Jump to content

நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு அதிபர் தலைமையில் உற்சாக வரவேற்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Tamil_News_437568306923.jpg

 

பிரேசில் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்டத்தை இழந்தது. ஆனாலும், இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி போராடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டியில் இரண் டாம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணி நேற்று நாடு திரும்பியது. தலைநகர் பியூனஸ் அயர்சுக்கு விமா னம் மூலம் வந்திறங்கிய அர்ஜென்டினா வீரர்களுக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் வந்த விமானத்தின் பக்க வாட்டில் வீரர்களின் படம் வரையப்பட்டிருந்ததோடு, அர்ஜென்டினாவுக்கு நன்றி’ என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.

விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்தில் வீரர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சாலையில் கூடியிருந்த பல்லாயிரக்கணக் கான ரசிகர்கள், அர்ஜென்டினா அணியினரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். வீரர்களை வாழ்த்திய அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்ணாண்டஸ், முதலில் வந்தவர்கள் மட்டும் வெற்றி பெற்றவர்கள் என எண்ண வேண்டியதில்லை. நீங் களும் வெற்றி பெற்றவர்கள் தான்.

சிறப்பான விளையாட்டு, ஒற்றுமை ஆகியவைதான் உங்களை இத்தகைய உயரத்துக்கு கொண்டு சென்றது. போட்டியில் தோல்வியடைந்த போதிலும், அர்ஜென்டினா மக்களின் மதிப்பை அதிகரித்து  இருக்கிறீர்கள். இதனால்தான் நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன். 40 மில்லியன் அர்ஜென்டினா மக்கள் சார்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினகரன்

 


Tamil_News_372291207314.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.