Jump to content

இலங்கை மனித உரிமைகள் மேம்பாடு குறித்து ஐ.நா.வுக்கு அறிக்கை அனுப்புகிறது


Recommended Posts

[size=2]

[size=4]ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை ஒன்றை இலங்கை ஐ.நா.வுக்கு அனுப்ப உள்ளதாக அமைச்சரும் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]ஜெனிவாவில் இயங்கும் மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வை முன்வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதையும், தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டிருப்பதையும் கண்டித்து கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான மேம்பாட்டுக்காக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், அதற்காக குறித்த கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.[/size][/size]

[size=2]

[size=4] இந்த இறுதி அவகாசத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான சமிக்ஞைகள் கிடைக்காதவிடத்து இலங்கைக்கு எதிரான இறுக்கமான நடவடிக்கைகளில் தாம் இறங்க நேரிடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும்தொனியில் தெரிவித்திருந்தன.[/size][/size]

[size=2]

[size=4]எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையின் அமர்வின்போது மீண்டும் இலங்கைப் பிரச்சினை கிளப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்ட காலத்துக்குள் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசு முன்னேற்றகரமாக செயற்படாதவிடத்து அதுதொடர்பாக இந்த அமர்வில் ஆராய்ந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடும் எனவும் ஊகிக்கப்படுகிறது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தநிலையிலேயே இலங்கையில் குறித்த காலப்பகுதிக்குள் இனநல்லிணக்கம், மனித உரிமைகள் என்பன தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளை அறிக்கை வடிவில் இலங்கை தயாரித்துள்ளது. சில உறுப்பு நாடுகளின் ஆய்வுக்காகவும் இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை அனுப்பப்படவுள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்புதலுக்காகக் கையளிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை, இன்று ஜெனிவாவுக்கு அனுப்பிவைக் கப்படும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]"நவம்பர் மாதம் நிகழும் அமர்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா உட்பட மூன்று நாடுகள் இந்த ஆவணத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னரே அமர்வின் ஆய்வுக்குச் சமர்ப்பிக்கப்படும்'' என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இலங்கை தீர்வுகளைக் கண்டுள்ளது. அத்துடன் மனித உரிமைகள் விடயத்திலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனவே நவம்பரில் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் பெரும்பாலான உறுப்பு நாடுகளின் ஆதரவும், உதவியும் இலங்கைக்குக் கிட்டுமென்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=135721252023646184[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]

]"நவம்பர் மாதம் நிகழும் அமர்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா உட்பட மூன்று நாடுகள் இந்த ஆவணத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னரே அமர்வின் ஆய்வுக்குச் சமர்ப்பிக்கப்படும்'' என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

அந்த மூன்று நாடுகள் .. கிந்தியா சீனா மற்றும் ஈரான்

தோழர் .. அந்த ஆவணத்தில் தமிழர்களே இல்லை என்று சொல்கிறேன் நான் அப்புறம் எப்புடி இனசிக்கல் வரும்..? ரெல் ரெல் மீ..

டிஸ்கி:

பொருளாதார நிபுணர் என்றால் பொருளாதார நிபுணர்தான் கரெக்டாக அடிகோடிட்டு காண்பித்து இருக்கார் :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.