Jump to content

பலவீனமான மகிந்த உருவாக்கிய பலமான இனவெறிக்கட்டமைப்பு


Recommended Posts

சிறிலங்காவின் சனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்று 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கையானது விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வருதல் வேண்டுமென விடுத்த அழைப்பு மட்டுமே. இவ்அழைப்பு ஒன்றோ அன்றி இரண்டோ அதற்கு மேற்பட்ட தடவையோ அவரால் விடுக்கப்பட்டிருக்கலாம்.

இதேவேளை இவ் அழைப்புடன் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிபந்தனைகள் இணைக்கப்பட்டதொன்றாக வராதுவிடினும் பேச்சுவார்த்தை, தொடர்பான நிபந்தனைகளாக ஆசிய நாடொன்றிலேயே பேச்சுவார்த்தை, யுத்த நிறுத்த உடன்;பாட்டில் மாற்றங்களைச் செய்தல் என்ற நிபந்தனைகள் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. அத்தோடு, நோர்வே மத்தியஸ்துவத்திற்கு மாறாக வேறு நாடு ஒன்றைத் தெரிவு செய்தல் குறித்த பேச்சுக்களும் அரச தரப்பிலிருந்து வெளிவந்த வண்ணமிருந்தது.

ஆனால், தோல்வியில் முடிந்த இந்திய விஜயத்தின் பின்னர் நோர்வே அரசை ஏற்பாட்டாளராக பணியாற்;றுமாறு சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பினும், நோர்வேக்கு எதிரான உணர்வுகள் ஆட்சியாளர் மட்டத்தில் நிலவுவதாகவேயுள்ளது. இதனை நோர்வேயும் நன்கு புரிந்து கொண்டுள்ளதன் வெளிப்பாடாகவே ஏற்பாட்டாளராகப் பணியாற்றுவதற்கு நோர்வே சில நிபந்தனை முன்வைத்துள்ளதோடு, இம்முயற்சியைத் தொடர்வதற்குக் கால அவகாசத்தையும் எடுத்துக்கொண்டுள்ளது.

இந்த வகையில் விடுதலைப் புலிகளைப் பேச்சிற்கு வருமாறு அழைப்பு, நோர்வேயை ஏற்பாட்டாளராக செயற்படுவதற்கான அழைப்பு இரண்டையும் தவிர மகிந்த ராஜபக்ஷ சமாதானத்தை முன்னெடுப்பதற்கு எதனையும் செய்யவில்லை. இவ்விரண்டு விடயங்களும் வெளிப்பார்வையில் பெரிய நகர்வுகள் போன்று இருப்பினும் அடிப்படையில் இது முன்னேற்றகரமான நடவடிக்கை எனக்கொள்வதற்கு இல்லை.

ஏனெனில, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதோ அன்றி நோர்வேயை ஏற்பாட்டாளராகக் கொண்டு வருதல் என்பதோ புதியதொரு விடயமல்ல. விடுதலைப் புலிகள் அதற்கு எதிராகவும் இல்லை. மாறாக நீண்ட நாட்களாக-அதாவது சனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே விடுதலைப் புலிகள் இக்கோரிக்கை களை விடுத்தே வந்துள்ளனர்.

இதேசமயம் மகிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை தொடர்பாக விதித்த இரு நிபந்தனைகளும் விடுதலைப் புலிகளால் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் நிராகரிக்கப்பட்ட விடயமாகவும் இருந்தது. அதாவது ஆசிய நாடொன்றில் பேச்சு என்ற நிலைப்பாடும், யுத்தநிறுத்த உடன்பாட்டை மாற்றியமைத்தல் என்பதும் புலிகளால் நிராகரிக்கப்பட்ட விடயங்களாகும். இது சனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தீர்;மானம் அல்ல. அதற்கு முன்னரே அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதே தெரிவிக்கப்பட்டதொன்றாகும். அதாவது மகிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த போதே கூறப்பட்ட விடயமாகும்.

இந்த வகையில் பார்க்கையில் மகிந்த ராஜபக்ஷ தனது ஐம்பது நாட்கள் ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினைக்குச் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற hPதியிலோ, அரசியல் தீர்;வு என்ற hPதியிலோ முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதையும் செய்துவிட்டதாகக் கூறிக் கொள்வதற்கு எதுவுமில்லை. பேச்சளவில் மட்டுமானதாவே அவரின் செயற்பாடுகள் இருந்துள்ளன.

ஆனால் இவ் ஐம்பது நாட்களில் இயல்பு வாழ்விற்கு மாறாகவும், சமாதான முயற்சிகளுக்கு எதிராகவும் அவரது நடவடிக்கைகள் உறுதியானதாகவும், தீவிரமானதாகவுமுள்ளது. வேறுவிதமாகக் கூறுவதானால் இனப்பிரச் சினைக்கு இராணுவ hPதியிலான தீர்விற்கு ஏற்ற வகையில் சிறிலங்கா அரச இயந்திரம் செயற்படத்தக்கதான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனின் மிகையாகாது.

மகிந்தராஜபக்ஷ தீவிர இனவாத சக்திகளினதும், பௌத்த-சிங்கள அடிப்படைவாத சக்திகளினதும் ஆதரவுடன் சனாதிபதி பதவியைக் கைப்பற்றியவர் என்பது வெளிப்படையானது. குறிப்பாக தீவிர இனவாதச் சக்தியாகச் செயற்படும் ஜே.வி.பி, பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்தியான ஜாதிக ஹெல உறுமய என்பவற்றின் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்.

இவரின் இத்தேர்தல் கூட்டணி குறித்து முன்னர் சில எதிர்மறையான விமர்சனங்களும், முன்வைக்கப்பட்டதுண்டு. அதாவது மகிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதியல்ல. தேர்தல்தல் வெற்றிக்காகக் கூட்டுச்சேர்ந்துள்ள அவர், வெற்றியின் பின் அவர்களை நாசுக்காக அகற்றி விடுவார் எனக்கூறப்பட்டது. ஆனால் இம் மதிப்பீடு தவறானது என்பதை மகிந்த ராஜபக்ஷ தனது புதிய அரசாங்கத்தை - அதாவது அமைச்சரவையை அமைப்பதிலிருந்தே தெளிவுபடுத்தத் தொடங்கியிருந்தார். இதில் குறிப்பிடத்தக்கதாக பிரதமராகவும், அத்தோடு பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவைத் தெரிவு செய்தமையைக் குறிப்பிட முடியும்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஏற்கனவே இவ்விரு பதவிகளையும் வகித்தவராயினும் இம்முறை அவர் ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினராகும். இதனைத்தவிர கடந்த காலத்தில் இப்பதவியை வகித்த வேளையில் யுத்த முன்னெடுப்புக்களில் தீவிரமாகப் பணியாற்றியவராகும். பௌத்த - சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைதல் வேண்டும் எனத் தனது முன்னையப்பதவிக் காலத்தில் தென்னிலங்கையில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவராகும். பத்தாயிரம் பௌத்த-சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கப்போவதாகக் கூறி பிரச்சாரத்தை முன்னெடுத்தவர். இத்தகைய ஒருவரை மீண்டும்- அதிலும் பொதுசன ஐக்கிய முன்னணியின் செயலர் டி.எம்.ஜெயரட்ணவிற்குப் பிரதமர் பதவி வழங்கப்போவதாகத் தகவல்கள் வெளிவந்த பின்னரும் அதனை மாற்றி ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுக்கு மகிந்தராஜபக்ஷ வழங்கியதும், பின்னர் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவும் அவரை நியமனம் செய்தமையும் மகிந்தராஜபக்ஷ தீவிர இனவாதப் போக்குக் கொண்ட தலைமையை விரும்பியமைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்கதாகும்.

அடுத்ததாக புதிய இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சரத் பொன்சேகா மகிந்த ராஜபக்ஷ தெரிவு செய்தமையைக் குறிப்பிட முடியும். யுத்தவெறி கொண்டவரும் தன்னைப் பற்றிப் பெருமை பேசுபவருமான சரத் பொன்சேகாவின் நியமனமானது இராணுவத்தை யுத்தத்திற்கு தயாராக்கும் நோக்கிலானது என்பது நிராகரிக்க முடியாததுமாகும்.

இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதும் லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தின் வரலாற்றையும் அதில் தான் 30 வருடத்திற்கு மேலாகப்; பதவி வகித்ததையும் மறந்து விட்டவராகத் தான் எத்தகைய படை நடவடிக்கைகளிலும் தோற்றதில்லை எனப் பெருமை பேசினார். தான் சார்ந்திருந்த இராணுவம், தான் பங்குபற்றிய களங்கள் என்பனவற்றில் ஏற்பட்ட தோல்விகள், பின்னடைவுகள் என்பனவற்றிற்கும், தனக்கும் சம்பந்தமில்லை எனப் பெருமை பேசும் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்தே தீவிர யுத்த முனைப்புக்கள் அரசால் முன்னெடுக்கப்படத் தொடங்கி விட்டதெனலாம்.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளுடனோ, தமிழ் மக்களுடனோ இணக்கமானதொரு போக்கை கடைப்பிடிக்க மாட்டார் என்பதற்கு யுத்தகாலத்தில் அவர் காட்டிய கடும்போக்கு மட்டுமல்ல. சமாதான காலத்தில் அவர் காட்டிய கடும்போக்கையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்ட முடியும்.

தாய்லாந்துப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட உபகுழுக்கள் என்ற hPதியில் கூட்டப்பட்ட பாதுகாப்பு உப குழுவின் செயற்பாடு முடக்கத்திற்கு வந்ததும், தோல்வி அடைய நேரிட்டதும் சரத் பொன்சேகாவின் நிபந்தனைகளினாலேயே ஆகும். அதாவது உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவேண்டுமானால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து பேச்சுக்களில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி பின்னர் அது தோல்வியில் முடிவடையவும் காரணமாக இருந்தவர்.

லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தற்பொழுதும் அத்தகையதொரு போக்கையே கொண்டிருப்பதை அண்மைய அவர் நடவடிக்கைகள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. எடுத்துக்காட்டாகத் தற்காப்புப்பயிற்சி பெற்றுள்ள தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளே எனக் கூறி நிராயுதபாணிகளாகவுள்ள அவர்கள் மீதும் ஆயுத hPதியிலான தாக்குதலை நடத்துவதற்கு இராணுவத்தினருக்கு அவர் வழங்கியுள்ள அனுமதியில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.

சந்தேகத்திற்கு இடமானவர்கள் மீது தாக்குதல் நடத்தலாமென இராணுவத்தளபதி வழங்கியுள்ள அதிகாரம் இனப்படுகொலைகளுக்கு சரத் பொன்சேகா வழங்கிய அங்கீகாரமாகவே கொள்ளத்தக்கது. மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போன்று சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எல்லாம் புலிகளாகத் தெரிவது ஒன்றும் ஆச்சரியமாக இருக்க மாட்டாது.

அடுத்ததாகப் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்கள ஆலோசகராக முன்னாள் பொலிஸ்மா அதிபரான கொட்டகதெனியவை மகிந்த ராஜபக்ஷ நியமனம் செய்ததைக் குறிப்பிடமுடியும். அதாவது தீவிர இனவாதியான இவரைத் தெரிவு செய்;ததன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக-இனாPதியிலான செயற்பாடுகளில் மகிந்தராஜபக்ஷ அக்கறை காட்டியுள் ளதை இது தெளிவுபடுத்தியதாகவே கொள்ளத் தக்கதாகும்.

கொட்டகதெனிய, ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர்களில் ஒருவர் என்பதினால் மட்டும் இவ்வாறு இங்கு குறிப்பிடவில்லை. அவர் கடந்த காலத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த போது இனவாத hPதியாகச் செயற்பட்டவர். கொழும்பில் பெரும் தொகையில் கைதாவதற்கும், பலர் காணாமற்போனமைக்கும் இவரும் காரணமாக இருந்தவர் என்பது கடந்த கால வரலாறு.

இதனை நிரூபிப்பது போன்றே அவர் தற்பொழுதும் பதவி ஏற்றதன் பின்னர் வெளியிட்ட அறிவுப்புக்களும் அவரது நடவடிக்கைகளும் உள்ளன. பதவியேற்ற பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பைக்கருதி கொழும்பிலுள்ள வீடுகள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் எனக்கூறினார். இதனை நிரூபிப்பது போன்று கடந்த வாரத்தில் கொழும்பில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டு 1000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதே சமயம் கடந்த வாரத்தில் திருமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலையுடன் கொட்டகதெனியாவும் சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டக தெனியாவின் பணிப்பில் சிறிலங்காவின் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரே இப்படுகொலைகளைப் புரிந்ததாக ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, ஒரு இனவெறி பிடித்த பௌத்த -சிங்கள அடிப்படைவாதியை மகிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் ஆலோசகராக நியமித்துள்ளமை பாதுகாப்பமைச்சையும், பொலிஸ் திணைக்களத்தையும் எதனை நோக்கி மகிந்த ராஜபக்ஷ வழிநடத்திச் செல்ல முயல்கின்றார் என்பதையே வெளிப்படுத்தியுள்ளதெனலாம்.

மற்றொரு நியமனமாக பாதுகாப்பமைச்சின் செயலாளராக முன்னாள் கேணலான கோட்டபாய ராஜபக்ஷவை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமனம் செய்தமையாகும். தனது சகோதரர் ஒருவருக்கு உயர் பதவியொன்றை சனாதிபதி வழங்கத் தீர்மானித்தார் என்பதற்கு அப்பால் ஒரு யுத்த வெறியரை இனவாதியை பாதுகாப்பமைச்சின் செயலாளராக நியமனம் செய்ய சனாதிபதி தீர்மானம் செய்தார் என்பதே நிஜமானதாகும்.

அவ்வாறு இல்லாதுவிடில் சிறிலங்காப் படைத்தரப்பிற்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கீழ் மட்டத்தில் நடக்கும் சந்திப்புக்களுக்கு அவர் தடை விதித்திருக்கமாட்டார். அதாவது விடுதலைப் புலிகளுக்கும்- படையதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறும் கீழ்மட்டச் சந்திப்புக்கள் பல நடைமுறைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவுவதோடு பதற்றத்தைத் தணிக்கச் சிறிதளவேனும் உதவுவதற்கு வாய்ப்புக்கொடுப்பதாக இருந்திருக்கும்.

எடுத்துக்காட்டாக யாழ். குடாநாட்டில் நீர்வேலியில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை, புங்குடுதீவில் கடற்படையினரால் இளம்பெண் தர்சினி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டமை, அவற்றையடுத்து படையினர் மீது நடந்த கிளைமோர் தாக்குதல், கைக்குண்டு வீச்சுக்கள் என்பனவற்றை அடுத்து யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதிக்கும், யாழ். மாவட்ட இராணுவத்தளபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இறுதி நேரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பெயரில் இச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது. அவ்வாறு இல்லாதிருப்பின் யாழ். குடாநாட்டில் ஓரளவு பதற்றம் தணிவதற்குச் சிலவேளை வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் கோட்டபாயவின் பணிப்பு இதனை இல்லாது ஒழித்ததினால் வன்முறை தொடரவும் இதன் காரணமாக பலர் கொல்லப்படவும், பலர் காயங்களுக்குள்ளாகவும் ஆயிரக்கணக்கானோர் தமது குடியிருப்புக்களை விட்டு பாதுகாப்புத்தேடி இடம்பெயரவும் வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தவகையில் மகிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஒருபுறத்தில் அழைப்பு விடுத்து வந்தாலும் அவரின் நடவடிக்கைகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கோ அன்றி நாட்டில் அமைதி நிலை உருவாவதற்கோ ஏற்றதொன்றாக இருக்கவில்லை. அதாவது பேச்சுவார்த்தைகளுக்கான சூழலை ஏற்படுத்துவதாக இல்லை.

அதாவது மகிந்த ராஜபக்ஷ பலவீனமானதொரு அரசியல் தளத்திலிருந்து கொண்டு பலமானதொரு இனவாத அணியைச் செயற்பட வைத்துள்ளார் எனலாம். ஆகையினால் மகிந்தராஜபக்ஷ விரும்பினாலும், விரும்பாது விட்டாலும் கூடப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக்கூடியதொரு சூழ்நிலையை அவரால் உருவாக்க முடியாது.

ஏனெனில் அவரின் அரசியல் தளம் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய என்பனவற்றால் மட்டுமல்ல சுதந்திரக்கட்சியினால் கூட பலவீனப்படுத்தப்படும் ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்பதைக்கூட அவரால் உறுதியான நிலைப்பாட்டுடன் மேற்கொள்ள முடியாது.

இதேசமயம் அவரது நியமனங்களும் யுத்தத்திற்கும், இன ஒடுக்குமுறைக்கும் ஆதரவான சக்திகளைத் தெரிவு செய்வதாகவே இருந்துள்ளது. அண்மையில் கொழும்பில் நடந்த கைதுகளும், திருமலையில் நடந்த மாணவர் படுகொலைகளும், யாழ். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையும், சனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விதத்தில் நடந்தவையா? என்ற கேள்வி எழக்கூடிய வகையில் அவரின் நிலை உள்ளது.

அத்தோடு சனாதிபதியின் நியமனங்கள் அவரை மீறியதான செயற்பாட்டைக் கொண்ட வையாகக் கூட மாறலாம் என்பதற்கு சனாதிபதி மகிந்தவுக்கும்- தமிழர் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இடைநடுவில் குழப்பத்திற்குள்ளானமை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்கதாகும்.

அதாவது இச்சந்திப்பு பாதுகாப்புச் செயலாளரினதும், இராணுவத் தளபதியினதும் பிரசன்னத்தையடுத்து தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்குச் சென்;றதினால் மகிந்த ராஜபக்ஷவினால் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது மகிந்த ராஜபக்ஷவினால் கட்டுப்படுத்த முடியாத அளவிலானதான அளவில் முரண்பாட்டை உருவாக்கும் நபர்களாக இவர்களால் செயற்பட முடிந்துள்ளது.

இந்த வகையில் பார்க்கையில் பலவீனமான அரசியல் தளத்தில் உள்ள சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது விருப்பு வெறுப்புக்கள் யாவற்றையும் ஓரந்தள்ளிவிட்டு தனது அரசியல் தளத்தை பலப்படுத்திக்கொள்ள தனது பின்னாலுள்ள இனவாத அரசியல் சக்திகளையும், தான் நியமனம் செய்த கடும் கோட்பாட்டாளர்களினதும் செயற்பாட்டிற்குப் பின்னால் செல்வதைத்தவிர வேறு வழியில்லை.

நன்றி: ஈழநாதம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.