Jump to content

மனித உடல்


Recommended Posts

மனித உடல்

 
VK526.jpg

பொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரும்ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சிலருக்கு ஜுரம் கூட வந்துவிடும், இது ஏன் என்றால், வெயல் காலத்தில் நம் உடலில் இருக்கும் தோலின் மீது காணப்படும் கண்ணுக்குத் தெரியாத சிறிய ரோமங்களுடன் காணப்படும் துவாரங்களின் கீழே சிறிய கொழுப்புத் திவலைகள் உண்டு இவை கடும் வெயல் மற்றும் குளிர் மழை போன்ற சீதோஷ்ண மாற்றங்களிலிருந்து நமது உடலின் வெப்பத்தை சீராகுவதற்க்கும் வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகின்றது, வெயலின் சூட்டில் அந்த கொழுப்புத் திவலைகள் உருகுவதால் சிறிய துவாரங்கள் முழுவதுமாக திறந்து கொண்டு வியர்வை தூசு போன்றவை அதன் வழியே உடலின் உள்ளே சென்று விடுகின்றது, திலிருக்கும் கிருமிகள் வியர்வையுடன் சேர்ந்து அரிப்பை உண்டாக்குவதுடன் ஜுரம் ஜலதோஷம் போன்ற உடற் உபாதைகளையும் ஏற்ப்படுத்துகின்றது.

சிலர் வெயலின் சூட்டிலிருந்து உடல் குளிர்ச்சியடைவதற்க்காக சுத்திகரிக்கப்படாத ஐஸ் தண்ணீர் ஐஸ் மோர், மற்றும் குளிர் பானங்களை கடைகளிலிருந்தும் ரேப்பிட்ஜிரேடோரிலிருந்தும் எடுத்து அடிக்கடி குடிப்பார்கள் அப்படி செய்வதால் அந்த பானங்களில் காணப்படும் வைரஸ் மற்றும் அமீபியாக் கிருமிகள் உடலினுள் சென்று வயிற்றுவலி, ஜுரம் போன்ற உடற் பாதிப்புகளை ஏற்ப்படுத்தும்.

கடும் மழையில் நனைவதாலோ கடும் குளிரில் நடப்பதாலோ பொதுவாக பலருக்கும் ஜுரம் மற்றும் ஜலதோஷம் போன்ற உடற்உபாதைகள் ஏற்ப்படுவது கிடையாது, இதற்க்குக் காரணம் உடலின் தோல்பாகத்தில் காணப்படும் சிறிய ரோமத் துவாரங்களின் அடிப்புறத்தில் காணப்படும் கொழுப்புத் திவலைகள் இறுகி துவாரங்களை அடைத்துக் கொண்டிருப்பதனால் அதன் வழியே குளிர்ச்சியோ மழை நீரோ உட்புகுந்து உடலில் எந்தவித பாதிப்பையும் ஏற்ப்படுத்தாமல் தவிர்க்கின்றது. இதனால் அதிக மழையில் நனைந்தாலும் கூட மழைக் காலங்களில் பலருக்கு ஜுரமோ ஜலதோஷமோ பிடிப்பதில்லை.edited+kidney.jpg

குளிர் பிரதேசங்களில் ஜாகிங் செய்வதனால் உடலிலிருந்து வெளியேற்றப்படும் உஷ்ணம் மற்றும் கழிவுகள் வியர்வையின் மூலம் ரோமத்துவாரங்களின் வழியே வெளியேற வழியில்லாமல் தடைப்படுவதாலும் ரத்த அழுத்தம் அதிகரித்து இருதயத்தின் செயல்பாடு பாதிப்படைந்து மரணம் நேருவதையும் நாம் கேள்விபட்டிருப்போம், இதற்கும் இந்த ரோமத் துவாரங்களும் காரணம். ரோமத்துவாரங்களின் வழியே வெளியேறும் வியர்வை போன்றே ரத்தத்திலுள்ள கழிவுகளை சிறுநீரகம் சிறுநீராக ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து தோலின் அடிப்புறத்திலிருக்கும் சிறிய துவாரங்களின் வழியேவெளியேற்றுகிறதுஉடலின் மிகப்பெரிய உறுப்பாக தோல் நம்முடலில் இருப்பதால் அதன் உபயோகமும் அதிகம்.கோடைக்காலத்தில் சிறுநீரகத்தின் வேலைக் குறைந்து அதே பணியை தோல் செய்ய ஆரம்பிக்கிறது, இதனால் கோடையில் சிறுநீர் வெளியேற்றம் குறைவாகக் காணப்படுகிறது. தோலைப் மற்ற உடலுறுப்புகளைப் போல மிகவும் கவனத்துடன்பராமரித்தால் உடலில் பல சுகவீனங்கள் வருவதை தவிர்க்கமுடியும்.

human_heart1.jpgநிறைய நீர் பருகுவதால் ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தோலும் சிறுநீர் உறுப்புகளும் சுத்திகரிக்கப்படுவதுடன் சரிவர இயங்க முடியும் பலவித உடல் உபாதைகள் வருவதை தவிர்க்க முடியும். அதிக குடிநீர் பருகியும் வியர்வையும் வராமல் சிறுநீரும் குறிப்பிடும்படியாக மிகக் குறைவாக வெளியேறும் போது மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. அதிகமாக காப்பி குடிப்பதனால் காப்பியில் உள்ள கபைன் சிறுநீரகத்தை சீரழியச் செய்யும் சக்த்தியுடையது என்று ஆய்வுகள் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாக்குமூலங்களையும் நாம் காணலாம், இந்த மூன்று உடலுறுப்புகளும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு உடையதாக இருப்பதால் உடல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறது. சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகி பாதி கட்டத்திலோ கடைசி கட்டத்திலோ இருக்குவரையில் பலருக்கு அதற்கான மாற்றங்களை உடல் வெளிப்படுத்தாமல் இருந்துவிடும் மருத்துவ வரலாறுகளும் உண்டென்கிறது மருத்துவம். காப்பி குடித்தாலே இந்த நிலையென்றால் மது வகைகளும் லாகிரி வஸ்த்துக்களும் உடலை எந்த அளவிற்கு நாசமாக்கும் என்பதை சொல்லவே வேண்டாம்.

மரணம் என்பது யாருக்கு எப்படி எந்த வகையில் வரும் என்பதை யாரும் முன்பே அறிய முடியாது என்றாலும் அறிந்தே உடலை பாதிப்பிற்க்குள்ளாக்குவதை தவிர்க்கலாமே இதனால் நாமும் நம்மை சுற்றி இருக்கும் நமது குடும்பத்தாரும் அல்லலுற வேண்டாமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.