Jump to content

உலகத் தமிழர்களுக்கும் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணிப்போம் புலம்பெயர் வர்த்தகர்களே வாடிக்கையாளர்களே நீங்க ரெடியா?


Recommended Posts

உலகத் தமிழர்களுக்கும் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணிப்போம் புலம்பெயர் வர்த்தகர்களே வாடிக்கையாளர்களே நீங்க ரெடியா?

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எமது இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனையில் இருக்கும் அக்கறை ரொம்பவுமே வரவேற்கத்தக்கது. வெளிநாடுகளில் வாழும் எமது ஈழத்து தமிழ் உறவுகள் (கிட்டத்தட்ட 500,000 தமிழர்கள் அமெரிக்கா, கனடா வில் உள்ளார்கள். 500,000 தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள்) மொத்தமாக 1,000,000 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை உற்பத்தி பொருட்களாகிய

*குளிர்பானங்கள்

*பலதரப்பட்ட பிஸ்கட்ஸ்

*பலதரப்பட்ட ஜாம்

*பால்மாக்கள்

*டின் மீன்கள், நூடில்ஸ் உள்ளிட்ட வேறுபல பொருட்களும் இவ் 1,000,000 மக்களில், கிட்டத்தட்ட 250,000 குடும்பங்கள் உள்ளன, இவர்களில் பெரும்பான்மையான மக்கள் மாதம் ஒன்றிற்கு குறைந்தது $50 இக்கு சரி மேலே குறிப்பிட்ட பொருட்களை நுகர்வு செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிறிலங்காவில் தயாரிக்கும் பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் $150, 000,000 ($ 150 மில்லியன்) (250.000 குடும்பம் * $50 * 12 மாதங்கள்)

இது ஒரு சிறிய கணிப்பீடுதான், ஆனால் பல வழிகளில் எமது மக்கள் இலங்கை பொருட்களையும் / சேவைகளையும் $1000 மில்லியனுக்கு மேல் கொள்வனவு செய்கிறார்கள். தமிழ்நாட்டு எம் தொப்புள்கொடி உறவுகளே எமக்காக இலங்கை பொருட்களை புறக்கணிப்பு செய்யும் போது. நாம் மட்டும் எமது நாக்கு ருசிக்காக Nekto சோடா குடிப்பது சரியல்ல.

எமது மக்களுக்காக எவ்வளவோ தியாகிகள் அகிம்சைவழியில் போராடி, உண்ணாவிரதம் இருந்து போராடியும் விடியு இல்லை என்ற படியாலே ஆயுதம் எடுத்து போராடினார்கள். ஆனாலும் எமக்குள் ஒற்றுமை இல்லாமலும், துரோகிகளால் காட்டிகொடுத்ததாலும், பல சக்தி வாய்ந்த நாடுகள் இலங்கை அரசுடன் சேர்ந்தே எமது விடுதலை போராட்டத்தையும் முடக்கவும், பல ஆயிரம் மக்களையும் ரசாயனக் குண்டுகள் பாவித்தும் கொன்று ஒழித்தனர்.

எமக்கு பணம் வேண்டும் என்றால் நன்றாக வேலை செய்து உழைக்கிறோம்….

எமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும் என்றால், பல இடங்களில் கல்விக்கு அனுப்புகின்றோம்.

எமக்கு வீடு, கார், சொகுசு வாழ்க்கை வேண்டும் என்று இரவு பகலாக உளைகின்றோம்.

இவற்றைப்போலவே எமது பிரைச்சனை தீர வேண்டும் என்றால் நாமே தான் பல வழிகளிலும் போராடி அதை எடுக்க வேண்டும். கடந்த 2011 ஆண்டில் பல நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்து, அவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் செய்து தமது தேவையை நிறைவேற்றினார்கள் (உதாரணமாக எகிப்து Egypt, துனிசியா Tunisia போன்ற நாடுகளில்).

எமது பிரச்சனைக்கு நாம் தான் போராட வேண்டும். மக்கள் ஒன்று பட்டு தொடர்ச்சியாக புறக்கணிப்புகளும், போராட்டங்களும், எமக்கு உள்ள பிரச்சனைகளையும், எமது மக்களுக்கு நடந்த அவலங்களையும் உலக்கு தெரியப்படுத்துவதன் முலமே எமக்கு விடிவு மற்றும் விடுதலை கிடைக்கும்.

இல்லையேல், வெளிநாடுகளில் எமது ஆயுட் காலத்தை தொலைத்து விட்டு, எமது கலாச்சாரத்தையும் தொலைத்து விட்டு, தொடர்ச்சியாக வாழுவோமே அனால் எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவருமே தொலைந்து போய்விடுவோம். தமிழன் என்ற ஒரு இனம் படிப்படியாக பல வழிகளிலும் அளிக்கப்பட்டு, முடக்கப்பட்டு இல்லாமல் போய்விடும்.

நாம் ஒன்றுதிரண்டு எமக்குள் கருது வேறுபாடுகள் இல்லாமல் தொடர்ச்சியாக புறக்கணிப்புகளும், போராட்டங்களும் செய்வதன் மூலம் எமது பிரச்சனைகளை உலகுக்கு தெரியப்படுத்தலாம்.

தமிழ் மக்களை நேசிக்கும் உங்களில் ஒருவன்.

தமிழமகன்

சுவிஸ் தமிழ் சங்கம்

www.swisstamilsangam.blogspot.com

Link to comment
Share on other sites

தமிழ் கடைகள் விற்பனை செய்யிறதே சிறிலங்கா பொருட்களைத்தான்.ஆனால் தற்போது புதிய சட்டமொன்று அமுலுக்கு வருகிறது

முழு ஆடைப்பால்மா மற்றும் மோல்டட் பானங்களை கனடாவில் தடை செய்யவிருக்கிறார்கள்.

கனடாவில் தமிழர்கள் விற்காவிட்டால் சிங்களவன் கடை திறந்து விற்பான்.ஆகவே வேண்டுபவர்கள் அதாவது பாவனையாளர்களாகிய நாம் திருந்தினால் தான் முடிவு வரும்

Link to comment
Share on other sites

இந்த விடயத்தை அறிவுபூர்வமாகவும் வர்த்தக - பொருளாதார அடிப்படையிலும் அணுகவேண்டும்:

அ) தரவுகள் சேகரித்தல்

- என்னென்ன பொருட்கள் சிங்கள் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன?

- இவை ஒரு வருடத்திற்கு எவ்வளவு யூரோ / டாலர் பெறுமதி கொண்டவை?

- இதில் எவ்வளவு தமிழீழ பகுதிகளில் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது?

- எத்தனை கடைகளில் சில்லறையாக விற்கப்படுகின்றது?

ஆ) மாற்று வழிகளை ஆராய்தல் / பிரேரித்தல் / ஆதரவு சேர்த்தல்

- என்னென்ன பொருட்களை (மீன், மரக்கறி வகைகள்) மாற்று நாடுகளில் (தமிழ் நாடு உட்பட ) இருந்து இறக்குமதி செய்யலாம் என ஆராய்தல்

- என்னென்ன பொருட்களுக்கு மாற்று பொருட்களை (மலிபான், நெக்டோ) மலிவாகவும் தரமாகவும் விற்பனை செய்யலாம் என பட்டியல் இடல்

- சகல மொத்த சில்லறை வியாபாரிகளையும் இணைத்தல். அவர்களை இணைத்து அவர்களை பங்குதாரர்களாக்கி ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தல்

- அந்த நிறுவனம் ஊடாக இறக்குமதி, சந்தைப்படுத்தலை செய்தல்

- மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல்

- மலிபான், நெக்டோ பொருட்களை விட புதிய மாற்று பொருட்களை அரைவிலையில் சில காலத்திற்கு விற்றல் போன்ற வியாபார தந்திரங்களை கையாளுதல்

- வரும் இலாபத்தில் மக்களுக்கு ( புலமைப்பரிசில் திட்டம், முதியோர் கவனிப்பு) , தாயக உறவுகளுக்கு சேவை செய்தல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.