Jump to content

வரவேற்பு பிரமாதம்: இந்திய அணி வரமுன்பே 700 தமிழர் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.


Recommended Posts

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டபின்னர் அது தமிழர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் என பலரும் ஆர்ருடம் கூறினர் ஏன் காங்கிரஸ் கட்சியினை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் சில தமிழ் எம்.பி க்களும் கூட அப்படித்தான் கூறினர்.

ஆனால் நடந்தது , நடக்கின்றது வேறு மாதிரித்தான் சிங்களம் தான் கூறியது போலவே செய்துவருகின்றது. அதாவது இந்தியா, உலக நாடுகள் மீது தமது எதி்ர்ப்பினை காட்டிவருகின்றது சிங்களம். மகாத்மா காந்தி சிலையினை உடைத்தார்கள், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றார்கள், சிங்கள குடியேற்றங்களைச் செய்துவருகின்றார்கள்,ஊடகங்கள் ஊடாக இனவாத கருத்துக்களும், சர்வதேசத்திற்கு எதிரான கருத்துக்களும் பரப்பபட்டன. இதன் மூலம் சிங்கள மக்களை உசுப்பேற்றி அவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வழிவகை செய்தன.

இறுதியாக இப்போது இந்திய பாராளுமன்றக் குழு கொழும்பு வருகின்றது. இந்தக் குழுவின் பயணம் காங்கிரஸ் கட்சியின் ஓர் அரசியல் நாடகம்; ஆகையால்தான் தமிழக முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகியன புறக்கணித்த நிலையில் அந்தக் குழு வருகின்றது. இந்தியக்குழுவின் வருகை இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என காங்கிரஸின் ஊதுகுழல் நாராயணசாமி கூறியுள்ளார். இவர் இந்தக் கருத்தினைக் கூறி சில மணி நேரங்களில்தான் காலியில் தமிழ்க் குடும்பங்களின் 700 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.சுமார் ஒரு கோடி பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இளைஞர்களும் பெண்களும் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

சிங்களத்தின் இந்த இனவாத செயலானது தமிழர்களை எப்படி சிங்கள ஆட்சியாளர்கள் பார்க்கின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டியுள்ளது. இதனைவிட நேரில் வந்து பார்க்கவேண்டிய விடயம் என்ன இருக்கின்றது?

http://thaaitamil.com/?p=15885

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "சிங்களத்தின் இந்த இனவாத செயலானது தமிழர்களை எப்படி சிங்கள ஆட்சியாளர்கள் பார்க்கின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டியுள்ளது. இதனைவிட நேரில் வந்து பார்க்கவேண்டிய விடயம் என்ன இருக்கின்றது?"

முள்ளிவாய்க்காலில் சிங்கள காடையர்களின் கொடூரத்தை கண்டும் காணாத உலகமா, இனி இந்த காட்டேரிகளின் இனவாதத்தை காணப்போகின்றது.

Link to comment
Share on other sites

7 வீடுகள் 700 வீடுகள் ஆகியுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101059

எது உண்மை. செய்திகள் பரபரப்பாக இருக்க வேண்டுமென்பதற்காகப் பிழையான தகவல்களைத் தருவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil village in Galle attacked over dispute

News | April 16, 2012 12:08 pm

arson-attack.jpg(Srilankamirror) – Several Tamil families living at a village in Elpitiya, Galle have been assaulted and their houses robbed and set on fire following a dispute involving an Army soldier.

According to ‘Ada Derana’ Tamil website, the soldier in question had become angry after a youth of the Dilithura village had refused to address him as ‘sir.’

The soldier, while on vacation, had gone to the village around 10.00 am on April 14 and assaulted the youth at his home and another Tamil youth who had tried to mediate.

Later, around 30 youths had gathered at the location, beaten up the two Tamil youths and set fire to seven houses, push cycles, motorcycles and three wheelers.

They had also got away with money and jewellery.

The villagers, who suffered estimated damages of Rs. nine million, have complained to Embilipitiya police.

A police team arrived at the scene and arrested two Tamil youths and are searching for several other suspects.

Dilithura is a village with a population of around 3,4000 belonging to 520 Tamil families.

http://english.srila...d-over-dispute/

Remembemr this!! Read further below!

----------------------------------------------

Sri Lankan forces attack village after rejecting Tamil Tiger ceasefire

Sri Lankan forces have attacked a rebel-held village in the north with heavy machine gun fire just hours after rejecting the Tamil Tigers' call for a truce as a ploy to avoid destruction.

http://www.telegraph...-ceasefire.html

Link to comment
Share on other sites

தரம் கெட்ட கழிசடை தமிழ் ஊடகங்களும், மோட்டு தமிழ் ஊடகவியலாளர்களும் இருக்கும் வரை இந்த மாதிரி முற்றிலும் தவறான செய்திகள் வருவதைத் தவிர்க்க முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.