Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்  3

 வாக்கியங்கள் எழுதும் முறைகளுள் மிகவும் கவனித்தற்பாலன இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும்.

 பொருள் உணர்வுக்கு ஏற்ப, வரிக்குவரி இடம்விட்டு எழுதுதல் வேண்டும். பத்திக்குப் பத்தி இடைவெளிவிட்டுத் தொடங்குதல் வேண்டும்.

சொற்களுக்கு இடையே இடம்விட்டு எழுதுதலையும் சேர்த்து எழுதுதலையும் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்க.

 பாரதியார் என்று சேர்த்து எழுத வேண்டியதைப் பாரதி யார் என இடம்விட்டு எழுதின் ஏற்படும் பொருள் மாற்றத்தை நீங்கள் அறிவீர்கள்!

“அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் “அவள், அக்காள்வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் (இடம் விட்டு எழுதுவதால் ஏற்பட்டுள்ள) பொருள் வேறுபாட்டை அறிந்து கொள்க.

“மூலநட்சத்திரத்தில் பிறந்தான்” என்பதை “மூல நட்சத்திரத்தில் பிறந்தான்” - என இடம்விட்டு எழுதுவதால் தோன்றும், நகைச்சுவைப் பொருளை யாவரும் அறிவோம்.

எனவே, இடம்விட்டு எழுத வேண்டியதை இடம்விட்டு எழுதவும், சேர்த்து எழுத வேண்டியதைச் சேர்த்தும் எழுதிடவும் வேண்டும் என்பதையும் அறிந்து நினைவில் கொள்க.

எழுதும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முறைகள்:-

1. பண்புத்தொகை, வினைத்தொகை முதலானவை ஒருசொல் நீர்மைத்து. எனவே, அவற்றைப் பிரித்து எழுதுதல் கூடாது.

எடுத்துக்காட்டு:
செந்தமிழ்     (சரி)     
செந் தமிழ்     (தவறு)
பண்புத்தொகை
        
சுடுசோறு     (சரி)     
சுடு சோறு     (தவறு)     
 வினைத்தொகை

2. வேற்றுமை உருபுகளைப் பிரித்து எழுதல் கூடாது.

எடுத்துக்காட்டு:
தாயோடு அறுசுவைபோம்     (சரி)     
தாய் ஓடு அறுசுவைபோம்     (தவறு)
ஓடு வேற்றுமையுருபு

3. இடைச்சொற்களைச் சேர்த்து எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
சான்றோரும் உண்டுகொல்?     (சரி)     
சான்றோரும் உண்டு கொல்     (தவறு)
கொல் இடைச்சொல்

4. “துணை வினையைச்” சேர்த்து எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
சென்றுவிடு     (சரி)     
சென்று விடு     (தவறு)
‘விடு’ - துணைவினை
          
மறந்துவிட்டாள்     (சரி)     
மறந்து விட்டாள்     (தவறு)
‘விட்டாள்’ - துணைவினை

5. உடம்படு மெய்களைச்’ சேர்த்து எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
காண + இல்லை     = காணவில்லை     (சரி)     
காண இல்லை     (தவறு)
‘வ்’ - உடம்படுமெய்
              
நிலா + ஒளி     = நிலாவொளி     (சரி)     
நிலா ஒளி     (தவறு)
‘வ்’ உடம்படுமெய்

6. ‘கள்’ விகுதியைப் பிரிக்காமல் எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
மரங்கள் நட்டார்     (சரி)     
மரங் கள் நட்டார்.     (தவறு)
‘கள்’ விகுதி
          
பூனைகள் குடித்தன.     (சரி)     
பூனை கள் குடித்தன.     (தவறு)
‘கள்’ விகுதி



 மேற்கூறியவை தவிர, எழுதும்பொழுது கவனத்திற் கொள்ள வேண்டிய சில பொது முறைகளையும் அறிந்து கொள்க. அவையாவன:

தாளின் தலைப்புறம், அடிப்புறம், இடப்புறம் ஆகியவற்றில் குறைந்தது ஓர் அங்குலம் இடம் விட்டு எழுதுக.

பத்தி தொடங்கும்பொழுது, மற்ற வரிகளைக் காட்டிலும் சிறிது தள்ளிப் பத்தியைத் தொடங்குக.



முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்புக் குறிகள் வரும்போது  சிறிது இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தைத் தொடங்குக.

செய்யுள்களை எழுதும்பொழுது, சீரும் அடியும் பிறழாமல் எழுதுதல் வேண்டும். ஒரு சீருக்கும் அடுத்த சீருக்கும் இடைவெளிவிட்டு எழுதுதல் வேண்டும்.

 தமிழ் மொழியில் ல-ள-ழ; ர-ற; ன-ண-ந; முதலான வரிவடிவங்களை ஒலிக்கும் பொழுது முறையாக ஒலிக்க வேண்டும். அவ்வாறு ஒலிக்காவிடில் பொருள் தடுமாற்றமும் ஏற்படும்.

இவை, இதுவோ அதுவோ என்ற மயக்கம் தரும் ஒலிகள். ஆதலால், இவற்றை மயங்கொலிகள் என வழங்குவர்.

 முதலில் ல-ள-ழ ஆகியவற்றின் ஒலிவேறுபாடு அறிந்து ஒலிக்க. அவ்வாறு ஒலிக்காவிடில் எழுதுவதிலும் தடுமாற்றம் வரும்; பொருளும் வேறுபடும் என்பதைக் கீழ்க்காணுமாறு அறிந்து பயன்படுத்துக.

அலகு     - பறவையின் மூக்கு
அளகு     - பெண் மயில்
அழகு     - எழில், வனப்பு, கவின்

அலை     - கடல் அலை
அளை    - புற்று
அழை     - கூப்பிடு

இலை     - மரம், செடி, கொடிகளின் இலை
இளை     - (உடல்) இளைத்தல்
இழை     - நூல்

கலை     - 64 கவின் கலைகள்
களை     - பயிர்களுக்கு இடையில் தோன்றும் களை
கழை     - மூங்கில்

தலை     - ஓர் உறுப்பு
தளை     - விலங்கு
தழை     - தழைத்தல்

வலி     - வலிமை
வளி     - காற்று
வழி     - பாதை

 அடுத்து, ர-ற ஒலிவேறுபாடு அறிந்து ஒலிக்கவும். பொருள் வேறுபாடு அறிந்து பயன்படுத்தவும். கீழ்க்காணும் முறையில் அறிந்து கொள்க:-

அரி   - திருமால், அரிமா (சிங்கம்)
அறி  - அறிந்து கொள், தெரிந்துகொள்

அலரி     - அலரிப்பூ
அலறி     - அழுது

இரத்தல்   - பிச்சையெடுத்தல்
இறத்தல்   - சாதல்

உரவு     - வலிமை
உறவு     - சுற்றம்

உரை     - சொல்
உறை     - தலையணை உறை

எரி   - தீ
எறி  - வீசு

கரி         - யானை
கறி     - மிளகு, காய்கறி

குரங்கு     - வானரம் (ஒரு விலங்கு)
குறங்கு     - தொடை (ஓர் உறுப்பு)

கூரை     - வீட்டுக் கூரை
கூறை     - துணி

சீரிய     - சிறந்த
சீறிய     - சினந்த

பரவை  - கடல்
பறவை     - பறப்பனவாகிய உயிரினம்

மரை     - தாமரை, மான்
மறை     - வேதம்

இவை போல்வனவற்றையும் கண்டறிந்து பயன்படுத்துக.

 ந-ண-ன ஒலி வேறுபாடு அறிந்து முறையாக ஒலிக்கவும், பொருள் வேறுபாடு உணர்ந்து பயன்படுத்தவும் கீழ்க்காணும் முறையில் அறிந்து கொள்க.

அணல்     - தாடி
அனல்     - நெருப்பு

ஆணி  - இரும்பால் ஆன ஆணி
ஆனி   - தமிழ் மாதங்களுள் ஒன்று


ஊண்     - உணவு
ஊன்     - இறைச்சி

கணம்     - கூட்டம்
கனம்     - பளு, பாரம்

பேண்     - காப்பாற்று
பேன்     - தலையில் வாழும் (ஓர் உயிரி) பேன்

மணம்  - நறுமணம்
மனம்   - உள்ளம்

மணை     - உட்காரும் பலகை
மனை     - வீடு

மாண்     - பெருமை
மான்     - புள்ளிமான் (ஒருவகை விலங்கு)

முந்நாள்     - மூன்று நாள்
முன்னாள்     - முந்தைய நாள்

தேநீர்     - தேயிலை நீர்
தேனீர்     - தேன்போலும் இனிய நீர்

திணை     - நிலம், ஒழுக்கம்
தினை     - தானிய வகையுள் ஒன்று, சிறிய

கணை   - அம்பு
கனை    - குதிரை கனைத்தல்

இவை போன்றனவற்றைக்  கண்டறிந்து பயன்படுத்துக.



நம் முன்னோர்கள், எப்பொருளை, எச்சொல்லால் இயம்பினரோ, அப்பொருளை அச்சொல்லால் இயம்புதல் அல்லது வழங்குதல்' மரபு எனப்படும்.

அம்மரபுகள் சிலவற்றைத் தெரிந்து கொள்க.

 பறவை - விலங்குகளின் ஒலி மரபுகள்
    
சேவல் கூவும்     
நாய் குரைக்கும்
          
கூகை குழறும்     
பன்றி உறுமும்
          
மயில் அகவும்     
குதிரை கனைக்கும்
          
கிளி பேசும்
எருது எக்காளமிடும்
          
வண்டு முரலும்     
சிங்கம் முழங்கும் (கர்ஜிக்கும்)
          
யானை பிளிறும்
எலி கீச்சிடும்

பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்

கோழிக் குஞ்சு     
நாய்க் குட்டி
          
கிளிக் குஞ்சு     
புலிப் பறழ்
          
அணிற்பிள்ளை     
சிங்கக் குருளை
          
கீரிப்பிள்ளை     
யானைக் கன்று
பசுவின் கன்று

 தாவர உறுப்புகள் பற்றிய மரபுகள் :

 

வேப்பந்தழை
தாழை மடல்
          
ஆவரங் குழை     
முருங்கைக் கீரை
          
நெல்தாள்     
தென்னங் கீற்று
          
வாழைத் தண்டு
கம்பந்தட்டு (தட்டை)
          
கீரைத் தண்டு
சோளத் தட்டு
கரும்புத் தோகை

பறவை - விலங்குகளின் உறைவிட மரபுகள் :

 

கோழிப் பண்ணை     
ஆட்டுப் பட்டி
          
குருவிக் கூடு     
நண்டு வளை
          
சிலந்திவலை     
கறையான் புற்று
          
எலிவளை
(எலிப் பொந்து)     
மாட்டுத் தொழுவம்
          
குதிரைக் கொட்டில்

 
பெயருக்கு ஏற்ற வினை

வீடு கட்டினார்
சுவர்எழுப்பினார்
கூரைவேய்ந்தார்

குடம்வனைந்தார்
கூடை முடைந்தார்

செய்யுள் இயற்றினார்
நூல் எழுதினார்
    
    

சிற்பம் செதுக்கினார்
ஓவியம் வரைந்தார்
வண்ணம் தீட்டினார்
    
பாட்டுப் பாடினார்
நாடகம் நடித்தார்
நாட்டியம் ஆடினார்
    
தண்ணீர் குடித்தார்
பால் பருகினார்
உணவு உண்டார்
முறுக்குத் தின்றார்

மீண்டும் சந்திப்போம்

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply
'தமிழ் படிப்போம்'
 
தமிழ் படிப்போ ம்..... நடக்கட்டும்!!.
 
 
வரவுக்கு நன்றி. வாத்தி யார்...??????
 
 
Link to comment
Share on other sites

நன்றி வாத்தியார் தமிழ்படிக்க வந்திட்டன். பாடத்தை துவங்குங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கும்.... "இடம்விட்டு எழுதுதலும், சேர்த்து எழுதுதலும்" சரிவரத் தெரியாமல்.. பிரச்சினை உள்ளது.
 

அத்துடன்.... ஆச்சரியக்குறி, கொமா, (......) அடைப்புக் குறிக்குள் உள்ள நீண்ட புள்ளி எங்கு போடவேண்டும் என்ற பாடத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன் வாத்தியார். :)

Link to comment
Share on other sites

தமிழ்ச் சாரல் பொழியட்டும்...

 

தலைப்புக்கு சம்பந்தமில்லையென்றாலும் வாத்தியாரை தவிர வேறு யாரிடமும் கேட்கத் தோனவில்லை. கேள்வி இதுதான்..
சாரலுக்கும் தூறலுக்கும் என்ன வித்தியாசம் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய ஊக்கங்களுக்கும் வரவுகளுக்கும் நன்றிகள்
இன்று வாக்கியங்கள் பற்றித்  தொடர்ந்து படிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சாரல் பொழியட்டும்...

 

தலைப்புக்கு சம்பந்தமில்லையென்றாலும் வாத்தியாரை தவிர வேறு யாரிடமும் கேட்கத் தோனவில்லை. கேள்வி இதுதான்..

சாரலுக்கும் தூறலுக்கும் என்ன வித்தியாசம் ?

 

 

மழைத்துளிகளின் சிதறல்களைச் சாரல் எனவும்

மழை ஓய்ந்து குறைந்து பெய்வதை தூறல் என்றும் கூறலாம் என நினைக்கின்றேன்.

தூறல் என்றால் சிறிய துளிகளாக ஆரம்பிக்கும் சிறுமழை எனவும் கூறலாம்.

இதைவிட வேறு பொருள் கூட இருக்கலாம் தெரிந்தவர்கள் கூறுங்கள்   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கிய வகை
 

தமிழ் மொழியில் வாக்கியங்கள் மிக முக்கியமானவை.
நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு அறியத்தர வாக்கியங்கள் உதவுகின்றன.

ஒரு சம்பவத்தை விவரிப்பதற்கோ அல்லது
பல சம்பவங்களை விவரித்து ஒரு கதை எழுதுவதற்கோ வாக்கியங்கள் இன்றியமையாதவை.

ஒரு கட்டுரையை எழுதும்போது பல வாக்கியங்கள் அமைக்கப்படுகின்றன.
வாக்கியங்கள் பிழைகள் இன்றித் தூய தமிழ்ச் சொற்களால் அமைக்கப்படல் வேண்டும்.நீங்கள் நினைக்கும் கருப்பொருளை இலகுவாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வாக்கியங்கள் அமைக்கப்படல் வேண்டும்.
நீங்கள் கூற வரும் பொருளுக்கேற்ப சொற்றொடர்களையும் மரபுச் சொற்களையும் பயன்படுத்தி வாக்கியங்கள் எழுதப்பட்டால், அவை சிறப்படையும். பேச்சு நடையில் வழங்கப்படும் சொற்களைச் செம்மைப்படுத்தித் தெளிவான நடையில் வாக்கியங்களை  எழுத வேண்டும். பலவகையான வாக்கியங்களைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் பயன்படுத்தல் வேண்டும்.

சொற்கள் பல சேர்ந்து நின்று ஒரு பொருளைத் தருமாயின் அது சொற்றொடர் அல்லது வாக்கியம் எனப்படும்.

வாக்கியம் என்பது இருவகைப்படும்

1.கருத்து வாக்கியம்
2. அமைப்பு வாக்கியம்

கருத்து வாக்கியங்கள் கருத்திற்கேற்ப நான்கு வகைப்படும்.

செய்தி வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாக எடுத்துரைப்பது செய்தி வாக்கியம் எனப்படும்.கண்ணன் பரிசு பெற்றான்.   "கண்ணன் பரிசு பெற்றான்"  என்ற  இந்த வாக்கியத்தில் ஒரு செய்தி உணர்த்தப்படுகின்றது.

அடுத்தது வினா வாக்கியம்

வாத்தியாரின்  பெயர் என்ன?
வாத்தியார் எங்கே ஆசிரியராகக் கடமையாற்றினார்?
இந்த இரு வாக்கியங்களும் ஒரு வினாப் பொருளை உணர்த்தி நிற்கின்றன. எனவே அவை வினா வாக்கியங்கள் எனப்படும்.

கருத்து வாக்கியங்களில் இன்னொரு வகை உணர்ச்சி வாக்கியம் எனப்படும். இது உணர்ர்ச்சிகளை உணர்த்தும் விதமாக அமையும்.
உவகை,அவலம், அச்சம்,இழிவு,வெகுளி,வியப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் வாக்கியங்கள் இவையாகும். இந்த வாக்கியங்கள் உணர்த்தும்  பொருளுக்கேற்ப ஆச்சரியக் குறிகளைப் பெறுகின்றன்.

தோட்டத்தில் அழகான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன!

 

ஜெனீலியாவின் அழகுதான் என்னே! :wub: 

 

இது வியப்பு

ஐயகோ! அன்னாரின் இழப்பு ஈடு செய்யவியலுமோ!

 

இது இரக்கம்

இன்னொரு கருத்து வாக்கியமுறை  ஏவல் வாக்கியம் அல்லது கட்டளை வாக்கியம்  எனப்படும். எதிரே இருப்பவரைப்பார்த்து ஏதாவது செய்யும்படி ஏவுதல் அல்லது கட்டளையிடல் என்ற பொருளை உணர்த்தி இந்த வாக்கியம் அமைக்கப்படும்.

தமிழைப் படி.
உணவை உண்.
நீரை அருந்து.
பாலைப் பருகு.   
என்பன ஏவல் அல்லது கட்டளை வாக்கியத்திற்கு உதாரணங்களாகும்.

அமைப்பு வாக்கியத்துடன் மீண்டும் சந்திப்போம்

 

Link to comment
Share on other sites

மழைத்துளிகளின் சிதறல்களைச் சாரல் எனவும்

மழை ஓய்ந்து குறைந்து பெய்வதை தூறல் என்றும் கூறலாம் என நினைக்கின்றேன்.

தூறல் என்றால் சிறிய துளிகளாக ஆரம்பிக்கும் சிறுமழை எனவும் கூறலாம்.

இதைவிட வேறு பொருள் கூட இருக்கலாம் தெரிந்தவர்கள் கூறுங்கள்   

 

 

நன்றி வாத்தியார் 

 

இணையத்தில் தேடிய போது கிடைத்தது. சரியா எனத்  தெரியவில்லை ??

தூறல் -> சிறுமழை 
சாரல் -> மலைப் பகுதிகளில் மேகங் கட்டிய தூறல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைப்பு வாக்கியம்

 

இது மூன்று வகைப்படும்

1.தனி வாக்கியம்

மன்னன் புலவருக்குப் பரிசளித்தான்.
மன்னனும் இளவரசனும் போரில் இறந்தனர்  

மேலே குறிப்பிட்ட வாக்கியங்களில்  முதலாவது வாக்கியத்தில் மன்னன்
எழுவாய் ஆகவும் பரிசளித்தான் என்பது பயனிலையாகவும் இருக்கின்றது.
இரண்டாவது வாக்கியத்தில் மன்னனும் இளவரசனும் என்ற இரண்டு எழுவாய்களும் இறந்தனர் என்ற ஒரு பயனிலையும் இருக்கின்றது.
இரண்டாவது வாக்கியத்தை இரண்டு வாக்கியங்களாக எழுதலாம் மன்னன் போரில் இறந்தான்
இளவரன் போரில் இறந்தான் என இரண்டு  தடவை எழுதாமல்  ஒரே
வாக்கியமாக சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதுவதே சிறந்தது.
இப்படிச் சொற்களைக் கோர்வையாக்கி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களுக்கு ஒரு பயனிலை என்ற அடிப்படையில்  அமைக்கப்படும் இந்த அமைப்பு வாக்கியத்தை தனி வாக்கியம் என்பர்.

2.தொடர் வாக்கியம்  

திருநெல்வேலிச் சந்தை ஒருகாலத்தில் வியாபாரத்தில் முதன்னிலையில் இருந்தது; இன்று அழிந்து போயிருக்கின்றது.

சோழ மன்னன் வீரன் மட்டும் அல்லன்; நீதிமானாகவும் இருந்தான்;
ஏழைகளுக்கு உதவி நின்றான்.

மேலே குறிப்பிட்ட வாக்கியங்களில் உள்ள எழுவாய் பலமுறை வராமல் ஒரேமுறை வந்திருக்கின்றது. ஆனால் அந்த வாக்கியங்களில்  பல பயனிலைகள் உள்ளன. இவ்வாறு எழுவாயைப் பலமுறை எழுதாமல்
சுருக்கமாகவும் தெளிவாகவும் பொருளுக்கேற்றவாறு ஒருமுறை மட்டும் எழுதி வெவ்வேறு  பயனிலைகளைப் பொருள் தகுந்து    இணைத்து எழுதும் முறையைத் தொடர் வாக்கியம் என்பர்.


3.கலவை வாக்கியம்

1.மக்களிடையே தீண்டாமைத் தீ பரவியிருக்கின்றது.
2.மக்களிடையே பரவியிருக்கும் தீண்டாமைத் தீயை அகற்றுவது நம் கடமை


3.தீண்டாமைத்  தீயை மக்களிடமிருந்து அகற்றுவது நம் கடமை  

முதல் இரண்டு  வாக்கியங்களையும்  பொருள் குன்றாமல் கலந்து  மூன்றாவது வாக்கியம் எழுதப்பட்டுள்ளது.

"தீண்டாமைத் தீ" என்பது ஒரு துணை வாக்கியமாகவும்  "மக்களிடமிருந்து அகற்றுவது நம் கடமை"  என்பது முதன்மை வாக்கியமாகவும் கலந்திருக்கின்றன. இப்படியான வாக்கியங்களை கலவை வாக்கியம் என்பர்.
 
மீண்டும் சந்திப்போம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வகுப்பு தொடங்கிட்டுதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வகுப்புக்கு, வந்த ஆக்கள் கன பேரை காணவில்லை.
எல்லாரும்... பெயில் விட்டிட்டனம் போலை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வகுப்புக்கு நான் வரேல்லை பாஞ்சும் சுமேயும் இப்பவும் வருகிறவர்களோ?...... :blink: :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வகுப்புக்கு நான் வரேல்லை பாஞ்சும் சுமேயும் இப்பவும் வருகிறவர்களோ?...... :blink: :blink:

 

பாஞ்ச்... பாஸ் பண்ணின படியால், இந்த வகுப்புக்கு வருகிறார்.

சுமே... பெயில் விட்ட படியால், வருவதில்லை.

அதோடை... படிச்சது காணும்  என்று, வீட்டில் மறித்து விட்டார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன்  ஐயா ...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பிற்கு வருகை தந்துள்ள மாணவர்கள் அனைவருக்கும்  வந்தனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தற் குறிகள்

வாக்கியங்களில் அங்கு அங்கு புள்ளிகள் குறிகள் இடப்பட்டிருக்கும். அப்படியான அடையாளங்களை நிறுத்தற் குறிகள் என அழைப்பர்.
நிறுத்தற் குறிகள் பல வகைப்படும்.

1. காற் புள்ளி  (,)
2. அரை புள்ளி (;)
3. முக்காற் புள்ளி (: )
4.முற்றுப்  புள்ளி (.)
5. உணர்ச்சிக்  குறி (!)
6. வினாக் குறி (?)
7. இரட்டை மேற்கோள் குறி  (" ")
8. ஒற்றை மேற்கோள் குறி (``)   

 

காற்புள்ளி

பொருள்களை எண்ணுமிடங்களிலும் விளி முன்னும், வினையெச்சங்களுக்குப் பின்னும், மேற்கோள் குறிக்கு முன்னும், ஆதலால், ஆகவே, ஆயினும் முதலிய சொற்களுக்குப் பின்னும், முகவரியில் இறுதி வரிக்கு முன்னைய வரிகளின் இறுதியிலும் இடப்படுகின்றது.

காற்புள்ளி இடுதல் தொடர்பான சில முதன்மையான விடயங்கள்  

 சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கடுக்காகவோ

பிரிக்கும் போது காற்புள்ளி இடவேண்டும்

உதாரணம்

 தனித்தனியாகப் பிரித்தல்

அறம், பொருள், இன்பம், வீடு என்பன உறுதிப் பொருள்களாகும்.

 அடுக்கு அடுக்காகப் பிரித்தல்:

நட்புக்குக் குகனும் பரதனும், பிசிராந்தையாரும் கோப்பொருஞ் சோழனும்,

உதயணனும் யூகியும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

 சொற்றொடரில், எழுவாய், ஒன்றாக நின்று. பல பயனிலைகளைப் பெற்று வரும் போது, இறுதிப் பயனிலை தவிர பிறவற்றிற்குப் பின் காற்புள்ளி இட வேண்டும்.

உதாரணம்
கணவன் கொலை செய்யப்பட்டான் என்று கேட்ட கண்ணகி பொங்கி எழுந்தாள் , விம்மினாள், அரற்றினாள், ஏங்கினாள், கலங்கினாள், மயங்கினாள், விழுந்தாள்.


பொருள் மயக்கம் நீக்கித் தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் காற்புள்ளி இட வேண்டும்.

உதாரணம்
 அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றதால் நான் பார்க்கவில்லை.


கல்வி, அறமும் பொருளும் இன்பமும் வீடும் நல்கும் - என்னும் சொற்றொடரில் எண்ணும் மைகளுக்குப் பின் காற்புள்ளி இடுதல் தவறு.

பெரிய சொற்றொடர்கள் இணைக்கப்படும் பொழுது எண்ணும்மை இருப்பினும் தெளிவுக்காகக் காற்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்
 குறிஞ்சிக் காட்சிகளைக் கூறுவதில் வல்லவராகிய கபிலரும், வரலாற் றுக் குறிப்புக்களை வழங்குவதில் சிறந்தவராகிய பரணரும், பத்துப் பாட்டில் இரண்டு பாடல்களை இயற்றியவராகிய நக்கீரரும் கடைக் கழகப் புலவர்கள்.



 

அரைப்புள்ளி

 ஒரே எழுவாயில் பல பயனிலைகள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்

 பலர் வயிற்றளவை மீறி உண்பர்; பசியாலும் உண்பர்; கிடைத்த போதெல்லாம் உண்பர்; நாவிற்காக உண்பர்; வயிறு கெட்டும் உண்பர்.

 கண்ணன் தேர்வு எழுதினான்; ஆனால் அதில் தேறவில்லை.

 காரணம் காட்டும் ஏனென்றால் என்பதற்கு முன் அரை புள்ளி இட வேண்டும்.


உதாரணம்
 நான் இன்று பேச மாட்டேன்; ஏனென்றால், என் தொண்டை நோயுற்றிருக்கிறது.
 

 

 

முற்காற்புள்ளி

 உள் தலைப்பு அமைக்கும் போதும், ஒருவர் கூற்றை விளக்குமிடத்தும், சொற்றொடரில் கூறியதொன்றை விரித்துக் கூறும் போதும் முக்காற்புள்ளி இடப்படுகின்றது.

உதாரணம்
வாழ்வு இரு திறத்தது: ஒன்று உயிர் வாழ்வு; மற்றொன்று உடல் வாழ்வு

 
முற்றுப்புள்ளி

 சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படுகின்றது.

உதாரணம்
 நீ உள்ளே வா.

சுருக்கச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி இட வேண்டும்.

 

உதாரணம்
 திரு. மணி. திருநாவுக்கரசு.

 திரு. திரு. வி. க.

 பட்டப் பெயர்களுக்குப் பின் முற்றுப்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்
 திரு. இ. செழியன், க. மு.

வினாக்குறி

வினாச் சொற்றொடர்களின் இறுதியில் இடப்படுகின்றது.

உதாரணம்
 பாடுபட்டால் பயன் இல்லாமல் போகுமா?

சொற்றொடருக்கு நடுவில் கேள்விக்குறி வரக்கூடாது. நீங்கள் யார் என்று அவர் கேட்டார். என்னும் சொற்றொடரில் யார் என்ற சொல்லுக்குப் பின்னால் வினாக்குறி கண்டிப்பாக இருக்கக் கூடாது.

உணர்ச்சிக் குறி

வியத்தல், வரவேற்றல், வாழ்த்தல், வைத்தலின் போது பயன்படுத்தப்படு கின்றது. நம்ப முடியாது என்பதையும் இகழ்ச்சியுடையது என்பதையும் காட்டுமிடங்களிலும் உணர்ச்சிக் குறியிடுதல் உண்டு.

உதாரணம்

அந்தோ! பல பழந்தமிழ் நூல்கள் அழிந்தனவே.

வாழி! வாழி! தமிழ் நாடு வாழியவே!

கண்டவாறு உணர்ச்சிக் குறியை!, !!, !!! இவ்வாறெல்லாம் இடுதல் விரும்பத் தக்கதன்று.

 

ஒற்றை மேற்கோள் குறி

சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் ஒற்றை மேற்கொள் இடப்படுகின்றது.

உதாரணம்

 பரதன், “நான் என் செய்வேன்! அண்ணன், ‘நீ போ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்து விட்டேன்” பிரித்துக் காட்டுவதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்ததற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்

 ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா.

 ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.

இரட்டை மேற்கோள் குறி

 

தன்கூற்றை வலியுறுத்தத் தன்னினும் சிறந்தோர் கூறியவற்றைக் எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.

உதாரணம்

 “அறம் தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர்.

 மன்னன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங் கோலனாவேனாக!” என்று சூளுரைத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்குக் குகனும் பரதனும், பிசிராந்தையாரும் கோப்பொருஞ் சோழனும், உதயணனும் யூகியும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும்  ஊக்கத்திற்கும்  பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேற்றுமை

 

வேற்றுமை என்ற  சொல்லை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வேற்றுமை என்றால் வேறுபடுத்துதல் என்று அர்த்தம்.
இலக்கணத்தில் வேற்றுமை என்றால் என்ன என்பதை இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

ஒரு பெயர்ச் சொல்லுடன் ஒரு எழுத்தோ அல்லது ஒரு சொல்லோ சேர்ந்து அந்தப் பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதை வேற்றுமை என்பர்.

குமார் அடித்தான்  (குமார்  பெயர்ச்சொல்)
குமாரை அடித்தான் (அடித்தான் வினைச்சொல்)

என்ற இரண்டு வாக்கியங்களையும் எடுத்துக்கொண்டால் முதல் வாக்கியத்தில் குமார் எழுவாய் ஆகவும் அடித்தான் என்பது பயநிலையாகவும் அமைந்திருக்கின்றது. குமார் யாரையோ அடித்தான் என்ற பொருளில் அந்த வாக்கியம் அமைந்துள்ளது.

இரண்டாவது வாக்கியத்தில் குமார் என்ற சொல்லுடன் ஐ என்ற ஒரு எழுத்துச் சேர்ந்து முதலாவது வாக்கியத்தின் கருத்தை வேற்படுத்துகின்றது. அதாவது குமாரை யாரோ ஒருவன் அடித்தான் என்ற பொருளை உணர்த்துகின்றது.
முதல் வாக்கியத்தில் அடித்தவன் இரண்டாவது வாக்கியத்தில் அடி வாங்கியவன் ஆகின்றான்.
இப்படிப் பெயர்ச் சொல்லின்  பொருள் வேறுபடுதலே  வேற்றுமை எனப்படும். பொருள் வேற்றுமையை உருவாக்கும்`ஐ` போன்றவை வேற்றுமை உருபுகள் எனப்படும்.

வேற்றுமை எட்டு வகைப்படும். அவை முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தா, ஆறாம், ஏழாம், எட்டாம் வேற்றுமை என அழைக்கப்படும்.

சரி இப்போது முதலாம் வேற்றுமையைப் பற்றிப் பார்ப்போம்

முதலாம் வேற்றுமை

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
ஒரு பெயர்ச் சொல் எழுவாயாக வந்து  ஒரு வினைச் சொல்லைப் பயனிலையாகப் பெற்று இயல்பான பொருளை உணர்த்தி வேறுபாடுகள் எதையும் காட்டாது  நிற்பதை முதலாம் வேற்றுமை என்பர்.

முதல் வேற்றுமை எப்போதும் வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகியவற்றுள் ஒன்றைக் கொண்டே முடியும்.

குமார் அடித்தான். ( வினைமுற்று)
குமார் என் நண்பன்.(பெயர்ச்சொல்)
குமார் என்பவன் யார்? (வினாச்சொல்)

இவ்வாறு பெயர்ச்சொல் எழுவாயாக வந்து இயல்பான பொருளைத் தருவதால் அவை முதலாம் வேற்றுமையாகின்றன.
முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை எனவும் அழைப்பர்.

 

Link to comment
Share on other sites

போன வகுப்புக்கு நான் வரேல்லை பாஞ்சும் சுமேயும் இப்பவும் வருகிறவர்களோ?...... :blink: :blink:

 

 

சுமே மதிலுக்கு மேலாலை சென்றல் boys யை எட்டிப் பார்த்தது எண்டு சொல்லி வகுப்பாலை கலைத்து விட்டினம்.  :blink:  :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டம் வேற்றுமை

 

ஒரு வாக்கியத்தில் இருக்கும் ஒரு பெயர்ச்சொல்லுடன் ´ஐ´ என்ற உருபு சேர்ந்து  அந்தப் பெயர்ச் சொல்லை செயப்படு பொருளாக மாற்றுவதை இரண்டாம் வேற்றுமை என்பர். இரண்டாம் வேற்றுமைக்குச் செயற்படு பொருள் வேற்றுமை எனவும் பெயர் உண்டு.

"குமார் பந்தை அடித்தான்"  என்ற வாக்கியத்தில் இயல்பான எழுவாயாக வரும் குமார்  ஒரு பெயர்ச்சொல். அதே போல பந்து என்பதும் பெயர்ச்சொல்லே. ஆனால் இந்த வாக்கியத்தில் பந்து என்னும் பெயர்ச்சொல் என்ற உருபை ஏற்றுப் பந்தை என வருகின்றது. பந்தை என்ற சொல்  இந்த வாக்கியத்தில் செயற்படு பொருளாக இருக்கின்றது.
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயற்படுபொருளாக வேறுபடுத்துவதை இரண்டாம் வேற்றுமை என்பர்.

இந்த  ஐ உருபு பெயர்ச்சொல்லுடன் சேரும்போது  ஆறு வகைப்பட்ட செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
ஆக்கல், அழித்தல், அடைதல், அகற்றல், ஒப்பிடுதல் மற்றும் உடமை
என்பவையே அவையாகும்-
உதாரணங்கள் முறையே
செய்தான், உடைத்தான், அடைந்தான், நீக்கினான், போன்றவன், உடையவன் என்பனவாகும் .

மீண்டும் சந்திப்போம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க ஐயா இது, தமிழ் படிக்கலாமே என்று வந்தால் வகுப்பில் ஒருவரையும் காணோம்..?

தமிழ் வகுப்பு, அறையிலா இல்லை மரத்தடியிலா?

தேறிய பழைய மாணாக்கர்கள்(பாஞ்ச் பாஞ்ச், மேரியம்மே போன்றோர்) எங்கே? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தற் குறிகள்

வாக்கியங்களில் அங்கு அங்கு புள்ளிகள் குறிகள் இடப்பட்டிருக்கும். அப்படியான அடையாளங்களை நிறுத்தற் குறிகள் என அழைப்பர்.

நிறுத்தற் குறிகள் பல வகைப்படும்.

1. காற் புள்ளி  (,)

2. அரை புள்ளி (;)

3. முக்காற் புள்ளி (: )

4.முற்றுப்  புள்ளி (.)

5. உணர்ச்சிக்  குறி (!)

6. வினாக் குறி (?)

7. இரட்டை மேற்கோள் குறி  (" ")

8. ஒற்றை மேற்கோள் குறி (``)   

------

 

நன்றி வாத்தியார், இதனை நிச்சயம் நேரம் ஒதுக்கி.... ஆறுதலாக படிக்கப் போறன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.