Jump to content

விசுகு - உள்ளக சீர்திருத்த வேண்டுகோள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

 

என்னை  அறிய

என்னை புடம்போட

அதை  எதிர் கொள்ள

என்றுமே பின்னிற்பதில்லை..

 

அந்தவகையில் எனது சில  எழுத்துக்கள்

அல்லது கலந்துரையாடல்கள்

என்னைப்பற்றியோ

அல்லது எனது வயது சார்ந்தோ வெளியில் விமர்சிக்கப்படுவதாக அறிந்தேன்....

 

என்றுமே பின் முதுகில் குத்துபவர்கள் பற்றி  நான் கவலைப்பட்டதில்லை

அத்துடன் அது தெரியவரும் போது

அதற்காக நேரடி விவாதங்களை  எதிர்கொள்ள  தயங்குவதில்லை............

 

இங்கு

திறக்கப்படும் அனைத்து திரிகளிலும்

அனைத்து கருத்தாளர்களுடனும் விவாதிப்பவன்  அல்லது  கலந்து கொள்பவன் யான்.

நான் ஒரு எழுத்தாளனோ

அல்லது படைப்பாளியோ  அல்ல

ஆனால் படைப்புக்கள்

கருத்துக்கள்  மற்றும் தாயகம் சார்ந்து  விவாதிக்க  என்னால் முடியும்.

அநேகமாக சீரியசான  விடயங்களைப்பேசுவதால்

ஒரு மாற்றீடாக சில திரிகளில் சிரிக்க  

அல்லது  பொழுது போக்கிற்காக வர்ணம் தீட்டிஎழுதுவதுண்டு.

 

அவை  யாவும் நீங்கள் அறிந்ததே...

 

எங்கே  நான் இருந்தாலும்

அந்த இடம்

மகிழ்ச்சியாக

கலகலப்பாக  

ஒரு குடும்பமாக இருக்கும்

அப்படி வைத்துக்கொள்வேன்

 

வயசு

திருமணம்

பிள்ளைகள்

பொறுப்புக்கள்

பதவிகள்............... எவையும்  என்னை  மாற்றவேண்டிய  அவசியத்தை இதுவரை  தரவில்லை...

 

உங்களில் யாருக்காவது

என்னை  மாற்றணும்

நான் மாறணும்

அல்லது கட்டுப்படுத்தணும்  என்று நினைத்தால்

அதனை  தயவு செய்து தெரியப்படுத்தவும்.......

 

நான் இங்கு வந்த புதிதில்

எனக்கு உடன்பாடான  கருத்துக்கு

அல்லது நான் எழுதவேண்டியதை இன்னொரு கருத்தாளர் எழுதியிருந்தால்

அதற்கு ஆமென் என  மட்டும் எழுதிச்செல்வேன்.

 

நிலாமதி  ரீச்சர் அதை  தவிர்க்கமுடியுமா? என ஒருமுறை  கேட்டார்

அன்றிலிருந்து அந்த சொல்லை  நான் எங்கும் (யாழுக்கு  வெளியிலும்) பாவிப்பதில்லை.

 

உங்கள் கருத்துக்களை  எதிர் பார்க்கின்றேன்.

நன்றி

Link to comment
Share on other sites

கடும் நீலத்தைக் குறைத்து மெல்லிய நீலத்தில் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களிற்காக உங்களை மாற்ற வெளிக்கிட்டால் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். 

நீங்கள் நீங்களாக இருப்பது தான் சரி. உங்களின் மனது சொல்வதை கேளுங்கள். 

 

ஒவ்வொரு மனிதனிற்குள்ளும் ஒரு குழந்தையும் மிருகமும் உண்டு என்று நான் படித்த காலங்களில் அறிந்துகொண்டேன். 

அந்தந்த இடத்தில் அதற்கேற்றாற்போல் மாற வேண்டும். அந்தவகையில் நான் உங்களிடமிருந்து எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. இப்படி இருப்பதே சிறந்தது :wub:

Link to comment
Share on other sites

மற்றவர்களுக்காக மாறவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள். இது உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பொருந்தும்!!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் சேரும் இடத்தில் எட்டு விமர்சனம் வைக்கிறது வழமைதானே. நீங்களும் ஒரு பேசுபொருள், பாடுபொருளாகி வருகின்றீர்கள் என்று பெருமைப்படுங்கள். ஏற்கனவே லாசப்பலில் பெரும் புள்ளி. இனி பிரான்சில் முக்கிய வி.ஐ.பி. ஆவீர்கள். பிறகு எல்லோருக்கும் அருள்பாலிக்கும் அதிகாரம் தானே வந்து சேரும். :icon_idea:

Link to comment
Share on other sites

av-2820.jpg?_r=0 Posted by விசுகு on 05 June 2014 - 07:51 PM

ஜனநாயக அரசியல் பரப்பில் எமது பரப்புரைகளை விட்டுகொடுக்காமல் முன் கொண்டு சென்றால்தான், பொதுஜன கருத்தோட்டங்களை உருவாக்கினால்தான், சளைக்காமல் போராடினால்தான், இன்றில்லாவிட்டால், நாளை அல்லது நாளை மறுநாள், ஒருநாள் விடிவு வரும் என நம்புகிறேன். இப்படி நல்லது நடக்கும் என சளைக்காமல் நம்பும் என்னை நான் நம்புகிறேன். வேறு எதையும், எவரையும் நான் நம்புவது இல்லை.

 

 

இன்று நம்பிக்கை தளர்ந்ததென்ன???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு,சில விடையத்திற்காக மாற நினைத்தால் எப்போதும் எங்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படும்....உண்மையாக மாற வேண்டுமா இல்லையா என்று முடிவு எடுக்க வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கிறது...என் அனுபவம் யார் மனதும் நோக கூடாது என்பதற்காக யாரு என்ன சொன்னாலும் ம்ம்ம்.என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்..

ஆனால் அந்த அமைதியான போக்காலயே,அமைதி இளக்கும் தருணங்களில் நிறையக் காயப்பட்டு இருக்கிறன்.மாற்றம் என்பது  ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசப்படும்.

மாற்றம் என்பது என்ன.....???? எங்களுக்கான தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு சார்ந்ததாகவோ இல்லை என்றால் எங்களுக்காக வாழுபவர்களுக்கான மாற்றமாக இருந்தால் பறவா இல்லை.ஒரு பொது வெளியில் எழுதுவதற்காக மட்டும் எங்களை மாற்றுவது என்பது வேண்டாத விடையம் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா நீங்கள் யாழில் உள்ளவர்களை அரவணைத்து தட்டிக்கொடுத்து வரும் ஒருவர். உங்களைப்பற்றி கருத்து வைப்பவர்கள் தம்மை முதலில் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் பகிடியாக எழுதும் சில விடயங்கள் யாரையாவது முகம் சுழிக்க வைத்தால் மட்டுறுத்தினர்களுக்கு தெரியப்படுத்தலாம் அதை விடுத்து இப்படி முதுகுக்கு பின்னால் கதைப்பதோ அதை பற்றி எழுதித்திரிவதோ ஏற்புடையதல்ல...அப்படியானவர்களுக்காக நீங்கள் மாற நினைப்பதும் வரவேற்கத்தக்கதல்ல.

நீங்கள் நீங்களாகவே இருங்கள் ...மற்றவர்களுக்காக உங்களை மாற்றி நீங்கள் யாழில் எழுதுவதோ கதைப்பதோ  தேவையில்லாதது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நீங்களாகவே இருங்கள் :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

உதுதான், உதுக்குத்தான், போத்தலை திறந்தால், இப்படி எதையாவது எழுதிப் போடுவன் எண்டு தான், ஒன்லி ரீடிங், நோ றைடிங்க்...

டுடே றைடிங்க்.போர் யு ஒன்லி. ok பிரதர் கோ டு பெட். யு வில் பி பைன் இன் தி மோர்னிங் 

 

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

களவு எடுப்பவனுக்கு தான் களவு எடுக்கின்றன் என்று தெரியும் பொய் சொல்பவனுக்கு தான் பொய் சொல்லுகின்றேன் என்று தெரியும் நடிப்பவனுக்கு தான் நடிக்கின்றேன் என்று தெரியும் .அதே போலத்தான் பிழை செய்பனுக்கும் தான் பிழை செய்கின்றன் என்று தெரியும் .

இவையெல்லாம் மற்றவன் சொல்லி தெரியதேவையில்லை .

அதே போல நீங்கள் எழுதும் போது உங்களுக்கே  நிட்சயம் தெரியும் அது சரியோ தவறோ என்று .தவறு என்று படுவதை தவிர்த்துவிடுங்கள் .

 

இனி  சில வேளை உங்களால் எதுவும் எழுதமுடியாமல் போய்விடும் :icon_mrgreen: .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, இதென்ன விளையாட்டு?
உங்களின் எழுத்துக்களை வாசிக்கத் தூண்டுவதே, உங்கள் எழுத்தின் நடைமுறை தான்...

அதில் மாற்றம் வேண்டாம். நீங்கள், நீங்களாகவே இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. உங்களை நீங்கள் தான் மீளாய்வு செய்து கொள்ளனும். அடுத்தவன் சொல்லி உங்களை மாற்றிக்கிற நிலைக்கு ஒரு நாளும் நீங்கள் வரக்கூடாது. அடுத்தவன் சொல்வதை உள்வாங்கி மீளாய்வில் அதனை வைச்சுக் கொள்ளலாம். அதற்கா மற்றவன் சொல்லுற படியே நான் மாறனுன்னு நினைக்கும் பகுத்தறிவற்ற தனத்தை வளர்க்கக் கூடாது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நானாகவே இருப்பேன்......இன்றுவரை என் மனைவி பிள்ளைகளுக்காகக் கூட ...... என்னை நான் மாற்ற தயாரில்லை.........அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி.......ஒருவன் மற்றவனிடம் சரிபிழை கேட்பது தப்பில்லை......icon6m_zps6069767e.gif

Link to comment
Share on other sites

ஆளாளுக்கு ஜகா வாங்கிட்டீங்கள்.. :o அவர் உங்கட கருத்தைத்தானே கேட்டார்? முடிவு எப்பவும் அவர் கையில்தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

......உங்களில் யாருக்காவது

என்னை  மாற்றணும்

நான் மாறணும்

அல்லது கட்டுப்படுத்தணும்  என்று நினைத்தால்

அதனை  தயவு செய்து தெரியப்படுத்தவும்.......

 

இதுவரை இல்லை...... இனிமேல் அப்படி ஒரு நிலை வந்தால் தெரியப்படுத்துகின்றேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடும் நீலத்தைக் குறைத்து மெல்லிய நீலத்தில் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. :D

 

 

நன்றி  தம்பி

கவனத்தில் எடுக்கப்பட்டு விட்டது........

(ஆனால் அதற்கு ஆசிரியர் நீங்கள் தான் :D ...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களிற்காக உங்களை மாற்ற வெளிக்கிட்டால் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். 

நீங்கள் நீங்களாக இருப்பது தான் சரி. உங்களின் மனது சொல்வதை கேளுங்கள். 

 

ஒவ்வொரு மனிதனிற்குள்ளும் ஒரு குழந்தையும் மிருகமும் உண்டு என்று நான் படித்த காலங்களில் அறிந்துகொண்டேன். 

அந்தந்த இடத்தில் அதற்கேற்றாற்போல் மாற வேண்டும். அந்தவகையில் நான் உங்களிடமிருந்து எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. இப்படி இருப்பதே சிறந்தது :wub:

 

நன்றி  தம்பி

மிகவும் காரமான ஆள் நீங்கள் என்று தெரிகிறது.

 

என்னை  நான் கேள்வி  கேட்டபோது

இந்த இருநிலையை  உணர்ந்து கொண்டேன்

அதை நீங்களும் கவனித்திருக்கலாம்

 

வாழ்க்கை எல்லாவற்றையுமே  பகிரக்கூடிய  அகண்ட திரை

பெற்றோருக்கு மகன்

சகோதரர்களுக்கு தம்பி

மனைவிக்கு கணவன்

பிள்ளைகளுக்கு அப்பா....

 

இதில் அந்தந்த  இடங்களில் அவைகளுக்கு ஏற்றது போல் நடந்து கொள்வதே வாழ்வு என்ற  

தங்கள் கருத்து ஓங்கி அடித்தள்ளது

நன்றி

மற்றவர்களுக்காக மாறவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள். இது உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பொருந்தும்!!! :)

 

நன்றி  சகோதரி.....

உண்மையில் நீங்கள் இது பற்றி  

என்னில் தவறான பார்வை  வைத்திருப்பீர்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு

 

மேலும்

மேலும்  நன்றாக போகவேண்டாமா?? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் சேரும் இடத்தில் எட்டு விமர்சனம் வைக்கிறது வழமைதானே.

நீங்களும் ஒரு பேசுபொருள், பாடுபொருளாகி வருகின்றீர்கள் என்று பெருமைப்படுங்கள். ஏற்கனவே லாசப்பலில் பெரும் புள்ளி. இனி பிரான்சில் முக்கிய வி.ஐ.பி. ஆவீர்கள். பிறகு எல்லோருக்கும் அருள்பாலிக்கும் அதிகாரம் தானே வந்து சேரும். :icon_idea:

 

நான்  இதை இங்கு எழுதியதற்கான  பல  காரணங்கள்  உங்களது கருத்தில் உள்ளது

அவைக்கான ஒரு  உள்ளக தேடல் தான் இது.... :icon_idea:

 

நன்றி ராசா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

av-2820.jpg?_r=0 Posted by விசுகு on 05 June 2014 - 07:51 PM

ஜனநாயக அரசியல் பரப்பில் எமது பரப்புரைகளை விட்டுகொடுக்காமல் முன் கொண்டு சென்றால்தான், பொதுஜன கருத்தோட்டங்களை உருவாக்கினால்தான், சளைக்காமல் போராடினால்தான், இன்றில்லாவிட்டால், நாளை அல்லது நாளை மறுநாள், ஒருநாள் விடிவு வரும் என நம்புகிறேன். இப்படி நல்லது நடக்கும் என சளைக்காமல் நம்பும் என்னை நான் நம்புகிறேன். வேறு எதையும், எவரையும் நான் நம்புவது இல்லை.

 

 

இன்று நம்பிக்கை தளர்ந்ததென்ன???

 

நாம்  நம்புவது என்பது ஒருபுறம்

நம்மைப்பற்றிய  சமுதாயப் பார்வை  எவ்வாறு உள்ளது என்பதை அறிதலே எனது நோக்கம்

அது எனது பாதை சரி என்பதையே இங்கு 100வீதம் சொல்லிநிற்கிறது

 

யாழ் உறவுகள் எனது எழுத்தால் எவ்விதத்திலும்  காயப்படவில்லை என்பது  தெரிகிறது

இனித்தான் இருக்கு ராசா  மிச்சம்...

 

நன்றி  வருகைக்கும் நேரத்திற்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு,சில விடையத்திற்காக மாற நினைத்தால் எப்போதும் எங்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படும்....உண்மையாக மாற வேண்டுமா இல்லையா என்று முடிவு எடுக்க வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கிறது...என் அனுபவம் யார் மனதும் நோக கூடாது என்பதற்காக யாரு என்ன சொன்னாலும் ம்ம்ம்.என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்..

ஆனால் அந்த அமைதியான போக்காலயே,அமைதி இளக்கும் தருணங்களில் நிறையக் காயப்பட்டு இருக்கிறன்.மாற்றம் என்பது  ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசப்படும்.

மாற்றம் என்பது என்ன.....???? எங்களுக்கான தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு சார்ந்ததாகவோ இல்லை என்றால் எங்களுக்காக வாழுபவர்களுக்கான மாற்றமாக இருந்தால் பறவா இல்லை.ஒரு பொது வெளியில் எழுதுவதற்காக மட்டும் எங்களை மாற்றுவது என்பது வேண்டாத விடையம் என்று நினைக்கிறேன்.

 

நன்றி  பிள்ளாய்.........

 

நேரடி  எதிரிகள் பற்றி  பார்த்து

யோசித்து முடிவெடுக்கலாம்

மறைமுக  எதிரிகளை ....?

இது   போன்று கூட்டுப்பொறுப்புடன் முறியடிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் யாழில் உள்ளவர்களை அரவணைத்து தட்டிக்கொடுத்து வரும் ஒருவர். உங்களைப்பற்றி கருத்து வைப்பவர்கள் தம்மை முதலில் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் பகிடியாக எழுதும் சில விடயங்கள் யாரையாவது முகம் சுழிக்க வைத்தால் மட்டுறுத்தினர்களுக்கு தெரியப்படுத்தலாம் அதை விடுத்து இப்படி முதுகுக்கு பின்னால் கதைப்பதோ அதை பற்றி எழுதித்திரிவதோ ஏற்புடையதல்ல...அப்படியானவர்களுக்காக நீங்கள் மாற நினைப்பதும் வரவேற்கத்தக்கதல்ல.

நீங்கள் நீங்களாகவே இருங்கள் ...மற்றவர்களுக்காக உங்களை மாற்றி நீங்கள் யாழில் எழுதுவதோ கதைப்பதோ  தேவையில்லாதது.

 

நன்றி  சகோதரி

 

 

அண்ணனின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு

அவரும் கொஞ்சம் சிரிக்கட்டுமே என உணர்த்தும் தங்களது எழுத்துக்கள்

உண்மையில் நெகிழ வைக்கின்றன...

 

நான் இங்கு பலமுறை  எழுதியது தான்

நான் ஒரு திறந்த புத்தகம் என.

ஆனால் இங்குள்ள  பலருக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்

நான் முகம் காட்டுபவன்

முகம் காட்ட தயாராக உள்ளவன்

நேற்றுக்கூட ஒரு உறவு குடும்பத்துடன் ஐரோப்பாவிலிருந்து வந்து என்னைச்சந்தித்தார்

(அவருடைய  அனுமதி  பெறாததால் அவரது பெயரை இங்கு தவிர்க்கின்றேன்.  அவர் வேண்டுமானால் எழுதட்டும்)

அதனால் தான் மறைமுக எதிரிகளுக்கு இந்த திரியை  விடுகின்றேன்

வாங்கோ

கேளுங்கோ

பதில் தரப்படும்.....

எனது கருத்து வேண்டாம் என்றால்

யாழ் கள  உறவுகளைக்கேளுங்கோ.

 

நன்றி  தங்கையே.......

நீங்கள் நீங்களாகவே இருங்கள் :) 

 

அதே...

நன்றி  பாட்டி...

விசுகர்,

உதுதான், உதுக்குத்தான், போத்தலை திறந்தால், இப்படி எதையாவது எழுதிப் போடுவன் எண்டு தான், ஒன்லி ரீடிங், நோ றைடிங்க்...

டுடே றைடிங்க்.போர் யு ஒன்லி. ok பிரதர் கோ டு பெட். யு வில் பி பைன் இன் தி மோர்னிங் 

 

:icon_mrgreen:

 

எனக்கு உந்தப்பழக்கம் இல்லை

அதால

களத்தில  இறங்கிடுவன்

களமாடினால்

விழுப்புண்கள் தவிர்க்கமுடியாதை  தானே........ :D

 

நன்றி ஐயா

வருகைக்கும் நேரத்திற்கும்...

களவு எடுப்பவனுக்கு தான் களவு எடுக்கின்றன் என்று தெரியும் பொய் சொல்பவனுக்கு தான் பொய் சொல்லுகின்றேன் என்று தெரியும் நடிப்பவனுக்கு தான் நடிக்கின்றேன் என்று தெரியும் .அதே போலத்தான் பிழை செய்பனுக்கும் தான் பிழை செய்கின்றன் என்று தெரியும் .

இவையெல்லாம் மற்றவன் சொல்லி தெரியதேவையில்லை .

அதே போல நீங்கள் எழுதும் போது உங்களுக்கே  நிட்சயம் தெரியும் அது சரியோ தவறோ என்று .தவறு என்று படுவதை தவிர்த்துவிடுங்கள் .

 

இனி  சில வேளை உங்களால் எதுவும் எழுதமுடியாமல் போய்விடும் :icon_mrgreen: .

 

நன்றியண்ணா

நாமே நம்மை அளவெடுப்பது 100 வீதம்  சரியாகுமா?

 

இனி  சில வேளை உங்களால் எதுவும் எழுதமுடியாமல் போய்விடும்  :icon_mrgreen: .

இதை எழுதி  இந்தக்கருத்தை முடிக்காவிட்டால்

அர்யூன் அண்ணா தெரிவாரா?? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, இதென்ன விளையாட்டு?

உங்களின் எழுத்துக்களை வாசிக்கத் தூண்டுவதே, உங்கள் எழுத்தின் நடைமுறை தான்...

அதில் மாற்றம் வேண்டாம். நீங்கள், நீங்களாகவே இருங்கள்.

 

நாம  விளையாடுவோம் சிறி

அதில் எந்த மாற்றமும் இல்லை

 

நாம் விளையாடிபோது

சக விளையாட்டுக்காரர்கள்  எவராவது காயப்பட்டார்களா  என அறியும் முயற்சியே  இது.

இல்லை  என உறுதிப்படுத்தப்பட்டால்

இன்னொரு ஆயுதம் என்னிடம் அதிகமாக இருக்கும்...

 

நன்றி  சிறி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.