Jump to content

ஆதியைத் தேடி ஆழியில் சயனம்!


sOliyAn

Recommended Posts

(2004, டிசம்பர் 26ம் தேதி... சுலபமாக மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! அதன் பாதிப்பில் அப்போது எழுதிய சிறுகதை.)

 

8e5.gifது ஒரு ~சொக்கலேற்~ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை.

 

பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை ~சொக்கலேற்~ வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி. அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளால் சுற்றி பெட்டிகளில் அடைக்கும் பகுதி களஞ்சியப் பகுதி விநியோகப் பகுதி என வேலை செய்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்குக் குறையாது.

 

அந்த ஆயிரத்தில் ஒருவனாய் அந்தப் பகுதியில் ஒன்றில்... அதாவது வர்ணத் தாளால் சுற்றப்பட்டு வரும் ~சொக்கலேற்~களுள் தவறாகச் சுற்றப்பட்டவைகளை பிறிம்பாகத் தவிர்க்கும் பகுதியில் எனக்கு வேலை.

 

கேட்பவர்களுக்கு ~ப்பூ... இவளவுதானா வேலை.. மிகவும் இலகுவானதாச்சே..~ என்பதுபோல இருக்கும். தப்பில்லை. ஆனால் அந்தந்தப் பகுதி பொறுப்பாளர்களைப் பொறுத்து வேலை சுகமாகவோ அல்லது சுமையாகவோ அமையும். இயந்திரங்களின் வேகக் கட்டுப்பாடு பொறுப்பாளர்களின் கையில். தொழிற்சாலை நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவதற்கு ஆசைப்படும் பொறுப்பாளர்கள் இயந்திரத்தின் வேகத்தைக் கூட்டிவிடுவார்கள். வேகம் கூடினால் தப்பானவைகளைத் தவிர்க்கும் வேலையும் கூடும். ஆக இயந்திரத்தின் வேகத்துடன் போட்டியிட வேண்டும்.

 

அன்று காலை... ~காட்~டை நேரத்தைக் குறிக்கும் இயந்திரத்தினுள் தள்ள அது நேரத்தைக் குறித்ததற்கு அறிகுறியாக பச்சைநிற குமிழை மினுக்கி ~காட்~டை வெளியே கக்கியது.

எனது பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். எதேட்சையாக பொதிகளாக்கும் பகுதியில் ஒரு பெண் என் கண்ணில் தென்பட்டாள். அவளை அதற்கு முன் அங்கே கண்டதில்லை.

கருமையான கூந்தல்.. கறுத்தக் கண்மணிகள்... முக அமைப்பு...

 

நிச்சயமாக எனது நாட்டுக்காரியாகத்தான் இருக்கவேண்டும். அந்தத் தொழிற்சாலையில் இலங்கையர் எவரையும் நான் கண்டதில்லை. ஆகவே நான் ஒருவன்தான் இலங்கை நாட்டவன் என்பது என் கணிப்பு.

 

இப்போது இவள்.. ஆனால் அவளது சிகை அலங்காரமும், காதணிகளும் சற்று வித்தியாசமாக, அந்தத் தொழிற்சாலைக்குரிய சீருடைக்காலும் ஐரோப்பிய யுவதிகளுக்குரியதாக வித்தியாசம் காட்டியது.

 

~சிங்களத்தியோ..?~

 

~இல்லை... இல்லை. தமிழிச்சியாகத்தான் இருக்கவேணும்...~

தொழிற்சாலைக்கு புதுவரவு. எனது நாட்டவள். சற்று சந்தோசம் பொங்கியது.

 

எதேட்சையாக நிமிர்ந்தவளின் பார்வை எனது கண்களைச் சந்தித்தது. முகத்தில் மலர்ச்சி தோன்றியது போலிருந்தது. புன்னகைத்தாளா? புரியவில்லை. ஏதோ ஒருவகை உணர்வு மாற்றம் தெரிந்தது அவள் முகத்தில.

 

மீண்டும் பார்வையை விலக்கி வேலையில் மும்மரமானாள்.

 

~என் நாட்டுக்காரி..!~

அவளைப்பற்றி மேலும் அறிய ஆவல் ஊறியது. நான் எனது வேலைப்பகுதிக்கு விரைந்தேன்.

 

~சொக்கலேற்~ வாசம் நாசித்துவாரம் வழியாக மனதை நிறைத்தது.
----------------------------

 

தற்குப் பின் சில தினங்களாக அவளைக் காண முடியவில்லை. சிலவேளை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது வேலைநேரம் மாற்றமடைந்திருக்கலாம்.

 

எனினும் அவளைச் சந்திக்கவேண்டும்... அறிமுகமாக வேண்டும்... அவளைப்பற்றி அறிய வேண்டும்... உரையாட வேண்டும் என மேலெழும் ஆசைகளை அடக்க முடியவில்லை. ஆசைகள் மேலெழுந்தால் நிம்மதியின் அழிவு நெருங்குகிறது என்றுதானே அர்த்தம்?! அதே நிலையில் நான்.

வாரம் ஒன்று நகர்ந்தது. அந்த வாரம் எனக்குக் காலை வேலை. காலை ஆறு மணியில் இருந்து பிற்பகல் இரண்டு மணிவரை.

 

மதியம் பன்னிரண்டு மணி. எல்லோருக்கும் உணவு இடைவேளை. சகல பகுதிக்கும் பொதுவாக அங்கே உணவருந்தவென 'கண்டீன்" ஒன்றுள்ளது. வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் உணவையும் அங்கே இருநஇது சாப்பிடலாம். அல்லது கண்டீனிலும் தொழிற்சாலை வேலையாட்களுக்கென சலுகை விலையில் விதம் விதமான உணவுவகைகள் விற்கப்படும்.

 

பொருட்கொள்வனவு, சமைக்கும் நேரம், அதற்கான மின்சாரச் செலவு, உபயோகித்தவற்றை சுத்தப்படுத்தும் நேரம் போன்றவற்றிலும் பார்க்க கண்டீன் சாப்பாடே சிறந்தது என்பது எனது கண்டுபிடிப்பு. அதனால் அங்கே சில உணவுப் பொருட்களை தட்டொன்றில் எடுத்து வைத்தவாறு பணம் செலுத்தும் இடத்தை நோக்கி நகர்ந்தேன்.

 

"ஏய் ராணி!"

ஒருத்தி சத்தமாக அழைக்கும் குரல் வந்த திசையை நோக்கினேன்.

 

அங்கே ஒரு மேசையில் அவளும், அவளுடன் சில பெண்களும் அமர்ந்து எதைப்பற்றியோ பலத்த சத்தமுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

 

~.. அவளது பெயர் ராணியா?!~

அப்போ அவள் இலங்கைப் பெண்தான்.

 

தீர்மானம் உறுதியாகியது.

 

அவளின் முன்னால் ஒரு கப் கோப்பி. அவளும் என்னைப் பார்துதுக் கொண்டிருந்தாள். அவளது கருவிழிகளில் மலர்ச்சி. கண்கள் பளபளக்க, ~சிகரட்~டை உதடுகளில் பொருத்தி, ஆழமாக உள்ளிழுத்த புகையை வெளியே ஊதியவாறு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

 

என்னால் புன்னகைக்க முடியவில்லை. எதிர்பாராத அதிர்ச்சியால் புன்னகைக்க மறந்தவனாய் திகைத்து நின்றேன்.

 

~எங்கடை பெட்டை சிகரட் பிடிக்குது. அதுவும் புகையோடை சிரிக்குது..~

 

என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

 

எங்களுடைய தமிழ்ப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என நானே எனக்குள் போட்டிருந்த கணக்கு தவறாகிவிட்ட புழுக்கம் என்னுள் வியாபிப்பதை உணர முடிந்தது.

 

தமிழ் ஆண்மகனானவன் பல தவறுகளைச் செய்யும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் என்னால்ää அவள் புகைப்பதை ஏன் தாங்க முடியவில்லை?

 

இதைத்தான் ~ஆணாதிக்கம்~ என்கிறார்களோ?!

 

மரியாதைக்காவது பதிலுக்குச் சிரித்திருக்கலாம்.

 

மனம் குறுகுறுக்க, தலை குனிந்தவாறு உணவுத் தட்டுடன் மேசையொன்றில் அமர்ந்தேன்.
--------------------------

 

தன் பின்னர் சில நாட்களாக அவளைப்பற்றி எழுந்த எண்ணங்களும் சிந்தனைகளும் என்னையே குதறிக் கொண்டிருந்தன.

 

~அவள் சிகரட் பிடித்தால் எனக்கென்ன? வலியச் சிரித்தவளுக்கு பதிலாக புன்னகைக்க முடியாத பண்பாடு துறந்த மனிதனாக எவ்வாறு மாறினேன்?!~

 

இப்படிப் பலவகையான குதறல்கள்.

 

அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

 

வேலை முடிந்து வஸ் நிலையத்தை நாடிச் சென்றபோது, அவளும் நின்றாள்.

 

எனக்குள் ஒருவகைக் குற்ற உணர்வு குறுகுறுக்க, அவளைத் தயக்கத்துடன் நோக்கினேன். மீண்டும் அதே புன்னகை.

 

"ஹலோ.."

 

"எனக்குப் பெயர் ராணி.."

~டொச்~சில் கூறினாள்.

 

"நான் ராஜா.."

அதுவும் ~டொச்~சில்தான்.

 

"... நீ அரசன்.. நான் அரசி.."

 

பலமாகச் சிரித்தாள். பதிலுக்குச் சிரித்துக்கொண்டேன்.

 

அவளது முகத்தில் சிறிது வாட்டம். கண்களில் சிறு கலக்கம். நெற்றியில் சுருளாக விழுந்து அலையாய அசைந்த கேசத்தை கையால் ஒதுக்கிவிட்டு, கைப்பையைத் திறந்து சிகரட் ஒன்றை உருவிப் பற்றவைத்துக் கொண்டாள்.

 

"என் பெற்றோர் இந்த அரசியை நாடு கடத்திவிட்டார்கள்..."

 

"என்ன..?"

 

"என்னை இந்த நாட்டுப் பெற்றோருக்கு ராணியாக்கிவிட்டார்கள்."

புரியாமல் பார்த்தேன்.

 

"நான் தத்துப்பிள்ளை."

வியப்புடன் பார்த்தேன்.

 

"நீ தமிழ் என்று நினைத்தேன்.."

 

"தழிழ்தான். என் பெற்றோர் தமிழ்தான். ஆனால் அவர்கள் ஜேர்மன் தம்பதிகளை எனக்கு பெற்றோர் ஆக்கிவிட்டார்கள். ராணி... அரசி என்று தெரியும். அதேபோல ராஜா.. அரசன் என்று தெரியும்.."

 

"பரவாயில்லை.. அதாவது தெரிந்து வைத்திருக்கிறாய்..."

 

"நிறைய அறியவேண்டும்.. இப்போது உன் அறிமுகம் கிடைத்திருக்கிறது. மேலும் நிறைய அறியவேண்டும்.. உன் மூலமாக..."

ஆர்வத்துடன் கூறினாள்.

 

அதன் பின்னர் அடிக்கடி என்னைத் தேடி வந்து உரையாடினாள். பார்வையில் குமரியானவள் பலவற்றை அறிவதில் குழந்தையானாள்.

 

"உன்னுடைய பெற்றோரைப் பார்த்திருக்கிறாயா?"

 

"படத்தில் பார்த்திருக்கிறேன். அதாவது இருபது வருடத்துக்கு முதல் எடுத்த படத்தில். அந்தப் படமும் இந்த ராணி என்ற பெயரும்தான் என்னோடு கூட வந்தவை.."

 

"..."

வெறுமையாகச் சிரித்தாள். கைப்பையை கரம் நாட, விரல்களில் மேலும் ஒரு சிகரட்.

 

அவள்மீது அன்பா? அனுதாபமா? ஏதோ ஒன்று என்னை அவள் வசம் ஈர்த்தது.

 

"ராணி! நீ சிகரட் புகைப்பதைப் பார்க்க எனக்குக் கஸ்டமாக இருக்கிறது.."

 

"ஏன்..?"

 

"எங்களுடைய பெண்கள் புகைக்கமாட்டார்கள்.."

 

"... வேறு..?"

 

"காதல்... கலியாணம்... குடும்பம் எல்லாம் ஒருவனோடுதான்.."

 

"... நோ... சுத்தப் பட்டிக்காட்டுத்தனம்.."

 

"ஏன் அப்படிச் சொல்கிறாய்? அதுதான் ஒழுக்கமான வாழ்க்கை. அத்துடன் நான் எம்மைப்பற்றி பெருமைப்படும் விசயமும்கூட."

 

அவள் சத்தம்போட்டுச் சிரித்தாள். கேலி செய்வது புரிந்தது. ஆத்திரம் எழுந்தது. அடக்கிக் கொண்டேன்.

 

"ராஜா... உங்கள் பெண்கள் ஒருவனோடே வாழலாம். ஆனால் பெற்ற பிள்ளையை இன்னொருவருக்குக் கொடுக்கலாம். அப்படித்தானே..?"

கோபத்துடன் கேட்டாள். அவள் வாழும் வாழ்க்கையால் தோன்றிய கேள்வி அது.

 

"அவர்களுக்கு என்ன கஸ்டமோ? என்ன பிரச்சினைகளோ?" என்று அவளது கொந்தளிப்பைத் தணிக்க முயன்றேன்.

 

"கஸ்டமும் பிரச்சினையும் வந்தால்... ஒழுக்கம் பண்பாடு எதுவுமே தேவையில்லையா? புருசன் மனைவியை மாற்றலாம். மனைவி புருசனை மாற்றலாம். தாய் பிள்ளையை மாற்றலாம். அப்படித்தானே?"

நான் வாயடைத்து நின்றேன்.

 

"உனக்குப் புரியுமா என்னுடைய நிலை? என்னால் எதையுமே ஒழுங்காக செய்ய முடியவில்லை. படிக்க முயற்சித்தால் என்னுடைய பெற்றோர் எப்படி இருப்பார்கள் என்ற சிந்தனை. என்னை ஏன் பிரித்தார்கள் என்ற சிந்தனை. அவர்களுக்கு நான்மட்டும்தானா பிள்ளை அல்லது வேறு பிள்ளைகளும் உள்ளார்களா என்ற சிந்தனை. அவர்களையாவது தங்களுடன் வைத்திருக்கிறார்களா என்ற சிந்தனை. அவர்கள் என்னை பிரியும் அளவுக்கு என்னில் ஏதாவது குறையோ என்ற சிந்தனை. இப்படி பற்பல சிந்தனைகள். யோசனைகள். இவற்றுக்கால் என் மனதை என்னால் ஒருநிலைப்படுத்த முடிவில்லை. ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. சுதந்திரமாக, சந்தோசமாக, நிம்மதியாக வாழ முடியவில்லை. நான் யார்... எங்கே எப்படிப் பிறந்தேன்... ஏன் இங்கே வந்தேன்... எல்லாமே குழப்பம்... குழப்பம்."

 

மனதைத் திறந்து கொட்டிவிட்டு, புகைந்து தீர்ந்த சிகரட் அடிக்கட்டையை தூர வீசினாள்.

அவளுக்காகப் பரிதாபப்படுவதா? பரிவு காட்டுவதா? புரியவில்லை. என்னைச் சோகம் கவ்விக்கொண்டது.

 

"ஆனால் ஒன்று... விரைவில் இலங்கைக்குப் போவேன். அவர்களைத் தேடிப் பிடிப்பேன். அவர்கள் என் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லவேண்டும். அப்போதுதான் எனது குழப்பங்களுக்கு எல்லாம் விடைகிடைக்கும் என்று நம்புகிறேன்..."

அவள் உறுதியுடன் கூறினாள்.

 

ஆறேழு மாதங்கள் கழிந்திருக்கும்.

 

"ராஜா..."

குதூகலத்தடன் ஓடி வந்தாள்.

 

"ராஜா... நாளை நான் இலங்கைக்குப் போகிறேன்.."

 

"என்ன?"

 

"என் பெற்றோரைத் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறேன்.."

 

"எப்படித் தேடுவாய்?"

 

"சகல வழிகளிலும்... ரீவி, பேப்பர் என்று எல்லாவற்றிலும் அவர்களின் படத்தை விளம்பரப்படுத்தி முயற்சிக்கப் போகிறேன்..."

நம்பிக்கையோடு கூறினாள்.

 

"ராணி! உன் முயற்சி வெற்றிபெற நானும் கடவுளை மன்றாடுவேன்..."

 

அவளது கண்களில் சிறுகலக்கம்.

 

"மிகவும் நன்றி. வெற்றியோடு உன்னைச் சந்திப்பேன்."

 

நான் அவள் வந்து கூறப் போகும் நல்ல செய்திக்காக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.

 

அப்போதுதான் அந்தப் பேரிடி என்னைத் தாக்கியது.

 

இயற்கையின் கோரமுகம் காட்ட ஆழிக்கூத்தாக வடிவெடுத்து ஆசிய நாடுகளில் அவலம் விளைத்ததை தொலைக்காட்சிகள் கண்முன்னே காட்டின. குழந்தைகள், பெண்கள், முதியவரென பலியெடுத்த ~சுனாமி~ கடற்கொந்தளிப்பின் அனர்த்தத்தினால், மனம் பேதலித்து சோகம் மனதைப் பாரமாக்க தொலைக்காட்சி முன் மணித்தியாலங்கள் கழிவது தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

 

இப்படி ஒரு அழிவா? இனம் மதம் மொழி என்ற பேதமின்றி மக்களைக் காவு கொண்ட கடலலைக்குள் இத்தனை கொடூரமா?

 

நினைத்துப் பார்க்கையில் திகைப்பாயிருந்தது.

 

நிலையில்லா உலகில் நிலைதடுமாறும் மனித குலத்துக்கு இயற்கை அவ்வப்போது புகட்டும் பாடமா? புரியவில்லை.

 

தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் இருந்து ஜேர்மன் தொலைக்காட்சி அலைவரிசைக்கு மாற்றினேன்.

 

இலங்கைக்கு உல்லாசப்பயணிகளாகச் சென்று ~சுனாமி~யில் உயிர்துறந்த சில ஜேர்மனியரின் அடையாள அட்டைகளைக் காண்மித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது... அந்த அடையாள அட்டையில்... அதிலே புன்னகை புரிந்தவாறு கருவிழிகள் பளிச்சிட இருக்கும் கரிய மங்கை... ... அது ராணி அல்லவா? ராணி... ராணியேதான்.

 

அதிர்ச்சியால் நிலைகுலைந்தவனாய் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

பெற்றோரைத் தேடச் சென்றவளையும் கடலலை தன் கோரப் பிடிக்குள் இழுத்துக் கொண்டதா?

 

என் கண்களில் பெருக்கெடுத்த நீர்த்துளிகளில் தொலைக்காட்சி மங்கலானது.

 

 

(பிரசுரம்: பூவரசு - 15வது ஆண்டுமலர் -தை, மாசி 2005)

Link to comment
Share on other sites

நல்ல உணர்ச்சிப்பூர்வமான கதை அண்ணா. ஆழிப் பேரலையின் சுவடுகள் இன்னும் சில மீனவ கிராமங்களிலும் பல நெஞ்சங்களிலும் அழியாது உள்ளது.

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை காலமது, வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவிற்க்கு சென்ற என் நண்பனின் அப்பா ஆழிப் பேரலையில் அடித்துச் செல்லப்பட்டிருந்தார். அப்போது இறப்பின் துயரைப்ப்ற்றி முழுதும் அறிந்திராத வயது, ஊரெங்கும் நன்கொடைகள் உணவு உடைக் கேட்டு பல கூட்டங்கள், நிகழ்வுகள். பள்ளி திறந்ததும் நண்பனின் குடும்பத்திற்க்கு உதவ அவரவர் முடிந்த உதவிகள் செய்ய ரீச்சரிடம் இருந்து வேண்டுகோள். கிரிக்கெட் என்றால் பைத்தியம் அப்போது, பேட் வாங்க உண்டியலில் சேர்த்த காசை என் பங்காக கொடுத்தேன், பத்தாம் வகுப்புடன் அவன் படிப்பை நிறுத்தி வேலைக்கு சென்றுவிட்டான்.

உங்கள் கதை இந்த நினைவுகளை வர செய்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன், இந்தக்கதையை வேறெங்கோ ஒரு தளத்தில் வாசித்திருக்கிறேன்!

 

யாழில் முன்பு இனைதீர்களோ அல்லது பூவரசிலிருந்து ஆராவது காவிக்கொண்டு போய் எங்கேயோ பதிந்தார்களோ தெரியாது!

 

ஆனால், வெளிநாடுகளில் செய்யும் தொழில்கள் பற்றிய மாயையை  உடைத்தெறிவதுடன்,நில்லாமல், எமது தனித்துவமான கலாச்சாரம் பற்றிய வினாக்களையும் எழுப்பிச் செல்வது கதையின் அழகு!

 

இந்தக் கதையில் வருகின்ற நிஜமான 'ராணிகளை' இங்கும் சந்தித்திருக்கிறேன்!

 

ஆனால் ஒரு வித்தியாசம்! :o

 

உள்நாட்டுப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போரில் தந்தையரை இழந்த 'பெரும்பான்மை' இனத்தைச் சேர்ந்தவர்கள்!

 

தொடர்ந்து உங்கள் கதைகளை எதிர்பார்கின்றேன்!

Link to comment
Share on other sites

சோழியன், இந்தக்கதையை வேறெங்கோ ஒரு தளத்தில் வாசித்திருக்கிறேன்!

யாழில் முன்பு இனைதீர்களோ அல்லது பூவரசிலிருந்து ஆராவது காவிக்கொண்டு போய் எங்கேயோ பதிந்தார்களோ தெரியாது!

ஆனால், வெளிநாடுகளில் செய்யும் தொழில்கள் பற்றிய மாயையை உடைத்தெறிவதுடன்,நில்லாமல், எமது தனித்துவமான கலாச்சாரம் பற்றிய வினாக்களையும் எழுப்பிச் செல்வது கதையின் அழகு!

இந்தக் கதையில் வருகின்ற நிஜமான 'ராணிகளை' இங்கும் சந்தித்திருக்கிறேன்!

ஆனால் ஒரு வித்தியாசம்! :o

உள்நாட்டுப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போரில் தந்தையரை இழந்த 'பெரும்பான்மை' இனத்தைச் சேர்ந்தவர்கள்!

தொடர்ந்து உங்கள் கதைகளை எதிர்பார்கின்றேன்!

புங்கையண்ணே யாழ்கள ராணிகள் ஏவரேனும் புகைப்பார்களா ? :):D:o_O
Link to comment
Share on other sites

நல்ல உணர்ச்சிப்பூர்வமான கதை அண்ணா. ஆழிப் பேரலையின் சுவடுகள் இன்னும் சில மீனவ கிராமங்களிலும் பல நெஞ்சங்களிலும் அழியாது உள்ளது.

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை காலமது, வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவிற்க்கு சென்ற என் நண்பனின் அப்பா ஆழிப் பேரலையில் அடித்துச் செல்லப்பட்டிருந்தார். அப்போது இறப்பின் துயரைப்ப்ற்றி முழுதும் அறிந்திராத வயது, ஊரெங்கும் நன்கொடைகள் உணவு உடைக் கேட்டு பல கூட்டங்கள், நிகழ்வுகள். பள்ளி திறந்ததும் நண்பனின் குடும்பத்திற்க்கு உதவ அவரவர் முடிந்த உதவிகள் செய்ய ரீச்சரிடம் இருந்து வேண்டுகோள். கிரிக்கெட் என்றால் பைத்தியம் அப்போது, பேட் வாங்க உண்டியலில் சேர்த்த காசை என் பங்காக கொடுத்தேன், பத்தாம் வகுப்புடன் அவன் படிப்பை நிறுத்தி வேலைக்கு சென்றுவிட்டான்.

உங்கள் கதை இந்த நினைவுகளை வர செய்தது.

 

கருத்துக்கு மிகவும் நன்றி ராஜன் விஷ்வா!  :)

Link to comment
Share on other sites

சோழியன், இந்தக்கதையை வேறெங்கோ ஒரு தளத்தில் வாசித்திருக்கிறேன்!

 

யாழில் முன்பு இனைதீர்களோ அல்லது பூவரசிலிருந்து ஆராவது காவிக்கொண்டு போய் எங்கேயோ பதிந்தார்களோ தெரியாது!

 

ஆனால், வெளிநாடுகளில் செய்யும் தொழில்கள் பற்றிய மாயையை  உடைத்தெறிவதுடன்,நில்லாமல், எமது தனித்துவமான கலாச்சாரம் பற்றிய வினாக்களையும் எழுப்பிச் செல்வது கதையின் அழகு!

 

இந்தக் கதையில் வருகின்ற நிஜமான 'ராணிகளை' இங்கும் சந்தித்திருக்கிறேன்!

 

ஆனால் ஒரு வித்தியாசம்! :o

 

உள்நாட்டுப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போரில் தந்தையரை இழந்த 'பெரும்பான்மை' இனத்தைச் சேர்ந்தவர்கள்!

 

தொடர்ந்து உங்கள் கதைகளை எதிர்பார்கின்றேன்!

 

இது ஏற்கெனவே யாழின் 'புளொக்' என்ற பகுதியில் உள்ளது. 

 

நான் பல கதைகள் எழுதியதற்கு மூலகாரணம் ஈழத்தின் பிரபல எழுத்தாளர், 'பூவரசு' சஞ்சிகை ஆசிரியர் இந்துமகேஷ் தான். 

 

தாயகத்தில் கல்லூரி மாணவனாக இருந்தபோது வீரகேசரி மித்திரன் வாரமலரில் வரும் அவரது 'ஒரு விலைமகளை காதலித்தேன்' போன்ற தொடர்கதைகளாலும் வீரகேசரி பிரசுரங்களாலும் கவரப்பட்டு அவை எனது அபிமான எழுத்தாளர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டவன். பின் 84 இறுதியில் ஜேர்மனியில் பேர்லினை மிதித்தபோது நேரடியாகவே அவரது நேரடி அறிமுகம் கிடைத்தது. அது இன்று ஒரே நகரத்தில் வசிக்கும் அளவிற்குத் தொடர்கிறது. 

 

அவரது, பூவரசு சஞ்சிகைக்கு எழுதவில்லையா என கேட்பது வழக்கம்… அட.. நம்ம அபிமான எழுத்தாளரே கேட்கிறாரே என்ற உற்சாகத்தில் எழுதியதுதான் பல சிறுகதைகள். முதன் முதலாக ஆரம்பத்தில் நான் எழுதிய சிறுகதைகளை தொகுத்து, தனது பொருட் செலவில் நூலாக்கி 'யௌவனமில்லாத யதார்த்தங்கள்' என்ற பெயரில் பூவரசு வெளியீடு என்ற கௌரவத்துடன் வெளிக்கொணர்ந்தவரும் அவர்தான். ஒரு எழுத்தாளனின் ஆக்கத்தை அதே துறையில் புகழ்பூத்த இன்னொரு எழுத்தாளன் தனது பொருளைச் செலவழித்து வெளியிட்ட பண்பை அவரிடம் கண்டேன்.

 

இந்த சிறுகதைதான் இதுவரை நான் எழுதிய சிறுகதைகளில் இறுதியானது. ஏனோ தெரியவில்லை.. அதற்குப் பிறகு சிறுகதை எழுத ஆர்வம் வரவில்லை. பூவரசின் வரவின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். 'மகேஷண்ணையின் போன் வரப் போகுது' என்று பரபரப்பாக எழுதின காலங்களும் உண்டு. 

 

மீண்டும் தையில் இருந்து ஏறக்குறைய 8 வருடங்களின் பின் சிறுகதை எழுத ஆர்வம்.. உங்களைப் போன்றவர்களது உற்சாகப்படுத்தலோடு தொடர்வோம்!! மிகவும் நன்றி புங்கையூரன்!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏற்கெனவே யாழின் 'புளொக்' என்ற பகுதியில் உள்ளது. 

 

நான் பல கதைகள் எழுதியதற்கு மூலகாரணம் ஈழத்தின் பிரபல எழுத்தாளர், 'பூவரசு' சஞ்சிகை ஆசிரியர் இந்துமகேஷ் தான். 

 

தாயகத்தில் கல்லூரி மாணவனாக இருந்தபோது வீரகேசரி மித்திரன் வாரமலரில் வரும் அவரது 'ஒரு விலைமகளை காதலித்தேன்' போன்ற தொடர்கதைகளாலும் வீரகேசரி பிரசுரங்களாலும் கவரப்பட்டு அவை எனது அபிமான எழுத்தாளர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டவன். பின் 84 இறுதியில் ஜேர்மனியில் பேர்லினை மிதித்தபோது நேரடியாகவே அவரது நேரடி அறிமுகம் கிடைத்தது. அது இன்று ஒரே நகரத்தில் வசிக்கும் அளவிற்குத் தொடர்கிறது. 

 

அவரது, பூவரசு சஞ்சிகைக்கு எழுதவில்லையா என கேட்பது வழக்கம்… அட.. நம்ம அபிமான எழுத்தாளரே கேட்கிறாரே என்ற உற்சாகத்தில் எழுதியதுதான் பல சிறுகதைகள். முதன் முதலாக ஆரம்பத்தில் நான் எழுதிய சிறுகதைகளை தொகுத்து, தனது பொருட் செலவில் நூலாக்கி 'யௌவனமில்லாத யதார்த்தங்கள்' என்ற பெயரில் பூவரசு வெளியீடு என்ற கௌரவத்துடன் வெளிக்கொணர்ந்தவரும் அவர்தான். ஒரு எழுத்தாளனின் ஆக்கத்தை அதே துறையில் புகழ்பூத்த இன்னொரு எழுத்தாளன் தனது பொருளைச் செலவழித்து வெளியிட்ட பண்பை அவரிடம் கண்டேன்.

 

இந்த சிறுகதைதான் இதுவரை நான் எழுதிய சிறுகதைகளில் இறுதியானது. ஏனோ தெரியவில்லை.. அதற்குப் பிறகு சிறுகதை எழுத ஆர்வம் வரவில்லை. பூவரசின் வரவின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். 'மகேஷண்ணையின் போன் வரப் போகுது' என்று பரபரப்பாக எழுதின காலங்களும் உண்டு. 

 

மீண்டும் தையில் இருந்து ஏறக்குறைய 8 வருடங்களின் பின் சிறுகதை எழுத ஆர்வம்.. உங்களைப் போன்றவர்களது உற்சாகப்படுத்தலோடு தொடர்வோம்!! மிகவும் நன்றி புங்கையூரன்!! 

நீங்கள் சொல்லும் இந்து மகேஸ், புங்குடுதீவைச் சேர்ந்தவர் என நினைக்கின்றேன்!

 

இவரது வீடு, கண்ணகியம்மன் கோவிலடியில் இருந்த ' அமெரிக்கன் பசன்' வீடாக இருக்க வேண்டும்!

 

அவருடன் பேச முடிந்தால், கேட்டுப்பாருங்கள்!

 

அவராக இருந்தால், சிறுவனாகக் கோவிலடியில் 'கிளித்தட்டு' விளையாடிய காலங்களில் கண்டிருக்கலாம்!

 

அல்லது நான் சொல்லுவது, வேறு யாரோ தெரியாது!

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லும் இந்து மகேஸ், புங்குடுதீவைச் சேர்ந்தவர் என நினைக்கின்றேன்!

 

இவரது வீடு, கண்ணகியம்மன் கோவிலடியில் இருந்த ' அமெரிக்கன் பசன்' வீடாக இருக்க வேண்டும்!

 

அவருடன் பேச முடிந்தால், கேட்டுப்பாருங்கள்!

 

அவராக இருந்தால், சிறுவனாகக் கோவிலடியில் 'கிளித்தட்டு' விளையாடிய காலங்களில் கண்டிருக்கலாம்!

 

அல்லது நான் சொல்லுவது, வேறு யாரோ தெரியாது!

 

அவர் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலடிதான்.. இயற்பெயர் மகேஸ்வரன்.. மனைவியின் பெயரில் இருந்து இந்துவை எடுத்து தனது பெயருடன் இணைத்துள்ளார். புங்குடுதீவில் 'இதயம்' என்றொரு சஞ்சிகையும் வெளியிட்டார். நீங்கள் கூறுபவர்தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலடிதான்.. இயற்பெயர் மகேஸ்வரன்.. மனைவியின் பெயரில் இருந்து இந்துவை எடுத்து தனது பெயருடன் இணைத்துள்ளார். புங்குடுதீவில் 'இதயம்' என்றொரு சஞ்சிகையும் வெளியிட்டார். நீங்கள் கூறுபவர்தான்! 

 

மிகவும் மகிழ்ச்சி, சோழியன்! நன்றிகள்!

 

உலகம் தான் எவ்வளவு சிறிதாகப் போய் விட்டது! :D

 

அவருக்கு எனது அப்பாவைத் தெரியும்! அவரிடம் இவர் படித்தும் இருக்கும் சாத்தியங்களும் உண்டு!

 

நேரம் கிடைக்கும்போது தனிமடலில் விபரங்களை அறியத்தருகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சிறப்பாக எழுதிய நீங்கள் இப்போது எழுதாமல் இருப்பது அநியாயம். நல்லதொரு பதிவு சோழியன்.

Link to comment
Share on other sites

இந்தக் கதை ஏற்கனவே நான் வாசித்து இருக்கின்றேன் . உங்கள் கதைக்குப் பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

இவ்வளவு சிறப்பாக எழுதிய நீங்கள் இப்போது எழுதாமல் இருப்பது அநியாயம். நல்லதொரு பதிவு சோழியன்.

 

எழுதும் திறமையை வைத்துக்கொண்டு எழுதாமல் இருக்கிறேனே என்ற குற்ற உணர்வு நிறையவே உண்டு.. மீண்டும் எழுதவே விருப்பம்.. முயற்சிக்கிறேன். நன்றி!

இந்தக் கதை ஏற்கனவே நான் வாசித்து இருக்கின்றேன் . உங்கள் கதைக்குப் பாராட்டுக்கள் .

 

மிகவும் நன்றி ஐயா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கைவண்ணம் யாழில் மீண்டும் வரவேண்டும். :)

Link to comment
Share on other sites

தங்கள் கைவண்ணம் யாழில் மீண்டும் வரவேண்டும். :)

 

நன்றி!  :)

Link to comment
Share on other sites

நம்ம சோழியன் அண்ணா ம்ம்ம்ம் .....இதெல்லாம் உங்களிடம் இருப்பது தெரியும் .......நீங்கள் ஆரம்பிக்கும் நேரம் வரை பொறுத்திருந்தோம் .................ஆரம்பிச்சிட்டீங்க .வாழ்த்துக்கள் ...தொடருங்கள் . மீண்டும் காத்திருக்கிறோம் . :)

Link to comment
Share on other sites

நம்ம சோழியன் அண்ணா ம்ம்ம்ம் .....இதெல்லாம் உங்களிடம் இருப்பது தெரியும் .......நீங்கள் ஆரம்பிக்கும் நேரம் வரை பொறுத்திருந்தோம் .................ஆரம்பிச்சிட்டீங்க .வாழ்த்துக்கள் ...தொடருங்கள் . மீண்டும் காத்திருக்கிறோம் . :)

 

நன்றி சூரியன்! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.