Jump to content

பிள்ளை பிடிகாரர்


Recommended Posts

 

learningitem_id_50104.gif

இது எப்ப நடந்தது என்று சரியாக என்னால் சொல்ல முடியாவிட்டாலும்  எனது பத்து வயதுக்கு உட்பட்ட காலத்தில் தான்.அந்த காலத்தில் நாங்கள் எதாவது குழப்படியோ எங்கள் பாதுகாவலரின் விருப்பத்துக்கு மாறாகவோ செய்தால் பிள்ளை பிடிகாரரிடம் பிடித்து கொடுத்து விடுவோம் என்று வெருட்டுவதுண்டு.சந்திரனை காட்டி சோறு ஊட்டுவதுமுண்டு .இப்படி வெருட்டுவதுமுண்டு.இதன் உண்மை பொய்மை தெரியாததால் மகிழ்வதுமுண்டு வெருள்வதுமுண்டு

 

.பிள்ளை பிடிகாரர் என்று யாரை தெரிவார்களென்றால் கொஞ்சம் குரூரம் ,கொஞ்சம் முரடன் ,பொதுவாக சராசரிகளின் தோற்றமில்லாதவர்களைதான்.றோட்டாலை வலது பக்கம் போகவேணும் இடது பக்கமாக வரணும் கரையாலை போகணொம் வான் பஸ் கார் வரும் கவனம் என்று ஆயிரம் உபதேசம் செய்து பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு உண்மையாகவே பிள்ளை பிடிகாரர் உலவாகினமாம் என்ற செய்தி காற்றில் அடிபட வயிற்றில் புளியை கரைத்தது.

 

எந்தந்த மனிதர்களை பிள்ளை பிடிகாரர் என்று சொல்லி வெருட்டினார்களோ அவர்களை மட்டுமன்றி போற வாற கந்தன் சுப்பன் கடம்பன்  எல்லாரையும் சந்தேகித்தார்கள்.மாய மனிதன் ,பேய்  மனிதன் உலாவுகிறார்கள் என்ற மாதிரி தான் பிள்ளை பிடிகாரர் என்ற  செய்தியா உலவா தொடங்கியது. ஏனெனில் கண்டவர் விண்டிலர்  விண்டிலர் கண்டவர் என்ற மாதிரி ஒருதர் கூட சரியான விபரங்கள் உறுதி படுத்தியவர்கள் இல்லை.ஆனால் இந்த கதை

 

 

ஊதி பெருத்து அந்த கிராமத்தில் ஒரு பட படப்பை  உருவாக்கி இருந்து . இந்த மனிதர்களின் படபடப்பு  வீட்டு பிராணிகள்  தொற்றி இருக்கலாமோ என்னமோ சம்பந்த மில்லாத நாய்களின் குரைப்பும் இனம் தெரியாத பறவைகளின் அலறல் சத்தமும்  உறுதி படுத்தின. இந்த சில தான் தோன்றிதன மான  சில உண்மைகள் கதை கட்டுமான பணிகள் கிடைக்காமால் ஏங்கும் சிலருக்கு  இது அவல் மாதிரி  கிடைத்தமையால் ...நல்லாய் மென்று என்னவென்று தெரியாத உணர முடியாத ஒரு பய பீதியை உருவாக்கி  விட்டிருந்தார்கள் . ஆடு  மாடு தான் இருள முந்தி  கட்டு போகும் நிலமை இல்லாமால் ..சிறு பிள்ளைகளுக்கு  உள்ள பிரச்சனை என்று போய்  வயது வந்த பெரிசு இளசு குமரு குஞ்சுகள் கூட இருள முன் வேளைக்கே வீட்டுக்குள் இரட்டை பாடு தாள் போட்டு வீட்டுக்குள்  அடங்கி விடுவார்கள்.இந்த மாயன அமைதியே பயத்தை  ஒரு வித கிலியை பல மடங்காக்கி விட்டிருந்தது.

 

தண்டால் போட்டு உருட்டு கட்டை சுழட்டி சராசரிக்கு மேல் உண்டு  உறங்கி வடகத்தைய காளை மாடு போல் திரண்டு இருக்கும் அவ்வூர்  இளைஞர்கள் விரும்பியோ விரும்பமாலோ களத்தில் இறக்க பட்டார்கள், வெறும்  உடம்பை காட்டி  தங்கள் வனப்பை எதிர்ப்பாலாரை கவரும் தொழிலை மட்டுமே செய்தவர்கள் களத்தில் நிற்க மிகவும் கஸ்டப்பட்டார்கள் . .  இந்த தொழிலை செய்ய  திணித்த ஊர் பெரிசு களின் மேல்  உள்ள ஆத்திரத்தை சும்மா போற வாற நோஞ்சான்  நொடுக்கு பேர்வழிகளில் காட்டினார்கள்.பிள்ளை பிடிகாரரின் ஆயுதமாக  மயக்க மருந்து புகை கருவி பாவிப்பதாக செய்தி ஊடகங்கள் எழுதி குவித்தது .இது தங்கள் மீதும் பிரயோகிக்க பட்டு விடுமோ என்று அஞ்சி சில இளைஞர்கள் பின் வாங்கினார்கள் .இதை பெரிசுகள் மட்டும் கேலி செய்யவில்லை . ஒரு கண் வைத்திருந்த பெண் புரசுகள் இவர்களது இவ்வளவு தானா என்று குசு குசுக்க தொடங்கி விட்டார்கள்.இந்த இடையை பாவித்து நடுத்தர பெரிசுகள் தங்களின் அந்த கால வீர பிரதாபங்களையும் தான தண்டத்தையும் பிரகடன படுத்த தொடங்கி விட்டார்கள்

 

றோட்டாலை பள்ளி கூட்டி கொண்டு போகாமால் தோட்டம் ,துரவு,காணி பூமிக்கால் உள் பாதையூடாக அனுப்பினார்கள் . அப்படி இருந்தும்  உண்மையில் எங்கள் வகுப்பு மாணவன் ஒருவன் காணாமால் போனான் . அப்பவும் அது பிள்ளை பிடிகாரன் பிடித்து கொண்டு போகவில்லை பெற்றோரின் கொடுமை தாங்காமால ஓடி போட்டான் என்று  பள்ளி கூட தரப்பு ஒரு கதை கூறியது. அது சில வேளை உண்மையாக இருக்கலாம் என்று சிலர் நினைத்தார்கள் . அவன் எப்பாவது பள்ளிக்கு வருவான் .வந்தாலும் ஆசிரியர்களின் அரியண்டம் தாங்காமால் பாதி நாள் பள்ளியிலையே காண கிடைக்காது.எனக்கென்னவோ அவனில் இனம் தெரியாத விருப்பம் .அவனுக்கும் என்னில் அப்படியே...காலம் அதிக காலம்  அவனது  கதையை அமுக்க முடியவில்லை....புத்தளம் சிலாபம் போன்ற பகுதிகளுக்கு  அண்மையில்  உள்ள மீன்பிடி தீவுகளை சுற்றி வளைத்த பொலிசார்  பல சிறார்களை மீட்டார்கள் என்ற செய்தி கொட்டை எழுத்துக்களில் உலாவியது . செய்தி ஊடகங்கள்  சிறார்களின் பெற்ற  அனுபவ கதை என வித விதமாக எழுதியது . பள்ளியில் யார் என்று தெரியாத நிலை மாறி எல்லாருக்கும் தெரிந்த  ஒருவனாக வந்த பொழுது  அவனிடமே கதையை கேட்டேன்

 

தன்னை நாலுபேர் வந்து கைகுட்டை ஒன்றினால் தனது முகத்தில் மூடிய பின் தான் மயங்கி விட்டேன் என்றும் அதன் பின்  ஒரு கடற்கரை பிரதேசத்தில்   ஒன்றில் சட்டரீதியற்ற தொழில் செய்யும் இடத்தில் தொழில் செய்ய அமர்த்த பட்டதாகவும் .. பின் அங்குள்ளவர் கள் சொல்ல கேள்விபட்டதாகவும்  ஒவ்வொரு மாதமும்  இரு சிறுவர்களை   நரபலி க்கு பயன் படுத்துவார்களாம்  புதையல் எடுப்பதற்க்கு .என்று..தனது முறை வரும் முன்பு காப்பற்றப்பட்டதாக் கூறினான் . சொல்லும் பொழுது உயிர் தப்பிய சந்தோசம் அவன் கண்ணில் மிளிர என்  கண்ணிலும் தெறித்த்து.

 

அதன் பின்  பல பல வருடங்கள் கழிந்து பின் எதேச்சையாக அவனை  சந்தித்தேன்  ஒரு முட்டு சந்தில். நானும் இளைஞனாக அவனும் இளைஞனாக ..அவன் முன்பு போல சோம்பியவன் மாதிரி இல்லாமால் ஒரு கட்டு மஸ்த்தானவனாக இருந்தான் ... சந்தித்த கால கட்டத்து நடக்கும் விசயம் ஒன்றுக்காக அப்பிரதேசத்து தலைமை  ஆள் பிடிகாரனாக இருந்தான் . இரண்டு நாடுகளின் வாய்க்கால்  வரப்பு சண்டைக்காக  இந்த ஆள் பிடிப்பு வேலைக்கு தூண்டி  விட்டது வலுவான நாடு ...என்ன மயக்க மருந்து கொடுக்காமால்  ஒரு மயக்க உணர்ச்சி கோசத்தை வைத்து ...அவன் என்னிடமும் அரசியல் பேச முற்பட்டான் . அரசியல் எனக்கு  எப்பவும் பிடிக்காது  அரசியலும் தெரியவே  தெரியாது (சிலர் நமுட்டு சிரித்தால்  அதற்கு நான் பொறுப்பில்லை)..அதனால் அவனையே கதைக்க விட்டேன் எந்த குறுக்கீடில்லாமால்

 

எல்லாம் முடிந்து அவன் என்னிடமிருந்து விடை பெறும் பொழுது என்னிடமிருந்து ஒன்று மட்டும் தான் அவனிடம் சொல்ல வேணும் மாதிரி இருந்தது .ஆனால் அப்பொழுது  சொல்லவில்லை

 

யாருக்கோ கிடைக்க போகும் புதையலுக்கு நீ நரபலியாவதிலுமிருந்து தப்பி விட்டாய்

 

ஆனால்  இப்ப வேற வடிவத்தில்  யாருடையோ தேவைக்காக மீண்டும்  மாட்டி கொண்டாய் நீ ...என்று

 

 

...http://sinnakuddy.blogspot.co.uk/2014/01/blog-post_10.html

 

Link to comment
Share on other sites

நானும் இந்தப் பிள்ளை பிடிகாறர்களை பற்றிய கதைகளை சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு . அப்பொழுது சிறுவர்களை கூலிகாக வேலை செய்வதற்கு வேறு இடங்களில் இருந்து கூட்டி வருவதும் போவதும் பிள்ளை பிடிக்காறர்களால் செய்யப்பட்டது . பின்பும் பல பிள்ளை பிடிகறார்கள் பல முகங்களில் வந்தார்கள் . இறுதியில் நடைபெற்றதென்னவோ நரபலிகள் தான் . ஒரு கனதியான விடையத்தை கடுகுக்குள் கோர்த்த விதம் மிக அழகு . சின்னக்குட்டியர் இது போல் பல கதைகளைத் தரவேண்டும் . பாராட்டுக்கள் சின்னக்குட்டியர்  :)  :)  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது!  :lol:

 

தொடர்ந்து எழுதுங்கள் சின்னக்குட்டியர்!

 

பிற்காலத்தில், பிள்ளை பிடிகாரர், வெள்ளை வான் போன்ற நவீன முறைகளையும் பயன்படுத்திப் பிள்ளைகளை மட்டுமல்லாமல், பெரிய ஆக்களையும் பிடித்தது 'ஊரறிந்த ரகசியம்" !

 

எல்லாமே ஒரு விதமான புதையலின் தேடல் தான்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆனால் இப்ப வேற வடிவத்தில் யாருடையோ தேவைக்காக மீண்டும் மாட்டி கொண்டாய் நீ ...என்று
பதின்ம வயதில் புரியாத,விளங்காத பல விடயங்கள் 50 வயதின்பின்பு புரிகிறது...இதுதான் வாழ்க்கை..... :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாய் இருக்கு , கன காலத்தின் பின் கண்டது மகிழ்ச்சி ...! :D

Link to comment
Share on other sites

மேலே பதிவை பார்த்து கருத்து சொன்ன அனைவருக்கும் இந்த சின்னக்குட்டியின் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ காலத்தில் , இந்திய இராணுவத்தோடு திரிந்த பிள்ளைபிடிகார்களுக்கு தப்பி ஒளித்து ஓடிய ஞாபகம் வருகிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.