Jump to content

பூரி


Recommended Posts

தேவையான பொருட்கள்:

 

ஆட்டா மா  - 2 சுண்டு

குளிர்ந்த நீர்  - தேவையான அளவு

உப்பு  - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

 

தயாரிக்கும்   முறை:

 

ஆட்டா மாவிற்கு தேவையான அளவு உப்பு கலந்து குளிர் நீர் விட்டு குழைத்து வைக்க வேண்டும்

குழைத்து வைத்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய வட்டங்களாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்

வாணலியில் (தாச்சியில்) எண்ணையைக் சூடாக்கி வைத்து; ஏற்கனவே தட்டி வைத்த பூரிகளை பொன்னிறமாகப் பொரித்து

எடுக்கவும்.

2 சுண்டு ஆட்டா மாவில் 12 முதல் 14 பூரிகள் வரை தயாரிக்கலாம்.

பூரியை உருளைக்கிழங்குப் பிரட்டல் கறி, கடலைக் கறி ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

 

குறிப்பு:

 

பூ‌‌ரி செ‌ய்யு‌ம் போது ‌சி‌றிது மைதா மாவு, 1 தே‌க்கர‌ண்டி ரவையை சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் பூ‌ரி அ‌திக நேர‌ம் உ‌ப்‌பி   இரு‌க்கு‌ம்.

சற்று தடிமனாக இட்டு இருந்தால் தான் பெரிதாகப் பொரிந்து சுவையாக இருக்கும்.

மிதமான சூட்டில் மட்டுமே எண்ணை காய வேண்டும்.

பூரி இடும்போது சப்பாத்திக்குச் செய்வது போல் மாவு தோய்த்து இடக்கூடாது. இப்படிச் செய்வதால் பொரிக்கும் எண்ணையில், 

இந்த மாவு பிரிந்துபோய் கருப்பு அடியில் தங்கிவிடும். அந்த எண்ணையிலேயே அடுத்தடுத்த பூரிகளைப் பொரிக்கும்போது வண்டல்

அவற்றின்மேல் ஒட்டிக்கொண்டு, உடல் ஆரோக்யத்திற்குப் பெரும் கேடு. உருண்டைகளை எண்ணை தோய்த்து மட்டுமே இடவும்.

இதனால், பூரி பொரித்த எண்ணை கடைசிவரை கலங்காமல் இருப்பதை நாமே உணரலாம்.

 

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=1005:2010-12-24-04-18-48&catid=90:games&Itemid=455

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஆரதி.
வருகின்ற கிழமை ஒருக்கால்... பூரி செய்து பார்க்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான பதார்த்தத்தை எப்படி தயரிப்பது என்று கற்றுக் கொடுத்ததிற்கு நன்றி.

அடுத்து  இட்லி, தோசை முதலியனவற்றை செய்யும் முறையையும் விளக்கினால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான பதார்த்தத்தை எப்படி தயரிப்பது என்று கற்றுக் கொடுத்ததிற்கு நன்றி.

அடுத்து  இட்லி, தோசை முதலியனவற்றை செய்யும் முறையையும் விளக்கினால் நல்லது.

 

மதுரைக்கே...... மல்லிகைப் பூவை, தெரியாதா?

என்னய்யா... நீங்கள்?  தமிழ்நாட்டில் பிறந்தவருக்கு இட்லி செய்யத் தெரியாதா?

இந்தக்க் கொடுமையை.... பாருங்க சாமீய்..... :rolleyes:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரைக்கே...... மல்லிகைப் பூவை, தெரியாதா?

என்னய்யா... நீங்கள்?  தமிழ்நாட்டில் பிறந்தவருக்கு இட்லி செய்யத் தெரியாதா?

இந்தக்க் கொடுமையை.... பாருங்க சாமீய்..... :rolleyes:  :D

 

அடுப்படி பக்கம் போனால்தானே தெரியும்?

 

சமைத்துக் கொடுப்பதை ரசித்து சாப்பிடுவதோடு சரி.(ருசி பற்றி குறை ஏதும் சொல்லக்கூடாது) :)

'என்ட்ரி டு கிச்சன் ஈஸ் நாட் அலொவ்டு...!' :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஆரதி.

வருகின்ற கிழமை ஒருக்கால்... பூரி செய்து பார்க்க வேணும்.

 

நேற்று ரவை இட்லி செய்து கழுவிக் கவிட்ட சட்டி இன்னும் காயெல்ல ...!

 

குறிப்பு: இட்ட்லிக்கு கறண்டி , பூரிக்கு உறுட்டுக் கட்டை..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நேற்று ரவை இட்லி செய்து கழுவிக் கவிட்ட சட்டி இன்னும் காயெல்ல ...!

 

குறிப்பு: இட்ட்லிக்கு கறண்டி , பூரிக்கு உறுட்டுக் கட்டை..!

 

 

இப்பிடி.... பயப்பிடுத்திறீங்களே சுவி.

இப்ப பூரி.... சுடவா, வேண்டாமா? :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி , பாரியிடம் கோரி சரிசெய்து பூரியைப் பொரியுங்கோ..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரி எனக்கு விருப்பமான உணவு.முந்தி ஒருக்கால் செய்து பார்த்தனான் ஆனால் கடைப் பூரி மாதிரி பொங்கி வரவில்லை ஏனென்ன தெரியவில்லை...இணைப்பிற்கு நன்றி ஆரதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.