Jump to content

சிறுநீரக பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக வவுனியா


Recommended Posts

இலங்கையில் சிறுநீரகநோய் பாதிப்பு அதிகமாகவுள்ள மாவட்டங்களில் இரண்டாமிடத்தில் வவுனியா மாவட்டம் உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு வடமாகாண சுகாதார அமைச்சின் வவுனியா உப அலுவலகத்தில் திங்கட்கிழமை (1) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

'வடமாகாண சுகாதார அமைச்சின் 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடுகளிலிருந்து மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளத்திலும்  வவுனியா மாவட்டத்தின்  நவ்வியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின்  குமுழமுனையிலும்  3 புதிய வைத்தியசாலைகளை ஆரம்பித்துள்ளோம். இவை ஒவ்வொன்றுக்கும் 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டது.  

புதுக்குடியிருப்பில் புதிய ஆயுர்வேத வைத்தியசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் சில தினங்களில் நாட்டப்பட்டு, வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் சிறுநீரக நோய் அதிகமாகவுள்ள இரண்டாவது மாவட்டமாக வவுனியா மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து,  பெருமளவான நோயாளிகள் முல்லைத்தீவிலும் உள்ளனர். 

இவ்வாறான நிலையில், இதுவரை காலமும் சிறுநீரகநோய் தொடர்பான நோயாளிகள் இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சைக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லவேண்டியிருந்தது. இதனால் அவர்கள் பணப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை உள்ளிட்ட  பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். 

இந்நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் தற்போது நாம் சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்தச் சுத்திகரிப்புக்காக 6 இயந்திரங்களுடன் சிகிச்சை நிலையத்தை திறந்துவைக்கவுள்ளோம். இதற்கு மத்திய அரசும் வேறு நிறுவனங்களும் நிதியுதவி செய்துள்ளது.  மேலும், மத்திய அரசு எமக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளமையால் முல்லைத்தீவிலும் இவ்வாறான சிகிச்சை நிலையத்தை ஆரம்பிப்பதற்கு  எண்ணியுள்ளோம்.

சிறுநீரக நோயாளிகளை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதற்காக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் சிகிச்சை நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இவை ஒவ்வொன்றும் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியில் வவுனியா, மாமடுவில் ஒன்றும் செட்டிகுளத்தில் ஒன்றும் முல்லைத்தீவு, மல்லாவியில் ஒன்றும் சம்பத்புரவில் ஒன்றும் நிறுவப்படவுள்ளன. இதற்கும் மத்திய அரசு நிதியுதவி செய்யவுள்ளது.

வடமாகாணத்தை உள்ளடக்கிய 5 வருட மூலோபாயத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 வருடங்களுக்கான அபிவிருத்தித்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே நாம் எமது மாகாணத்தில் அபிவிருத்திகளை செய்து வருகின்றோம். 

எமக்கு முக்கிய பிரச்சினைகளாக போசாக்கின்மை, சிறுநீரக நோய்த்தாக்கம் விசேட தேவையுடையோர் அதிகமாகக்  காணப்படுவது ஆகியன உள்ளன. இதற்கான விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

குறிப்பாக வடமாகாண சுகாதார, கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்கள் இணைந்து போசாக்கை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டுள்ளோம்' என்றார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/125070-2014-09-02-04-03-41.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலிலிருந்து போட்ட நச்சுவாயு குண்டுகளின்ரை விக்கனங்கள் போகப்போகத்தான் தெரியும். வியட்னாம் இன்னும் மீளவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • 261 ர‌ன்ஸ் அடிச்சும் அதை எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடி வெல்லுகின‌ம்   ச‌த்திய‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் முற்றிலும் மாறு ப‌ட்டு இருக்கு   உந்த‌ இஸ்கோர்ர் இமைய‌ம‌லை இஸ்கோர்...........ப‌ஞ்சாப் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰............................................................
    • டீலின் டீடெய்ல்ஸ், என்ன விலை, விமானநிலையம் எப்படி பாவிக்கப்படும் என்ற டீடெயில் எதுவும் வெளியாகவில்லை. இந்தியாவோடு ரஸ்யாவையும் சேர்த்து இழுத்தது, கட்ட கடன் கொடுத்த சீனாவை திருப்தி செய்யவாக இருக்க கூடும்.
    • அது என்ன‌ என்றால் பெரிய‌வ‌ரே யாழில் இருக்கும் வாத்தியார் என‌க்கு த‌மிழை ஒழுங்காய் தான் சொல்லி தந்த‌வ‌ர்  வாத்தியார் த‌மிழை சொல்லி த‌ரும் போது என்ர‌ நினைவெல்லாம் ப‌ழைய‌ காத‌லின்ட‌ நினைவாக‌ இருந்த‌ ப‌டியால் , வாத்தியார் சொல்லித் தந்ததை நினைவில் வைத்திருக்கவில்லை இதைப் பார்த்த வாத்தியார் இனிஎன்னை கண்காணிப்பார் ஆன‌ ப‌டியால் இனி தமிழில் எழுதுவதில் முதிர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது😁..................................... @வாத்தியார்
    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.