Jump to content

நடக்க வேண்டியதைப் பார்ப்போம் – தினமணி கட்டுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடக்க வேண்டியதைப் பார்ப்போம் – தினமணி கட்டுரை [ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 10:40 GMT ] [ அ.எழிலரசன் ] dinamani.jpgபுலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. 

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் 30 March 2013 இரா. சோமசுந்தரம் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழீழம் அமைவது குறித்து இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. மன்றத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும், நட்புநாடு இல்லை என்று கூற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழர் உணர்வுகளுக்கு இதமாக இருப்பினும் இது சாத்தியமாகுமா என்ற சந்தேகத்துடன்தான் இப்பிரச்னையை அணுக வேண்டியுள்ளது. 

பொதுவாக்கெடுப்பு பல காரணங்களால் பல நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. அவை சட்டத்திருத்தம், அரசியலமைப்பு நிர்ணய சட்டத்தை மாற்றியமைத்தல், நாட்டின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுதல், புதிய வரிகள் என பல்வேறு காரணங்களுக்கானவை. 

ஒரு நாடு, இன்னொரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாமா என்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 1962-இல் சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைத்துக் கொள்ளலாமா, இணைத்துக்கொண்டாலும் தனிஅடையாளத்துடன் செயல்படலாமா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இணைத்துக்கொள்ளலாம் என்று பெரும்பான்மை வாக்கெடுப்பு கிடைத்தபோதிலும்கூட, சிங்கப்பூர் இணைப்பை மலேசியா துண்டித்துக்கொண்டுவிட்டது என்பது வேறுவிஷயம். 

இருப்பினும், ஒரு நாடு, தன்னில் ஒரு பகுதியைப் பிரித்து தனிநாடு அமைக்கும் முயற்சிக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துமா? நடத்த விரும்புமா? ஒரு அண்டை நாடு இன்னொரு நாட்டை பிளக்க முடியுமா? 

நாம் காஷ்மீரில் என்ன செய்தோம்? ஐ.நா பாதுகாப்புக் குழு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர் எந்த நாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வசதியாக அங்கே இரு நாடுகளும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானே! இதுவரை அது சாத்தியப்படவில்லை. அப்படியிருக்க, இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் கொடுக்க இந்தியாவுக்கு தார்மிக உரிமை இல்லை. ஆகவே இதுகுறித்து இந்தியா எந்த முயற்சியும் எடுக்காது. இது தெரிந்தும்கூட அரசியல் நடத்துவதற்காக இத்தகைய தீர்மானங்களை தமிழக அரசு கொண்டுவருகிறது. 

மேலும், ஒரு நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றால், அந்த மண்ணின் மைந்தர்கள்தான், குடியுரிமை பெற்றவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்கள் இதுபற்றி குரல் எழுப்பாமல் உள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. அதிலும்கூட மிகப்பெரிய போலித்தனம். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தா. பாண்டியன், சி.மகேந்திரன், டி.ராஜா ஆகியோர் தமிழீழத்துக்கும் ஆதரவாக இருக்கின்றனர். பாஜக-வில் இல.கணேசன் இது குறித்து ஆதரவு கருத்து தெரிவிக்கிறார். ஆனால், இவர்களின் தலைமை என்ன கருதுகிறது?. 

திமுக எழுப்பிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்குகொண்ட சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), குருதாஸ் குப்தா (சிபிஐ) ஆகியோர் கூறியதென்ன? "இது திமுகவுக்கும் ஐமுகூ-வுக்கும் இடையிலான பிரச்னை. இதற்கு ஏன் அனைத்துக் கட்சிக்கூட்டம்?' என்பதுதான். திமுகவின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாகக் கொண்டுவருவதற்கும்கூட இந்த தேசியக் கட்சித் தலைமைகள் உடன்படவில்லை. ஆனால், மாநிலத் தலைவர்கள் பெருங்குரல் எழுப்புகின்றனர். தலைமையிடம் மதிக்காத இக் குரல் என்ன வலிமை சேர்க்கும்? 

இலங்கையில் தமிழீழம் உருவாக்குவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் தாங்கள் வசிக்கும் நாடுகளின் குடியுரிமை பெற்று இரண்டாம், மூன்றாம் தலைமுறையினராக வாழ்கின்றனர். இந்தப் புதிய தலைமுறையில் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் உள்ளவர்கள் எத்தனை லட்சம் பேர்? இவர்களில் வாக்களிக்கும் தகுதியுடன் இன்னமும் இலங்கைக் குடியுரிமையைத் தக்க வைத்திருப்போர் எத்தனை லட்சம் பேர்? 

குறைந்தபட்சம் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தரவும் அக்கறை கொள்ளாத, ஆர்வம் இல்லாத தமிழக அரசியல்வாதிகள், எவ்வாறு அவர்களுக்காக தனிஈழம் பெற்றுத் தருவார்கள்? 

புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இலங்கைத் தமிழப் பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்பதாகிலும் இவர்களுக்குத் தெரியுமா? 

கொடுங்கோலன் ராஜபட்ச ஆட்சியில் இலங்கைத் தமிழனால் பேசக்கூட முடியாதே, பிறகு அவன் எப்படித் தனி ஈழத்துக்காகக் குரல் எழுப்ப முடியும்? என்கிற கேள்வி 

நியாயம்தான். ஆனால், அந்த அளவுக்குத் தெம்பு இல்லாமல் கிடப்போரை தெம்பூட்டுவதற்கான முயற்சிகளைச் செய்வதுதான் தொப்புள்கொடி உறவுகளின் பணியாக இருக்க முடியுமே தவிர, அவர்களை மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக இருக்கும். குரல்வளை நெரிக்கப்பட்டு, அச்சத்திலும் வேதனையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் அனுப்பிய குறைவான நிவாரணங்கள்கூட போய்ச் சேர்வதில்லை என்கிறார்கள். அவர்களுக்கு அமைதியும் அதிகாரம் கிடைக்க இந்தியா உதவக் கோருவது மட்டுமே நாம் செயல்படுத்த வேண்டிய திட்டம்! நட்பு நாடாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். 

பன்னாட்டு விசாரணை, மனித உரிமை மீறல் குறித்து இந்தியா தீர்மானம் கொண்டுவருவது என்பது மட்டுமே சாத்தியம். தமிழீழம் கோரிக்கையை இந்திய அரசு ஏற்காது. அதற்கான பொதுவாக்கெடுப்பும் கேட்காது. 

அதனால், தமிழீழம் குறித்து இலங்கையில் வாழும் தமிழர் பேசுவதுதான் முறையாக இருக்கும். அவர்கள் எழுப்பும் குரலுக்குத்தான் உலகம் செவிமடுக்கும்.

Link to comment
Share on other sites

இறுதியாக ஐ.நா. ஆதரவுடன் ய்லகம் வாழ் தென் சூடான் மக்கள் வாக்களித்து சூடானில் இருந்து பிரிந்து கொண்டனர்.

 

கொசாவா மக்கள் மேற்குலக ஆதவுடன் மட்டுமே பிரிந்து தனி நாடாகியுள்ளனர்.


எனவே, ஐ.நா. சாசனப்படி தமிழர்களும் பிரிய உரிமையும் வரலாற்று தேவையும் காரணமும் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களும், அரசியல் கட்சிகளும் இந்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், இந்தியாவை மேற்கு நாடுகளுடன் ஒன்று சேர்ந்து கொசோவா பிரிந்தது போல் தமிழ் ஈழம் பெற்று கொடுக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

Link to comment
Share on other sites

பொது வாக்கெடுப்பு ஆபத்தானது, உதாரணமாக கிழக்கு இலங்கையில் வைத்தால் 2/3 ஆல் தோல்வி அடையும்(முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் எதிர்த்து வாக்களிப்பர்), மற்றும் தமிழ் மக்கள் ஏன் வீண் வம்பு என வீட்டிலே முடங்கலாம், அதை விட ஒட்டுக் குழுக்கள் கள்ள வாக்களிக்கலாம், அதை விட கொழும்பில் முதலீடுகள் மேற்கொண்ட தமிழரும் இதற்கு எதிராகவே வாக்களிப்பர். எனவே வாக்கெடுப்பு ஆபத்தானது,இதை விட யூகொஸ்லாவிய பிரிந்த மாதிரி வாக்கெடுப்பு இல்லாமல் பிரிக்க வேண்டும்.(பொஸ்னியா,ஸ்லொவினியா,கிரோஸியா மாதிரி)

Link to comment
Share on other sites

பொது வாக்கெடுப்பு ஆபத்தானது, உதாரணமாக கிழக்கு இலங்கையில் வைத்தால் 2/3 ஆல் தோல்வி அடையும்(முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் எதிர்த்து வாக்களிப்பர்), மற்றும் தமிழ் மக்கள் ஏன் வீண் வம்பு என வீட்டிலே முடங்கலாம், அதை விட ஒட்டுக் குழுக்கள் கள்ள வாக்களிக்கலாம், அதை விட கொழும்பில் முதலீடுகள் மேற்கொண்ட தமிழரும் இதற்கு எதிராகவே வாக்களிப்பர். எனவே வாக்கெடுப்பு ஆபத்தானது,இதை விட யூகொஸ்லாவிய பிரிந்த மாதிரி வாக்கெடுப்பு இல்லாமல் பிரிக்க வேண்டும்.(பொஸ்னியா,ஸ்லொவினியா,கிரோஸியா மாதிரி)

 

பொதுவாக வாக்கெடுப்பு முன்வைக்கப்படும் பொழுது ஒரு முன்னைய ஆண்டிலும் அதற்கு முன்னரும்  அங்கு வாழ்ந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே அண்மையில் குடியேறியவர்கள் மறுக்கப்படுவார்கள்.

 

உதாரணத்திற்கு ஆண்டு 1983 என நிர்ணயிக்கபட்டால் அதற்கு முன்னர் அங்கு வாழ்ந்தவர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் வாக்களிக்க உரிமை தரப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

பொதுவாக வாக்கெடுப்பு முன்வைக்கப்படும் பொழுது ஒரு முன்னைய ஆண்டிலும் அதற்கு முன்னரும்  அங்கு வாழ்ந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே அண்மையில் குடியேறியவர்கள் மறுக்கப்படுவார்கள்.

 

உதாரணத்திற்கு ஆண்டு 1983 என நிர்ணயிக்கபட்டால் அதற்கு முன்னர் அங்கு வாழ்ந்தவர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் வாக்களிக்க உரிமை தரப்படுவார்கள்.

 

இது தான் சர்வதேச நியதி.

புலம்பெயர் தமிழர்களும் தமது ஈழத்து குடிமகன் என்ற உரிமையை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்த சுயநலவாதிகளாக இருக்க மாட்டார்கள்.

 

நடக்க வேண்டியதைப் பார்ப்போம் – தினமணி கட்டுரை [ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 10:40 GMT ] [ அ.எழிலரசன் ] dinamani.jpgபுலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. 

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் 30 March 2013 இரா. சோமசுந்தரம் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழீழம் அமைவது குறித்து இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. மன்றத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும், நட்புநாடு இல்லை என்று கூற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழர் உணர்வுகளுக்கு இதமாக இருப்பினும் இது சாத்தியமாகுமா என்ற சந்தேகத்துடன்தான் இப்பிரச்னையை அணுக வேண்டியுள்ளது. 

பொதுவாக்கெடுப்பு பல காரணங்களால் பல நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. அவை சட்டத்திருத்தம், அரசியலமைப்பு நிர்ணய சட்டத்தை மாற்றியமைத்தல், நாட்டின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுதல், புதிய வரிகள் என பல்வேறு காரணங்களுக்கானவை. 

ஒரு நாடு, இன்னொரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாமா என்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 1962-இல் சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைத்துக் கொள்ளலாமா, இணைத்துக்கொண்டாலும் தனிஅடையாளத்துடன் செயல்படலாமா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இணைத்துக்கொள்ளலாம் என்று பெரும்பான்மை வாக்கெடுப்பு கிடைத்தபோதிலும்கூட, சிங்கப்பூர் இணைப்பை மலேசியா துண்டித்துக்கொண்டுவிட்டது என்பது வேறுவிஷயம். 

இருப்பினும், ஒரு நாடு, தன்னில் ஒரு பகுதியைப் பிரித்து தனிநாடு அமைக்கும் முயற்சிக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துமா? நடத்த விரும்புமா? ஒரு அண்டை நாடு இன்னொரு நாட்டை பிளக்க முடியுமா? 

நாம் காஷ்மீரில் என்ன செய்தோம்? ஐ.நா பாதுகாப்புக் குழு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர் எந்த நாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வசதியாக அங்கே இரு நாடுகளும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானே! இதுவரை அது சாத்தியப்படவில்லை. அப்படியிருக்க, இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் கொடுக்க இந்தியாவுக்கு தார்மிக உரிமை இல்லை. ஆகவே இதுகுறித்து இந்தியா எந்த முயற்சியும் எடுக்காது. இது தெரிந்தும்கூட அரசியல் நடத்துவதற்காக இத்தகைய தீர்மானங்களை தமிழக அரசு கொண்டுவருகிறது. 

மேலும், ஒரு நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றால், அந்த மண்ணின் மைந்தர்கள்தான், குடியுரிமை பெற்றவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்கள் இதுபற்றி குரல் எழுப்பாமல் உள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. அதிலும்கூட மிகப்பெரிய போலித்தனம். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தா. பாண்டியன், சி.மகேந்திரன், டி.ராஜா ஆகியோர் தமிழீழத்துக்கும் ஆதரவாக இருக்கின்றனர். பாஜக-வில் இல.கணேசன் இது குறித்து ஆதரவு கருத்து தெரிவிக்கிறார். ஆனால், இவர்களின் தலைமை என்ன கருதுகிறது?. 

திமுக எழுப்பிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்குகொண்ட சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), குருதாஸ் குப்தா (சிபிஐ) ஆகியோர் கூறியதென்ன? "இது திமுகவுக்கும் ஐமுகூ-வுக்கும் இடையிலான பிரச்னை. இதற்கு ஏன் அனைத்துக் கட்சிக்கூட்டம்?' என்பதுதான். திமுகவின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாகக் கொண்டுவருவதற்கும்கூட இந்த தேசியக் கட்சித் தலைமைகள் உடன்படவில்லை. ஆனால், மாநிலத் தலைவர்கள் பெருங்குரல் எழுப்புகின்றனர். தலைமையிடம் மதிக்காத இக் குரல் என்ன வலிமை சேர்க்கும்? 

இலங்கையில் தமிழீழம் உருவாக்குவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் தாங்கள் வசிக்கும் நாடுகளின் குடியுரிமை பெற்று இரண்டாம், மூன்றாம் தலைமுறையினராக வாழ்கின்றனர். இந்தப் புதிய தலைமுறையில் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் உள்ளவர்கள் எத்தனை லட்சம் பேர்? இவர்களில் வாக்களிக்கும் தகுதியுடன் இன்னமும் இலங்கைக் குடியுரிமையைத் தக்க வைத்திருப்போர் எத்தனை லட்சம் பேர்? 

குறைந்தபட்சம் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தரவும் அக்கறை கொள்ளாத, ஆர்வம் இல்லாத தமிழக அரசியல்வாதிகள், எவ்வாறு அவர்களுக்காக தனிஈழம் பெற்றுத் தருவார்கள்? 

புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இலங்கைத் தமிழப் பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்பதாகிலும் இவர்களுக்குத் தெரியுமா? 

கொடுங்கோலன் ராஜபட்ச ஆட்சியில் இலங்கைத் தமிழனால் பேசக்கூட முடியாதே, பிறகு அவன் எப்படித் தனி ஈழத்துக்காகக் குரல் எழுப்ப முடியும்? என்கிற கேள்வி 

நியாயம்தான். ஆனால், அந்த அளவுக்குத் தெம்பு இல்லாமல் கிடப்போரை தெம்பூட்டுவதற்கான முயற்சிகளைச் செய்வதுதான் தொப்புள்கொடி உறவுகளின் பணியாக இருக்க முடியுமே தவிர, அவர்களை மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக இருக்கும். குரல்வளை நெரிக்கப்பட்டு, அச்சத்திலும் வேதனையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் அனுப்பிய குறைவான நிவாரணங்கள்கூட போய்ச் சேர்வதில்லை என்கிறார்கள். அவர்களுக்கு அமைதியும் அதிகாரம் கிடைக்க இந்தியா உதவக் கோருவது மட்டுமே நாம் செயல்படுத்த வேண்டிய திட்டம்! நட்பு நாடாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். 

பன்னாட்டு விசாரணை, மனித உரிமை மீறல் குறித்து இந்தியா தீர்மானம் கொண்டுவருவது என்பது மட்டுமே சாத்தியம். தமிழீழம் கோரிக்கையை இந்திய அரசு ஏற்காது. அதற்கான பொதுவாக்கெடுப்பும் கேட்காது. 

அதனால், தமிழீழம் குறித்து இலங்கையில் வாழும் தமிழர் பேசுவதுதான் முறையாக இருக்கும். அவர்கள் எழுப்பும் குரலுக்குத்தான் உலகம் செவிமடுக்கும்.

 

 

முக்குடைபட்டிருக்கும் ஹிந்தியக் கயவர்களுக்கு ஆதரவாக இருக்க இந்த கட்டுரையாளர்  இரா. சோமசுந்தரம் கடுமையாக வித்தியாசமான அணுகு முறையில் முயற்சித்துள்ளார்.

ஈழத்து நலனில் பெரும் அக்கறை உடையவர் போல காட்டிக் கொள்ளும் (முதலைக் கண்ணீர் விடும்) இவர்,  கட்டுரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும் போது  அவரது  சுயரூபம் வெளிப்படுகிறது. அவர் யாரின் கைக்கூலியாக இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் என்பதை விளங்குவது பெரும் சிரமம் இல்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.