Jump to content

கலாசாரத்தின் பெயரால் தமிழ்ச் சிறுமிகளின் சாமத்தியச்சடங்கு


Recommended Posts

http://youtu.be/hdWi9B3OyFA

 

நாளுக்கு நாள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் மகள்களின் பூப்படைதல் நிகழ்வை நாகரீகத்தின் உச்சமாக நடாத்திக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களை தினமும் அறிகிறோம். இந்த வீடியோ இணைப்பில் இன்னொரு புதுவகை விழா. 
 
ஒருகாலம் தேசத்தின் பாடல்களை பாடிய பாடகர் சாந்தன், பிறின்சி ரஞ்சித்குமார் போன்றோர் பாடலைப்பாட புதுவை அன்பன் பாடலொன்றை சடங்கிற்கு உரிய சிறுமிக்காக பாடியுள்ளார்கள். மிகவும் வருத்தம் தருகிறது இந்நிகழ்வு. பெண் பிள்ளைகள் துணிச்சலோடு சாதனைகள் படைக்கும் திறமையாளர்களாக வளர்ந்து வர வேண்டிய வளர்க்கப்பட வேண்டிய இக்காலத்தில் போகப்பொருளாகவே பெண்பிள்ளைகளை அவர்களது எண்ணங்களை சிதைக்கும் நிகழ்வாகவே இன்றைய கால சாமத்தியச் சடங்குகள் நடாத்தப்படுகிறது. 
 
கருத்துக்கள உறவுகள் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். 
 
நாங்கள் எங்கே செல்கிறோம் ???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வீடியோக்காரன் தனக்கு குடுத்த வேலையை ஒழுங்காய் செய்திருக்கிறான்...
 
ஏனெண்டால் இப்ப கலியாணவீடு சாமத்தியவீடு செய்து காட்டுறது கமராக்காரங்கள்தான்...
 
 
வீடியோகார தம்பிக்கு நன்றி. :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூல வீடியோவுக்கு பின்னூட்டம் எழுதின ஒருவர் "அட இவ்வளவு செல்வந்தக் குடும்பமா?" எண்டு வியந்திருக்கிறார். பிரான்ஸில இருக்கிறவைக்குத் தான் விளங்கும், அப்பா concession child உம் பெத்து, வரி கட்டாமல் அரசாங்கப் பணத்தில நல்லா சோக்குக் காட்டியிருக்கிறார் போல! ஒரு ஊகம் தான்! ஆனா பணத்தை இப்படித் தண்ணியாகச் செலவு செய்யும் பலரின் பின்னணியைப் பார்த்த அனுபவத்தில் வந்த ஊகம்! விசுகர் வந்து உறுதி செய்ய வேணும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடையங்கள் பற்றி எல்லாம் எத்தனையோ தரம் எழுதி,எழுதி அலுத்துப் போச்சு...எங்க பாட்டுக்கு  பந்தி,பந்தியாக நாங்கள் புலம்பிட்டு போக வேண்டியது தான் இப்படியான கூத்துக்களை எடுப்பவர்கள் நிறுத்தவோ இல்லை வீண் ஆடம்பரங்களின்றியோ செய்யாமல் விடப் போவதில்லை.கனேடிய மண்ணிலும் இவ்வாறன விழாக்களுக்கு பஞ்சம் இல்லை..பிள்ளை அந்த வயதை எட்ட முன்னமே தாய்மார் கனவு பெரிதாகவே இருக்கிறது.
ஆகவே பிள்ளை விருப்படுகிறது,வாழ்க்கையில் ஒருக்காத் தானே இப்படிச் செய்யப் போறம் என்ற கதையையும் தூக்கி போடுகிறார்கள்.பிள்ளைகள் சொல்கிற எல்லாத்துக்கும் ஆமா போடாதீங்கள், அதனுடைய நன்மை,தீமைகளை எடுத்து சொல்லி அதிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னால்,இதுகளுக்கு ஒன்றும் தெரியாது தீவுக் கூட்டம் என்று வேறை நக்கல்,நளினம் பேசுகிறார்கள்,அப்படி இருக்கையில் பேசி என்னத்தைக் காணப்போறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினியின் கருத்துடன் உடன்படும், அதே வேளையில், இப்படியான பணச் சடங்குகள், இரண்டு விதத்தில் எமது இனத்தைப் பாதிக்கின்றன!

 

முதலாவது கொஞ்சம் கல்வியறிவு, பொது அறிவு கொண்ட பெற்றோர்கள் இப்படியான சடங்குகள் செய்யாது விடுவதால், அவர்களது குழந்தைகளின் மனதின் ஒரு விதமான ' வெளியே சொல்ல இயலாத ஏக்கம்' குடி கொள்ளுகின்றது! நாளடைவில், அவர்களது அறிவு வளர்ச்சியடையும் போது, அவர்கள் புரிந்துகொள்வார்கள் என எண்ணுகின்றேன்!

 

இரண்டாவது, நாம் வாழும் நாட்டைச் சேர்ந்தவர்கள், நாம் ஒரு 'மத்திய கிழக்கு நாடுகளின் 'திருமண வைபவங்களைப்பற்றி' என்ன கருத்தை வைத்திருக்கிறோமோ, அப்படியான கருத்தைத் தான், எமது கலாச்சாரத்தைப் பற்றியும் வளர்த்துக்கொள்வார்கள்! ஆனால் வெளியே சொல்லமாட்டார்கள்!

Link to comment
Share on other sites

ஊரில் இருந்திருந்தால் காவோலை எடுத்து கிடுகு பின்னியிருப்பார்கள். :huh: இந்தப் போர் ஒன்று வந்ததால் ஹெலியில் பறந்து அலைக்கழிகிறார்கள்.. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருந்திருந்தால் காவோலை எடுத்து கிடுகு பின்னியிருப்பார்கள். :huh: இந்தப் போர் ஒன்று வந்ததால் ஹெலியில் பறந்து அலைக்கழிகிறார்கள்.. :(:D

தென்னோலையிலை பின்னிறது தான் 'கிடுகு'...! வர வரத் தமிழும் மறந்து போகுது....! :o

 

காவோலையிலை பின்னிறது.... பாய், தடுக்கு, கடகம், நீத்துப்பெட்டி, பனங்க்கட்டிக் குட்டான்...! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பறிவில்லாத பெற்றோர்களுக்குப் பிறந்தால் இந்த நிலைதான் வரும்.   :(  :(  :(

 

படிப்பறிவுள்ளவை மட்டும்...??????????????!

 

இப்படியான காட்டுமிராண்டித் தனங்களை படிச்ச எம்மவர்களிடமும் நல்லாவே காணலாம். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றியில வைக்கிற சந்தனம் மிஞ்சினால் நம்ம ஆளுக குண்டிளையும் பூசுவானுகள்... (மன்னிக்கவும்)

நல்ல நேரம் ... இந்த கருமங்கள பார்த்து நெஞ்சு வெந்து; சோகத்தில் வடிய எங்கள் காவல் தெய்வங்கள் எங்களிடம் இல்லை.

என்னா ஒண்ணு ... இவனுகள் நல்லா இருந்த சிங்களவனையும் நாசமாக்கிப் போட்டனுகள். (சந்தோசம்)

இத பாருங்க:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

(மேலே இணைந்த காணொளியின் மீள் இணைப்பு.)


ஊரில் இருந்திருந்தால் காவோலை எடுத்து கிடுகு பின்னியிருப்பார்கள். :huh: இந்தப் போர் ஒன்று வந்ததால் ஹெலியில் பறந்து அலைக்கழிகிறார்கள்.. :(:D

 

இசைக்கு.. தன்னையும்.. ஹெலில ஏத்தி.. பாரீஸை சுற்றிக்காட்டல்ல என்ற எரிச்சல். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச்சடங்கு செய்யவே இப்படி என்றால் கலியாண வீடு  எப்படி இருக்கும்!

இந்த பெண்ணுக்கு பின்னாலே இன்னும் இரண்டு சுட்டிப்பெண்கள் காத்திருக்கிறதே அவையளுக்கு இப்படி செய்தால்.......... பணம், துட்டு, சல்லி, money money  எங்கிருந்து 

இப்படி எல்லாம்  செய்ய எங்கிருந்து பணம் கிடைக்கிறது.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச்சடங்கு செய்யவே இப்படி என்றால் கலியாண வீடு  எப்படி இருக்கும்!

இந்த பெண்ணுக்கு பின்னாலே இன்னும் இரண்டு சுட்டிப்பெண்கள் காத்திருக்கிறதே அவையளுக்கு இப்படி செய்தால்.......... பணம், துட்டு, சல்லி, money money  எங்கிருந்து 

இப்படி எல்லாம்  செய்ய எங்கிருந்து பணம் கிடைக்கிறது.!

 

கலியாணமா.. அது எப்பவும் போல.. தென்னிந்திய தமிழ் சினிமா பாணியிலேயே போய்க்கிட்டு இருக்குது. தென்னிந்திய சினிமா எவ்வளவுக்கு முன்னேறுதோ அவ்வளவுக்கு இதுவும் முன்னேறும். நமக்குத்தான்.. கொள்கை.. கோட்பாடு.. நாடு.. புலம்.. எதுவும் இல்லையே. :lol::D

 

Link to comment
Share on other sites

பிள்ளைகள் வளர்நத பின் எத்தனை தாய் தந்தையருக்கு அவர்களின் திருமணத்தைக் கோலாகலமாகக் கொண்டாட முடியுமோ என்ற சந்தேகம் உண்டு. வெள்ளைகளைக் கட்டினாலும் பரவாயில்லை,  சாதி மாறிக் கட்டினால் எடுப்பாகத் திருமண விழா செய்ய முடியாதாம். சிலர் திருமணம் செய்வார்களோ இல்லையோ என்றே தெரியாது. அதுக்குத் தானாம் பிள்ளை தமது கட்டுப்பாட்டில் இருக்கும்போதே சாமத்திய வீட்டை ஆடம்பரமாக கொண்டாடி மகிழ்கிறார்களாம் என்று ஒருவர் எனக்கு விளக்கம் தந்தவர்.  :D

Link to comment
Share on other sites

இவர்கள் தமது சொந்தப் பணத்தில் தமது வீட்டு வைபவத்தினைச் செய்கிறார்கள்.அது அவர்களின் விருப்பம், அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தவறைச் சுட்டிக் காட்டலாம் (அது தான் சரியான முறை) , அதைவிடுத்து அவர்களின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி விமர்சிப்பதென்பது  எனது பார்வையில் சரியெனப்படவில்லை. ஆகக்குறந்தது அவர்களது முகங்களையென்றாலும் மறைத்திருக்கலாம்,  இங்கு விருந்த்தினர்களாக வந்திருப்பவர்கள் உட்பட அணைவரும் தெளிவாகத் தெரிகிறார்கள். 
 
இங்கே புலம் பெயர் தேசங்களில்  மக்களிடம் மில்லியன் கணக்கில் மக்களிடம் பணத்தினச் சேர்த்து கோயில்களக் கட்டி ஆன்மிகம் எனும் பெயரில் மிகப் பெருந்த்தொகைப் பணத்தினை வீண‌டிக்கிறார்கள் ,  வாருங்கள் அவற்றில் உள்ள தவறுகளை விவாதிப்போம். ஏனெனில் இங்கே பொது மக்களின் பணம் வீணடிக்கப்ப்டுகிறது.
Link to comment
Share on other sites

ஆதவன்,  அவர் தனது வீடியோவைப் பொது இணையத்தளத்தில் எல்லோரும் பார்த்து விமர்சிக்கக் கூடியவாறு வெளியிட்டுள்ளார். விமர்சனங்களை அவர் ஏதிர்கொள்ள வேண்டும். வீடியோ எடுத்தவர்கள் அவரது அனுமதி இன்றி இதனைப் பிரசுரித்திருந்தால் நீங்கள் சொல்வது சரி.

Link to comment
Share on other sites

தென்னோலையிலை பின்னிறது தான் 'கிடுகு'...! வர வரத் தமிழும் மறந்து போகுது....! :o

காவோலையிலை பின்னிறது.... பாய், தடுக்கு, கடகம், நீத்துப்பெட்டி, பனங்க்கட்டிக் குட்டான்...! :D

அடடா.. ஹெலியில் போகாமலே எனக்கு எல்லாம் மறந்து போகுது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் வளர்நத பின் எத்தனை தாய் தந்தையருக்கு அவர்களின் திருமணத்தைக் கோலாகலமாகக் கொண்டாட முடியுமோ என்ற சந்தேகம் உண்டு. வெள்ளைகளைக் கட்டினாலும் பரவாயில்லை,  சாதி மாறிக் கட்டினால் எடுப்பாகத் திருமண விழா செய்ய முடியாதாம். சிலர் திருமணம் செய்வார்களோ இல்லையோ என்றே தெரியாது. அதுக்குத் தானாம் பிள்ளை தமது கட்டுப்பாட்டில் இருக்கும்போதே சாமத்திய வீட்டை ஆடம்பரமாக கொண்டாடி மகிழ்கிறார்களாம் என்று ஒருவர் எனக்கு விளக்கம் தந்தவர்.  :D

 

உடன நீங்கள் சொல்லி இருக்கனும்... அண்ணே.. நீங்க எப்ப சாவீங்களோ தெரியாது.. அந்த வகையில்.. தினமும் களியாட்டம் கொண்டாட்டமுன்னு வாழுங்கோ.. அது தான் உங்க கொள்கைக்கு சரின்னு. முடிஞ்சா வாழ்ந்திட்டு போகட்டுமேன். :lol::icon_idea:

ஆதவன்,  அவர் தனது வீடியோவைப் பொது இணையத்தளத்தில் எல்லோரும் பார்த்து விமர்சிக்கக் கூடியவாறு வெளியிட்டுள்ளார். விமர்சனங்களை அவர் ஏதிர்கொள்ள வேண்டும். வீடியோ எடுத்தவர்கள் அவரது அனுமதி இன்றி இதனைப் பிரசுரித்திருந்தால் நீங்கள் சொல்வது சரி.

 

அதுபோக.. எந்த பிரைவேட் செற்றிங்கும் இல்ல.. இந்த காணொளிகளில். அந்த வகையில்.. எவனும்.. எப்படியும்.. கூட காமண்ட் போடலாம். :icon_idea::lol:

Link to comment
Share on other sites

தமிழர் என்றாலே ஒரு அடையாளம் இல்லாத நாங்கள். எதை செய்தாலும்  ஒருவரும் கணக்கெடுக்க மாட்டார்கள்.

ஏதோ ஒரு கூட்டம்  விழா கொண்டாடுது என்டு மாத்திரம் சொல்வான்.

 

இப்ப இங்க கிட்டடியில  ஒரு கலியாண வீடு  மணமகன்  ஒரு பிரபல தமிழ்  பேப்பர் இலவசமா விடுகிறவருடைய பிள்ளை.

பெண்   இந்திக்காரி . 

கலியாணம் என்டா தடல் புடல். வடக்கு தாரை ,தப்பட்டை ஒரே கலக்கல். நாங்கள் மூலையில குந்தி இருந்து சாப்பிட்டு வந்ததான்.

 

செலவு என்டா   50 வருசம் உழைச்சாலும்  மிச்சப்படுத்தி இருக்க முடியாது.   பழகினதுக்கு  இலவச பேப்பரோட .இலவச சாப்பாடும் தந்தார்.

Link to comment
Share on other sites

படிப்பறிவில்லாத பெற்றோர்களுக்குப் பிறந்தால் இந்த நிலைதான் வரும்.   :(  :(  :(

 

படிப்பறிவில்லாதவனால்தான் இவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்கிறீர்களா?!  :D

 

என்னைப் பொருத்தளவில்...

'அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்!'

Link to comment
Share on other sites

ஹெலியும் லிமோவும் தான் மற்றவர்களின் சடங்கைவிட அதிகமாக இருக்கிறது.
 
ஹெலிக்கு பெரியவருக்கு 250 யூரோவும் சிறுவருக்கு 200 யூரோ.
 
ஹெலிக்கும் லிமோவுக்கும் ஒரு 2000 யூரோ செலவளிச்சிருப்பார்.
ஒரு நாள் தானே.
 
அந்தாள் தன்ட காசத்தானே செலவளிக்குது. அதுவும் தன் மகளுக்கு.
 
நீங்கள் எல்லாம் ஏன் எரியிரீங்க ??
 
கனடாவில, லண்டனில‌ இருந்து தமிழ்ப் பெடியள் தாய்லாந்துக்கு விபச்சாரிகளுக்கு ஆயிரக்கணக்கான டொலர் செலவளித்து பிளேனில போய் வாறங்கள். இந்தக் கணக்கெல்லாம் யார் பார்ப்பது ?? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக வேர்வை சிந்தி உழைச்ச காசு என்றால் ஒவ்வொரு சதத்தின் பெறுமதியும் செலவளிப்பவர்களுக்கு விளங்கும்,விளங்க வேண்டும்..அரசாங்கப்பணத்திலோ இல்லை வேறு குறுக்கு வழிகளில் வந்த பணம் என்றால் வாழ்வில் ஒரு நாளைக்கு தானே என்று தான் செலவளிக்கத் தோன்றும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பணத்தைக் கொட்டி ஆடம்பர விழாக்களை நடத்துபவர்கள்
தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பற்றிச் சற்றும் சிந்திக்காதவர்களே.

 

எனது நண்பன் மூன்று பெண் பிள்ளைகளுக்குத் தந்தை. யாருக்கும் இப்படியான

திருவிழாக்களைக் கொண்டாடவில்லை.
ஆனால் ஒரு பிள்ளைக்கு ஒரு லட்சம் யூரோ  செலவளித்து இரு பிள்ளைகளை மருத்துவம் படிக்கவும்

அடுத்த பிள்ளைக்கு இன்னொரு நல்ல துறையில் 75 ஆயிரம் செலவளித்து படிக்கவும் ஊக்கம் கொடுக்கின்றான். இப்படியும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.
உப்படியும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.
அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
இலட்சியங்கள். எல்லா விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.