Jump to content

மின்வேலி அகற்றப்பட்டும் எல்லை கடவா மான்கள்


Recommended Posts

இரும்புத்திரை வீழ்ச்சிகண்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்ட பின்னரும் கூட, ஜேர்மனிக்கும், செக் குடியரசுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வாழும் மான்கள், இன்னமும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடப்பதில்லை என்று இரு நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

140115134243_spotted_deer_india_cheetal_

மின்வேலி அகற்றப்பட்டும் எல்லை கடவா மான்கள்

 

ஒரு காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.

 

ஆனால், இப்போதும் கூட அந்த இரு நாடுகளின் எல்லையில் வாழும் செம்மான்கள் அந்த எல்லைப் பகுதியைக் கடப்பதில்லை என்று, அவற்றில் சுமார் 300 மான்களை பிந்தொடர்ந்து பார்த்த போது தெரியவந்திருக்கிறது.

அவற்றை கண்காணிக்கும் சில கருவிகள் மூலம் அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

இப்போது மின்வேலி அகற்றப்பட்டு அந்தப் பகுதி ஒரு திறந்த வெளியாக இருக்கின்ற போதிலும், இரு நாடுகளிலும் பனிப்போர் காலகட்டத்துக்குப் பின்னர் பிறந்த மான்கள்கூட நாடுகளின் எல்லையைக் கடந்து செல்வதில்லையாம்.

மான் குட்டிகள் தமது முதலாவது வயதில் தமது தாய் மான்களை பிந்தொடர்ந்து பழகியதால், அவை அதனைக் கொண்டே எங்கு போவது, எங்கு போகக் கூடாது என்று வகுத்து, வாழ்கின்றனவாம்.

http://www.bbc.co.uk/tamil/global/2014/04/140423_coldwardeer.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய நாட்டு, மான்கள் போல் முட்டாள் அல்ல...ஐரோப்பிய மான்கள்.
அவை.... ரோசமும், மூளையும் உள்ளவை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய நாட்டு, மான்கள் போல் முட்டாள் அல்ல...ஐரோப்பிய மான்கள்.

அவை.... ரோசமும், மூளையும் உள்ளவை. :D

 

மதியாதோர் மண்ணை  மிதிக்காத மான்கள்

கவரிமான் பரம்பரையல்லவா?? :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதியாதோர் மண்ணை  மிதிக்காத மான்கள்

கவரிமான் பரம்பரையல்லவா?? :D  :D

 

யா... விசுகு.

அருமையான... பழமொழி. :rolleyes:  :D

Link to comment
Share on other sites

பெண்களுக்கு வேலி கணவன் கட்டிய தாலி.. :D அந்தத் தாலிக்கயிறு இருப்பதனால்தான் "சம்சாரம் அது மின்சாரம்" என்று சொல்லுவார்கள்..! :icon_idea:  :D


தாலி இல்லாமலே இந்த மான்கள் ஒழுக்க நெறியுடன் வாழ முடிவது பாராட்டுதலுக்கு உரியது..  :unsure:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு வேலி கணவன் கட்டிய தாலி.. :D அந்தத் தாலிக்கயிறு இருப்பதனால்தான் "சம்சாரம் அது மின்சாரம்" என்று சொல்லுவார்கள்..! :icon_idea:  :D

தாலி இல்லாமலே இந்த மான்கள் ஒழுக்க நெறியுடன் வாழ முடிவது பாராட்டுதலுக்கு உரியது..  :unsure:  :lol:

 

 

இன்றைக்கு காலையிலிருந்து  இவர் இப்படித்தான் பேசுகின்றார்

வீட்டில

வெளியில விட்டாச்சு போலும்........ :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு பேச்சாய் இருக்கணும் , கோடு தாண்டி நீயும் வரக் கூடாது , நானும் வர மாட்டேன்...! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு வேலி கணவன் கட்டிய தாலி.. :D அந்தத் தாலிக்கயிறு இருப்பதனால்தான் "சம்சாரம் அது மின்சாரம்" என்று சொல்லுவார்கள்..! :icon_idea:  :D

தாலி இல்லாமலே இந்த மான்கள் ஒழுக்க நெறியுடன் வாழ முடிவது பாராட்டுதலுக்கு உரியது..  :unsure:  :lol:

 

எப்பிடியெல்லாம்.... சிந்திக்கிறாங்கப்பா.... :D smiley_happy_thumbup.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு பேச்சாய் இருக்கணும் , கோடு தாண்டி நீயும் வரக் கூடாது , நானும் வர மாட்டேன்...! :lol::)

 

சூப்பர்.... சுவி.

இந்த மான்களை... வைத்தே, யாழ் களத்தில் காவியம் படைக்கிறார்கள். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.