Jump to content

தம்பி நீர் என்ன படிச்சிருக்கிறீர்..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2101.jpg

 

வழமை போல.. பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் இல்லாமல்..ஏதோ தெரிந்தவர் போல.... தம்பி கொஞ்சம் நில்லும்... என்றார் தமிழில்.

 

நானோ காதில் விழாதது போல என் கருமத்தில் கண்ணாய் இருந்தேன். எனக்கு முன்னால் ஒரு அழகான பிகரு வேற ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படியாவது கடந்து போயி.. ஒருக்கா.. அந்தப் பிகரின்.. மூஞ்சியை பார்த்திடனும் என்ற கொள்கை வெறியோட வேற.. நான்.. ஓடிக் கொண்டிருந்தேன்.

 

நான் என் கொள்கையில் நீண்ட நேரம் செலவழிக்கல்லை. சிறிது நேரத்துக்குள்ளாகவே.. இலகுவாகவே அந்த பிகரை விரட்டி பிடிச்சு.. கடந்து போய்.. திரும்பிப் பார்த்தும் விட்டேன். சும்மா சுமாரான பிகர் தான். பார்க்க தமிழ் பிகர் போல இருந்திச்சு. நாட்டில குளிர் என்பதால்.. பிகர் மூடிக்கட்டிக் கொண்டு வேற ஓடிக் கொண்டிருந்தால.. முகத்தை மட்டும் தான் பார்க்க முடிஞ்சுது.

 

இந்தக் கலகலப்புக்கு மத்தியிலும்... நான் ஒரு வட்டம் முடிச்சு.. இரண்டாம் வட்டம் ஓட ஆரம்பித்திருந்தேன். இப்போ.. அந்த நடுத்தர வயசுக்காரர்.. பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்து கொண்டு.... அந்த பிகரை கூப்பிட்டு என்னவோ கதைச்சுக் கொண்டிருந்தார். பிகரும் அவருக்கு அருகில் பெஞ்சில் அமர்ந்து கொண்டு என்னவோ கதைச்சுக் கொண்டிருந்திச்சு.

 

நான் நடப்பவற்றை எல்லாம் கடைக்கண்ணால் கவனிச்சுக் கொண்டு ஓடிக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில்.. அந்த நடுத்தர வயதுக்காரர் இருந்த பெஞ்சுக்கு நேர் எதிரே பார்க்கின் எதிர் புறத்தில்.. இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டேன். ஓடிக் களைச்சது போல.. வேற பாசாங்கும் செய்து கொண்டேன். அங்கிருந்து கொண்டு...எதிர் பெஞ்சில் என்ன நடக்குது என்று ஆராயத் தொடங்கினேன். அந்த நடுத்தர வயதுக்காரர்.. தான் கொண்டு வந்திருந்த துவாயை எடுத்து அந்த பிகரின் முகத்தில் வழிந்திருந்த.. வியர்வையை துடைக்கக் கொடுத்தார். அப்ப தான் தெரிஞ்சுச்சு அவர் அந்த பிகரின் அப்பான்னு.

 

ஆகா.. அந்த பிகருடைய அப்பாவா இவரு.. என்றிட்டு.. நிலைமை கைமீறிப் போவதற்குள்.. இளைப்பாறி எழுவது போல எழுந்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். இப்போ நான் மீண்டும் பார்க்கை சுற்றி அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் வர.. மீண்டும் அவர் கூப்பிட்டார்.

 

இம்முறை.. தம்பி என்றல்ல. ஹலோ என்றார். உடன பக்கத்தில இருந்த பிகரு.. ஏன் டாட் கூப்பிடுறீங்க என்றிச்சுது. தமிழ் பொடியன் போல இருக்குது... அப்போதையும் கூப்பிட்டனான் தமிழ் விளங்காத மாதிரி போயிட்டான். பொறு.. கூப்பிட்டு கதைப்பமே என்றார்...என் காதுபட.

 

நானும்.. பிகருட அப்பா என்றது உறுதியாக.. ஓடுவதை நிறுத்தி நடந்து வந்து.. காய் அங்கிள் என்றேன். அவர் கான் யு ஸ்பீக் ரமிள் என்றார்..! ஐ கான் ராட்க் எ பிட் என்றேன்... என் இமேச்சை பிகருக்கு முன்னால்..உயர்த்திக் காட்ட. உடனே அவரோ.. அப்ப இஞ்ச வாரும் இதில இரும் என்றார் தனக்கு அருகில். எனக்கோ எதிர்பார்த்தது போல எல்லாம் நடப்பதால்.. மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருந்திச்சு. அவர் நடுவில் இருக்க.. நான் ஒரு கரையிலும்.. பிகர் மறுகரையிலுமாக பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.

 

தம்பி... நாங்கள் இப்ப தான்.. ஜேர்மனில இருந்து மூவ் பண்ணி லண்டனுக்கு வந்திருக்கிறம். இவா பிள்ளை.. இங்க ஏ எல் செய்யுறா. உமக்கு தெரியுமே நல்ல ரியூசன் இங்க.. என்றார்.

 

நான் சொன்னேன்.. அங்கிள்.. எனக்கு தெரியும் ஒன்றிரண்டு ரியூசன். பட் அவையள் எப்படி படிப்பிப்பினம் என்று எனக்குத் தெரியாது. சோ.. என்னால.. உங்களுக்கு கறண்டி பண்ணிச் சொல்லேலாது என்றேன்.

 

ஓகே.. நீர் சொல்லுறதும் நியாயம் தான்.. என்றிட்டு.. என் பதிலைக் கேட்டிட்டு.. யோசிச்சுக் கொண்டிருந்தவர்.. திடீர் என்று தம்பி நீர் என்ன படிச்சிருக்கிறீர் என்றார். நான் பிகரு முன்னால.. உள்ளதைச் சொல்லி.. இமேச்சைக் கூட்டுவமா.. இல்ல கொள்கையை.. அதாவது என்ன படிச்சன் என்பதை யாரோடும் அநாவசியமாக பகிர்ந்து கொள்வதில்லை என்ற அந்தக் கொள்கையை காக்கிறதா..என்ற தவிப்பில்... அது வந்து அங்கிள்... இஞ்ச வந்து கொஞ்சம் படிச்சிருக்கிறன் என்றேன்.

 

அதுக்கு அவர் அப்ப இதுக்கு முதலில் எங்க படிச்சனீர் என்றார். நான் அதுக்கு சிறீலங்கா.. என்றேன். அவ்வளவும் தான் அவரின்.. மூஞ்சியில் ஈயாடவில்லை. முகம் மலர்ச்சி இழந்து கறுத்துப் போனது. அதுவரை என்னை அடிக்கடி.. கடைக்கண்ணால் பார்த்திட்டு இருந்த பிகரும்.. வெறிச்சு.. இலைகள் உதிர்த்திருந்த.. பார்க் மரங்களை பார்க்க ஆரம்பிச்சுது.

 

எனக்கோ.. அட ஏண்டா சிறீலங்கா என்று சொன்னன்.. என்று ஆகிச்சு. அப்புறம் அவரே.. அட நீர் சிறீலங்காவில படிச்சிட்டு இங்க வந்தனீரே... என்றார் ஒரு இழக்காரத் தொனியில். அதோட நிற்காமல்.. அப்ப ஏன்.. உமக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் என்றீர் என்றார். நான் நிலைமையை சுதாகரிச்சுக் கொண்டு.. சொன்னன்.. நான் கொழும்பில இருந்திட்டு தான்.. இஞ்ச வந்தனான் என்று. உடன அவரின் முகத்தில் இப்போ மீண்டும் கொஞ்சம் பழைய புத்துணர்ச்சி.. திரும்ப ஆரம்பிச்சுது.

 

அப்படியே.. கொழும்பில எங்க என்றார். நான்.. கொல்பிட்டி என்றேன். அவ்வளவும் தான்.. கொஞ்சம் எனக்குக் கிட்டவா நகர்ந்து இருந்து கொண்டு.. அப்ப அங்க எந்த யுனில படிச்சனீர் என்றார். நான்.. கொழும்பு என்ற. கொழும்பே. அங்க என்ரர் பண்ணுறது கஸ்டம் என்ன... என்றார். நான்.. விடுவனா இந்தச் சந்தர்ப்பத்தை.. ஆம் என்றேன்.. பிகருக்கும் கேட்க.

 

இதற்கிடையில்.. பிகரு.. ஒருக்கா என்னை திரும்பிப் பார்த்து புன்னகைச்சும் விட்டிச்சுது. நானும் பதிலுக்கு புன்னகைச்சு விட்டன். எனக்கோ.. மனசெல்லாம்.. ஒரு வித புத்துணர்ச்சி.. பெருகி.. வழிஞ்சு ஓடிக்கொண்டிருந்திச்சு.

 

அவரோ விடுவதாக இல்லை. மீண்டும்.. கேட்கத் தொடங்கினார். அங்க படிச்சிட்டு.. அப்ப இங்க என்ன படிக்க வந்தனீர் என்றார். நான்.. பிடிபடாமல்.. மேற்படிப்பு என்றேன். அவருக்கு அது விளங்கிச்சோ இல்லையோ.. ஓகே என்றார். அப்புறமா...இங்க.. என்ன பாடம் படிச்சனீர் என்றார். நான் விஞ்ஞானம் (சயன்ஸ்) என்றேன். விஞ்ஞானமோ... அப்ப நல்லது... இவாவுக்கு.. கெமிஸ்ரி தான் பிரச்சனை. நீர் கெமிஸ்ரி சொல்லிக் கொடுப்பீரே என்றார். எனக்கோ மீண்டும்.. கூட்டுப்புழுவுக்குள் இருந்து கிளர்ந்தெழுந்து.. பட்டாம்பூச்சிகள் பறந்து திரிவது போல.. மனசெல்லாம் மகிழ்ச்சி. தோல் எல்லாம் அந்தக் குளிரிலும்.. ஒரே புல்லரிப்பு.

 

நான் மெளனமாக என் புல்லரிப்பில் பூரித்துப் போய் இருக்க.... சிறிது மெளனத்தின் பின் மீண்டும் அவரே தொடர்ந்தார். தம்பி.. குறை நினைக்காதையும் கண்ட இடத்திலும் வைச்சுக் கேட்கிறன் என்று.. இவாக்கு கெமிஸ்ரி தான் முக்கிய பிரச்சனை. மற்சும்.. ஜியோக்கிரபியும் ஓரளவுக்குச் செய்வா. மாட்டன் என்று சொல்லாமல் படிப்பிப்பீரே தம்பி என்றார்.

 

எனக்கோ.. என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு பக்கம்.. பக்கத்தில.. பிகரு. இன்னொரு பக்கம்.. படிச்ச கெமிஸ்ரில கொஞ்சம் தான்.. மனசில நிற்குது. மிச்சம் மறந்து போயிட்டுது என்ற பிரச்சனை. மனசோ.. சமாளிச்சிடடா மச்சி.. எப்படியாவது சமாளிச்சு வெளிய வந்திடு.. பிகரு மட்டும் பத்திரம்.. என்றிச்சுது. அங்கிள்.. அது வந்து.. நான்.. தொடர்ந்து படிக்கிறதால.. ரியூசன் எடுக்க நேரம் வருமோ தெரியல்ல... என்றேன்.

 

ஐயோ தம்பி எங்களைக் கைவிட்டிடாதையும்.. என்று கையைப் பிடிச்சு.. காலில விழாத குறையாக கெஞ்ச ஆரம்பித்தார். பார்க்கப் பாவமாக இருந்தது. இப்போ.. மனதில் பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சிகள் எல்லாம் இறக்கை களைத்து.. முருக்கை மரத்தில் இளைப்பாறப் போனது போல.. என் மனதில்.. முன்னர் இருந்த.. பூரிப்பின் அளவும் குறைந்து அவர்கள் மீது.. பரிவாக அது மாறி இருந்தது.

 

அங்கிள்.. டோண்ட் வொறி...என்னால முடியாட்டிலும்.. உங்களுக்கு உதவி செய்யுறன். எனக்கு தெரிஞ்ச ஆக்களிட்ட கேட்டு.. ஒரு நல்ல ரீச்சர் பிடிச்சுத்தாறன் என்றேன். சரி தம்பி பறுவாயில்லை. அப்ப உம்மட போன் நம்பரைத் தாரும்.. பிறகு அடிச்சுக் கதைக்கிறனே என்றார். நானும்.. என் போன் நம்பரை அவரிடம் கொடுத்துவிட்டு.. பாவம்.. உதவத் தான் வேண்டும்.. பிகருக்காக எண்டு இல்லாட்டிலும்.. கல்வி மேல.. இவ்வளவு அக்கறையா இருக்கிற ஒரு தமிழனுக்கு உதனும் என்ற முடிவோடு விடைபெற ஆயத்தமானேன்.

 

அதுவரை மெளனமாக இருந்து நடக்கிறதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிகரு.. நான் புறப்படக் கிளம்பியதும்.. சிறிது புன்னகைத்தபடி.... பாய் அண்ணா என்றிச்சுது.

 

எனக்கோ.. அண்ணா என்றதைக் கேட்டதும்.. மனசில பறந்த பட்டாம்பூச்சிகள் எல்லாம் ஒரே நொடியில் செத்து விழுந்தது போல இருந்திச்சு. நாடி நரம்பெல்லாம் ஓய்ஞ்சு இரத்தம் அந்தக் குளிரோடு சேர்ந்து விறைச்சது போல ஆச்சுது.  இருந்தாலும்.. உதவி செய்யனும் என்ற அந்த எண்ணம் மட்டும் குறையாமல் விடைபெற்றுச் சென்றேன்.

 

சிறிது நாட்களின் பின்னர் அவராகவே போன் பண்ணி கேட்ட இடத்தில்.. ஒரு ஆசிரியரை ஒழுங்கும் பண்ணிக் கொடுத்தேன். அதுக்கு நன்றிக்கடனாக.. இப்போ.. பார்க்கில் என்னைக் கண்டால் தானும் கூட ஓடி வருவார். ஆனால்.. பிகரு.. மட்டும் தங்கச்சியானது.. மனதின் ஒரு மூலையில்... வலியாக... இருந்து கொண்டே இருந்தது. :lol::icon_idea:

 

(நிஜம் + கற்பனை)

Link to comment
Share on other sites

ஃபிகர் எடுத்த உடனேயே அண்ணா சொன்னதால் ஏற்கனவே புக் ஆகிவிட்டது என்று அர்த்தம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் அண்ணா என்று கூப்பிட்டவர்கள் பிற்காலத்தில் சிலருக்கு மனைவியாகவும் காதலியாகவும் வந்திருக்கினம். அதன் பிறகு சிலருக்கு கொடூர பத்திரகாளியாகவும் வந்திருக்கினம். எதுக்கும் மனதினைத்தளர விடாதே நெடுக்கு.

Link to comment
Share on other sites

முதலில் அண்ணா என்றுதான் தொடங்குவினம் . :icon_mrgreen: .மீண்டும் வடை போச்சா .

அப்பாவே கூப்பிட்டு டியுசன் சொல்லி கொடுக்க கேட்குமளவில் அப்பாவி லுக்கா :lol:

எழுதுதியவிதம் நன்றாக இருந்தது .

Link to comment
Share on other sites

எல்லாம் கற்பனை என்று நம்பி துலைக்க வேண்டி இருக்கு இறைவா ..

அருமை கதை நெடுக்கு அண்ணே ..

Link to comment
Share on other sites

சி... இந்த நெடுக்கும், சுண்டலுக்கும்  தான் ஒண்ணும் வாய்கிதில்லையே  :(  :D

 

கதை நகர்த்திய விதம் அருமை!!

Link to comment
Share on other sites

இது வஞ்சனை அலை அக்கா நாங்களும் இருக்கிறம் .....இசை முணுமுணுப்பு :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கமும்.. கருத்தும் நல்கிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. :)

Link to comment
Share on other sites

பார்க்கில இருந்த பிகர் மேல படத்தில இருக்கிற பிகர் அளவுக்கு வருமா  ??  :huh:
 
கலயாணத்திற்கு முன் பிகர் எல்லாம் சுகர் மாதிரி. (sugar)
பிற்பாடு அது சுகர் அல்ல பகர். (bugger)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கர், அப்பாவோட நிக்கிற பெண்ணு, உங்களைப்பாத்து 'அத்தான்' என்றா கூப்பிடும்? :icon_idea:

 

எதுக்கும் நேரம் கிடைக்கிறபோது, அப்பாவும் ஓடிக்களைச்ச பிறகு, 'தங்கச்சியையும்' கூட்டிக்கொண்டு ரெண்டு ரவுண்டு ஓடிப்பாக்கிறது! :D

 

அதுக்குப் பிறகு, உங்களை முதல்ல கண்டதிலேயிருந்து, என்னவோ எனக்கு 'நித்திரை' வாறது நல்லாக் குறைஞ்சு போட்டுது எண்டு துவங்க வேண்டியது தானே! :o

 

தூண்டில் காரன், தூண்டிலைப்போட்டிட்டு எவ்வளவு நேரம் குந்திக்கொண்டிருக்கிறான்? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூண்டில் காரன், தூண்டிலைப்போட்டிட்டு எவ்வளவு நேரம் குந்திக்கொண்டிருக்கிறான்? :icon_idea:

 

பார்த்தமா.. சிரிச்சமா.. பாய் சொன்னமா என்றிருக்கிற விசயத்தில எல்லாம் சலனப்படக் கூடாது.. புங்கையண்ணா. அப்புறம் சிக்கலில் சிக்க வைச்சிடும். :):lol:

 

கருத்துச் சொன்ன உறவுகள் அனைவருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே  பார்த்தன்

நம்ம தம்பியாச்சே

ஒரே ரத்தம்.......... :wub:

 

இந்த கதையை  வாசித்தபோது.....

தமிழரின் ஒரே சொத்து  படிப்பு

அதற்காக

எவரிடமும் கையேந்த தயாராக  இருக்கும் தமிழர்......

அந்த அப்பாவும்

பெண்ணும் பெரும் அப்பாவியாக எம்முன்

ஆனால் அவர்களது குறிக்கோள்........ :icon_idea:

 

நன்றி  தம்பி

கதைக்கும் நேரத்திற்கும்........

Link to comment
Share on other sites

அதுக்கு அவர் அப்ப இதுக்கு முதலில் எங்க படிச்சனீர் என்றார். நான் அதுக்கு சிறீலங்கா.. என்றேன். அவ்வளவும் தான் அவரின்.. மூஞ்சியில் ஈயாடவில்லை. முகம் மலர்ச்சி இழந்து கறுத்துப் போனது. அதுவரை என்னை அடிக்கடி.. கடைக்கண்ணால் பார்த்திட்டு இருந்த பிகரும்.. வெறிச்சு.. இலைகள் உதிர்த்திருந்த.. பார்க் மரங்களை பார்க்க ஆரம்பிச்சுது.

கற்பனையோ! உண்மையோ! கதை பளிச்சென்று ஒரு உண்மையை உணர்த்தி நிற்கிறது. :icon_idea:

சிறீலங்கா .. என்றால் கொழும்பைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் கலாச்சாரம் வேறு. கொழும்பு, லண்டன் என்றால்! இங்கு நாலு பிகருடன் கூடிப்பழகும் வாய்ப்புகள் நிறைந்த இடமாகும். பிகருகளை ரசிக்கலாம். ரசித்ததை அவர்கள் அனுமதி இல்லாமலே ருசிக்கலாம். இந்த வாய்ப்புகளை பெறமுடியாத பெடியள் என்றால் காஞ்ச மாடு கம்பிலை விழுந்ததுபோல் விழுந்துவிடுவார்களோ என்கிற பயம்தான், அப்பனுக்கும் மகளுக்கும் ஏற்பட்டதோ??. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையோ! உண்மையோ! கதை பளிச்சென்று ஒரு உண்மையை உணர்த்தி நிற்கிறது. :icon_idea:

சிறீலங்கா .. என்றால் கொழும்பைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் கலாச்சாரம் வேறு. கொழும்பு, லண்டன் என்றால்! இங்கு நாலு பிகருடன் கூடிப்பழகும் வாய்ப்புகள் நிறைந்த இடமாகும். பிகருகளை ரசிக்கலாம். ரசித்ததை அவர்கள் அனுமதி இல்லாமலே ருசிக்கலாம். இந்த வாய்ப்புகளை பெறமுடியாத பெடியள் என்றால் காஞ்ச மாடு கம்பிலை விழுந்ததுபோல் விழுந்துவிடுவார்களோ என்கிற பயம்தான், அப்பனுக்கும் மகளுக்கும் ஏற்பட்டதோ??. :blink:

 

அண்மையில்.. உறவுக்காரர் ஒருவரின் புலம்பெயர் வாரிசுப் பெண். அவருக்கு ஊரில் அவர்களின் தூரத்து உறவில் ஒரு பையனை பார்த்தார்கள். இவாவும் சிறீலங்கா போய் வந்த போது அந்தப் பையனோடு சாதாரணமாகப் பழகி இருக்கிறா. அவர் இப்போது.. மருத்துவத்துறை முடிச்சுவிட்டார் (யாழில்). பெற்றோர் பெண்ணிடம்.. அவனை கட்டிறியா என்று கேட்க.. மாட்டன் பதிலாம். பெற்றோர் அதோட அந்தப் பேச்சை கைவிட்டு விட்டார்கள்.

 

திருமணம் என்பது அவரவர் சுய விருப்பம். ஆனால்.. அந்தச் சுய விருப்பில் என்னென்ன விடயங்கள் செல்வாக்குச் செய்கின்றன என்பதில்.. பல காரணிகள் தங்கி உள்ளன.

 

நன்றி பாஞ்ச். இந்தக் கதைக்குள் எங்களின் சமூக நடத்தைகள் பலவற்றை ஒளிச்சு வைச்சிருக்கிறன். அதில் ஒன்றை அடையாளம் கண்டிட்டீங்க. :):D

 

நன்றி விசுகு அண்ணா. நீங்களும் இன்னொன்றை அடையாளம் கண்டிருக்கிறீங்க. பிற உறவுகளும் கண்டிருக்கிறார்கள். ஆனால் அநேகர்.. நேரிடையாக.. பிகரை பற்றித்தான்.. சிந்தித்திருக்கிறார்கள். பிகர் தானே அங்கு முக்கியப்பட்டுள்ளது. அது அவர்களின் குற்றமும் அல்ல. எங்களின் தவறும் அல்ல. :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உப்பவும் 18 வயசுக்கு குறைவான ஏ எல் படிக்கிற பெட்டை கேட்குதோ :o ....பெட்டை சுமார் ஆனால் அண்ணா என்டு கூப்பிட்டுட்டுது என்டு கவலை :rolleyes: ஜயோ,ஜயோ எங்க போய் முட்டிறது :lol: என்டு தெரியேலையே :D
 
கதை எழுதின விதம் சுப்பராய் இருக்குது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப ஒரு டவுட் வருது, :unsure:  அந்தப் பெட்டை இவரை அண்ணா எண்டு கூப்பிட்டதா இல்லாட்டி அங்கிள் எண்டு கூப்பிட்டதா? :rolleyes:  கூடுதலாக அங்கிள் எண்டுதான் கூப்பிட்டிருக்கும்! :D

 

ஸ்டோரி கலக்கல் ரகம்!!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பவும் 18 வயசுக்கு குறைவான ஏ எல் படிக்கிற பெட்டை கேட்குதோ :o ....பெட்டை சுமார் ஆனால் அண்ணா என்டு கூப்பிட்டுட்டுது என்டு கவலை :rolleyes: ஜயோ,ஜயோ எங்க போய் முட்டிறது :lol: என்டு தெரியேலையே :D

கதை எழுதின விதம் சுப்பராய் இருக்குது

நாங்க எப்பவும் உடலாலும் மனசாலும் 18 தான்.சிலருக்கு பொறமை.ஆனாலும் பிகர் பார்ப்பமே தவிர பிடிக்கிறதில்ல. சுமார் பிகர் என்றாலும் அண்ணான்னு கூப்பிட்டால் தப்புத்தான்.அம்மாக்கு வயசானா பாட்டின்னு கூப்பிட முடியாதில்ல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப ஒரு டவுட் வருது, :unsure: அந்தப் பெட்டை இவரை அண்ணா எண்டு கூப்பிட்டதா இல்லாட்டி அங்கிள் எண்டு கூப்பிட்டதா? :rolleyes: கூடுதலாக அங்கிள் எண்டுதான் கூப்பிட்டிருக்கும்! :D

ஸ்டோரி கலக்கல் ரகம்!!! :)

இன்னும் அங்கிள் ஆகல்ல.உங்க மகள் பிறந்து வளர்ந்து யாழ் வந்தால் அப்படி கூப்பிடலாம்...ஒரு வேளை.:)

×××××××××××××××××××××××××××××××

நன்றி இருவர் கருத்துக்கும்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது. படிக்க உதவி கேட்பவர்களுக்கு மனம் சஞ்சலப்படாமல் உதவி செய்யவேண்டும். அதுதான் நல்லது...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது. படிக்க உதவி கேட்பவர்களுக்கு மனம் சஞ்சலப்படாமல் உதவி செய்யவேண்டும். அதுதான் நல்லது...! :D

 

நன்றி சுவி அண்ணா. :)

 

உதவி செய்ய... மனசு இடம் கொடுத்தாலும்.. சூழ்நிலை.. காலம் இடம்கொடுக்கனுமே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அம்மா. ;)

 

(நிஜமாவே அம்மா இதைப் பார்த்தா.. அருமை என்று சொல்லி இருக்கமாட்டா. எருமை... உன்னை படிக்க அனுப்பினனா.. கதை கவிதை எழுத அனுப்பினனா என்று தான் விழும்.) :D:lol:

Link to comment
Share on other sites

கதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் , நெடுக்கர் தொடர்ந்து எழுதுங்கள் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோம்ஸ் அண்ணா உங்கள் கருத்திற்கு. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.