Jump to content

பிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை
திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014 17:32
11(1533).jpg
பிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளில் புட்டிப்பாலை பிடித்து தானாக பால்குடிக்கும் விநோத சம்பவம் பலரை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.
 
அமெரிக்காவின், எசெக்ஸ் மாகாணத்தில் வசித்துவரும் ஒனி சியாடோசியா என்ற 20 வயது பெண்ணுக்கு அமரா என்ற பெண் குழந்தை கடந்த 3 ஆம் திகதி பிறந்தது. இக்குழந்தைக்கு தற்போது வயது மூன்று வாரங்களே ஆகின்றன. 
 
இந்நிலையில் இக்குழந்தை யாருடைய உதவியுமின்றி தானாக புட்டிப்பாலை அருந்துகின்றது. 'நாங்கள் பாலூட்டும்போது அமரா அழத்தொடங்கினாள், உடனடியாக புட்டிப்பாலை கைகளில் பிடித்துகொண்டாள்' என ஒனி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
'எங்களால் இதனை நம்பமுடியவில்லை. ஏனெனில் அமராவின் வயதுடைய ஏனைய குழந்தைகள் இவ்வாறு செய்வதில்லை. எனக்கும் உண்மையில் வியப்பாக இருந்தது. இதனால் அமராவின் செயற்பாடுகளை புகைப்படங்களாக பிடித்து வருகின்றேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சுமார் 6 இறாத்தல் நிறையுடைய அமரா, ரம்போர்ட் குயின்ஸ் வைத்தியசாலையில் கடந்த 3 ஆம் திகதி பிறந்தார். இந்நிலையில் அமராவின் வளர்ச்சியானது வைத்தியர்களையும் மருத்துவ தாதிகளையும் அதர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது'  
 
“ஆனால், குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதுதான் சிறந்ததது என என்.சி.டி எனும் தொண்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. புட்டிப்பாலை அருந்தும்போது குழந்தை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளகூடும். இது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகவும் அமையும்“ என அந்நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
8(2088).jpg
 
10(1544).jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது பால்மா கொம்பனிக்காரன் உலகில் பிறக்கும் பிள்ளைகள் அம்மாபாப்பாவை நம்பாமல் தங்களுடைய பால்மாவை விரும்பிகின்றன என விளம்பரம் போடபோகிறாங்கள் அம்மாபால் இல்லாத ஆரோக்கியமற்ற சமுதாயம் உருவாகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nespray.jpg

 

அந்தக் குழந்தை குடிப்பது... எமது தயாரிப்பான..... "நெஸ்பிறே"
நீங்களும், இன்றே.... உங்கள் செல்ல குழந்தைக்கு  "நெஸ்பிறே" வாங்கி சுடுதண்ணியில், கரைத்துக் கொடுங்கள்.
மறவாதீர்கள்..... கடைக்காரரிடம், "நெஸ்பிறே" என்று கேட்டு வாங்குங்கள். :D  :lol:

Link to comment
Share on other sites

குழந்தையின் இந்த Energy க்கு காரணம்  அந்த பால்மா என்று விளம்பரம் வந்தாலும் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8(2088).jpg

 

இந்த குழந்தையை பார்க்க மூன்றுமாத குழந்தை மாதிரியல்லவா தெரிகின்றது.
ரீல் விடுறதுக்கும் ஒரு அளவிருக்கு  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

stillen108~_v-image512_-6a0b0d9618fb94fd சரி நம்புறன்..... :D


பிள்ளை கையாலை பிடிச்சுத்தான்  பால்குடிக்கும்.

Link to comment
Share on other sites

நான் பிறந்து இரண்டாம் நாளே என்னைத் தூக்கின நேர்ஸ் மேல மூச்சா அடிச்சன் என்று ஊரில சொல்லுவினம்....ஹ்ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்து இரண்டாம் நாளே என்னைத் தூக்கின நேர்ஸ் மேல மூச்சா அடிச்சன் என்று ஊரில சொல்லுவினம்....ஹ்ம்ம்

நீங்க எப்பவும் உசார்தான்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்து இரண்டாம் நாளே என்னைத் தூக்கின நேர்ஸ் மேல மூச்சா அடிச்சன் என்று ஊரில சொல்லுவினம்....ஹ்ம்ம்

அப்போ வளந்ததுக்கப்புறம்  நேர்ஸ் தூக்கினப்போ  என்ன பண்ணுவீங்க...? என்ன பண்ணுவீங்க...? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வளந்ததுக்கப்புறம்  நேர்ஸ் தூக்கினப்போ  என்ன பண்ணுவீங்க...? என்ன பண்ணுவீங்க...? :D

 

இடக்குமுடக்கான கேள்வி

ஆனால் தம்பியின் அனுபவத்தின் முன்னால்...?? :icon_mrgreen:

பாருங்கள் பதிலை..... :icon_mrgreen:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வளந்ததுக்கப்புறம் நேர்ஸ் தூக்கினப்போ என்ன பண்ணுவீங்க...? என்ன பண்ணுவீங்க...? :D

வளர்ந்ததுக்கப்புறம் நேர்ஸ இவர் தூக்குவார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடக்குமுடக்கான கேள்வி

ஆனால் தம்பியின் அனுபவத்தின் முன்னால்...?? :icon_mrgreen:

பாருங்கள் பதிலை..... :icon_mrgreen:  :lol:

ஏலுமெண்டல் பதில் சொல்லட்டும் பாப்பம்.. :D

Link to comment
Share on other sites

அப்போ வளந்ததுக்கப்புறம்  நேர்ஸ் தூக்கினப்போ  என்ன பண்ணுவீங்க...? என்ன பண்ணுவீங்க...? :D

யார்.. எது... என்ன வளர்ந்ததுக்கப்புறம் தூக்கினால்..?!!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வளந்ததுக்கப்புறம்  நேர்ஸ் தூக்கினப்போ  என்ன பண்ணுவீங்க...? என்ன பண்ணுவீங்க...? :D

 

அப்பவும் ஒண்டும் தெரியாத பேபி மாதிரி கையைகாலை தூக்கி அடிப்பாராம்... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.