Jump to content

பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷைப் பிரிக்கலாம், இலங்கையிலிருந்து தமிழ்ஈழத்தைப் பிரிக்க கூடாதா? - சீமான் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]seeman-24712-150.jpg[/size]

[size=4]கருணாநிதி அரசியல் சுயலாபத்துக்காக டெசோ மாநாடு நடத்துகிறார் என்று சீமான் கூறினார்.நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:[/size]

[size=4]தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மொத்தம் 8 கோடி தமிழர்கள் உள்ளனர். ஆனால் இதில் 10 ஆயிரம் பேர் கூட தமிழர்களாக வாழவில்லை. நாம் மதங்களாக, ஜாதிகளாக பிரிந்து கிடப்பதால் பலவீனப்பட்டுக் கிடக்கிறோம். மற்ற மாநிலங்களில் அவரவர் இனத்தை அவரவர் ஆள்கின்றனர். ஆனால் இங்கு மட்டும்தான் நம்மை மற்றவர்கள் ஆள்கின்றனர். உலகில் தமிழன் வாழாத நாடில்லை. ஆனால் நமக்கு என்று ஒரு நாடு இல்லை.[/size]

[size=4]நம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரைச் சூட்டுவோம். நமது பிள்ளைகளைத் தமிழ் பிள்ளைகளாக உருவாக்குவோம். தமிழை மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷைப் பிரிக்கலாம். ஆனால் இலங்கையிலிருந்து தமிழ் ஈழத்தைப் பிரிக்க கூடாதா?[/size]

[size=4]மத்தியில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழித்துவிட்டு கூட்டாட்சி மலரச் செய்ய வேண்டும். அந்தந்த மாநிலங்களை அந்தந்த மாநில கட்சிகளே ஆளவேண்டும். திமுக தலைவர் கருணாநிதி அரசியல் சுயலாபத்துக்காக டெசோ மாநாடு நடத்துகிறார். ஊழலை உண்ணாவிரதம் இருந்து ஒழிக்க முடியாது. உளமாற உணர்ந்துதான் ஒழிக்க முடியும் என்றார் அவர்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.