Jump to content

இந்திய வீரர் ஜடேஜாவுடன் மோதிய அண்டர்சனுக்கு எதிராக ஐ.சி.சி. விசாரணை


Recommended Posts

இந்திய வீரர் ஜடேஜாவுடன் மோதிய அண்டர்சனுக்கு எதிராக ஐ.சி.சி. விசாரணை
 

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேம்ஸ் அண்டர்சன், வீரர்களுக்கான ஐ.சி.சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ரவீந்திர ஜடேஜாவுடன் ஜேம்ஸ் அண்டர்சன் மோதலில் ஈடுபட்டமையே இதற்குக் காரணம்.

இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் நகில் நடந்த இப்போட்டியின் இரண்டாவது நாளான கடந்த வியாழனன்று மதிய உணவு இடைவேளைக்காக வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறியபோது, ஜடேஜாவை ஜேம்ஸ் அண்டர்சன் திட்டியதுடன் தள்ளிவிட்டதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில் வீரர்களுக்கான ஐ.சி.சி. ஒழுக்கக் கோவையின் 2.3.3. விதியை அண்டர்சன் மீறியுள்ளாரென குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. 

இக்குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்வதற்கு விசாரணை ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் இவ்விடயம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் எனவும் ஐ.சி.சி. தெரிவிததுள்ளது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6214#sthash.2sDmHnVn.dpuf

Link to comment
Share on other sites

ஆண்டர்சனுடன் மோதல்: ஜடேஜாவுக்கு அபராதம்
 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

 

அவரது ஆட்டத் தொகையில் 50% அபராதமாகச் செலுத்த ஆட்ட நடுவரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் உத்தரவிட்டுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இந்தியா லெவல் 2 புகாரை அளித்தது. பதிலுக்கு ஜடேஜா மீது இங்கிலாந்து புகார் அளித்தது. அதாவது அதே லெவல் 2 புகாரைத்தான் அளித்தது.

அதன் படி 4 டெஸ்ட் அல்லது 2 டெஸ்ட் போட்டிகள் நீக்கப்படும் அபாயம் இருந்தது. ஆனால் டேவிட் பூன் மேற்கொண்ட விசாரணையில் ஜடேஜா லெவல் 1 விதிமுறையை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

 

இதனால் ஆட்டத்தொகையில் 50% அபராதத்துடன் தப்பினார் ஜடேஜா. ஆண்டர்சன் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது ஜடேஜாவும் ஆண்டர்சனும் வாக்குவாதத்தில் ஈடுபட, கடைசியில் ஆண்டர்சன், ஜடேஜாவைத் தள்ளி விட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.

 

இந்த விவகாரத்தில் இந்தியா புகார் அளிக்க, இங்கிலாந்து பதில் புகார் செய்தது. இந்திய கேப்டன் தோனி மிகவும் சூசகமாக ஜடேஜாவை ஆண்டர்சன் பிடித்துத் தள்ளியதைக் குறிப்பிட்டதோடு, எப்போதும் இந்திய வீரர்களே பாதிக்கப்படுகின்றனர் என்று விரிவான பேட்டியும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6249122.ece

Link to comment
Share on other sites

முற்றுகிறது ஜடேஜா விவகாரம்: ஐ.சி.சி., அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுப்பு

லண்டன்: ‘தள்ளு’ விவகாரத்தில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜாவுக்கு ஐ.சி.சி., விதித்த அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்தது. இதனால், பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. இதன் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஜடேஜாவை பிடித்து தள்ளிய ஆண்டர்சன் மீது, இந்திய அணியும், ஜடேஜா மீது இங்கிலாந்து அணியும் புகார் கொடுத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விசாரிக்கிறது.

சவுத்தாம்ப்டனில் நடந்த ஜடேஜா தரப்பு விசாரணையில், இரு வீரர்கள் மற்றும் அவர்களது சட்ட ஆலோசகர்கள் பங்கேற்றனர். ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன் (ஆஸி.,), இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரித்தார்.

முடிவில், ஆண்டர்சனை நோக்கி மிரட்டும் வகையில் சென்றதாக தெரிவித்து, ஜடேஜாவுக்கு முதல் டெஸ்ட் போட்டி சம்பளத்தில், 50 சதவீதம் அபராதம் விதித்தார்.

ஆண்டர்சன் மீதான விசாரணை, மூன்றாவது டெஸ்ட் முடிந்த மறுநாள் (ஆக., 1) நடக்கும். ஐ.சி.சி.,யின் முடிவை ஏற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்தது.

ஏற்கனவே, இப்பிரச்னை காரணமாக, பி.சி.சி.ஐ., மற்றும் இங்கிலாந்து போர்டு இடையே உரசல் ஏற்பட்டது. இப்போது, பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெ ளியிட்ட அறிக்கையில்,‘ ஐ.சி.சி., விதித்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. ஜடேஜா தரப்பில் எவ்வித தவறும் இல்லை என, நம்புகிறோம். இவ்விஷயத்தில் ஜடேஜாவுக்கு முழு ஆதரவு உண்டு,’ என, தெரிவித்துள்ளது.

http://sports.dinamalar.com/2014/07/1406310218/jadejacricket.html

Link to comment
Share on other sites

குற்றம், நடந்தது என்ன?: டோனி
ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோருக்கிடையிலான மோதல் பற்றி டோனி தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். ரவீந்தர் ஜடேஜா தண்டிக்கப்பட்டது மன உடைவை தந்துள்ளதாகவும், அதை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் டோனி தெரிவித்துள்ளார். ரவீந்தர் ஜடேஜா ஆக்ரோஷமாக முறைத்துப் பார்த்தார் என்ற குற்றத்திற்காக போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதத்தினை தண்டமாக போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூண் அறவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த நிலையிலேயே டோனி தன்னுடைய கருத்துகளை வெளியிட்டு நடந்த விடயத்தையும் கூறியுள்ளார்.

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய போசன இடைவேளைக்கு வெளியே செல்லும் போது ஜடேஜாவை நோக்கி வீரர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்தார். அதை கவனித்த நான் நடுவே சென்று அது தொடராத மாதிரி பார்த்துக் கொண்டேன். மைதானத்தை விட்டு வெளியே சென்று வீரர்கள் அறைக்கு அண்மையில் செல்லும் வேளையில் ஜடேஜா எனக்கு பின்னால் ஒன்று  அல்லது இரண்டு யார் தூரத்தில் வந்து கொண்டு இருந்தார். குறித்த வீரர் மீண்டும் ஜடேஜாவை நோக்கி ஏதோ கூற அவர் குறித்த வீரரை திரும்பி பார்த்தார். அப்போது அந்த வீரர் ஜடேஜாவை தள்ளி விட அவர் சமநிலையை இழந்து தடுமாறிப் போனார். யார் என்ன சொன்னார்கள் என திர்ம்பிப் பார்ப்பது குற்றமா? இவ்வாறு டோனி நடந்த சமபவம் பற்றி விளக்கியுள்ளார். போட்டி நிறுத்தப்பட்டு வெளியே வந்து குறித்த சம்பவம் நடக்கும் வரை ஜடேஜா ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. நான் பொய் சொல்லவில்லை என்றால் நீங்களே இந்த சம்பவம் தொடர்பாக முடிவு செய்து கொள்ளுங்கள் எனவும் டோனி கூறியுள்ளார். அவர் யார் அந்த சம்பவத்தில் ஈடுபட்டது என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.

தரம் 2 இற்கான குற்றத்திற்கு தரம் 1 இற்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளதும் இதுவே முதற்தடவை எனக் கூறியுள்ள டோனி, இங்கே தரம் 1 இற்கான குற்றத்திற்கு மீள் முறையீடு செய்ய முடியாது. ஆனால் தரம் 2 இற்கான குற்றத்திற்கு மீள் முறையீடு செய்ய முடியும். இந்த தண்டனையின் சிறப்பே அதுதான் எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் முதற்தடவையாக விசாரணையில் ஒரு பக்க நியாயம் மாத்திரம் கேட்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த தண்டனைக்கு மீள் முறையீடு செய்ய முடியாத போதும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை குறித்த சமபவம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிவருகின்றது. ஜெம்ஸ் அன்டர்சன் மீதான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. அவருக்கு குறைந்தது இரண்டு போட்டிகளுக்கான தடை வழங்கப்படும் என எதிர்பார்கப்படுகின்றது.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/119672-2014-07-27-10-44-44.html

 

Link to comment
Share on other sites

தடையிலிருந்து தப்பினார் ஆண்டர்சன்; ஜடேஜா மீதும் தவறில்லை

ஜடேஜாவைத் தள்ளி விட்டதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இந்தியா அளித்த புகாரை விசாரித்த நீதித்துறை ஆணையர் கார்டன் லூயிஸ் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தார்.

இன்று ஆண்டர்சன் மீதான விசாரணையுடன், ஜடேஜாவுக்கு அபராதம் விதித்ததன் மீதான மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வந்தது.

இருவர் மீதும் தவறில்லை என்று கார்டன் லூயிஸ் தீர்ப்பளித்ததாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே ஜடேஜாவுக்கு விதித்த 50% அபராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரன்சிங் வழியாக இந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் நடந்தது. இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சிலர் சாட்சியங்கள் அளித்தனர். இவற்றை கார்டன் லூயிஸ் பரிசீலித்தார்.

ஆண்டர்சன் மீது லெவல் 3 புகார் அளிக்கப்பட்டது. இதில் இவர் தவறு செய்ததாக முடிவெடுக்கப்பட்டிருந்தால் குறைந்தது 2 போட்டிகளிளாவது தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆண்டர்சன் தப்பிவிட்டார்.

பிறகு ஆண்டர்சனுக்கு தண்டனை அளிக்காமல் ஜடேஜாவுக்கு மட்டும் தண்டனை கொடுத்தது சரி என்று தீர்ப்பளித்தால் தவறாக முடியும் என்று இருவரது புகார்களையும் தள்ளுபடி செய்துவிட்டார் என்று தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/தடையிலிருந்து-தப்பினார்-ஆண்டர்சன்-ஜடேஜா-மீதும்-தவறில்லை-என்று-தீர்ப்பு/article6272821.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.