளையை 40 -9 என்ற கோல்கள் அடிப்படையில் எதிர்கொண்டது.

இடைவேளையின் பின்னரும் திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி கடைசி இரண்டு கால் மணி நேர ஆட்டங்களில் 20 - 7 எனவும் 18 - 9 எனவும் முன்னிலை வகித்து வெற்றியீட்டியது.

இப்போட்டியில் இலங்கை வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் 51 கோல்களை புகுத்தியமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6810#sthash.MvLYHZPA.dpuf

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் அரை இறுதிக்கு இலங்கை தகுதி
2014-09-12 11:33:00

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் குழு பியில் இடம்பெற்ற இலங்கை தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.


மலேஷியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 4 கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. இலங்கை அணி 66 கோல்களையும் மலேஷிய அணி 62 கோல்களையும் போட்டன.
இப் போட்டியின் முதலாவது கால்மணி நேர ஆட்ட நிறைவில் மலேஷியா 17 க்கு 14 என முன்னிலை வகித்தது.

எனினும் இரண்டாவது கால்மணி நேர ஆட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை அணி 19 க்கு 14 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது. இதனை அடுத்து இடைவேளையின்போது 33 - 31 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை முன்னிலையில் இருந்தது.
இடைவேளை முடிந்து மூன்றாவது கால்மணி நேர ஆட்டம் நடைபெற்றபோது இரண்டு அணிகளும் மாறி மாறி கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தன.

இந்நிலையில் மூன்றாவது கால்மணி நேர ஆட்டத்தை 17 - 16 என்ற கோல்கள் கணக்கில் மலேஷியா தனதாக்கிக்கொண்டது. எனினும் இலங்கை தொடர்ந்தும் 49 - 48 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.


தீர்மானமிக்க கடைசி கால்மணி நேர ஆட்டப் பகுதியில் மிகத் திறமையான வியூகங்களுடனும் அதீத ஆற்றல்களுடனும் விளையாடிய இலங்கை அணி அப் பகுதியை 17- 14 என தனதாக்கி ஒட்டுமொத்த நிலையில் 66 க்கு 62 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இன்றைய ஓய்வு தினத்தைத் தொடர்ந்து நாளைய தினம் நடைபெறவுள்ள அரை இறுதி ஆட்டத்தில் ஹொங் கொங் அணியை இலங்கை எதிர்த்தாடவுள்ளது. மற்றைய அரை இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரும் மலேஷியாவும் விளையாடவுள்ளன.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=6823#sthash.ez8RI4sH.dpuf

Link to comment
Share on other sites

மலேசியாவை 66 க்கு 62 என வென்றது இலங்கை தரிஜினி சிவலிங்கம் 65 கோல்கள் புகுத்தினார்

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விறுவிறுப்பான ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் 66 க்கு 62 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் குழு பி யிலிருந்து தோல்வியுறாத அணியாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ள இலங்கை, அடுத்த வருடம் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியை பெறும் முயற்சியில் இறங்கவுள்ளது.

மலேசியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணியினர் வெளிப்படுத்திய ஆற்றல்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் மலெசியா 17 க்கு 14 என்ற கோலகள் கணக்கில் முன்னிலை வகித்தபோது இலங்கை அணி தோல்வி அடைந்து விடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் மிகவும் புத்தி சாதுரியத்துடனும் சிறந்த வியூகங்களுடனும் விளையாடிய இலங்கை 19 க்கு 14 என முன்னிலை வகித்தது.

இதன் பலனாக இடைவேளையின் போது 33 க்கு 31 கோல்கள் அடிப்படையில் 2 கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலையில் இருந்தது.
எவ்வாறாயினும் மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்தில் இலங்கை அணி எதிர்கொண்ட சிறு தடுமாற்றத்தை சாதகமாக்கிக் கொண்;ட மலேசியா 17 க்கு 16 என வெற்றிபெற்று கோல்கள் நிலையை 49 க்கு 48 என ஆக்கியது.

ஆனால் கடைசி கால் மணி நேர ஆட்டப் பகுதியின் ஆரம்பம் முதல் இறுதிவரை சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய இலங்கை 17 க்கு 14 என வெற்றிபெற்று ஒட்டு மொத்த கோல்கள் நிலையை 66 க்கு 62 என தங்களுக்கு சாதமாக்கிக்கொண்டது.

இலங்கையின் வெற்றியில் பிரதான பங்கு வகித்த தர்ஜினி சிவலிங்கம் 72 முயற்சிகளில் 65 கோல்களைப் போட்டார்.
அணித் தலைவி ஷஷிக்கா சிறிவர்தன, மரீஷா பெர்னாண்டோ, குமரின் டி சில்வா ஆகியோர் தங்களது அனுபவத்தின் மூலம் திறமையை வெளிப்படுத்தினர்.

மற்றைய போட்டி முடிவுகள்
சைனீஸ் தாய்ப்பே 60 - மியன்மார் 21
ஜப்பான் 54 - வியட்நாம் 23
சிங்கப்ப+ர் 73 - இந்தியா 20
இன்றைய தினம் ஓய்வு தினமாகும். நாளைய தினம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதி ஆட்டமும் இலங்கைக்கும் ஹொங் கொங்குக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன

 

 

http://www.virakesari.lk/articles/2014/09/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-66-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-62-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-65-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் இலங்கை அணி; உலக கிண்ண போட்டிகளுக்கும் தகுதி பெற்றது
2014-09-14 10:20:19

ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு  இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. சிங்கப்பூரில் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியின் அரை இறுதிப்போட்டியில் ஹொங்கொங் அணியை 57:42 கோல் விகிதத்தில் இலங்கை அணி வென்றது.

இன்று நடைபெறவுள்ள இறுதி;போட்டியில் சிங்கப்பூருடன் இலங்கை அணி மோதவுள்ளது.

இலங்கை, சிங்கப்பூர் ஆகிய இரு அணிகளும் அடுத்த வருட உலக கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுபோட்டிக்கும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6837#sthash.BFaAc1Ru.dpuf

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகியது சிங்கப்பூர்; இலங்கை அணிக்கு இரண்டாமிடம்
2014-09-15 10:43:15

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆசிய வலைப்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரை எதிர்த்தாடிய இலங்கை தோல்வி அடைந்து இரண்டாம் மீண்டும் இரண்டாம் இடத்தைப் பெற்றது.


கொழும்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கோல் வித்தியாசத்தில் சிங்கப்பூரிடம் ஆசிய சம்பியன் பட்டத்தை தாரை வார்த்திருந்த இலங்கை இம்முறை 18 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிங்கப்பூரின் கல்லாங் உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் 59 க்கு 41 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது.


தோல்வி அடையாத இரண்டு அணிகள் மோதிய இந்த இறுதி ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் அபார திறமையுடன் விளையாடிய இலங்கை அணி 12 - 8 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.

ஆனால் அதன் பின்னர் வியூகங்களை மாற்றி அமைத்து விளையாடிய சிங்கப்பூர் 17 - 9 என்ற கோல்கள் அடிப்படையில் இரண்டாவது கால் மணி நேர ஆட்ட முடிவை தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. இப் பகுதியில் இலங்கையின் மத்திய களம் சரியாக இயங்கத் தவறியமையால் சிங்கப்பூர் இலகுவாக கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தது.

இதன் பலனாக இடைவேளையின்போது சிங்கப்பூர் 25 - 21 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்திலும் இலங்கை வீராங்கனைகள் பந்தை தக்கவைத்துக்கொள்ளத் தவறினர். இதன் காரணமாக மூன்றாவது ஆட்ட நேரப் பகுதியையும் 18 - 10 என சிங்கப்பூர் தனதாக்கிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கடைசி கால் மணி நேர ஆட்டத்திலும் 16 - 10 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்ற சிங்கப்பூர் 59 - 41 என வெற்றிபெற்று மூன்றாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனானது. (என்.வி.ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6854#sthash.5Gks1Ftk.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.