Jump to content

ஒரு சதமேனும் திரும்பிச் செல்லாது என உறுதியாகக் கூறுகிறேன்"வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்


Recommended Posts

6_CI.jpg

வடக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இந்த நிதி மத்திய அரசாங்கத்துக்குத் திரும்பிச் செல்லப்போகிறது என்றும் அரச தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வடக்கு மாகாண சபை செயலற்று இருப்பதாகப் பொதுமக்களை எண்ண வைப்பதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்மீது பொதுமக்களை அதிருப்தி கொள்ள வைப்பதே இந்தப் பரப்புரையின் நோக்கம். ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய வேலைத்திட்டங்கள் உரிய காலத்தினுள் செய்து முடிக்கப்படும். ஒரு சதமேனும் திரும்பிச் செல்லாது என  உறுதியாகக் கூறுகிறேன் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு இழையவளர்ப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வாழைக்குட்டிகளை விநியோகிக்கும் தொடக்கநிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (01.09.2014);  நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் சகிலாபானு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்; பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

எமது விவசாயிகள் தங்களது பண்டைய பாரம்பரிய அறிவோடு நவீன தொழில்நுட்பங்களையும் உள்வாங்கினால் மாத்திரமே அதிஉச்சப் பயனைப் பெறமுடியும். அதன் அடிப்படையிலேயே இழையவளர்ப்பு என்ற புதிய உயிர்த்தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வாழைக் குட்டிகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக இயங்கும் விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் தூய விஞ்ஞானத்துக்கான நிறுவனம் என்ற அமைப்பிடம் இருந்து வாங்கி விநியோகிக்க ஆரம்பித்துள்ளோம். இதற்காக விவசாயத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மூன்று மில்லியன் ரூபா இப்போது செலவிடப்பட்டுள்ளது. இந்த இழைய வளர்ப்பு வாழைக்குட்டிகளை நடுகை செய்வதற்கு இப்போதுதான் பொருத்தமான பருவம். இதனை சித்திரை, வைகாசியில் நாங்கள் விநியோகித்திருக்க முடியாது. 

பருவத்தே பயிர் செய் என்பது போன்றுதான் ஒவ்வோரு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் என்று ஒரு காலம் இருக்கின்றது. விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுமானப் பணிகள் இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்பதால் வழமையாக சிறுபோக அறுவடை முடிவடைந்த பின்னர் ஆவணி மாதத்திலேயே நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேலைகள் ஆரம்பமாகும்.  இந்த வருடம் வழமைக்கு மாறாகக் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. பெரும் கட்டுமான பணிகளுக்கு நீரைப் பயன்படுத்தினால் வரட்சியால் அவதிப்படும் மக்கள் மேலும் துயரப்படநேரும். இதனால் குறைந்தளவு நீர்த்; தேவை உள்ள வேலைகள் மாத்திரமே இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

அதுமாத்திரம் அல்லாமல் சில அபிவிருத்தித்திட்டங்களில்  ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்படும் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்பே அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நடைமுறையும் உள்ளது. இவை எல்லாம் தெரிந்திருந்தும், வடமாகாணசபை அபிவிருத்தித்திட்டங்களில் அக்கறை காட்டாததாலேயே ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் உள்ளது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. பொதுமக்கள் இதன் பின்னால் உள்ள விசமத்தனத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். எல்லா வேலைத்திட்டங்களும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி  வீணாகாதவாறு கார்த்திகை, மார்கழி மாதம் முடிவடைவதற்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

இதன்போது மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து ஐந்து விவசாயிகளுக்கு வெங்காயச் செய்கையை மேற்கொள்ளுவதற்கென தலா 50,000 ரூபாவும், ஐந்து விவசாயிகளுக்குக் காளான் வளர்ப்பை மேற்கொள்ளுவதற்குரிய காளான் வித்திகள் மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்;நிகழ்ச்சியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ. இந்திரராசா, ம. தியாகராசா, வைத்திய கலாநிதி சி. சிவமோகன், அ.ஜெயதிலகா, விவசாய அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111146/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

வடக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இந்த நிதி மத்திய அரசாங்கத்துக்குத் திரும்பிச் செல்லப்போகிறது என்றும் அரச தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வடக்கு மாகாண சபை செயலற்று இருப்பதாகப் பொதுமக்களை எண்ண வைப்பதன் மூலம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்மீது பொதுமக்களை அதிருப்தி கொள்ள வைப்பதே இந்தப் பரப்புரையின் நோக்கம். ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய வேலைத்திட்டங்கள் உரிய காலத்தினுள் செய்து முடிக்கப்படும். ஒரு சதமேனும் திரும்பிச் செல்லாது என  உறுதியாகக் கூறுகிறேன் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
 

aynkaranesan_meet.01.png

வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு இழையவளர்ப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வாழைக்குட்டிகளை விநியோகிக்கும் தொடக்கநிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை)  நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் சகிலாபானு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்; பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 

aynkaranesan_meet.02.png

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது விவசாயிகள் தங்களது பண்டைய பாரம்பரிய அறிவோடு நவீன தொழில்நுட்பங்களையும் உள்வாங்கினால் மாத்திரமே அதிஉச்சப் பயனைப் பெறமுடியும். அதன் அடிப்படையிலேயே இழையவளர்ப்பு என்ற புதிய உயிர்த்தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வாழைக் குட்டிகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக இயங்கும் விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் தூய விஞ்ஞானத்துக்கான நிறுவனம் என்ற அமைப்பிடம் இருந்து வாங்கி விநியோகிக்க ஆரம்பித்துள்ளோம். இதற்காக விவசாயத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மூன்று மில்லியன் ரூபா இப்போது செலவிடப்பட்டுள்ளது. இந்த இழைய வளர்ப்பு வாழைக்குட்டிகளை நடுகை செய்வதற்கு இப்போதுதான் பொருத்தமான பருவம். இதனை சித்திரை, வைகாசியில் நாங்கள் விநியோகித்திருக்க முடியாது.
 

aynkaranesan_meet.03.png

பருவத்தே பயிர் செய் என்பது போன்றுதான் ஒவ்வோரு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் என்று ஒரு காலம் இருக்கின்றது. விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுமானப் பணிகள் இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்பதால் வழமையாக சிறுபோக அறுவடை முடிவடைந்த பின்னர் ஆவணி மாதத்திலேயே நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேலைகள் ஆரம்பமாகும்.  இந்த வருடம் வழமைக்கு மாறாகக் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. பெரும் கட்டுமான பணிகளுக்கு நீரைப் பயன்படுத்தினால் வரட்சியால் அவதிப்படும் மக்கள் மேலும் துயரப்படநேரும். இதனால் குறைந்தளவு நீர்த் தேவை உள்ள வேலைகள் மாத்திரமே இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமாத்திரம் அல்லாமல் சில அபிவிருத்தித்திட்டங்களில்  ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்படும் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்பே அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நடைமுறையும் உள்ளது. இவை எல்லாம் தெரிந்திருந்தும், வடமாகாணசபை அபிவிருத்தித்திட்டங்களில் அக்கறை காட்டாததாலேயே ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் உள்ளது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. பொதுமக்கள் இதன் பின்னால் உள்ள விசமத்தனத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா வேலைத்திட்டங்களும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி  வீணாகாதவாறு கார்த்திகை, மார்கழி மாதம் முடிவடைவதற்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

aynkaranesan_meet.04.png

இதன்போது மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து ஐந்து விவசாயிகளுக்கு வெங்காயச் செய்கையை மேற்கொள்ளுவதற்கென தலா 50,000 ரூபாவும், ஐந்து விவசாயிகளுக்குக் காளான் வளர்ப்பை மேற்கொள்ளுவதற்குரிய காளான் வித்திகள் மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

aynkaranesan_meet.05.png

இந்;நிகழ்ச்சியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ. இந்திரராசா, ம. தியாகராசா, வைத்திய கலாநிதி சி. சிவமோகன், அ.ஜெயதிலகா, விவசாய அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.