Jump to content

இந்த அரசை அசைக்கமுடியாது: பஷீர் சேகுதாவூத்


Recommended Posts

DSC02992.gif-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'இந்த அரசாங்கத்தை இனி யாரும் அசைக்க முடியாது. நாங்கள் கொஞ்சப் பேர் இருந்துகொண்டு கூச்சல் போட்டுப் பயனில்லை. நாங்கள் நினைத்தாலும் அரசைக் கவிழ்க்க முடியாது. இந்த அரசாங்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கோலோச்சும். இந்த யதார்த்தங்களை புரிந்து இந்த அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.' 

இவ்வாறு உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமுல்செய்யப்படும் அபிவிருத்திப் பணிகளை தொடக்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர், ஓட்டுப்பள்ளியடியில்   திங்கட்கிழமை (1) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இங்கு அவர்  தொடர்ந்து உரையாற்றுகையில், 

'ஏறாவூர் கொடுத்துவைத்த ஊர். இங்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள மத்திய அரசின் அமைச்சராக நான் இருக்கின்றேன். நஸீர் அஹமட் கிழக்கு மாகாண அமைச்சராக இருக்கிறார். முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரான சுபைர் தற்போது கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளராக இருக்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அலிஸாஹிர் மௌலானா தற்போது ஏறாவூர் நகரபிதாவாக உள்ளார். இப்படி எல்லா அரசியல் தலைமைத்துவங்களும் இங்கே இருப்பதால் இந்த ஊர் கொடுத்துவைத்த ஊர் என்று நான் கருதுகிறேன்.

நாங்கள் எல்லோரும் ஒத்துழைத்துச் செயற்படுகிறோம். எல்லோரும் அரசுக்கு ஆதரவான கட்சிகளோடுதான் இருக்கின்றோம். அதனாலேயே  அரசாங்கத்திடமிருந்து அதிக நிதியைக் கொண்டுவந்து சேர்ப்பித்து அபிவிருத்திகளை செய்யக்கூடியதாக இருக்கின்றது.

மாகாணசபையிலிருந்தும் மத்திய அரசிலிருந்தும் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்திடமிருந்தும் பல்வேறுபட்ட அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வப்போது வெளிநாட்டு உதவிகளும் இந்த ஊருக்கு கிடைக்கின்றன.

இந்த நாட்டின் தற்போதைய துரித அபிவிருத்திக்கு முதுகெலும்பாய் இருக்கின்ற எனது நெருங்கிய நண்பர்  பஷீல் ராஜபக்ஷவும் இந்த ஊரின் அபிவிருத்திக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்கி;றார். இதற்காக இந்த ஊர் மக்கள் சார்பாக எனது இதயபூர்வமான நன்றியை அவருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த அபிவிருத்திகளையெல்லாம் அரசு மக்களது வாக்குகளை எல்லாம் வாங்குகின்ற ஒரு முன்னேற்பாடாகச் செய்யவில்லை.  அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு தேவை. அதேபோன்று மக்களுக்கும் அரசாங்கத்தின் ஆதரவு தேவை. இந்த பரஸ்பர புரிந்துணர்வின் மூலமே அபிவிருத்தி, சுபீட்சம், சமாதானம் எல்லாமே கிட்டும்.

பிரிட்டிஷார் இந்த நாட்டுக்கு காலடி எடுத்துவைத்தவுடன் அவர்கள் செய்த முதல் அபிவிருத்தி வீதி அமைத்ததே.  அதற்கு பின்னர் இந்த நாட்டில் பாரியளவில் வீதிகளை நவீனமயமாக அபிவிருத்தி செய்தது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு.

வீதிகள், சீரான போக்குவரத்து வசதிகள் மக்களுக்கு கிடைத்தாலே வீடும் நாடும் அபிவிருத்தியடையும். அப்பொழுது முதலீடுகள் அதிகரிக்கும்.

இடைக்கிடையே இந்த அரசாங்கத்தோடு சின்னச் சின்னப் பிரச்சினைகள் எழுகின்றன. பௌத்த கடும் போக்குவாதத்தால் முஸ்லிம்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள். 

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றவர் மஹிந்த ராஜபக்ஷ. பெரும்பான்மையான சிங்கள மக்களின் இதயத்திலே அவர் வாழ்கின்றார். 

சாதாரணமாக சிங்கள மக்களில் 95 சதவீதமான சிங்கள மக்கள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ இந்த கடும் போக்குவாத சிங்கள பௌத்த அமைப்புக்களிடமிருந்து சிறுபான்மையினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

எஸ்.எம்.எஸ்.அனுப்பிய இரண்டு முஸ்லிம் இளைஞர்களை உடனடியாகவே பிடித்து கூண்டுக்குள் போட முடியுமென்றால் முஸ்லிம்களுக்கெதிராக பகிரங்கமாக தெருவில் சுவரொட்களை ஒட்டும்  தீவிரவாத பௌத்த கும்பலை ஏன் கைதுசெய்ய முடியாது என்பதும் முஸ்லிம்களின் ஆன்மிக லௌகீக வழிகாட்டியான புனித அல் குர் ஆனை பகிரங்கமாவே நிந்திக்கும் கடும் போக்காளர்களை ஏன் தண்டிக்க முடியாது என்பதும்தான் முஸ்லிம்களின் ஏக்கம் கலந்த பெருமூச்சாக இருக்கின்றது.

இதனைப் புரிந்துகொண்டால் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். எனவே ஜனாதிபதியவர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என நாம் நம்புகின்றோம். அவர் அதனைப் புரிந்துகொள்வதற்குத் தோதான அத்தனை நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். 

ஜனாதிபதியவர்கள் பலஸ்தீன முஸ்லிம்களின் நண்பர். ஆனால், இலங்கை முஸ்லிம்கள் தமது பெரும் ஆதரவை அவருக்கு வழங்கவில்லை.
சிங்கள பௌத்தர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவை அள்ளி வழங்கியது போல முஸ்லிம் சமூகம் மஹிந்தவைப் புரிந்து கொண்டு தமது ஆதரவை அள்ளி வழங்கவில்லை. எனவே இந்தக் குறைபாட்டை நிவர்த்திக்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. அதற்கான சந்தர்ப்பம் வருகின்றபோது நாங்கள் இந்த நாட்டின் பெரும்பாலான சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். அதன் மூலமே எமது அச்சத்தையும் பயத்தையும் போக்க வழியேற்படும்.' என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/125108-2014-09-02-06-19-28.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவுப்படைத்தளம் எக்காலத்திலும் தாக்குதலுக்குள்ளாகி வெற்ரிகொளமுடியாத கட்டமைப்புகளைக் கொண்டது என சர்வதேச இராணுவ விமர்சகர்களாலும்,

 

தமிழீழ விடுதலைப்புலிகளது இராணுவக்கட்டமைப்பை எவராலும் உடைத்தெறிய முடியாதென அனைவராலும் கணிக்கப்பட்டவையே,

 

(இங்கு நான் சொல்லவருவது புலிகளது இராணுவக்கட்டமைப்பை மட்டுமே மாறாக, எதிர்காலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்)

 

தவிர சதாம் ஹுஸைன், முபாரக், கடாபி இவர்களைப்பற்றிய கணிப்பீடுகளும் இதுபோலவே இருந்தன சேகுதாவூத் அனைத்தும் கடந்துபோகும்.

 

ஆனால் உங்களுக்கென்ன தொப்பி இருக்கின்றது பிரட்டிப்போட்டிருவியள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
    • நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.  
    • ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர்  வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள்    மேலும் நாவற்குழியில்.  பெரிய றால்.  பண்ணை ஒன்று   வெள்ளைக்காரன் வைத்திருந்தார்    1980 இல் கொழும்பில்  கிரான்பாஸ் றோட்டில்.  லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி  ஜாம். பட்டர்.  தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார்   1980 தான்  அரசாங்கம் முதலீட்டாளர்களை. வெளிநாட்டிலிருந்து எப்படி வரவேற்கிறது?? 
    • நீங்கள் இணைத்த படத்தில் அமைச்சர் செல்லும் பிரதேசம் மக்கள் இல்லாத  வெளி காடாக உள்ளது. உண்மையிலேயே அந்த மக்கள்  சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் அந்த பிரதேசத்தின் சுற்று சூழலுக்கு  ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்து தெளிவு பெற்று தான் அதை எதிர்த்து போராடினார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா சுற்றுச்சூழலை பாதிக்க பண்ணாத  சீமேந்து தொழிற்சாலை மேற்குலகநாடுகளில் கூட கிடையாது .இங்கே அவற்றை சுற்றுபுறசூழல் கொலைகாரன் என்றும் சொல்வார்கள். சீமேந்து தொழில்சாலை வேண்டாம் என்று எதிர்த்து போராடியவர்கள் மேற்குலகநாடுகளில் இருந்து சீமேந்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் .இப்படியே ஒவ்வொன்றாக வேண்டாம் என்று எதிர்த்து கொண்டிருந்தால் அவர்கள் வேலைவாய்புக்களுக்கு தான் பாதிப்பு.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.