Jump to content

கரிக்காய் பொரித்தேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாவற்காய் என்று தான் பேச்சு வழக்கில் சொல்லுவதில்லை, ஆனால் பாவக்காய் என்று சொல்லுகிறோம் தானே? :unsure:

என்ன சந்தேகமெல்லாம் பிறக்க ஆரம்பித்துவிட்டதா? பேச்சுவழக்கில் சரியான பதம் தென்படாது :lol:

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

என்ன சந்தேகமெல்லாம் பிறக்க ஆரம்பித்துவிட்டதா? பேச்சுவழக்கில் சரியான பதம் தென்படாது :lol:

1. அத்திக்காய்

3. இத்திக்காய்

4. கன்னிக்காய்

5. ஆசைக்காய்

6. பாவைக்காய்

12. இரவுக்காய்

13. உறவுக்காய்

14. ஏழைக்காய்

நாம் பேச்சுவழக்கில் மேற்கண்டவாறு சொல்லுவதில்லை.

மாறாக,

1. அத்திக்காக

3. இத்திக்காக

4. கன்னிக்காக

5. ஆசைக்காக

6. பாவைக்காக

12. இரவுக்காக

13. உறவுக்காக

14. ஏழைக்காக

என்றுதான் சொல்லுகின்றோம்.

சங்கத் தமிழ் இலக்கியங்களிலே தான் "ஆய்" விகுதியைக் காண்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, பாட்டில் வந்தவற்றை காவாலி எடுத்து வந்திருக்கிறார்..

இந்தப்பாடலில் சொற்கள் இறுக்கமாய் இல்லாமல் மிகத்தளர்வாய் மருவி வெளிப்பட்டிருக்கிறது. அப்படி மருவிய நிலையில் வைத்துப்பார்த்தால்தான் இப்பாடலுக்குச் சிறப்பு

கொடுந்தமிழையும் கொஞ்சுதமிழையும் ஓரிடத்தில் வைத்தால் நீங்கள் கொடுந்தமிழையா அல்லது கொஞ்சு தமிழையா இரசிப்பீர்கள்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

.

ஏதோ சமயல் ஐடமாக்கும் என்று எட்டிப் பார்க்கேல்ல.

நல்லாத்தான் இருக்கு சகாறா.

தமிழ் பாடல்களில் எங்களுக்கு ஞாபகம் இருப்பது இரண்டே இரண்டு வரி தான்.

(10ம் வகுப்பு)

"வாப்பா பார்த்தாரெண்டால்

வாளெடுத்து வீசிடுவார்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவற்காய் என்று தான் பேச்சு வழக்கில் சொல்லுவதில்லை, ஆனால் பாவக்காய் என்று சொல்லுகிறோம் தானே? :unsure:

குட்டி இந்தப் "பாவக்காய்" பதில் எழுதிவிட்டு நேற்றைய விடயம் காற்றோடு போயாச்சு என்று விட்டு விட்டேன்... இன்று வேலையில் நிற்கும்போது ஞாபகத்திற்கு வந்து பாவக்காய், பாவைக்காய் அர்த்தத்தை ஒழுங்காகப் புரிந்து கொண்டாயா என்று மனச்சாட்சி சண்டை பிடிக்கிறது அதுதான் சரி இந்த மருவிய பாவக்காய் அப்படி என்னதான் கருத்தை ஆட்டிப்படைக்கிறது என்று பார்த்தால்

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கேகாய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

கன்னிமீதான ஆசையால் காதல் கொண்ட தலைவனை இந்தக் பாவைக்காக அங்கே போய் காய் என்று சொல்வதாகவும் அமையும்

காதல் மோகத்தில் ஆசையாக தலைவன் கன்னியான என்னைக் காய்கின்ற அவனுடைய "பா"வைக்காய் என்றும் பொருள் படும்

அப்பாடி மூளைக்குள் விறாண்டிக் கொண்டிருந்த கருத்தை பதிந்தாயிற்று....

இப்படி இந்தப்பாடலை பல வகையாகவும் நோண்டலாம் உங்களுடைய மூளையில் பிரகாசமான பொருள் தென்பட்டால் இங்கு வந்து இணையுங்கள். :wub:

Link to comment
Share on other sites

குட்டி இந்தப் "பாவக்காய்" பதில் எழுதிவிட்டு நேற்றைய விடயம் காற்றோடு போயாச்சு என்று விட்டு விட்டேன்... இன்று வேலையில் நிற்கும்போது ஞாபகத்திற்கு வந்து பாவக்காய், பாவைக்காய் அர்த்தத்தை ஒழுங்காகப் புரிந்து கொண்டாயா என்று மனச்சாட்சி சண்டை பிடிக்கிறது அதுதான் சரி இந்த மருவிய பாவக்காய் அப்படி என்னதான் கருத்தை ஆட்டிப்படைக்கிறது என்று பார்த்தால்

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கேகாய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

கன்னிமீதான ஆசையால் காதல் கொண்ட தலைவனை இந்தக் பாவைக்காக அங்கே போய் காய் என்று சொல்வதாகவும் அமையும்

காதல் மோகத்தில் ஆசையாக தலைவன் கன்னியான என்னைக் காய்கின்ற அவனுடைய "பா"வைக்காய் என்றும் பொருள் படும்

அப்பாடி மூளைக்குள் விறாண்டிக் கொண்டிருந்த கருத்தை பதிந்தாயிற்று....

இப்படி இந்தப்பாடலை பல வகையாகவும் நோண்டலாம் உங்களுடைய மூளையில் பிரகாசமான பொருள் தென்பட்டால் இங்கு வந்து இணையுங்கள். :wub:

பாவை என்றால் பெண்

காய்- காய்வது (இங்கே நிலவு காய்வதைக் குறிப்பிடுகிறது)

அந்தப் பெண்ணுக்காக அங்கே போய் காய் என்று தானே பொருள்?

இருந்தாலும் நேரத்தை எடுத்து மூளையை விறாண்டிக் கொண்டிருந்த கருத்தை எழுதியமைக்கு மிக்க நன்றி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவை என்றால் பெண்தான் மறுக்கவில்லை

பாவைக்காய் என்றால், "பாட்டைக் காய்" என்றும் அர்த்தப்படும் இல்லையா "பா"வைக்காய்

பாவைக்காய் - பெண்ணுக்காக

"பா" வைக்காய் - பாடலைக்காய்

கொஞ்சம் மருவலாக

பாவக்காய் - மிகவும் கசப்பான ஒரு கொடிக்காய்.

"பா"வைக்காய் - பாடலை வைக்கவேண்டாம் என்றும் எண்ணலாம் தானே.. தமிழில் நன்றாக விளையாடலாம் இந்தப்பாடலில் மேலிருக்கும் இரு பொருட்களும் ஒரேசமயத்தில் வெவ்வேறான கருத்துக்களை இயம்பி நிற்கின்றன. கறள் தட்டின மூளைக்கு எண்ணெயைவிட்டு இயக்குவதுபோல குட்டியின் கருத்து அமைந்திருக்கிறது நன்றி குட்டி நானும் பொருள்தேடி தத்தி தத்திநடக்கிறேனாம். :lol: :lol: :wub:

Link to comment
Share on other sites

இந்த திரி தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தேன் இதுவும் குண்டனின் இன்னொரு சமையல் குறிப்பு என்று. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஏதோ சமயல் ஐடமாக்கும் என்று எட்டிப் பார்க்கேல்ல.

நல்லாத்தான் இருக்கு சகாறா.

தமிழ் பாடல்களில் எங்களுக்கு ஞாபகம் இருப்பது இரண்டே இரண்டு வரி தான்.

(10ம் வகுப்பு)

"வாப்பா பார்த்தாரெண்டால்

வாளெடுத்து வீசிடுவார்"

அடடா இந்த இரண்டு வரியும் ஞாபகத்தில் இருக்கிறதென்றால் நிச்சயமாக இதற்கு ஏதாவது பின்னணி இருக்கவேண்டுமே ஈசன் அதை இந்தப் பொரியல் சட்டியில் போட்டால் நாங்களும் அதன் மணம், குணத்தை அறியலாம்தானே :wub:

இந்த திரி தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தேன் இதுவும் குண்டனின் இன்னொரு சமையல் குறிப்பு என்று. :icon_mrgreen:

குண்டன் இந்தப்பக்கம் வந்தால் எங்களை விளக்குமாறு :icon_mrgreen: கேட்பார்... வேண்டாம் குண்டுவைக் கிண்டிவிடவேண்டாம். :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது சகாரா காளமேகத்தின் சிலேடைப் பாடல்களைப் படிக்கும் போது யாம் பெறும் இன்பம் மற்றவரும் பெறட்டும் என்றே அவை எல்லாவற்றையும் இங்கே கொட்டினேன்.சரி இனி ஒவ்வொன்றாக பொருள் எழுதுவோமே!!!!!!!!!!!!!!

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்

திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்

இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!

பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..

எம் பெருமாளை திருவிழா காலத்தில் பருந்து வாகனத்தில் ஊர்வலம் கொண்டு செல்வதை கண்ட காளமேகம், நகைசுவையாக பருந்து காவிக்கொண்டு போகின்றது என்று பாடியுள்ளார்.

நல்ல முயற்ச்சி புலவர், விடாமல் தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உடையார்.

கரிக்காய்-கரி என்றால் யானை என்றும் பொருள்படும்.யானை வாழைக்காய் என்று ஒரு வாழையினம் உண்டு.ஆகவே கரிக்காய் பொரித்தேன் என்பதை வாழைக்காய் பொரித்தேன் என்றும் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஏலக்காயின் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய். நாங்கள் வாழ்வதற்காக காய்வாய் ஆக.அது மட்டுமல்ல.வாழைக்காய் சற்று மருவி வாழைக் காயாக ஒலிக்கிறது.என்னே! தமிழின் வளம்!!!!!!!!!!!!

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கருத்துக்களத்தையும், அதன் உறுப்பினர்களையும் ஒரு வழி பண்ணுவது என்று முடிவெடுத்தாயிற்று. பிறகேன் தயங்குவான்??

நான் பாடல்களை இங்கு கொண்டு வந்து ஒட்டுவேன் பொருளெல்லாம் என்னிடம் எதிர்பார்க்கக்கூடாது... :icon_mrgreen:

நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டால் சத்தியமாக நான் அழுதிடுவேன்.. ஏனென்றால் எனக்கும் கன பாடலுக்குப் பொருள் தெரியாது. எல்லாம் சுயம்புலிங்கங்கள் மாதிரி தான்தோன்றித் தனமாக இருக்கும் ஆதாரத்தைக் கொண்டுவா என்றெல்லாம் அச்சுறுத்தல் செய்யக் கூடாது.

இனி இந்தப் பொரியல் சட்டியில் என்ன பொரியல் என்று யோசிக்கிறீர்கள் தெரிகிறது. அநேகமாக இப்ப பதியப் போகும் பதிவு எல்லோருக்கும் மிகப் பிடித்தமானதாக இருப்பதோடு மட்டுமல்ல எல்லோரும் தத்தம் அனுபவங்களையும் சொல்ல வழிவகுக்கும் பகுதியாகும். யார் யாரிடமெல்லாம் நீங்கள் இப்படியான உதவிகளை எதிர்பார்த்து.... :D:lol: அவையடக்கமாக நின்றீர்களோ யாமறியோம் பராபரமே.

இன்று இங்கு "தூது" பற்றிய பாடல்களைப் பார்ப்போம்.

இலக்கியத்தில் இல்லாத " தூதா?"

உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் "தூது " பாடல்களை தலைக்கு ஒவ்வொன்றாக இணையுங்கள் திரையிசையில் அழகான தூதுப்பாடல்கள் இருக்கின்றன. முக்கிய குறிப்பு ஆளுக்கு ஒரு பாடலைத்தான் இணைக்கலாம்..... ஒரு பதிவிலேயே பல பாடல்களை எங்கட அறிவிலி ஒட்டுகிற மாதிரி ஒட்டினா பொரியல் சட்டி கரிச்சட்டியாக மாறிவிடும் அதனால ஆளுக்கு ஒரு பாடல்தான் இணைக்கலாம். அப்போதுதான் ஒவ்வொருவருடைய இரசனையையும் அறிய முடியும். ஒருவர் இணைத்த பாடலை மற்றவர் இணைக்கக்கூடாது. அதே போல அழகான தூதுக் கவிதைகளையும் இணைக்கலாம். அப்போதுதான் நாம் அவற்றைப் பிரித்து மேய்ந்து தமிழை நயந்து வியந்து நடைபோடலாம் சரிதானே...

முதலில் சிலேடைக்கவி காளமேகப்புலவரின் தூது பாடல்

"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி"

இதையே கவிஞர் கண்ணதாசன் இன்னும் இலாவகமாக ஒரு பாடலுக்குள் புகுத்திவிடுகிறார் மிகச்சிறிய மாற்றத்துடன்

தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..

தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..

தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு

துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

என்ன எல்லாருக்கும் தலைமுடியைப் பிய்த்துக்கலாம் போலத் தோன்றுகிறதா?

சரி ஒவ்வொரு முடியாகப் பிய்த்து எண்ணிக் கொண்டு தூது பற்றிய உங்கள் சொந்த அனுபவங்களையும் இங்கு பதிவிடுங்கள் உங்களுடைய தூதுகளை நாங்கள் எத்தகைய தூதுகளாக உவமிக்கலாம் என்று பார்ப்போம்

மறக்கவேண்டாம் ஆளுக்கு ஒவ்வொரு தூதுப்பாடல்..

இந்தத் "தாதி தூது தத்தும் தத்தை சொல்லாது" பாடலைக் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள் :rolleyes:

http://www.esnips.co...045&pid=4373589

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஏலக்காயின் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய். நாங்கள் வாழ்வதற்காக காய்வாய் ஆக.அது மட்டுமல்ல.வாழைக்காய் சற்று மருவி வாழைக் காயாக ஒலிக்கிறது.என்னே! தமிழின் வளம்!!!!!!!!!!!!

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

ஓ... புலவர் நீங்களும் பதிவிட்டிருக்கிறீர்கள் கவனிக்காமல் நான் வேறொன்றை எடுத்துவந்து விட்டேன்.. மன்னித்துவிடுங்கள் இதற்கான பொருளையும் தூதுப் பாடல்களினுடே பேசுவோம் :rolleyes::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பங்கிற்கு ஒரு அருமையான பாடல் தூது பற்றியது.

http://www.youtube.com/watch?v=m0R80NdII48

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி?

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி?

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி - ஆஹா

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி

ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்

பருவம் தூங்குமே தலைவி

வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே

பேசலாகுமோ தோழி?

இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்

ஏங்கலாகுமோ தலைவி?

கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே

கலக்கம் வராதோ தோழி?

ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்

மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி

முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை

மௌனத்தில் அறிந்தாள் தோழி

காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்

காத்திருந்தாள் அந்தத் தலைவி?

காவிய நாயகன் காதலன் வணிகன்

கோவலன் என்பான் மனைவி

ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

ஹூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து -

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்."

இதனை நான் முன்னம் கேள்விப்பட்டனான், பிறகு எழதுகிறேன், நல்ல பாட்டு புலவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Paattum Barathamum

Song: Karpanaikku Meni Thanthu

Singer: TMS

Music: M S Visvanathan

Lyrics: Kannadasan

கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டு விட்டேன்

கால் சல‌ங்கை போன‌ இட‌ம் க‌ட‌வுழுக்கும் தோன்ற‌வில்லை

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

ஆவிக்குள் ஆவி ஆன‌ந்த‌ ஏடு

அவ‌ளில்லையென்றால் நான் வெரும் கூடு

ஆவிக்குள் ஆவி ஆன‌ந்த‌ ஏடு

அவ‌ளில்லையென்றால் நான் வெரும் கூடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாடிப் ப‌ற‌ந்த‌த‌ம்மா இளம்குயில் பேடு

இளம்குயில் பேடு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

நீர் வ‌ற்றிப் போன‌தென்று நினைவினில் வெடிப்பு

நெஞ்ச‌த்தில் தோன்றுதம்மா வ‌ச‌ந்த‌த்தின் துடிப்பு

மாம‌லை மேகம் இன்று க‌ண்க‌ளில் இருப்பு

மார்க‌ழி ப‌னி அன்றோ அவ‌ள‌து சிரிப்பு

அவ‌ள‌து சிரிப்பு !

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

க‌ம்பனைக் கூப்பிடுங்க‌ள் சீதையைக் காண்பான்

க‌வி காளிதாச‌ன் அவ‌ள் ச‌குந்த‌லை என்பான்

க‌ம்பனைக் கூப்பிடுங்க‌ள் சீதையைக் காண்பான்

க‌வி காளிதாச‌ன் அவ‌ள் ச‌குந்த‌லை என்பான்

நாய‌கியே என‌து காவிய‌ எல்லை

நாய‌கியே என‌து காவிய‌ எல்லை

ந‌ரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழ‌வில்லை‌

ந‌ரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழ‌வில்லை‌

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

Link to comment
Share on other sites

.

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிறேன்..

தேயாமலே பிறை போலாகிறேன்..

தாங்காது இனி தாங்காது..

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..

பெண்ணே..

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..

பெண்ணே....

மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா..

தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா..

மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா...

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..

என்னை..

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..

என்னை..

கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்

மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்

ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேரும் நீ....

மல்லிகையே மல்லிகையே தூதாக போ...

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Paattum Barathamum

Song: Karpanaikku Meni Thanthu

Singer: TMS

Music: M S Visvanathan

Lyrics: Kannadasan

கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டு விட்டேன்

கால் சல‌ங்கை போன‌ இட‌ம் க‌ட‌வுளுக்கும் தோன்ற‌வில்லை

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

ஆவிக்குள் ஆவி ஆன‌ந்த‌ ஏடு

அவ‌ளில்லையென்றால் நான் வெரும் கூடு

ஆவிக்குள் ஆவி ஆன‌ந்த‌ ஏடு

அவ‌ளில்லையென்றால் நான் வெறும் கூடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாடிப் ப‌ற‌ந்த‌த‌ம்மா இளங்குயிற்பேடு

இளம்குயிற்பேடு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

நீர் வ‌ற்றிப் போன‌தென்று நினைவினில் வெடிப்பு

நெஞ்ச‌த்தில் தோன்றுதம்மா வ‌ச‌ந்த‌த்தின் துடிப்பு

மாம‌லை மேகம் இன்று க‌ண்க‌ளில் இருப்பு

மார்க‌ழி ப‌னி அன்றோ அவ‌ள‌து சிரிப்பு

அவ‌ள‌து சிரிப்பு !

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

க‌ம்பனைக் கூப்பிடுங்க‌ள் சீதையைக் காண்பான்

க‌வி காளிதாச‌ன் அவ‌ள் ச‌குந்த‌லை என்பான்

க‌ம்பனைக் கூப்பிடுங்க‌ள் சீதையைக் காண்பான்

க‌வி காளிதாச‌ன் அவ‌ள் ச‌குந்த‌லை என்பான்

நாய‌கியே என‌து காவிய‌ எல்லை

நாய‌கியே என‌து காவிய‌ எல்லை

ந‌ரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழ‌வில்லை‌

ந‌ரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழ‌வில்லை‌

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

http://www.dishant.c...hp?songid=59399

உடையார்,

இந்தப்பாடல் அந்தப்படம் பார்த்தபோது கேட்டதோடு சரி மீண்டும் இப்போதுதான் கேட்கிறேன். எப்படி இந்தப்பாடலை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள். இந்தப்பாடலையும் அதை இவ்வளவு தூரம் ஞாபகத்தில் அல்லது மனதிற்குப் பிடித்தமானதாக இருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? :rolleyes:

எல்லோரும் தூது சொல்லிவிடக் கெஞ்சிக் கூத்தாடுவார்கள் இந்தப்பாடல் கொஞ்சம் வித்தியாசமாக தென்றலை "ஓடு" என்று கலைக்கிறது

Link to comment
Share on other sites

தொடருங்கள்.. நேரம் கிடைக்கும் போது படித்து பின்னுட்டம் இடலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

புலவர் இந்தப்பாடலில் அரசமரம்,மூங்கில், வேங்கைமரம், காட்டுமரங்கள், ஆல், அத்தி ஆகிய மரங்கள் பங்குபற்றியுள்ளன...

மரமது தேடி மரக்கும் உள்ளங்களுக்கு நாளை மாலையில் வந்து மறக்காமல் தெளிவான பொருளைக் கூறுகின்றேன் :rolleyes:

அதற்கிடையில் இலக்கியச் சிறுத்தைகள் யாராவது பதிவிட்டு அசத்திவிடமாட்டீங்களா... எல்லாம் ஒரு நம்பிக்கைதான்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவே பயப்பிடுறீங்களா?

சும்மா ஒதுங்கி இருக்காமல் வாங்கோ...இங்கு படித்த பீதாம்பரங்கள் என்று எவருமில்லை. முடிந்தவரைக்கும் நாங்களே கூழ் முட்டைகளாகவும் குஞ்சு முட்டைகளாகவும் இருப்போம்.

இனிய பொழுதில் ஓடியோடி பாடல்களை இணைக்கிற நீங்கள் இங்கு தூதுப் பாடல் இணைக்கச் சொல்லிக் கேட்டும் இணைக்கவில்லையே.... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dishant.c...hp?songid=59399

உடையார்,

இந்தப்பாடல் அந்தப்படம் பார்த்தபோது கேட்டதோடு சரி மீண்டும் இப்போதுதான் கேட்கிறேன். எப்படி இந்தப்பாடலை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள். இந்தப்பாடலையும் அதை இவ்வளவு தூரம் ஞாபகத்தில் அல்லது மனதிற்குப் பிடித்தமானதாக இருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? :rolleyes:

எல்லோரும் தூது சொல்லிவிடக் கெஞ்சிக் கூத்தாடுவார்கள் இந்தப்பாடல் கொஞ்சம் வித்தியாசமாக தென்றலை "ஓடு" என்று கலைக்கிறது

இல்லை தேடினதில் பிடிச்சது, அப்படி ஏதும் விசேஷ காரணமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஏலக்காயின் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய். நாங்கள் வாழ்வதற்காக காய்வாய் ஆக.அது மட்டுமல்ல.வாழைக்காய் சற்று மருவி வாழைக் காயாக ஒலிக்கிறது.என்னே! தமிழின் வளம்!!!!!!!!!!!!

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

அரச(ன்) மரம் மரத்தால் சொய்த தேரில் ஏறி மூங்கிலால் செய்த வில்லை தோளில் போட்டு காட்டுக்கு வேட்டைக்கு போகிறான்,

அரச(ன்) மரம் வேங்கை மரத்தை கண்டு மூங்கிலால் குத்தி

அரச(ன்) மரம் காட்டு வழி திரும்பி அரண்மனை போகும் போது

அரச(ன்) மரத்தை கண்ட மக்கள் ஆல்(+)அத்தி எடுத்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசன் குதிரையில் ஏறி வேலைத் தோளில் வைத்துக்கொண்டு வேட்டைக்குப் போனான்.அங்கு புலியை கண்டு வேலால் குத்திக் கொன்றான் வேட்டை முடிந்து அரண்மனைக்குச் சென்ற பொழுது பெண்கள் ஆராத்தி எடுத்து அரசனை வரவேற்றார்கள்.அரசன் அரசவைக் கவிஙரைப் பாரத்து புலவரே என் வேட்டை எப்படி இருந்தது என்ற பொழுது புலவர் பாடினார்.

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

ஒருவருக்கும் விளங்கவில்லை. புலவர் விளக்கினார்.

மரமது-அரசு என்பது ஒரு மரம்.அரசனாகிய மரம்.

மரத்திலேறி-குதிரைக்கு மா என்றும் பொருள் உண்டு.மா என்பது ஒரு மரம். ஆகவே மரமது மரத்திலேறி

வேல் என்பது ஒரு மரம்(ஆலும் வேலும் பல்லுக்குறுதி)வேலமரம்-வேப்பமரம்.(கருவேலமரம்-கருவேப்பமரம்) ஆகவே வேலாகிய மரத்தைத் தோளில் வைத்து

புலிக்கு வேங்கை என்றும் பொருள் உண்டு.வேங்கைமரம் என்று ஒரு மரம் இருக்கிறது.ஆகவே அரசனாகிய மரம் வேங்கையாகிய மரத்தைக்கண்டு வேலாகிய மரத்தால் வேங்கையாகிய மரத்தைக் குத்தி மரமாகிய அரசன் வெற்றியுடன் அரண்மனைக்குத் திரும்பும் பொழுது

மரமுடன் மரமெடுத்தார்.பெண்கள் ஆராத்தி எடுத்து வாழ்த்தினார்கள்.

ஆராத்தி =ஆல்+ ஆத்தி ஆல் என்பதும் அத்தி என்பதும் மரங்களின் பெயர்கள் ஆகவே மரமுடன் மரமெடுத்தார்.

ஆகவே இனியாராவது உங்களை மரம் என்று பேசினால் உங்களை அரசன் என்று புகழ்வதாக அவர்களுக்குச் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூது பற்றிய தேடல்களில் இந்தக் கரிக்காய்த் திரி தேடல்களை மேற்கொண்டுள்ளது தூது பற்றிய சுவையான சம்பவங்களை தமிழ் இலக்கியங்கள் நிறையவே வைத்திருக்கின்றன... தெரிந்தவற்றை அறிந்தவற்றை நீங்களும் இங்கு இணைக்கலாம்....

இப்போது நாரையைத் தூதாக்கிய சக்திமுத்தப்புலவரின் ஒரு பாடலைப் பார்ப்போம்.. நான் பாட்டை பதிகின்றேன் இதன் கருத்தையும் இந்தப்பாடலுக்கான சந்தர்ப்பத்தையும் நீங்கள் யாராவது பதிவிடுங்கள்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி

வடதிசைக்கு ஏகுவீராயின்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி

பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்தி

காலது கொண்டு மேலது தழுவிப்

பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

White%20Stork-%20Chari%20Dhand.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.