Jump to content

தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று செல்வா கூறியது ஏன்?


Recommended Posts

l409_content_manoharan.jpg
 
 
தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று 1970 யூலையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவடைந்த பின் தமிழரசுக் கட்சித் தலைவராயிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூறினார். இன்று அதை, அக்கூற்றைப் பலர் பலவாறு பயன்படுத்துகின்றனர். இனிமேல் தமிழினத்திற்கு விமோசனம் இல்லை என்ற கருத்தில் அவர் கூறியதாகவே பலரும் நம்புகின்றனர்.
 
 
அப்படியிருக்க முடியாது. ஒரு இனம் தனது மொழியை, மதத்தை, பாரம்பரிய பண்பாடுகளைக் கைவிட்டு தற்கொலை செய்து கொண்டால் மட்டுமே அழிவடைய வழியுண்டு. மொழியில், மதத்தில், பாரம்பரிய பண்பாட்டில், அதன் மேன்மையில் பற்றுறுதியுடன் உள்ள எந்தவொரு இனமும் அழியாது.
 
அழிக்கப்படவும் முடியாது. நாம் இன்று அழிவை நோக்கிச் செல்கின்றோம் என்றால் அதற்கு நாமே பொறுப்பாளிகள் என்பதை மறக்கக்கூடாது. மாற்றாரை, நாம் அழிவதை ஆவலுடன் எதிர்பார்ப்பவனை மட்டும் குறைகூறி, விமர்சித்துக் கொண்டிராது நம்மைப்பற்றி நாமே சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். 
 
 
தமிழ் மொழியின் உரிமையைப் பயன்படுத்தப் பின் நின்று கொண்டு, தமது அன்றாடக் கடமைகளைத் தமிழ் மொழியில் ஆற்ற வழியிருந்தும் அதைப்பயன்படுத்தாமல் இருந்து கொண்டு நமது சமயத்தில் நம்பிக்கையில்லாது சமயமாறுதலுக்கு உள்ளாகிக் கொண்டு, பாரம்பரிய பண்பாடுகளைப் பின்பற்றுவதை விடுத்து பிறநாட்டு கலாசாரத்தை வரிந்தேற்றுக் கொண்டு இருக்கும் போது தமிழர்களின் இன அடையாளம் அகற்றப்பட, மறைக்கப்பட நாமே வழியமைத்துக் கொடுத்த பாவிகளாவோம்.
 
 
பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து இப்படிப் பல வாழ்த்துக்களைக் கூட தமிழ்மொழியில் கூறப் பின்னிற்கும், மறுக்கும் நம்மவர்கள் நிறையவேயுள்ளனர். வாழ்த்தும் மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தினால் அதுவே ஏற்கப்படும், செல்லுபடியாகும் என்று நம்பும் நம்மவரில் பலர் தமிழ் மொழியை வாழ்த்தும் மொழியாகப் பயன்படுத்துவது நாகரிகமற்றது என்று கூட நம்புகின்றனர்.
 
புதுமணத் தம்பதியினரை மனப் பூர்வமாகத் தாய்மொழியில் வாழ்த்தும் போது அதற்குள்ள பெறுமதியை, சக்தியை உணராத நம்மவர்கள் தந்தை செல்வா அன்று கூறியதன் உட்பொருளை அதன் ஆழத்தைப் புரிந்து கொள்வது முடியாத ஒன்றே.
ஆம். சிந்திக்கும் போது செல்வாவின் கூற்று தீர்க்கதரிசனம் மிக்கதாகவே கருதப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழினம் ஒற்றுமை இழந்து சிதறிப்போய் தனது தனித்துவத்தை இழக்கும் நிலை உருவாக வழியுள்ளது.
 
சந்தர்ப்பவாதிகள் தமிழர் அரசியலில் புகுந்து தமிழர் மத்தியிலே குழப்பமேற்படுத்தி சுயதேவைகளை நிறைவேற்றும் அநாகரிக அரசியல் தமிழர் மத்தியிலே உருவாக வழியேற்படும் என்றோ அன்று செல்வா எதிர்வு கூறினார். அது மெய்ப்பிக்கப்பட்டும் விட்டது.
 
 
தமிழர் வரலாற்றில் குறிப்பாக வடபுலத்துத் தமிழர் வரலாற்றில் அதுவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சொந்த இலாபங்களுக்காக அரசியல் நடத்திய பாரம்பரியம் இருந்ததாக வரலாற்றுப் பதிவேதும் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளால் பராளுமன்றத்திற்குத் தெரிவான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களெவரும் 1970 வரை ஆளும் கட்சியின் அரவணைப்பில் குளிர் காய்வதற்காக கட்சிதாவிய வரலாறில்லை. கொள்கையில் உறுதி கொண்ட கனவான்களாகவேயிருந்தனர்.
 
 
1970 பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் வடபுலத்து தமிழர்களின் பதவிநாட்டமற்ற, சுயலாப நோக்கமற்ற பண்பட்ட அரசியலுக்கு கேடு நேர்ந்தது. வடபுலத்துத் தமிழர்களையும் விலை கொடுத்து வாங்கலாம் என்ற நிலை உருவானது. தமிழரசுக் கட்சியிலல்ல, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான மூன்று வடபுலத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தமிழர் பாரம்பரியமாகக் கட்டிக்காத்த அரசியல் பண்பாட்டிற்குச் சாவுமணி அடித்தது. உண்மை அதுவாகவே வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
 
 
வடமாகாணத்தின் வட்டுக் கோட்டை, நல்லூர், கிளிநொச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலிருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான மூவரும் கூண்டோடு கைலாசம் போவது என்பது போல் ஒன்றிணைந்து அன்றைய ஸ்ரீமாவோ பண்டார நாயக்க அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக மாறினார்கள். தம்மைத் தெரிவு செய்த மக்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து தான்தோன்றித்தனமாக ஆட்சியாளருடன் சங்கமித்தனர்.
 
அவர்களில் ஒருவரான நல்லூர் பா.உ.அருளம்பலத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட அரசியல் நிர்வாகம் வழங்கப்பட்டது. மற்ற இருவரும் வெறுமனே இருக்கும் நிலை ஏற்பட்டது. ஒருவர்  வட்டுக்கோட்டை ஆ.தியாகராஜா, மற்றவர் கிளிநொச்சியில் 1965 இல் லங்கா சமசமாஜக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது 1970 இல் கட்சிமாறி தமிழ் காங்கிரஸில் போட்டியிட்ட வீ.ஆனந்தசங்கரி. இவையும் வரலாற்றில் தெளிவாகவே பதியப்பட்டுள்ளன. வரலாற்றைக் கற்கும், அறியும் ஆர்வமின்மையால் நம்மவருக்கு இது தெரிவதில்லை.
 
 
வெற்றிவாய்ப்புக்காக கட்சிமாறுபவர்களையும், வெற்றிபெறுவதற்காக தேடிப்பிடித்து வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகளையும் தமிழர் சமூகம் நம்பியதால் ஏற்பட்ட பின்விளைவு இன்றும் தொடர்வதை அவதானிக்கலாம். பாரம்பரிய தமிழர் கட்சி, ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமைவகித்த கட்சி பாராளுமன்றத்திலிருந்து முற்றாக துடைத்தெறியப்பட அதே கட்சிசார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான பிரதிநிதிகளே காரணமாயமைந்தனர். இதுவும் வரலாறு.
 
தமிழர்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்திருந்து செயற்படாது இணைந்து செயற்பட வேண்டுமென்ற உயர் நோக்கில் 1972 இல் உருவாக்கப்பட்டதே தமிழர் கூட்டணி. இக் கூட்டணி உருவாக, தமிழரசுக் கட்சி பலவீனமடைந்தமையால் தந்தை செல்வா வகுத்த திட்டமே என்று அண்மையில் வீ.ஆனந்தசங்கரி என்பவர் கருத்து தெரிவித்திருந்தார். இது முற்றிலும் தவறானது.
 
 
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். பொது நோக்கில் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் மொழிவழித் தொழிற் சங்கங்களே ஈடுபட்டன. தமிழரசுக் கட்சிக்கு எதுவிதபங்களிப்பும் இல்லை. அச்சங்கங்களில் ஒன்றான அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவிருந்த எனது பங்கு மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை இணைப்பதாயமைந்தது.
 
அதில் வெற்றியும் கண்டவன் என்ற முறையில் இதைத் தெளிவாகக் கூறும் உரிமை எனக்குண்டு. தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்ட காலத்தில் ஆனந்தசங்கரி அன்றைய சிறிமாவோ அம்மையாரின் அரசுக்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் செயற்பட்டவர் என்பது வரலாற்றில் தெளிவாகவுள்ளது.
 
தமிழர் கூட்டணி என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயரை அதில் அங்கம் வகித்த அமைப்புகள் சகலதினதும் ஏற்பின்றி ஒரு சிலரால் தமிழர் விடுதலைக் கூட்டணி என்று மாற்றப்பட்டதை ஆட்சேபித்து மதிப்புக்குரிய சௌமியமூர்த்தி தொண்டமான் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதும் வரலாற்றுப்பதிவு.
 
 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றம் தமிழினத்தின் அவலமாகிவிட்டது. கட்டியெழுப்பப்பட்ட ஒற்றுமைக்கு வேட்டுவைக்கப்பட்டது. இதுவே தமிழினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தால் பெற்றுக் கொண்ட பெறுபேறு.
1970 க்குப் பின்னரான அரசியல் சூழ்நிலைகள், நிகழ்வுகளாலும் செல்வநாயகம், பொன்னம்பலம் போன்றோரின் மறைவினாலும் தமிழர் அரசியல் அரங்கு பலபுதிய நடிகர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.
 
இன்று தலைவர்கள் பெருகிய இனமாகத் தமிழினம் உள்ளது. அன்று அதாவது கொல்வின் ஆர்.டி.சில்வாவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் உருவாக்கிய அரசியல் அமைப்பு நிர்ணயசபையிலிருந்து  அவ்வமைப்பில் தமிழர் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து செல்வநாயகம் தலமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபோது அதைவிமர்சித்து எழுந்து நின்று இருக்கைகளையும் உயரத்தூக்கி"டாட்டா போய்வாருங்கள். இனி வரவேண்டாம்' என்று குரலெழுப்பியவர்கள் கூட இன்று தமிழர்களின் தலைவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வது நகைச்சுவையாகவுள்ளது. நாற்பது ஆண்டுகள் கடந்தாலும் உண்மை மறையாது.
 
அரிதாரம் பூசி சுய உருவத்தை மறைத்து மேடையில் நடிக்கும் நடிகர்களைப் போன்று அரசியல் மேடையில் நடிப்போர் பெருகி தமிழினத்தைச் சீரழிக்கப்போகின்றார்கள் என்று அன்றே செல்வநாயகம் எடைபோட்டமையாலேயே இனித்தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார் போலும்.
 
 
தமிழ் மக்கள் பல்வேறு இடர்பாடுகளில் சிக்கித்தவிப்பதை உலகமே கவலையுடன் நோக்கும் இந்நாட்களில் சுயவரலாறு மறந்து கடந்தகால வரலாற்றை மக்கள் மீட்டுப்பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் எதையும் உளரலாம், எப்படியும் நடக்கலாம் என்று செயற்படும் சமூகத் தலைவர்கள் திருந்தாதவரை, மக்கள் உணராத வரை தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற கூற்றும் அர்த்தமுள்ளதாகவே அமைந்திருக்கும்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.