Jump to content

தோசைக்கறி.


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோசைக்கறி.

 

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/16083_832481853437538_6128921188676150796_n.jpg

https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xap1/t1.0-9/10514473_832481850104205_9187206269219250217_n.jpg

 

 

தேவையான பொருட்கள்:

 

---  கத்தரிக்காய் _________________________  200 கி.

---  வெங்காயம் __________________________ 01  பெரிது.

---  பச்சைமிளகாய் _______________________  4 , 5 .

---  கடுகு , பெருஞ்சீரகம் , உப்பு , எண்ணை , கறிவேப்பிலை , பழப்புளி  ____ தேவையான அளவு.

---   தனிச் செத்தல் மிளகாய்த் தூள் ________  01 மேசைக் கரண்டி.( தூள் நருவல் , நொருவலாய் இருந்தால் நல்லது.)

---   இல்லையேனில் சதா. தூள் பாவிக்கலாம். உறைப்பு வேணுமெனில் அரைக் கரண்டி அதிகம் சேர்க்கவும்.

---

---  non stick  .. நொன் ஸ்டிக்  தாச்சி.

 

 

செய்முறை:

 

கத்தரிக்காயை மிகவும் சிறிய சதுரத் துண்டுகளாய் வெட்டவும்.

வெங்காயத்தையும் , ப. மிளகாயையும் சிறிதாய் அரிந்து கொள்ளவும்.

பழப்புளியை கறிக்கு அளவான நீர் விட்டு கரைத்து வைக்கவும்.

 

அடுப்பில் நொன்ஸ்டிக் தாச்சியைவைத்து சூடானதும் எண்ணை ஊற்றி அது காய்ந்ததும் , கடுகு போட்டு வெடித்ததும் , பெ. சீரகம் கறிவேப்பிலை வெங்காயம் போட்டு வதக்கவும். ( இப்ப உப்பு போடுவது தப்பு)

வெங்காயம் அரைப் பதத்தில் வர ப. மிளகாயையும் , கத்தரிக்காயையும் போட்டு நன்றாக வதக்கவும்.

இப்ப உப்பைச் சேர்க்கவும்.

கத்தரி வதங்கிவர மிளகாய்த் தூளையும் போட்டு பழப்புளியையும் விட்டு  10 நிமிடம் நன்றகக் கொதிக்க விடவும்.

பின் அடுப்பை நன்றாகக் குறைத்து வைத்து  5 நிமிடம் விட அது சட்டியில் ஒட்டாமல் பிரண்டு வரும்.

அதன்பின் எடுத்து தோசையுடன் பரிமாறவும்.

 

பி. கு : அடுப்பை மூட்ட மறக்க வேண்டாம். இந்த அயிட்டம் சப்பாத்தி , ரொட்டி , பூரிக்கும் சுப்பர்.

 

யான் பெற்ற சுவை பெறுக இவ் அவை...! :D :D

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16083_832481853437538_61289211886761507910514473_832481850104205_918720626921925

 

நாங்கள்.... தோசை சுடுவதே, அருமையாகத்தான்....
அதையும்.... சும்மா,  கறி வைத்து சாப்பிடச் சொல்லி, இருக்கிற வேலையை.... கூட்டாதீங்க சுவி.
உங்களது, பதிவைப் பார்த்து... தோசைக்கறி சாப்பிட்ட திருப்தியே.... போதும் எனக்கு. :D

 

 

Link to comment
Share on other sites

இப்படியான எண்ணை மிதக்கும் கத்தரிக்காய் புளிக்கறி புட்டுடன் சாப்பிடத்தான் சுவை அதிகம்.
 
தோசை ஒவ்வொரு கிழமையும் சாப்பிடுவோம். நல்லெண்ணையில் முறுக்கிய எண்ணைத்தோசை மிக்ஸியில் அரைத்த சம்பலுடன் சாப்பிடப் பிடிக்கும். அம்மியில் அரைத்த சம்பல் இன்னும் ருசி.. அம்மிக்கு எங்க போக.
 
பிளேட்டில ஒரு எட்டுத் தோசை இருக்கும் போல இருக்கே ?   :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியான எண்ணை மிதக்கும் கத்தரிக்காய் புளிக்கறி புட்டுடன் சாப்பிடத்தான் சுவை அதிகம்.
 
தோசை ஒவ்வொரு கிழமையும் சாப்பிடுவோம். நல்லெண்ணையில் முறுக்கிய எண்ணைத்தோசை மிக்ஸியில் அரைத்த சம்பலுடன் சாப்பிடப் பிடிக்கும். அம்மியில் அரைத்த சம்பல் இன்னும் ருசி.. அம்மிக்கு எங்க போக.
 
பிளேட்டில ஒரு எட்டுத் தோசை இருக்கும் போல இருக்கே ?   :D

 

 

அடப் பாவி,  சற்றலைற் படம் பிடிச்ச மாதிரி...

 

சட்டிக்குள்ளை.... எத்தனை தோசை இருக்கும் என்று,

கணக்குச் சொல்லக் கூடிய தமிழ் அறிஞ்சர்கள் இருந்தும்....

நமது தமிழ் ஈழப் போராட்டம், தோற்றது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியான எண்ணை மிதக்கும் கத்தரிக்காய் புளிக்கறி புட்டுடன் சாப்பிடத்தான் சுவை அதிகம்.
 
தோசை ஒவ்வொரு கிழமையும் சாப்பிடுவோம். நல்லெண்ணையில் முறுக்கிய எண்ணைத்தோசை மிக்ஸியில் அரைத்த சம்பலுடன் சாப்பிடப் பிடிக்கும். அம்மியில் அரைத்த சம்பல் இன்னும் ருசி.. அம்மிக்கு எங்க போக.
 
பிளேட்டில ஒரு எட்டுத் தோசை இருக்கும் போல இருக்கே ?   :D

 

 

உப்பிடியான ஆக்களை நம்பி வீட்டிலை தோசை சுடேலாது  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியான ஆக்களை நம்பி வீட்டிலை தோசை சுடேலாது  :lol:

 

உப்பிடியான ஆக்களுக்கு,  கோதம்ப மாவிலை....

தோசை சுட்டுக், குடுக்க வேணும் அண்ணை. :D

உளுந்து.... கண்ணிலையும், காட்டப் படாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை Chef இன் கைப்பக்குவம் சுவி அண்ணா வீட்டில் தெரிகிறது. தோசைக்கறி தோசையுடன்தான் சாப்பிடுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் பருத்தித்துறை அயிட்டம்தான் மீரா , ( என் தங்கை பருத்தித்துறையின் மருமகளாவாள்.). :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் பருத்தித்துறை அயிட்டம்தான் மீரா , ( என் தங்கை பருத்தித்துறையின் மருமகளாவாள்.). :)

 

என்னய்யா சுவி அயிட்டம் பத்தி சொல்லுறீர் இந்த கோதாரிக்கு உது பக்கம் வாரயில்லை :lol:

 

ஆட்டுகறி ,மாட்டுக்கறி ,கோழி கறி போய் இப்ப தோசை கறி போல நடக்கட்டும் விபரீதங்கள் நடக்காவிட்டால் சரி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசைக்கறி.

 

1zpgx9y.jpg

 

இணைத்த படத்தில் பெரிய பாத்திரத்தில் இருப்பது நீங்கள் சொன்ன "கத்தரிக்காய் வதக்கல்" என நினைக்கிறேன்.  அதன் அருகே சிறிய பாத்திரத்தில் பச்சை பட்டாணியில் செய்த தொக்கு மாதிரி தெரியுதே...? :o

கத்தரிக்காய் வதக்கல் செய்தால், பட்டாணி தொக்கு இலவசமா சுவி...? :o:)

 

.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்த படத்தில் பெரிய பாத்திரத்தில் இருப்பது நீங்கள் சொன்ன "கத்தரிக்காய் வதக்கல்" என நினைக்கிறேன்.  அதன் அருகே சிறிய பாத்திரத்தில் பச்சை பட்டாணியில் செய்த தொக்கு மாதிரி தெரியுதே...? :o

கத்தரிக்காய் வதக்கல் செய்தால், பட்டாணி தொக்கு இலவசமா சுவி...? :o:)

 

.

 

 

அது சாதாரணமாய் நாம் செய்யும் சம்பல்  வன்னியன்...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா தோசையோட யூஸ் தான் குடிக்கிறவர்:)...நான் என்டால் தேத்தண்ணி தான் குடிக்கிறனான்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தோசையுடன் யூஸ் குடிப்பதில்லை. அது படமெடுத்தவரின் அழகியல்.

 

நான் பொதுவாய் சாப்பிடும் கடைசித் தோசையின் மேல் நிறையச் சம்பல் பரப்பி அதை றோலாய் சுறுட்டி கீழல் சம்பல் உதிராதவாறு மடித்துப் பிடித்து சாப்பிடுவேன். அதன்பின் எதுவும் குடிப்பதில்லை...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தோசையுடன் யூஸ் குடிப்பதில்லை. அது படமெடுத்தவரின் அழகியல்.

 

நான் பொதுவாய் சாப்பிடும் கடைசித் தோசையின் மேல் நிறையச் சம்பல் பரப்பி அதை றோலாய் சுறுட்டி கீழல் சம்பல் உதிராதவாறு மடித்துப் பிடித்து சாப்பிடுவேன். அதன்பின் எதுவும் குடிப்பதில்லை...! :)

 

இப்பவே தோசை சாப்பிட வேணும் போலை இருக்கு :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.