Jump to content

கரிக்காய் பொரித்தேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லோருக்கும்..

இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.

“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்

ரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்

கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....

என்னடா ஆரம்பமே இப்படி....... :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் இதுதான்

"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக் காண் சீச்சி உமி."

Link to comment
Share on other sites

கரி என்றால் யானை. அதாவது அப்பெண் யானையைப் பொரியல் செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். யானைப் பொரியலா? அது எப்படி என்று யோசிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதாவது கரி என்றால் யானை; அதேபோல் யானைக்கு அத்தி என்று வேறுஒரு பெயரும் உண்டு. இங்கு அத்திக்காய்ப் பொரியல் என்பதையே கரிக்காய்ப் பொரியல் என்று புலவர் கூறியிருக்கிறார்.

கன்னி என்றால் திருமணம் ஆகாதப் பெண். அப்படியென்றால் பெண்ணையா வறுவல் (தீய்த்தல் என்றால் வாணலியில் இட்டு வறுத்தல் என்று அர்த்தம்) செய்தாள்?. கன்னி என்றால் வாழைக்காய் என்று மற்றும் ஒரு பொருள் உள்ளது. அதாவது வாழைக்காய் வறுவல் என்பதையே கன்னிக்காயைத் தீய்த்தாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியிருக்கிறார்.

பரி என்றால் குதிரை. குதிரையை அப்பெண் பச்சடி செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். உண்மையில் அப்பெண் குதிரையைப் பச்சடி செய்தாளா?. இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை இலாவகமாகக் கையாண்டுள்ளார். பரி என்றால் மா என்று இன்னும் ஒரு பொருள் உண்டு. அதாவது மாங்காய்ப் பச்சடி செய்தாள் என்று கூறுவதற்குப் பதில் பரிக்காய்ப் பச்சடி பண்ணாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியுள்ளார்.

அப்பைக்காய் என்றால் அழகிய கத்தரிக்காய் என்று அர்த்தம். அதாவது கத்தரிக்காய் நெய் துவட்டல் செய்திருந்தாள் என்பதையே அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள்(சமைத்தாள்) என்று புலவர் கூறியிருக்கிறார். எதற்க்காக உருக்கம்உள்ள என்ற வார்த்தையைப் புலவர் பயன்படுத்தியிருக்கிறார் என்றால், கிராமப்புறங்களில் கத்தரிக்காயை நெய்வடியும் (உருக்கமுள்ள) காய் என்று கூறுவார்கள்.

இவ்வாறு அத்தைமகள் சமைத்த உணவில், உப்பு அதிகமாக உள்ளதாகவும் (உப்புகாண் சீச்சி உமி) ஆகவே சீச்சி என்று கூறி உமிழ்ந்ததாகவும் புலவர் பாடலை நகைச்சுவையுடன் முடித்துள்ளார்.

Link to comment
Share on other sites

அதெல்லாம் ஒன்றுமில்லை blue bird... :rolleyes: பொரியல், தீயல், பச்சடி, நெய்துவட்டல் எல்லாம் ஆக்கப்பட்டு இருந்தது, அதை புலவர் சாப்பிடும் நேரத்தில் எதிரே யானை சைசில் அத்தைமகள் உப்போடு வருவதைக் கண்டதும் 'உப்புக்காண் சீச்சி உமி' என்று அலறி அடித்து முடிக்கிறார்... ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரிக்காய் என்று அத்திக்காயை அழைப்பதுண்டு!

கன்னிக்காய் வாழைக்காய் என நினைக்கின்றேன்!

பரிக்காய் என்பதில் நீலமேகத்துடன் உடன்படுகின்றேன்! மாங்காய்!

ஆக நீலமேகம் கூறுவது சரி போல் உள்ளது! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அதை புலவர் சாப்பிடும் நேரத்தில் எதிரே யானை சைசில் அத்தைமகள் உப்போடு வருவதைக் கண்டதும் 'உப்புக்காண் சீச்சி உமி' என்று அலறி அடித்து முடிக்கிறார்... ^_^

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

எப்பிடி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!! :lol: அந்தப் புலவர் கேள்விப்படால் :icon_mrgreen:

BLUE BIRD இன் விளக்கம் பொருத்தமாக உள்ளது.

Link to comment
Share on other sites

எப்பிடி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!! :lol: அந்தப் புலவர் கேள்விப்படால் :icon_mrgreen:

BLUE BIRD இன் விளக்கம் பொருத்தமாக உள்ளது.

அலைமகள்! எல்லாம் வெட்டி ஒட்டல் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை வெட்டினாலும் ஒட்டினாலும் பொருள் வந்து சேர்ந்துவிட்டது.

சரி அடுத்த காய் பற்றி தமிழின் விளையாடல் எப்படி இருக்கிறது என்று நயக்கலாம்... அநேகமாக இதற்குப் பொருளை வெட்டி ஒட்டத்தேவையில்லாமல் இருக்கலாம்.....எல்லோருக்கும் பிடித்தமான மிகவும் கவர்ச்சியான பாடல் இது

எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

கேளுங்கோ ரசியுங்கள் எல்லாக் காய்களுக்கான பொருளையும் பதிவிடுங்கள்....

முக்கியமாக இந்தப்பாடலில் எத்தனை காய்கள் இடம்பெற்றிருக்கின்றன அக்காய்கள் எவை இந்தப்பாடலில் அந்தக்காய்களின் பொருளைக்கண்டு பிடியுங்கள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ


கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ


இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ


ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ


உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணளவாக நாலு.

:o :o :o

தப்பிலி நான் பாடல் காட்சியில் வரும் ஆட்களை(காய்களை) கேட்கவில்லை :icon_mrgreen:

பாடும் மொழியில் வெளிப்படும் தாவரக்காய்களை கேட்கிறேன் :D

Link to comment
Share on other sites

:o :o :o

தப்பிலி நான் பாடல் காட்சியில் வரும் ஆட்களை(காய்களை) கேட்கவில்லை :icon_mrgreen:

பாடும் மொழியில் வெளிப்படும் தாவரக்காய்களை கேட்கிறேன் :D

தாவரக்காய்கள் மூன்று.

ஏலக்காய், ஜாதிக்காய், வெள்ளரிக்காய் மாத்திரமே.

மற்றைய காய்கள்

அத்திக்காய் - அந்தத் திக்காய்............. என்று பொருள்படுவது போல மற்றைய காய்களையும் வைத்து கவிஞர் வரிகளில் விளையாடியுள்ளார்.

நாலாவது காய்

எனது பார்வையில். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாவரக்காய்கள் மூன்று.

ஏலக்காய், ஜாதிக்காய், வெள்ளரிக்காய் மாத்திரமே.

மற்றைய காய்கள்

அத்திக்காய் - அந்தத் திக்காய்............. என்று பொருள்படுவது போல மற்றைய காய்களையும் வைத்து கவிஞர் வரிகளில் விளையாடியுள்ளார்.

நாலாவது காய்

எனது பார்வையில். :lol:

நாலாவது காயா???? இதில நாலாவது காய் எது தப்பிலி? :unsure:

இந்தப்பாட்டில் உள்ள காயில் ஒன்றா?

"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக் காண் சீச்சி உமி." :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

1.அத்தி+ காய்= அத்திக்காய் அதை அந்தத் திக்காய்

2.ஆலங்காய்= ஆல் +காய் ஆலங்காயைப் போன்ற வெண்ணிலவே!

3.இத்திக்காய்= இத்தி+ காய் இந்தத் திசையில் காயாதே(ஒளிதராதே)

4.கன்னிக்காய்= கன்னி பாவை ஆகவே பாவற்காய்(பாவை காய்)பாவற்காய் பாகற்காய் 2 ம் ஓன்று.

5. காதல் கொண்ட பாவைக்காய் மீண்டும் (பாகற்காய்)பாவைக்காய்

6.அங்கே காய் அந்தப் பக்கமாகக் காய்

7.அவரைக்காய் அவரை காய்  என்னுடைய காதலனுக்கு(அவரை என்னுடைய காதலைனை)  ஒளி கொடுத்து காதல் வேதனையைக் கொடு.

8.மங்கை எந்தன் கோவைக்காய் கோவை காய் கோவைக்காய் கோ என்றால் காவலன்,கடவுள்,அரசன்,பசு என்று பொருள்படும். இங்கே எனது காவலனாகிய காதலைனைக் காய் என்று பொருள்படுகிறது.

9.மாதுளங்காய்= மாது+ உளம் +காய் ஆனாலும் என் காதலி என்னை இந்த நேரத்தில் விரும்பா விட்டாலும்(அல்லது அவளுக்கு காதல் கனியவில்லை(இன்னும ; வரவில்லை என்றாலும் என்னுடைய உள்ளம் அவளை வெறுக்காது.(கனி காயாகாது.காய்கனியாகலாம் காதலிக்காதவர் காதலிக்கலாம் ஆனால் காதல் கொண்டவர் காதலை மறக்க முடியாது.)

10. இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய் (காய் என்ற சொல் வரும்படி சாதராண சொற்களை சொல் நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11.உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ ஆள் சிறியவளாக இருந்தாலும் அவள் பருவமடையாத பெண்ணல்ல காதலிக்க தகுதியான பெண்னே!(உருவங்காய் என்று இந்தியாவில் ஏதேனும் காய்களைக் அழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

12.ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய் ஏலங்காய் வாசனை போல் நீண்ட காலத்திற்கு எங்கள் காதல் உள்ளம் வாழக்காய்.(வாழைக்காய் சிறிது மருவி சொல் நயத்துடன் வாழக்காயாகி இருக்கிறது.

13.ஜாதிக்காய் சாதிக்காய்

14.சொன்னதெல்லாம் விளங்காயோ= விளா +காய் விளாங்காய்

தூதுவழங்காய்= தூதுவளை +காய் சிறிது மருவி தூது வழங்காய் ஆகி இருக்கிறது.அத்துடன் எனக்காக அவளிடம் (அவரிடம்)தூது செல்ல மாட்டாயா என்பதாகவும் அமைகிறது.

15.உள்ளமெலாம் மிளகாயோ= உள்ளம் +மிளகாய் +உள்ளமிளகாய் உன் உள்ளம் எனக்காக இரங்கமாட்டாதா?அல்லது மிளகாய் போல் மிக காரமான உள்ளத்தைக் கொண்டவளா நீ என்பதாகவும் கொள்ளலாம்.

  ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ஒரு முறை பேச மாட்டாயா? பேச்சு உரைக்காயோ பேச்சுரைக்காய்= பேச்சு+ உரைக்காய்

16.வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ நேரடியாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

17.கோதையெனைக் காயாதே கோது+ காய்= கோதைக்காய் (கோதை பெண் என்றும் பொருள்படும் )

(கோது) காயின் கோதைக் காயாதே வெளி அழகை விரும்பாதே எள்ளத்தை விரும்பு

18.கொற்றவரைக் காய் வெண்ணிலா கொற்றவரைக்காய் என்று ஒரு அவரை இனம் இருக்கிறது.

19.இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா இருவரை விட்டு தனியாகச் சென்று எங்களைத் துன்புறுதாதைதையை யிட்டு ஏங்காய் (வருந்துவாயாக,)

இது

வெள்ளரிக்காயா

விரும்புமவரைக்காயா உள்ளமிளகாயா ஒவ்வொரு பேச்சுரைக்காயா என்ற பழம்பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இதில் பல இலக்கண மீறல்கள் இருந்தாலும் அவை பாடலின் பொருள்பற்றி தந்த வழுக்கள் வழுவமைதி பெற்று விடுகின்றது.

இது நான் எழுதிய பொழிப்புரையாதலால் இதில் பல பிழைகள் இருக்கலாம். தமிழறிஞர்கள் பொறுத்தருள்க.

Link to comment
Share on other sites

காரென்று பேர்படைத்தாய் கசனத்துறும் போது

நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்தபின்

வாரொன்று மென்மயில் நேர்ஆய்ச்சியர் கைவந்த பின்

மோரென்று பேர்படைத்தாய்! முப்பேரும் ஏற்றாயே!

பொருள்

மோர்க்காரியிடம் மோர் வாங்கும் போது அது தண்ணியாக இருக்கிறது. அதனை நகைச்சுவவையாக சொல்ல வந்த கார்மேகம்:

நீர், வானத்திலிருந்தால் அதற்கு கார் என்று பெயர். தரைக்கு வந்தால் ‘நீர்’ என்று பெயர். தரைக்கு வந்தால் ‘நீர்’ என்று பெயர். ஆய்ச்சியர் என்று சொல்லக்கூடிய இடைச்சியரின் மோர் கூடைக்கு வந்தால் அதற்கு ‘மோர்’ என்று பெயர். எனவே, மோர் தண்ணீராக அதாவது கெட்டியாக இல்லாமல், தண்ணீரைக் கலந்து விற்பனை செய்வதால் அதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார் காளமேகப்புலவர். இவ்வாறு காளமேகப் புலவரின் பலப்பாடல்கள், இரட்டை அர்த்தங்கள் நிறைந்த நகைச்சுவைப் பாடல்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

1.அத்தி+ காய்= அத்திக்காய் அதை அந்தத் திக்காய்

2.ஆலங்காய்= ஆல் +காய் ஆலங்காயைப் போன்ற வெண்ணிலவே!

3.இத்திக்காய்= இத்தி+ காய் இந்தத் திசையில் காயாதே(ஒளிதராதே)

4.கன்னிக்காய்= கன்னி பாவை ஆகவே பாவற்காய்(பாவை காய்)பாவற்காய் பாகற்காய் 2 ம் ஓன்று.

5. காதல் கொண்ட பாவைக்காய் மீண்டும் (பாகற்காய்)பாவைக்காய்

6.அங்கே காய் அந்தப் பக்கமாகக் காய்

7.அவரைக்காய் அவரை காய் என்னுடைய காதலனுக்கு(அவரை என்னுடைய காதலைனை) ஒளி கொடுத்து காதல் வேதனையைக் கொடு.

8.மங்கை எந்தன் கோவைக்காய் கோவை காய் கோவைக்காய் கோ என்றால் காவலன்,கடவுள்,அரசன்,பசு என்று பொருள்படும். இங்கே எனது காவலனாகிய காதலைனைக் காய் என்று பொருள்படுகிறது.

9.மாதுளங்காய்= மாது+ உளம் +காய் ஆனாலும் என் காதலி என்னை இந்த நேரத்தில் விரும்பா விட்டாலும்(அல்லது அவளுக்கு காதல் கனியவில்லை(இன்னும ; வரவில்லை என்றாலும் என்னுடைய உள்ளம் அவளை வெறுக்காது.(கனி காயாகாது.காய்கனியாகலாம் காதலிக்காதவர் காதலிக்கலாம் ஆனால் காதல் கொண்டவர் காதலை மறக்க முடியாது.)

10. இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய் (காய் என்ற சொல் வரும்படி சாதராண சொற்களை சொல் நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11.உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ ஆள் சிறியவளாக இருந்தாலும் அவள் பருவமடையாத பெண்ணல்ல காதலிக்க தகுதியான பெண்னே!(உருவங்காய் என்று இந்தியாவில் ஏதேனும் காய்களைக் அழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

12.ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய் ஏலங்காய் வாசனை போல் நீண்ட காலத்திற்கு எங்கள் காதல் உள்ளம் வாழக்காய்.(வாழைக்காய் சிறிது மருவி சொல் நயத்துடன் வாழக்காயாகி இருக்கிறது.

13.ஜாதிக்காய் சாதிக்காய்

14.சொன்னதெல்லாம் விளங்காயோ= விளா +காய் விளாங்காய்

தூதுவழங்காய்= தூதுவளை +காய் சிறிது மருவி தூது வழங்காய் ஆகி இருக்கிறது.அத்துடன் எனக்காக அவளிடம் (அவரிடம்)தூது செல்ல மாட்டாயா என்பதாகவும் அமைகிறது.

15.உள்ளமெலாம் மிளகாயோ= உள்ளம் +மிளகாய் +உள்ளமிளகாய் உன் உள்ளம் எனக்காக இரங்கமாட்டாதா?அல்லது மிளகாய் போல் மிக காரமான உள்ளத்தைக் கொண்டவளா நீ என்பதாகவும் கொள்ளலாம்.

ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ஒரு முறை பேச மாட்டாயா? பேச்சு உரைக்காயோ பேச்சுரைக்காய்= பேச்சு+ உரைக்காய்

16.வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ நேரடியாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

17.கோதையெனைக் காயாதே கோது+ காய்= கோதைக்காய் (கோதை பெண் என்றும் பொருள்படும் )

(கோது) காயின் கோதைக் காயாதே வெளி அழகை விரும்பாதே எள்ளத்தை விரும்பு

18.கொற்றவரைக் காய் வெண்ணிலா கொற்றவரைக்காய் என்று ஒரு அவரை இனம் இருக்கிறது.

19.இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா இருவரை விட்டு தனியாகச் சென்று எங்களைத் துன்புறுதாதைதையை யிட்டு ஏங்காய் (வருந்துவாயாக,)

இது

வெள்ளரிக்காயா

விரும்புமவரைக்காயா உள்ளமிளகாயா ஒவ்வொரு பேச்சுரைக்காயா என்ற பழம்பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இதில் பல இலக்கண மீறல்கள் இருந்தாலும் அவை பாடலின் பொருள்பற்றி தந்த வழுக்கள் வழுவமைதி பெற்று விடுகின்றது.

இது நான் எழுதிய பொழிப்புரையாதலால் இதில் பல பிழைகள் இருக்கலாம். தமிழறிஞர்கள் பொறுத்தருள்க.

நன்றி புலவர் உங்கள் பொழிப்புரை நன்றாக இருக்கிறது. தோண்டத் தோண்ட பொருள் சுரக்கும் அருமையான பாடல் இது. தமிழ் சினிமாவில் இப்பாடலைப் போல் இதுவரை எப்பாடலையும் எந்த கவிஞர்களும் இதுவரை எழுதவில்லை. இந்த இடத்தில் கவியரசு கண்ணதாசன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

இந்தப்பாடல் பலருக்கு இன்னும் பல அர்த்தங்களை எடுத்தியம்பக்கூடிய அளவுக்கு பன்முகப் பொருள் கொண்டது. எனது சிற்றறிவுக்கு எட்டிய காய்களை இங்கு பதிவிடுகின்றேன். என் கவனத்திற்குத் தவறிய காய்களை நீங்கள் யாராவது அறிந்தால் இங்கு இணைத்துவிடுங்கள்

17 jhtuf;fha;fis rpy ,lq;fspy; xyp kUtpa epiyapy; Ngr;Rtof;Fj; njhdpapy; mikf;fg;gl;bUf;fpwJ ,g;ghly;

1. mj;jpf;fha;

2. Myq;fha;

3. ,j;jpf;fha;

4. fd;dpf;fha;

5. ghitf;fha; (ghfw;fha;)

6. mtiuf;fha;

7. Nfhitf;fha;

8. khJsq;fha;

9. Vyf;fha;

10. thof;fha; (thiof;fha;)

11. ahjpf;fha;

12. tpsq;fha; (tpshq;fha;)

13. JhJtoq;fha; (JhJtsq;fha;)

14. kpsfha;

15. Ruf;fha;

16. nts;supf;fha;

17. nfhw;wtiuf;fha; (nfhj;jtiuf;fha;)

fha; vd;gJ ngauhfTk; tpidahfTk; xNu rkaj;jpy; Njhd;WkhW mikag; ngw;wJjhd; ,e;jg;ghlypd; rpwg;G

ngauhfTk tpidahfTk; Njhd;whj epiyapy; Njhd;Wk; fha; vd;w gjk; Ntw;Wik cUghfTk; mzp nra;fpwJ

fha; vd;gJ ngau;r;nrhy;yhf tUk;NghJ cjhuzj;jpw;F

ntapy; fha;fpwJ vd;why; ntk;ik epiyiaf; Fwpf;Fk;

mijNa epyh fha;fpwJ vd;why; Fspu;ikiaf; Fwpf;Fk;

mJNt tpidahf khWk; NghJ

fbe;J nfhs;sy; my;yJ Nfhgq;nfhs;sy; vd;gjhf nghUs;gLk;

,e;jf; fha; vd;gJ ,lj;jpw;Nfw;g gd;Kfg; nghUs;glf;$ba xU jkpo; nrhy; xU fhyKk; ehq;fs; rpwpJ epd;W ,j;jifa thu;j;ijfisAk; mtw;wpd; gd;Kfg; nghUisAk; Mj;khu;j;jkhf ,urpg;gjpy;iy கல்விச்சாலைfspy; xj;j fUj;Js;s nrhw;fs; vd;w ngaupy; kdg;ghlk; gz;zp vOJtNjhL vq;fs; juTfs; Kw;Wg; ngw;WtpLk; Njly; மேற்nfhs;SksTf;F vq;fSf;F mtfhrNkh my;yJ Mu;tNkh ,Ug;gjpy;iy.

Link to comment
Share on other sites

நீங்கள் கேட்ட காய்களின் எண்ணிக்கைத் தொகை 29 சகாரா அக்கா.. சரியா இருக்கா என்று எண்ணிப் பாருங்கள்... :D:)

1. அத்திக்காய்

2. ஆலங்காய்

3. இத்திக்காய்

4. கன்னிக்காய்

5. ஆசைக்காய்

6. பாவைக்காய்

7. அங்கேகாய்

8. அவரைக்காய்

9. கோவைக்காய்

10. மாதுளங்காய்

11. என்னுளங்காய்

12. இரவுக்காய்

13. உறவுக்காய்

14. ஏழைக்காய்

15. நீயும்காய்

16. நிதமுங்காய்

17. இவளைக்காய்

18. உருவங்காய்

19. பருவங்காய்

20. ஏலக்காய்

21. வாழக்காய்

22. ஜாதிக்காய்

23. கனியக்காய்

24.விளங்காய்

25. தூதுவழங்காய்

26. மிளகாய்

27. சுரக்காய்

28. வெள்ளரிக்காய்

29. கொற்றவரங்காய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி என்னுடைய தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தாவரக் காய்கள் என்று கேட்டிக்கவேண்டும்

தாவரக்காய்கள் 17

நீங்கள் வேற்றுமை உருபிணைந்த காய்களையெல்லாம் இணைத்திருக்கிறீர்கள் சரி இதில் எத்தனை காய்களில் "ஆய்" வேற்றுமை உருபு இணைந்திருக்கிறது சொல்லுங்கள்

மவனே என்னை மாட்டி விட்டா நானும் மாட்டி விடுவனெல்லோ :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

Link to comment
Share on other sites

குட்டி என்னுடைய தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தாவரக் காய்கள் என்று கேட்டிக்கவேண்டும்

தாவரக்காய்கள் 17

நீங்கள் வேற்றுமை உருபிணைந்த காய்களையெல்லாம் இணைத்திருக்கிறீர்கள் சரி இதில் எத்தனை காய்களில் "ஆய்" வேற்றுமை உருபு இணைந்திருக்கிறது சொல்லுங்கள்

மவனே என்னை மாட்டி விட்டா நானும் மாட்டி விடுவனெல்லோ :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நான் அழுதுடுவேன்... :D^_^

இதில முதல் பாதியும் கடைசிப்பாதியும் நான் பாட்டைக் கேட்டு எழுதினது, நடுவில் உள்ளது இணையத்தில் தேடி எடுத்தது... :D:lol:

Link to comment
Share on other sites

சகாரா அக்கா, உங்களுக்கு முழுப் பாட்டின் பொருள் விளக்கம் வேணும் என்றால் சொல்லுங்கோ, இணைத்து விடுகிறேன்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா, உங்களுக்கு முழுப் பாட்டின் பொருள் விளக்கம் வேணும் என்றால் சொல்லுங்கோ, இணைத்து விடுகிறேன்... :)

:icon_mrgreen:

எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே... :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே... :lol: :lol: :lol:

ஒரு இணைப்பில் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது... :D^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களைக்கவர்ந்த அந்த இணைப்பை இங்கு ஒட்டிவிடுங்கள் குட்டி :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்..

இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.

“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்

ரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்

கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....

என்னடா ஆரம்பமே இப்படி....... :lol: :lol: :D

என்னுடன் சேர்ந்து நடக்க வந்த உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் . நிட்சயம் எனக்குத் தெரிந்தவற்ரையும் இணைப்பேன் . தமிழால் இணைவோம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.