Jump to content

நேரில் சென்று தனது படங்களது திருட்டு வீடியோவைப் பிடித்தார் பார்த்திபன்! Video..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  partheepan-vcd-240814-300-seithycinema.j

தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பார்த்திபன், மிகுந்த சிரத்தைக்குப் பிறகு இயக்கிய 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் திருட்டு வீடியோக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார்.

  

இதை வீடியோ பதிவாக எடுத்து தனது யூடியூப் சனலிலும் பார்த்திபன் பதிவேற்றியுள்ளார். பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தின் திருட்டு விசிடி கைமாறும் போது, பார்த்திபன் தானே காரிலிருந்து இறங்கி, அந்தக் கடைக்குச் சென்று, சிடி விற்பவரை கையும் களவுமாக பிடிக்கிறார்.

மேலும், அந்தக் கடையில் சமீபத்தில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் சி.டிக்களும் கிடைக்கும் என்பதையும் பார்த்திபன் தெரிந்து கொள்கிறார். பார்த்திபனைக் கண்டதும் கூட்டம் சேர, தனக்குத் தெரிந்த அதிகாரியையோ நண்பரையோ போனில் அழைத்து அங்கு நேரில் வருமாறு அவர் கேட்கிறார்.

அண்மையில் நடந்த தனது திரைப்படத்தின் வெற்றிவிழாவில், பார்த்திபன் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்க'ம் படத்தின் டி.விடியை பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துக் காண்பித்து வருத்ததோடு பேசினார். சமீபத்தில் தான் நடிகர் விஷால் இதேபோல் கேபிள் டிவியில் புதுப் படங்களை ஒளிபரப்பிய கேபிள் டிவி ஆப்பரேட்டரை கையும் களவுமாக பிடித்த வீடியோ 'மலரும்' வாசர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115534&category=EntertainmentNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுமையா இருக்கே.... பாவம் கடைக்காரா்... இணையத்தி்ல் குவிந்து கிடக்கும் படங்களை என்ன செய்ய  போறாா் பாா்த்தீபன்... ஆக மொத்தத்தில் தமிழ் நாட்டில் வசதியற்றவா்கள் தியேட்டருக்கும் போக முடியாது... ஒன்லைன்லையும் பாாக்க முடியாது... திருட்டு வீசிடியும் வாங்க முடியாது....

பாவம் இந்த மக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பட கம்பனிகளே செய்யமுடியாத காரியத்தை.....படங்களில் பத்துப்பேரை ஒரே நேரத்தில் அடிக்கும் சண்டைக்காட்சிபோல் ஒரு அப்பாவியை படம் பிடித்து சாதிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திபன் தனிப்பட்ட முறையில், எப்படி காவல் துறையினரின் வேலையை... செய்ய முடியும்?
இதனால்... பார்த்திபன் பாதிக்கப் பட்டிருந்தாலும், சட்டத்தை கையில் எடுத்தது தவறு அல்லவா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கட காசைப் போட்டு படம் எடுக்கிறவர்களும் பாவம் தானே!.அவர்கள் கஸ்டப்பட்டு,காசைப் போட்டு படம் எடுக்க அந்தப் படத்தை திருட்டு விசிடியிலும்,இணையத்திலும்[என்னை மாதிரி] பார்த்தால் படம் எடுத்தவன் பாடு என்ன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீபன் தோழமையோடு தான் நடந்து கொள்கிறார்.பொலீஸை கூப்பிடுவன்.. அடிப்பன் வீழ்த்துவன் என்று ஒன்றும் செய்யேல்லையே. :icon_idea:

 

படம் எடுத்தவனுக்கு போட்ட காசை எடுக்கனும் என்ற விருப்பம். எனவே கள்ள சிடி விக்கிறவங்க.. வரும் வருமானத்தில் குறித்த ஒரு சதவீதத்தை.. படத்தை தயாரிப்பவர்களுக்கு கொடுத்திட்டால் பிரச்சனை முடியுது. இப்படி சந்து பொந்து தேடித் திரியத் தேவை இல்லையே..!! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு என்னால் எழுதமுடியாது

படம் வெளியாகிய  அன்றே

இங்கு 1  ஈரோக்கு சிடி கிடைக்கிறது

அதைத்தான்  நான் பார்க்கின்றேன்

அப்படியென்றால் நானும் குற்றவாளிதானே... :(

Link to comment
Share on other sites

இதற்கு என்னால் எழுதமுடியாது

படம் வெளியாகிய  அன்றே

இங்கு 1  ஈரோக்கு சிடி கிடைக்கிறது

அதைத்தான்  நான் பார்க்கின்றேன்

அப்படியென்றால் நானும் குற்றவாளிதானே... :(

 

வெளிநாட்டில தியேடர்ல ஓடாத படத்தை நாங்க வேற எப்படி அண்ணே பார்க்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்டிக்காயை முறிச்சுப்பார்த்து வாங்கலாம்.வெள்ளரிக்காய்ன்னா சுண்டிப்பார்த்து வாங்கலாம்.தேங்காய்ன்னா குலுக்கிப்பார்த்து வாங்கலாம்.தோடம்பழம் என்றால் கசக்கிப்பார்த்தும் வாங்கலாம்.tv,computer ,mobile கூட பிடிக்கலைனா திருப்பிக்குடுத்து காசை வாங்கலாம். 50,60,பவுண் குடித்து 4 பேர் பாரக்கப்போய் படம் ( பெரும்பாலும்) மொக்கையாச்சுன்னா என்ன பண்ணிறது?1 பவுணுக்குdvd வாங்கி LCD tv இல் home theatre இல் பிடிக்காத பாட்டையும்,பைட்டையும் ஓடவிட்டுப்பார்த்தால் 45 நிமிடத்தில் படம் முடிஞ்சுடும்.இன்னார்படத்தை தியேட்டரில பார்த்தால் நல்லாய் இருக்கும் என்ற மாதிரி படம் எடுத்தால் சனம் தியேட்டருக்கு வரும்.

Link to comment
Share on other sites

இதற்கு என்னால் எழுதமுடியாது

படம் வெளியாகிய  அன்றே

இங்கு 1  ஈரோக்கு சிடி கிடைக்கிறது

அதைத்தான்  நான் பார்க்கின்றேன்

அப்படியென்றால் நானும் குற்றவாளிதானே... :(

 

ஐரோப்பாவில ஒருத்தர் இருக்கிறார்... 

படம் திரைக்கு வர முதலே கள்ள டீவிடி என்ற 'சுருதி'யோடை ஒன்று விடுவார்...

சனமும் உடன பாக்கிறா ஆசைல வாங்கி பார்க்கும். கள்ள டீவிடி வந்தீட்டுது என்றாதால, உண்மையாய் அந்த தொழில் செய்யுறவங்க குறிப்பிட்ட படத்தை திரும்பிப் பார்க்கமாட்டாங்க.

பிறகு.. படம் ஐரோப்பா சினிமா கொட்டகைகளில் ஓடி முடிய, விநாயகர் கடாட்சத்துடன் ஒரிஜினல் டீவிடீ வரும்.

 

ஆக, அசலும் நகலும் வெளியிட்டு காசு பார்த்த, பார்க்கும் கில்லாடியும் யூரோப்பாலதான் இருக்கிறார்.  :o  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.