Jump to content

சிரிய தலைநகரில் மோதல்கள் உக்கிரம் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு இதுவரை சிரியாவில் 19,000 பொதுமக்கள் பலி


Recommended Posts

[size=4]சிரிய தலைநகரில் மோதல்கள் உக்கிரம் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு இதுவரை சிரியாவில் 19,000 பொதுமக்கள் பலி[/size]

[size=2]

[size=4]டமாஸ்கஸ்: சிரியாவின் இரு பாரிய நகரங்களான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் இடம்பெறும் மோதல் சம்பவங்களினால் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்து அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சிதரும் நிலையில் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை தேடிச் செல்கின்றனர். [/size]

[size=4]ஹெலிகொப்டர்கள் கனரக போர் வாகனங்கள் மூலம் அரச படையினர் போராளிகளின் இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையேயும் மிகமோசமான மோதல்கள் இடம்பெற்றுள்ளது.

இருதரப்பிலும் கணிசமானளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருவதால் உயிரிழப்புகள் குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை.

ஆரம்பத்தில் அரச படையினர் வசமிருந்த பகுதிகளைப் போராளிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.[/size]

[size=4]தற்பொழுது அப்பகுதிகளை மீட்பதற்கு அரச படைகள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

ஹெலிகொப்டர் மூலம் அரச படையினர் சிரியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது.

நகர் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சிதருவதாகக் கூறப்பட்டுள்ளது. யுத்த டாங்கிகள் சகிதம் தரையில் அரச படையினர் போராளிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

டமாஸ்கஸ் மற்றும் வரலாற்று புகழ்மிக்க நகரமான அலெப்பே ஆகிய நகரங்களின் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்தும் போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

அப்பகுதிகளை மீட்கவே அரச படைகள் மிகவும் உக்கிரமான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. [/size]

[size=4]இதேவேளை மத்திய ஆசிய நாடான சிரியாவில் நடைபெற்று வரும் கிளர்ச்சியால் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசு எதிர்ப்புப் படையினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.[/size]

[size=4]இப்போது மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் தலைநகர் டமாஸ்கஸை முற்றுகையிட்டு அரசு எதிர்ப்புப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் பல ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வரும் கிளர்ச்சியில் மொத்தம் 19,106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 13,292 பேர் அப்பாவி பொதுமக்கள், 4,861 பேர் அரசுக்கு ஆதரவாகப் போரிட்ட இராணுவத்தினர். [/size]

[size=4]அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர ஆயிரக்கணக்கானோரின் நிலைமை என்ன ஆனது என்பதே தெரியவில்லை.[/size]

[size=4]தலைநகர் டமாஸ்கஸ் மட்டுமன்றி முக்கிய நகரங்களிலும் தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன. இந்த வன்முறையால் ஏராளமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 164 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 86 பேர் பொதுமக்கள். வீடுகள் இருக்கும் பகுதிகளிலும் அரசு எதிர்ப்புப் படையினர் பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசுகின்றனர். இதனால் வீடுகளில் பதுங்கியிருக்கும் பெண்கள், குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர்.

போதிய உணவு, மருந்து இன்றி பலர் அவதிப்படுகின்றனர். சிலர் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான இடம் தேடி ஓடுகின்றனர். நாடு முழுவதுமே வன்முறையும் கண்மூடித்தனமான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. எனவே அடுத்த சில நாட்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

.[/size]

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=16875:--------19000--&catid=290:world&Itemid=461[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.