Jump to content

விசுகு - உள்ளக சீர்திருத்த வேண்டுகோள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. உங்களை நீங்கள் தான் மீளாய்வு செய்து கொள்ளனும். அடுத்தவன் சொல்லி உங்களை மாற்றிக்கிற நிலைக்கு ஒரு நாளும் நீங்கள் வரக்கூடாது. அடுத்தவன் சொல்வதை உள்வாங்கி மீளாய்வில் அதனை வைச்சுக் கொள்ளலாம். அதற்கா மற்றவன் சொல்லுற படியே நான் மாறனுன்னு நினைக்கும் பகுத்தறிவற்ற தனத்தை வளர்க்கக் கூடாது. :):icon_idea:

 

அப்படி வைச்சுக்கொள்ளத்தான் இந்த மீளாய்வு ராசா

 

யாழ் எனது குடும்பம்

எந்தவகையிலும் அது காயப்படக்கூடாது

அதேநேரம் 

எனது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சுத்தமானது

யாழில் உள்ள கருத்தாடல்கள் சார்ந்து

இங்கு கருத்திட  வாதிடமுடியாதவர்கள்  எவராவது

எனது சொந்த வாழ்வை

பொதுவாழ்வை சந்திக்கு இழுத்தால்...................

அதற்கு இந்த திரி ஆதாரமாக இருக்கக்கூடும்.

 

நன்றி  தம்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஒவ்வொருவரது முடிவுகளையோ கருத்துகளையோ அந்தந்த நேர நெருக்கடிகளும் , சந்தர்ப்பங்களுமே தீர்மானிக்கின்றன. சில காலத்துக்கு முன் சரியேன்று நினைத்தது, நிகழ்காலத்தில் தவறாய்ப் போய் விடுகின்றது. அதுவும் கூட எதிர் காலத்தில் மாறிப் போகலாம். இதுக்கு மேல் கொள்கையாவது  கத்தரிக்காய்யாவது அப்படியெல்லாம் ஒன்டும் கிடையாது.

 

தன்னை, சகோதரரை, மனைவியை தோற்ற போது தர்மத்தைக் கடைப் பிடித்த தருமனும் , துரோனரைக் கொல்வதற்காக பொய் சொல்ல முடியுது என்றால் நீங்களோ நானோ எம்மாத்திரம்.

 

ஊர்ப் புதினத்தில் சீரியசாய்க் கதைக்கிறோம், சிரிப்போமில் சிரிக்கிறோம், வண்ணத்திரையில் ஜொள்ளு விடுகிறோம்...! இந்தக் கலவைதான் மனிதர்கள்.

 

நீங்கள் எதையும் மூளைக்குள் விடாமல் , முடியோடு உதறி விட்டுட்டு  வழமைபோல் வலம் வாருங்கள்...! :D :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நானாகவே இருப்பேன்......இன்றுவரை என் மனைவி பிள்ளைகளுக்காகக் கூட ...... என்னை நான் மாற்ற தயாரில்லை.........அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி.......ஒருவன் மற்றவனிடம் சரிபிழை கேட்பது தப்பில்லை......icon6m_zps6069767e.gif

 

நன்றியண்ணா...

 

அதற்காகத்தான் இதை இங்கு வைத்தேன்

......உங்களில் யாருக்காவது

என்னை  மாற்றணும்

நான் மாறணும்

அல்லது கட்டுப்படுத்தணும்  என்று நினைத்தால்

அதனை  தயவு செய்து தெரியப்படுத்தவும்.......

 

இதுவரை இல்லை...... இனிமேல் அப்படி ஒரு நிலை வந்தால் தெரியப்படுத்துகின்றேன் :D

 

நிச்சயமாக

எப்பவும் கேட்க  தயாராகவே  உள்ளேன்

 

நன்றி  தம்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா என்னைப் பொறுத்த வரை நீங்கள் எழுதுகின்ற பெரும்பாலான அரசியற் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.அதற்காக உங்கள் எழுத்துக்களை மாத்தி எழுதுங்கள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை.எனக்கு சரியெனப்ப்பட்டதை நான் எழுதுவது மாதிரி,உங்களுக்கு சரியெனப்பட்டதை நீங்கள் எழுதுகிறீர்கள்.உங்கள் கருத்துக்களை பற்றிய எனது நிலைப்பாடு என்ன என்டால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்தாலும் எதாவது காரணத்தை அந்த உண்மையை சொல்வதில்லை அல்லது மறுக்கிறீர்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் கருத்துக்களை நடைமுறை யதார்த்தத்தை மீறியதாகவே நான் காண்கிறேன்.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பிள்ளாய்.........

 

நேரடி  எதிரிகள் பற்றி  பார்த்து

யோசித்து முடிவெடுக்கலாம்

மறைமுக  எதிரிகளை ....?

இது   போன்று கூட்டுப்பொறுப்புடன் முறியடிக்கலாம்

 

மறைமுக எதிரிகள் என்று யாரை சொல்கிறீர்களோ நமக்கு புரிய இல்லை...விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்  இதை இங்கு எழுதியதற்கான  பல  காரணங்கள்  உங்களது கருத்தில் உள்ளது

அவைக்கான ஒரு  உள்ளக தேடல் தான் இது.... :icon_idea:

 

நன்றி ராசா

மனதில் தோன்றியதை எழுதியிருந்தேன். நீங்கள் தடித்த எழுத்துக்களில் மாற்றியதைப் பார்க்கவே எனக்கே புதுப்புது அர்த்தங்களாக இருக்கின்றது!. அப்படி பிரான்சில் என்னதான் நடக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் தோன்றியதை எழுதியிருந்தேன். நீங்கள் தடித்த எழுத்துக்களில் மாற்றியதைப் பார்க்கவே எனக்கே புதுப்புது அர்த்தங்களாக இருக்கின்றது!. அப்படி பிரான்சில் என்னதான் நடக்கின்றது!

அடுத்த தேர்தல் களமாக இருக்கலாம்
Link to comment
Share on other sites

விசுகு அண்ணா என்னைப் பொறுத்த வரை நீங்கள் எழுதுகின்ற பெரும்பாலான அரசியற் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.அதற்காக உங்கள் எழுத்துக்களை மாத்தி எழுதுங்கள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை.எனக்கு சரியெனப்ப்பட்டதை நான் எழுதுவது மாதிரி,உங்களுக்கு சரியெனப்பட்டதை நீங்கள் எழுதுகிறீர்கள்.உங்கள் கருத்துக்களை பற்றிய எனது நிலைப்பாடு என்ன என்டால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்தாலும் எதாவது காரணத்தை அந்த உண்மையை சொல்வதில்லை அல்லது மறுக்கிறீர்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் கருத்துக்களை நடைமுறை யதார்த்தத்தை மீறியதாகவே நான் காண்கிறேன்.நன்றி

மிக அப்பட்டமான உண்மை .அரசியல் செய்பவர்களுக்கு அவர் வாழ்வும் வாக்கும் பொய் தான் .கருணாநிதி இன்றும் பல ஆரவாரங்களுடன் தான் நடை பயில்கின்றார்.கருணாநிதிக்கும் தெரியும் அது பொய்யென்று ஆரவாரங்களுக்கும் தெரியும் அது பொய் என்று இருந்தாலும் தொடருகின்றார்கள் தமது அரசியல் வாழ்க்கையை .

எனக்கு உந்த பிரச்சனை இல்லை ஏனெனில் எல்லாம் உண்மை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை இருந்து கொண்டு எங்களுக்கு எல்லா உண்மையளும் தெரியும் எண்டுறவை இவ்வளவு வருசமாகியும் ஒண்டையும் புடுங்கினதாய் தெரியேல்லை......இப்பவும் காட்டிக்குடுக்கிறதை தவிர....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில், பல விதமான கருத்தாளர்கள் உள்ளார்கள், விசுகர்!

 

அவர்களின் பல்வேறுபட்ட கருத்துக்களே, யாழ் களத்தை நோக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கு முக்கிய காரணமாகும்!

 

ஒரு கை தட்டும் போது, அது ஓசை எழுப்புவதில்லை.... இரண்டு கைகளும் தட்டப்படும் போதே ஓசை எழுகின்றது!

 

அந்த ஓசை தான், களத்தைக் கலகலப்பாக வைத்திருக்கின்றது..... எனவே எல்லோரது கருத்துக்களும் தேவை..!

 

இந்த வகைக்குள்ளேயே உங்களது கருத்துக்களும் அடங்குகின்றன!

 

யாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும், 'நல்லது, கெட்டதை' பிரித்தறியத் தெரிந்தவர்கள் ! உங்கள் கருத்துக்களால், 'மனம்' நொந்து போனால், அதைக் கருத்துக்களத்தில் தெரிவிப்பார்கள்!

 

உங்களுக்காகவோ, அல்லது வேறு யாருக்காகவோ, தங்கள் கருத்துக்களை அவர்கள் மட்டுப்படுத்தி எழுதுவார்கள் எனில், அவர்கள் 'கருத்தாளர்கள்' அல்ல!

 

வெறும் சாமரம் வீசுபவர்கள்!

 

எனவே, களத்தின் விதிகளுக்கிணங்க, நீங்கள் கருத்தெழுதுவதாக, நீங்கள் நம்பினால், இந்த அபிப்பிராயத் திரிக்கு அவசியமேயில்லை என்பது எனது கருத்தாகும்!

 

தனது மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் ஒரு மனிதன், எவருக்கும் பணிந்து போக வேண்டிய தேவையில்லை! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஒவ்வொருவரது முடிவுகளையோ கருத்துகளையோ அந்தந்த நேர நெருக்கடிகளும் , சந்தர்ப்பங்களுமே தீர்மானிக்கின்றன. சில காலத்துக்கு முன் சரியேன்று நினைத்தது, நிகழ்காலத்தில் தவறாய்ப் போய் விடுகின்றது. அதுவும் கூட எதிர் காலத்தில் மாறிப் போகலாம். இதுக்கு மேல் கொள்கையாவது  கத்தரிக்காய்யாவது அப்படியெல்லாம் ஒன்டும் கிடையாது.

 

தன்னை, சகோதரரை, மனைவியை தோற்ற போது தர்மத்தைக் கடைப் பிடித்த தருமனும் , துரோனரைக் கொல்வதற்காக பொய் சொல்ல முடியுது என்றால் நீங்களோ நானோ எம்மாத்திரம்.

 

ஊர்ப் புதினத்தில் சீரியசாய்க் கதைக்கிறோம், சிரிப்போமில் சிரிக்கிறோம், வண்ணத்திரையில் ஜொள்ளு விடுகிறோம்...! இந்தக் கலவைதான் மனிதர்கள்.

 

நீங்கள் எதையும் மூளைக்குள் விடாமல் , முடியோடு உதறி விட்டுட்டு  வழமைபோல் வலம் வாருங்கள்...! :D :D

 

நன்றியண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா என்னைப் பொறுத்த வரை நீங்கள் எழுதுகின்ற பெரும்பாலான அரசியற் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.அதற்காக உங்கள் எழுத்துக்களை மாத்தி எழுதுங்கள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை.எனக்கு சரியெனப்ப்பட்டதை நான் எழுதுவது மாதிரி,உங்களுக்கு சரியெனப்பட்டதை நீங்கள் எழுதுகிறீர்கள்.உங்கள் கருத்துக்களை பற்றிய எனது நிலைப்பாடு என்ன என்டால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்தாலும் எதாவது காரணத்தை அந்த உண்மையை சொல்வதில்லை அல்லது மறுக்கிறீர்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் கருத்துக்களை நடைமுறை யதார்த்தத்தை மீறியதாகவே நான் காண்கிறேன்.நன்றி

 

நன்றி  ரதி

நான் ஏற்கனவே  எழுதியது தான்

பொதுநன்மை கருதி

தேவையற்ற  நேரத்தில்

தேவையற்ற  விடயத்தை பேசாதிருத்தலும் ஒருவகை சேவையே.

அதைத்தான் நான் செய்கின்றேன்

அதில் என்றும் மாற்றமிராது

நாலு பேர்  கிளறுகிறார்கள்

பொழுது போகும் என்பதற்காக

என் வீட்டுப்பிரச்சினையை  எழுதமுடியாது..

 

இது தான் செய்தவனுக்கும்

வேடிக்கை  பார்த்தவனுக்குமான  வித்தியாசம்

நான் எழுதுவேன்

எமக்கான குறிக்கோளை  அடைந்தபின்............

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளணும்

கூட்டணி

புலிகள்

இன்று  தேசியக்கூட்டமைப்பு..............  எல்லாமே எமது தாயகவேட்கைக்கான ஒவ்வொரு தடிகள்...

அவை அவை தேவைப்படுமளவுக்கு தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டன

 

வழி  நடாத்தியவர்கள் நாம் (தமிழர்கள்)

தப்பு நடந்திருந்தால் பொறுப்பும் நாமே தான்

அவர்களை  பிழை  சொல்லமுடியாது

அந்த நேரம் அவை சரியாக இருந்தன

இனி  அதைப்பற்றி  பேசிக்கொண்டிருப்பதில்  என்ன  லாபம்?

 

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிங்களம் எம்மை  விழுங்கிவிடும்...

 

அடுத்தவர் யார்?

 

அதை ஆதரிக்க தயாராகவே உள்ளேன்

இது தான் எனது நிலைப்பாடு.....

தாயகத்தின் நிலை அறிந்தவன்

தாயகத்தை மீட்க  நினைப்பவன்

செயற்பட  நினைப்பவன்

இதைத்தான் செய்வான்

இதை மட்டும் தான் செய்வான்

செய்யணும்........

 

மற்றும்படி

உங்கள் அரசியல் மற்றும் தாயக  கருத்துக்களில்

துளியும் உடன்பாடு கிடையாது எனக்கு.

எல்லாவற்றையும்  தட்டிவிடும்  எழுத்து தங்களது.........

இன்றைய  சூழலில்

புதிதாக சேர்க்காவிட்டாலும்

இருப்பதையாவது இழக்காமல்

பகைக்காமல் இருக்கணும்............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது அண்ணா பொய்யை சொல்லி மக்களை ஏமாத்திறதில் எனக்கு விருப்பம் இல்லை.நீங்கள் என்ன தான் உண்மையை பூசி மறைத்து பொய்யை எழுதினாலும் மக்களுக்கு உண்மை தெரியும்.இனி மேலும் அவர்களை ஏமாத்த முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் யாருக்காவது

என்னை  மாற்றணும்

நான் மாறணும்

அல்லது கட்டுப்படுத்தணும்  என்று நினைத்தால்

அதனை  தயவு செய்து தெரியப்படுத்தவும்.......

 

நீங்கள் நீங்களாகவே இருங்கள் விசுகு. உங்களுக்கு எது சரி என்கிறதோ அதையே செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது அண்ணா பொய்யை சொல்லி மக்களை ஏமாத்திறதில் எனக்கு விருப்பம் இல்லை.நீங்கள் என்ன தான் உண்மையை பூசி மறைத்து பொய்யை எழுதினாலும் மக்களுக்கு உண்மை தெரியும்.இனி மேலும் அவர்களை ஏமாத்த முடியாது

 

1-  மௌனமாக இருப்பதற்கு  பெயர் பொய்  பேசுகின்றேன் என்பது அபாண்டமானது

2- உங்களுக்கு உண்மை  தெரியும்  என்றால் எதற்கு என்னை இழுக்கின்றீர்கள்??? ரதி.

 

எல்லோருக்கும் எல்லாம் தெரியும்

ஆனால் அதனை  ஏன் கிளறிக்கொண்டிருக்கணும் என்பதே எனது நிலைப்பாடு....

மறைமுக எதிரிகள் என்று யாரை சொல்கிறீர்களோ நமக்கு புரிய இல்லை...விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

 

 

 

மறைமுக  எதிரிகள்  என்று யாரைச்சொல்கின்றேன் என்பது அவரவருக்கு புரியும்...

 

நீங்கள் பதில் எழுதினால்

அதற்கு நாம் பதில் தரக்கூடிய  மாதிரி  நடந்து கொள்ளுங்கள்

சாட்சியை  பதில் கூறவிடாது  தாங்கள் நினைத்தது போல் தண்டிப்பது அநியாயமாகும்.. :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் தோன்றியதை எழுதியிருந்தேன். நீங்கள் தடித்த எழுத்துக்களில் மாற்றியதைப் பார்க்கவே எனக்கே புதுப்புது அர்த்தங்களாக இருக்கின்றது!. அப்படி பிரான்சில் என்னதான் நடக்கின்றது!

 

என்ன  செய்வது?

யாழின் நீண்டகால  உறுப்பினர் நான்

அதன் இன்ன துன்பங்களில் முடிவுகளில் ....

உறவுகளோடு ஒற்றுமையாக நின்றுள்ளேன்

அதைத்தொடர்ந்து செய்வேன்

அது சிலருக்கு உறுத்தலாம்

நேரடியாக மோத  தயாராகவே உள்ளேன்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை இருந்து கொண்டு எங்களுக்கு எல்லா உண்மையளும் தெரியும் எண்டுறவை இவ்வளவு வருசமாகியும் ஒண்டையும் புடுங்கினதாய் தெரியேல்லை......இப்பவும் காட்டிக்குடுக்கிறதை தவிர....

 

 

தற்பொழுது

மிகவும் லாபகரமான  தொழில் இது தான்....

பாவம் பிழைச்சுப்போகட்டும்

அதற்கும் தமிழன் உதவினான் என்று இருக்கடடும்

யாழ் களத்தில், பல விதமான கருத்தாளர்கள் உள்ளார்கள், விசுகர்!

 

அவர்களின் பல்வேறுபட்ட கருத்துக்களே, யாழ் களத்தை நோக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கு முக்கிய காரணமாகும்!

 

ஒரு கை தட்டும் போது, அது ஓசை எழுப்புவதில்லை.... இரண்டு கைகளும் தட்டப்படும் போதே ஓசை எழுகின்றது!

 

அந்த ஓசை தான், களத்தைக் கலகலப்பாக வைத்திருக்கின்றது..... எனவே எல்லோரது கருத்துக்களும் தேவை..!

 

இந்த வகைக்குள்ளேயே உங்களது கருத்துக்களும் அடங்குகின்றன!

 

யாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும், 'நல்லது, கெட்டதை' பிரித்தறியத் தெரிந்தவர்கள் ! உங்கள் கருத்துக்களால், 'மனம்' நொந்து போனால், அதைக் கருத்துக்களத்தில் தெரிவிப்பார்கள்!

 

உங்களுக்காகவோ, அல்லது வேறு யாருக்காகவோ, தங்கள் கருத்துக்களை அவர்கள் மட்டுப்படுத்தி எழுதுவார்கள் எனில், அவர்கள் 'கருத்தாளர்கள்' அல்ல!

 

வெறும் சாமரம் வீசுபவர்கள்!

 

எனவே, களத்தின் விதிகளுக்கிணங்க, நீங்கள் கருத்தெழுதுவதாக, நீங்கள் நம்பினால், இந்த அபிப்பிராயத் திரிக்கு அவசியமேயில்லை என்பது எனது கருத்தாகும்!

 

தனது மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் ஒரு மனிதன், எவருக்கும் பணிந்து போக வேண்டிய தேவையில்லை! :D  

 

 

நன்றியண்ணா

யாழ்  களத்தில் நாம் நிற்கின்றோம்

அதனால் களமாடலாம்....

அதை மீறி  வெளியில் நின்றால்.....? :(  :(  :(

நீங்கள் நீங்களாகவே இருங்கள் விசுகு. உங்களுக்கு எது சரி என்கிறதோ அதையே செய்யுங்கள்.

 

 

நன்றி  கறுப்பித்தம்பி

 

நீண்டகால  உறுப்பினர் தாங்கள்

உங்களது கணிப்பும் அவதானிப்பும்  மிகமிக அவசியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இதை வாசித்தேன் நீங்கள் நீங்களாக இருங்கள் ....மனதில் பட்டதை எழுதுங்கோ....தொடரட்டும் உங்கள் பணி.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.